இடுகைகள்

மார்ச், 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

"வியர்வை "சிந்த எண்ணியவை

படம்
ரொம்ப நாட்களுக்குப்பின்னர்  நேற்று ஊர்  மக்கள்    ஒன்று சேர்ந்து பேருந்துகளை சிறை பிடித்துள்ளனர். அதிகாரிகளும்-காவல்துறையினரும் வந்து அதை வழக்கமான் பேச்சு வார்த்தைகளை நடத்தி பேருந்துகளை விடுவித்துள்ளனர். சிறை பிடிக்க காரணம் .18 மணி நேர மின்தடைதான் .இலங்கை பிரச்னையை முடக்கி விடும் வலிமை வாய்ந்ததாக மீண்டும் வந்துள்ளது.சிறை பிடித்த ஊரில் ஒன்றரை நாட்களாக மின்சாரம் தலையை காட்டவில்லையாம். இப்போதுதான் கோடை தலையை காட்டுகிறது.அதற்குள் தமிழகம் எங்கும் மின்தடை நேரம் 12 முதல் 18 மணி நேரம் என்றாகி விட்டது. இன்னமும் காலமிருக்கிறதே . வரும் வெயிற்கால இரவுகளை நினைக்கவே பயமாக இருக்கிறது. ஆனால் இதை கண்டு தமிழக அரசு மிரளவில்லை என்பதோடு.அதை பற்றிய கவலையும் கொண்டதாகவோ ,அதை தீர்க்க வழி செய்வதாகவோ தெரியவில்லை. இந்த வரவு-செலவு அறிகையில் கூட  அத ற்காக ,மின் உற்பத்திக்கு புதிய திட்டங்களுக்காக ஒரு பைசா கூட ஒதுக்கப்படவில்லை. முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தில் நடக்கும் மின்தடை பற்றியோ,மக்கள் படும் அவதியை பற்றியோ ,அதனால் எழும் போராட்டங்களை பற்றியோ இதுவரை பொருட்படுத்தியதாக தெரியவில்லை. ஒரு வேளை தமிழகத்தில்  மி

கட்ஜு க்கு என்னவாயிற்று....?

படம்
  ----------------------------------------- முன்னாள் நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு இதுவரை கூறிய கருத்துக்கள் பெரும்பாலான  இந்தியர்களின் கருத்துக்களுடன் ஒத்து போவதாக இருந்தது.ஆனால் இப்போது தெரிவிக்கும் கருத்துக்கள் முன்னாள் நீதிபதியாக இருந்தவரின் கருத்து என்பதை ஒத்துக்கொள்ள முடியவில்லை .சஞ்சய்தத் பெற்ற தண்டனை பற்றிய பற்றிய கருத்துக்கள் முரணானவை. சில மாதங்களுக்கு முன் 90 சத இந்தியர்கள் முட்டாள்கள் எனவும், 90 சத நீதிபதிகள் முட்டாள்கள் ‌எனவும் கருத்து தெரிவித்தார்.  பின்னர் காங்., மற்றும் பா.ஜ. முதல்வர்களை விமர்சித்தார் .  மார்க்கண்டேய கட்ஜு  இப்போது மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தண்டனை பெற்ற நடிகர் சஞ்சய்தத்திற்கு மன்னிப்பு வழங்க வேண்டும் என்கிறார். அதையே பலவழிகளில் கூறியும் வருகிறார். இப்போது ஆங்கில தொலைக்காட்சி  ஒன்றில் :- " நான் பேசும் கருத்துக்கள் விளம்பரம் தேடுவதற்காக அல்ல. மனதில் பட்டதை வெளிப்படுத்துகிறேன்.  நாட்டில் எல்லா வாக்காளர்களும் முட்டாள்கள் தான். [முன்பு இந்த சதவிகிதம் 90 ஆக இருந்தது.] தேர்தலில் நான் ஓட்டளிக்கமாட்டேன். ஏனென்றால் எனது ஒரு

கல்யாணம் நின்னு போச்சு...

