பல் முனை நிவாரண புல் ?

லகப்புகழ் பெற்ற காமெடி நடிகர் சார்லி சாப்ளின் நினைவு நாள் இன்று.

1914ம் ஆண்டு பிட்வீன் ஷோவர்ஸ் என்ற படத்தின் மூலம் திரையில் முகம் காட்டத் தொடங்கிய சார்லி சாப்ளின் அதன் பின்னர் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்து பல நூறு விருதுகளை சொந்தமாக்கிக் கொண்டார். பேசாமலேயே நடிப்பின் மூலம் நகைச்சுவை செய்ய முடியும் என்பதை உலகுக்கு உணர்த்திய இந்த உன்னத காமெடியனின் இயற்பெயர் சர் சார்லஸ் ஸ்பென்ஸர் சாப்ளின் suran.
1889ம் ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி பிறந்த சார்லி சாப்ளின் ஹாலிவுட் திரையுலகில் ஒரு பெரும் சகாப்தத்தையே உருவாக்கிய பெருமைக்குரியவராவார்.
இவருக்கு நடிகர், இயக்குநர், இசையமைப்பாளர், திரைக்கதை எழுத்தாளர், திரைப்பட தொகுப்பாளர், திரைப்படத் தயாரிப்பாளர் என்று பல பரிணாமங்கள் உண்டு. சாப்ளின் கோமாளித்தனமான படங்கள் எல்லாம் ‘வலியவனை எளியவனால் வெல்லமுடியும்’ என்கிற ஒற்றை வரி கருத்தை உள்ளடக்கியே இருக்கும்.
பலருக்கும் தன்னம்பிக்கை கொடுத்த இவர் 1977ம் ஆண்டு 25ம் தேதி  தனது 88வது வயதில் காலமானார்.

தன் வாழ்நாளில் 2 முறை கவுரவ ஆஸ்கார் விருதுகளை பெற்றுள்ளார். அதோடு சர் என்ற கவுரவ பட்டத்தை பிரிட்டிஷ் அரசு வழங்கி கவுரவித்துள்ளது.
இங்கிலாந்து அரசு இவரது உருவத்தை அஞ்சல் தலை வெளியிட்டு கவுரவித்தது.
அமெரிக்க அஞ்சல் தலையிலும் சாப்ளினின் உருவம் இடம்பெற்றுள்ளது. இவரது வாழ்க்கை பயணத்தை சாப்ளின் என்ற பெயரில் இயக்குனர் சர்.ரிச்சர்ட் ஒரு திரைப்படமாக உருவாக்கினார்.
அந்த படம் நன்றாக ஓடி சாப்ளினினுக்கு பெருமையை தேடிக் கொடுத்தது. இதுவரை உலகத்தில் வாழ்ந்த 20 தலைச்சிறந்த காமெடியர்களில் முதல்வராக  தேர்ந்தெடுக்கப்பட்டவ ர்  சாப்ளின்.

---------------------------------------------------------------------------------------------------------------------------
ஆண்மை குறைவை போக்குமா  அருகம்புல்?

இந்தியாவில் பன்னெடுங்காலமாக இயற்கையாக கிடைக்கும் மூலிகைகளை மருந்தாக பயன்படுத்தி நோய்களை குணப்படுத்தும் முறைகளை சித்தர்கள்  கண்டறிந்திருக்கிறார்கள். புல்வகையை சேர்ந்த சிறிய மூலிகையான அருகம்புல் சர்வரோக நிவாரணியாக உள்ளது.
இதன் தாவரவியல் பெயர்  cynodon dactylon என்பதாகும். நீர்க்கசிவு உள்ள இடங்கள், வயல் வரப்புகள் போன்ற இடங்களில் தானாக வளரும். அருகு, பதம்,  தூர்வை, மோகாரி ஆகிய தமிழ் பெயர்களும் அருகம்புல்லுக்கு உண்டு. பசுமையான, அகலத்தில் குறுகிய, நீண்ட கூர்மையான இலைகள் கொண்டவை . 
தண்டு குட்டையானது.
நேரானது,
முழுத்தாவரமும் இனிப்பு சுவையுடையது. இந்த தாவரம் ஏராளமான நோய்களை போக்கும் அருமருந்தாக உள்ளது  என்கிறார் நாகர்கோவிலை சேர்ந்த மாவட்ட உளவியல் நிபுணர் மற்றும் இயற்கை மருத்துவர் டாக்டர் சிதம்பர நடராஜன்.
 India's long natural methods of treating diseases using medicinal herbs Siddhas Found....
அருகம்புல் வேர், இலை உள்பட அனைத்து பாகமும் மருத்துவ குணம் உடையவை. இதில் இருந்து பெறப்படும் ஒருவித ஆல்கலாய்ட்ஸ், வாக்ஸீனியா  வைரஸ் என்ற நுண்ணுயிரியை அழிக்க வல்லது.