படம்
குஜராத்தில் நரேந்திர மோடி ஆட்சியில் அனைத்து வளங்களும் பெற்று மக்கள் வாழ்வதாகவும் அதனால் அவரை பிரதமர் பதவிக்கு முன்னிறுத்தி வழிபாடுகள் நடந்து வருகின்றன.அமெரிக்காவே அவரின் ஆளும் திறமையில் மயங்கி தங்கள் நாட்டுக்கு வரக்கூறியுள்ளதாகவும் செய்திகள் வருகின்றன. வினவு  ஆனால் அவர் தனது திறமையை காட்டி ஆளும் குஜராத்தில் பல இளைஞர்கள்  திருமணம் செய்ய முடியாமல் தவிக்கிறார்கள்.அதற்கு காரணம் குஜராத்தில் நிலவும் கடுமையான குடிநீர் தட்டுப்பாடுதான். குடிநீர் தட்டுப்பாடு- அதனால் இளைஞர்கள் திருமணம் செய்ய முடியாமல் தவிப்பதும் தெரிய வந்துள்ளது.குஜராத் மாநிலத்தில் உள்ள அம்ரேலி மாவட்டத்தில் கடும் வறட்சி நிலவி வருகிறது. வறட்சியால் மக்கள் தண்ணீர் இல்லாமல் தவித்து வருகிறார்கள். இவர்கள் தாகத்தை போக்க மோடி அரசு எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரிய வில்லை. இதனால் அப்பகுதி மக்கள் அரசு மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.  அம்ரேலி மாவட்டத்தில்  டிடன் கிராமமும் உள்ளது. அங்கு  2012ம் ஆண்டு 56 சதவிகித மழை மட்டுமே மழை பெய்ததால் நிலத்தடி நீர் வற்றி மக்கள் குடிக்க தண்ணீர் இல்லாமல் தவிக்கிறார்கள். தண்ணீருக்க

"இந்தி" [ய] ஆட்சிப் பணி

படம்
இ.ஆ.பணி [ஐ.ஏ.எஸ்.] இ.கா.ப.[ஐ.பி.எஸ் ]அதிகாரிகளை தேர்வு செய்வதற்கான, மத்திய அரசின் பணி யாளர் தேர்வாணையம் [யு.பி.எஸ்.சி.], புதிதாக சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது.  அதில் ஆங்கிலம்-இந்தி மொழிகள் தவிர்த்து மற்ற இந்திய மாநில  மொழியில்,ஒரு பகுதி தேர்வை எழுத விரும்பும் தேர்வாளர தேர்ந்தெடுக்கும் மொழியை குறைந்தபட்சம் 25 பேராவது தேர்ந்தெடுத்திருந்தால்தான் தேர்வு எழுத இயலும். தங்கள் தாய் மொழி  இலக்கியத்தை  தேர்ந்தெடுக்கும் தேர்வாளர், அதை தன் பட்டப்படிப்பில் எடுத்து படித்திருக்க வேண்டும்.  அனைத்து தேர்வாளர்களும்,ஆங்கிலத்தில் கட்டுரை எழுதும் ஆற்றல் பெற்றிருக்க வேண்டும் என்பன போன்ற நிபந்தனைகளை விதித்திருந்தது. இதற்கு இந்தியாவில் இந்தியை தாய் மொழியாகக் கொண்டிராத பகுதிகளில் இருந்து கடும் எதிப்பு கிளம்பி மக்களவையில் எதிரொலித்தது. இந்த புதிய முறையை கொண்டுவர காரணம் என்ன? மத்திய அரசின் பணி யாளர் தேர்வாணையத்தின் உறுப்பினர்கள் 10 பேர்களில் ஒன்பது பேர்கள்  வட மாநிலத்தை சேர்ந்தவர்கள். மீதி ஒருவர் மட்டும் தென் பகுதியை சேர்ந்த ஆந்திராவைச் சேர்ந்தவர்.மற்ற முக்கிய மொழிகள் மாநி லங்கள

சிங்கள விஷ[ம]ம்

படம்
இலங்கை ராஜபக்சேக்கு எதிரான உலகத்தமிழர் எழுச்சி இலங்கை அரசை அதிர்ச்சிக்குள்ளாக்கி யுள்ளது. அதனை தனது குள்ளநரி தனத்தால் இந்திய ஒற்றுமைக்கே உலை வைக்கும் விதமாக கையாலத்துவங்கி விட்டது. அதன் விஷமப்பிரச்சாரத்தை இந்தியாவில் தூதர் என்பவர் மூலமே ஆரம்பித்து விட்டது. டெல்லியில் உள்ள இலங்கைக்கான் தூதர் வட இந்திய ஊடகங்களுக்கு ஒரு செய்தியை தனிப்பட்ட கவனத்துக்கு என்று அனுப்பியுள்ளார். "இலங்கை மக்கள்தொகையில் 75% உள்ள சிங்களர்கள் இந்தியாவின் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் தான். எனவே, இலங்கையில் வெறும் 12% மட்டுமே உள்ள தமிழர்களை இந்திய வம்சாவழியினர் எனக் கருதி கவலைப்படக் கூடாது. மாறாக 75% உள்ள சிங்களர்கள் தான் இந்திய வம்சாவழியினர் என்பதை உணர்ந்து அவர்களின் உரிமைகளை பாதுகாப்பதில்தான் இந்தியா கவலைக் கொள்ள வேண்டும் . இலங்கையைச் சேர்ந்த சிங்கள மக்கள், ஒடிசா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட வடஇந்திய மாநிலங்களின் பூர்வீகக் குடிமக்கள். அசோக சக்கரவர்த்தி ஆட்சி நடைபெற்ற போது , அதாவது கிறிஸ்து பிறப்பதற்கு 300 ஆண்டுகளுக்கு முன்பே  வட இந்தியாவுக்கும் இலங்கைக் கும் இருந்த உறவுகள் பதிவாகி உள்ளன. அப்போத