சிறுநீர்ப்பை கல், நீர்க்கோவை என்ற உடல் வீக்கம், மூக்கில் ரத்தக்கசிவு, குழந்தைகளுக்கான நாட்பட்ட சளித்தொல்லை, ஜலதோஷம், வயிற்று போக்கு,  கண்பார்வை கோளாறுகள் மூளையில் ஏற்படும் ரத்த கசிவு போன்ற நோய்களுக்கு இது சால சிறந்தது.

உடல் எடை குறைய, கொலஸ்டிரால் குறைய, நரம்பு தளர்ச்சி நீங்க, ரத்த புற்றுநோய் குணமடைய, இருமல், வயிற்று வலி, ரத்த சோகை, மூட்டுவலி,  இருதய கோளாறு, தோல் வியாதிகள் போன்ற எல்லா நோய்களுக்கும் சிறந்த மருந்து.

ரத்தத்தில் ஹீமோகுளோபின் அதிகரிக்கவும், ரத்தத்தில் உள்ள விஷத்தன்மை வெளியேற்றுவதிலும் திறமையானது. ஆரோக்கியமாக இருப்பவர்களுக்கு  அருகம்புல் ஒரு உலக புகழ்வாய்ந்த டானிக்.

சுத்தம் செய்த அருகம் புல்லை இடித்து பிழிந்து சாற்றை ஒரு டம்ளர் தினமும் காலையில் குடித்து வர சிறுநீர் நன்றாக கழியும். உடல் வீக்கம்  குறையும். வயிற்றில் தங்கியுள்ள நஞ்சுகள் நீங்குகிறது. ரத்தம் சுத்தமடைகிறது.

அருகம் புல் சாறு தேங்காய் எண்ணெய் இவைகளை சம அளவு சேர்த்து தைலமாக காய்ச்சி ஆறாத ரணங்கள், படை ரிங்கு, வறட்டுத்தோல் போன்ற  தோல் நோய்களுக்கு தொட்டு போட அவை விரைவில் குணமாகும்.

வேரை நசுக்கி தண்ணீரில் கரைத்து வடிகட்டி குடித்து வர பெண்களுக்கு ஏற்படும் சூதக கசிவு நீங்குகிறது. மனச்சோர்வு, தூக்கமின்மை, வலிப்பு  ஆகியவற்றுக்கும் அருகம்புல் சாறு சிறந்த மருந்தாகிறது.

தேவையான அளவு அருகம்புல் சேகரித்து சிறிதளவு மஞ்சள் சேர்த்து பசையாக அரைத்து உடலில் தேய்க்க வேண்டும். ஒரு மணி நேரம் ஊறிய  பின்னர் குளிக்க வேண்டும். உடல் அரிப்பு குணமாக இதனை தொடர்ந்து செய்து வரலாம்.

அருகம்புல் ஒரு கைப்பிடி அளவு அரைத்து 200 மில்லி லிட்டர் காய்க்காத ஆட்டுப்பாலில் கலந்து காலை வேளையில் மட்டும் குடித்து வரவேண்டும்.  இரண்டு மூன்று வாரங்கள் இவ்வாறு செய்தால் ரத்த மூலம் கட்டுப்படும்.

தொடர்ந்து ஓரிரு மாதங்கள் குடித்தால் நரம்பு தளர்ச்சி குணமாவதுடன், ஆண்மை உணர்வும் எழுச்சி பெறும். ஆண்மை குறைவிற்கு நிரந்தர தீர்வாக  அருகம்புல் உள்ளது. ஹோமியோபதியில் இதில் இருந்து தயாரிக்கப்படும் மருந்து அமீபியாஸிஸ் மற்றும் சீத பேதிக்கு தலைசிறந்த மருந்தாக  பயன்படுகிறது.

எலுமிச்சம் பழ அளவு அருகம்புல் பசையை 1 டம்ளர் பசுந்தயிரில் கலந்து காலை வேளையில் குடிக்க வேண்டும். ஒரு மாதம் வரை இவ்வாறு  குடித்தால் வெட்டை நோய் குணமாகும்.

அருகம்புல் சாறு 20 மி.லி., தண்ணீர் 20 மி.லி., அரை தேக்கரண்டி சர்க்கரை சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் தொடர்ந்து ஒரு மாதம்  சாப்பிட்டால் வயிற்றுப்புண் குணமாகும்.

இதன் சாறை கண்ணில் ஊற்றினால் கண்நோய் மற்றும் கண் புகைச்சல் மாறும். இப்புல்லை வெட்டி தலையில் வைத்து கட்டிக்கொண்டால் கபாலச்சூடு  தணியும். அருகம்புல், கடுக்காய் தோல், இந்துப்பூ, கிராந்தி தகரம், கஞ்சாங்கோரை போன்றவற்றை சம அளவில் எடுத்து இவற்றோடு மோர் விட்டு  அரைத்து பாதித்த இடங்களில் பூசி வர படர்தாமரை மறையும். உடலின் சூட்டை குறைத்து குளிர்ச்சி உண்டாக்கும்.

அருகம்புல், கணுபோக்கி இரண்டையும் பத்து கிராம் அளவு எடுத்து அதோடு வெண்மிளகு இரண்டு கிராம் சேர்த்து நீர் விட்டு காய்ச்சி வடிக்க  வேண்டும். அந்த நீரோடு 2 கிராம் வெண்ணெய் சேர்த்து உட்கொண்டு வர மருந்துகளின் காரணமாக உண்டாகும் விஷம் முறிந்து விடும். நீரடைப்பு,  வெட்டை, நீர்த்தாரை எரிச்சல் இருந்தால் அவை நீங்கும்.

இரவில் ஒரு இளசி இலையுடன் அருகம்புல்லையும் கொதிநீரில் போட்டுவிட வேண்டும். பின்னர் மூடி வைத்து அந்த நீரை குழந்தைகளுக்கு  தொடர்ந்து கொடுத்து வர சளித்தொல்லை மெதுவாக குறையும். மேலும் சீதள தொல்லையும் நீங்கும். சமீபத்தில் சென்னை கடற்கரையில்  உடற்பயிற்சி, நடைபயிற்சி செய்பவர்கள் அருகம்புல் சாற்றை அருந்த தொடங்கியதில் இருந்து அதன் மகத்துவம் மக்களுக்கு தெரிய  ஆரம்பித்திருக்கிறது.

காலை உணவாக


அருகம்புல்லை சாற்றை காலையில் 9 மணிக்கு பசி ஆரம்பித்த உடன் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். பசிப்பதற்கு முந்தியே சாப்பிடுவது தவறு. அருகம்புல் சாப்பிட்ட 2 மணி நேரத்திற்கு பின் ஒரு பழம் சாப்பிட்டால் போதும். உடலுக்கு தேவையான அனைத்து சத்தும் அதில் கிடைத்துவிடும்.அடுத்து மதிய சாப்பாடு தான்.

புல்லின் தனிமங்கள்


அருகம்புல் ஈரப்பதம் நிறைந்த சாதாரண மண்ணில் தானாக வளருகிறது. இதற்கென எந்த தனி வளர்ப்பு முறைகளும் இல்லை. அருகம்புல்லை பறித்த  உடனேயே பயன்படுத்துவதால் அதன் முழு மருத்துவ குணத்தையும் பெறமுடியும். காய்ந்த புல்லில் சத்துகள் குறைந்துவிடுகிறது. இதில்  பொட்டாசியம், கால்சியம், சோடியம் போன்ற தனிமங்களின் ஆக்சைடுகள் மற்றும் சத்துகள் அடங்கியுள்ளன.

நன்றி:தினகரன்

Arvind Kejriwal

துடைப்பத்தை எடுத்து பாஜக,காங்கிரசு ஊழல்வாதிகளை துடைக்க சென்று டெல்லியில் தூத்து குப்பையில் எறிந்தவர்.இன்று தான் ஆட்சியமைக்க அக்குப்பையையே நாற்காலிக்கு அடைகொடுத்துள்ளார்.
ஆட்சியமைக்கும் முன்னரே கட்சியில் குழப்பம்.
பார்ப்போம் லோக்பாலை வைத்து வந்தவர் ஆட்சியை.
suran

ஒரு சிறைக்கு சென்ற அரசியல்வியாதிக்கு காலைக் கழுவி விடும் -கால் செருப்பை கக்கத்தில் ஏந்தி வைத்திருக்கும் காவல்துறை.
இத்தனைக்கும் லாலு பதவியில் இல்லை.
இவர்களிடம் அரசியல்வாதிகளுக்கு எதிரான பிரச்னைகளில் மக்களுக்கு நியாயம் கிடைக்க வழி இருக்குமா?

-----------------------------------------------------------------------------------------------------------------------------------



கவித ,கவித ...!

நீங்கள் நினைவுகள் Mshamm காணாமல் வாசனை நிரப்பப்பட்டுள்ளன.
மற்றும் காலமற்ற பார்க்க கேட்க.
நீங்கள், என் காதுகள் ஒரு வெற்று இசை நிரப்பப்பட்ட
என் உதடுகள் எந்த கவிஞர் பாட முடியும் என்று முழு உள்ளன வார்த்தைகள்.
நீங்கள் மிகவும் ரசாயன ஊக்கியாக வாழ்க்கை வேறொன்றும் இருக்கிறீர்கள்
மிகவும் எளிய உறுப்புகள் மற்றும் சிக்கலான Trynnd குவிக்கின்றன.
நீங்கள் வெளிப்பாடு பொருத்தமாக இல்லை
ஆனால் கவிதை ஸ்டாண்ட் வார்த்தைகளில்
காற்று, வாசனை உள்ள
ஆழம் பாருங்கள்
காதுகள், கடல் ஒலி இனிமையான ...
மற்றும் கைகளில் தென்றல் மழை டச் ..
நீங்கள் எந்த பொருத்தமாக இல்லை
மட்டுமே கிடைக்கும் தற்போதைய
ஒவ்வொரு உணர்வு உள்ளுறை விழித்துக்கொண்டது
ஒவ்வொரு கணமும் ஒவ்வொரு வருகையின்.



ஜனவரி 4, 1392
தெஹ்ரான்

என்ன ஒண்ணும் புரியலையா?
கீழே உள்ளதை படியுங்கள்.

و نگاهم را از خواهشی بی انتها..
با تو..گوشهایم پر از موسیقی ِ نانوشته ای می شوند
و لبهایم آکنده از حرفهایی که هیچ شاعر آنرا توان ِ سراییدن نیست..
تو بی بدیل ترین کاتالیزور ِ زندگی ِ شیمیایی ِ منی
که  عناصرش ساده ترین و ترکیباتش پیچیده ترینند..
تو در بیان نمی گنجی
ولی در کلام ،شعر می شوی
در هوا  ،عطر
در نگاه ،عمق
در گوشهایم ،نوای ِ آرامبخش ِ دریا...
و در دستهایم، لمس ِ شادی  بخش ِ باران..
تو در هیچ نمی گنجی
تنها جاری میشوی
در هر حس ِ نهفته و بیدار
در هر لحظه و هر دیدار..



4دی ماه 1392
طهرانـــــــ
இக்கவிதையின் தமிழாக்கம்தான் மேலே தரப்பட்டவைஇது கூகுள் தமிழாக்கம்.ـ

Photo

கொஞ்சம் இடம் கொடுத்தால்.
 


 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?