சரியான வழியல்ல .....,

படம்
'மாணவர்கள் போராட்டம் இதுவரை சரியான வழியில் தான் பொய் கொண்டிருக்கிறது.ஆனால் அதை திசை திருப்பி வன்முறையால் தடம் மாறி சென்று விடும் அபாயம் இப்போது வருகிறது.அப்படி சென்றால் மக்கள் மனதில் ஏற்பட்டுள்ள மாணவர் போராட்ட மரியாதை மரியாதையை இழந்து விடும். காங்கிரசுக்காரனை எதிர்த்து போராடலாம்.ஆனால் அதை வன்முறையின் மூலம் திசைமாறிட செய்திடக்கூடாது. பேனர்களை கிழிப்பது மாணவர்களிடம் காங்கிரசின் மேல் இருக்கும் வெறுப்பை உணர்த்துகிறது.அதை வெளிக்காட்டும் முறையில் சில கட்சியினரால் குறிப்பாக நாம்தமிழர் கட்சியினரால் வன்முறை பாதையை மா ணவர்களுக்கு காட்டி வருவது பயத்தை தருகிறது. காரணம் இருபக்கமும் கூர்மையான ஆயுதம் வன்முறை. அதானால் மாணவர்கள் கைது .அதனால் அவர்கள் போராட்டத்திற்கு பெற்றோர் எதிர்ப்பு.காவல்துறை -அரசு நடவடிக்கைகள் என்று பல வழிகளில் போராட்டம் சென்று அதன் நோக்கமே சின்னாபின்னமாகிவிடும். ஈழப்பிரச்னையை மட்டுமே வைத்து தங்கள் அரசியலை செய்து வருவோர் மாணவர்களை தங்கள் கையில் எடுக்க இப்படி இளம்வயது வேகத்தை வன்முறை -பரபரப்பு என்று கொண்டு சென்று விடுவார்கள். இதனால் பாதிக்கப்படுவது போராட்ட நோக்கமான ஈழத்த

நடிகை சுகுமாரி .......,

படம்
தமிழ், மலையாளம், இந்தி, ஒரியா, பெங்காலி மொழிகளில் 2500க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ள நடிகை சுகுமாரி மரணமடைந்தார். அவருக்கு வயது 74. சென்னை தி.நகரில் வசித்து வந்தார் சுகுமாரி. கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டில் விளக்கேற்றும்போது தவறுதலாக அவர் புடவையில் தீப்பற்றியது. பலத்த காயத்துடன் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.  இந்நிலையில் மாரடைப்பு காரணமாக நேற்று மாலை சுகுமாரி இறந்தார். எம்.ஜி.ஆர், சிவாஜி, ஜெமினி கணேசன், பத்மினி, சாவித்திரி உட்பட பழம்பெரும் நடிகர், நடிகைகளுடன் நடித்ததோடு இந்த தலைமுறை நடிகர்களுடன் நடித்துவந்தார். கமல்ஹாசனின் பல படங்களில் நடித்துள்ளார்.இவருக்கு கமல்ஹாசன் சில நாட்களுக்கு முன்னர்தான் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி பெருமைப்படுத்தினார். ஒய்.ஜி.மகேந்திரன், சோ  நடத்திய நாடகங்களிலும் நடித்து வந்தார். மத்திய அரசின் பத்மஸ்ரீ உட்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார். நாகர்கோவிலில் 1938ல் பிறந்த சுகுமாரி, ‘ஓரிரவு‘ படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அடுத்து ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’, ‘சம்பூர்ண ராமாயணம்’, ‘பட்டிக்காடா பட்டணமா’,

வேடங்கள் கலைகிறது.

படம்
இந்தியாவிலேயே  முதன் முறையாக பல லட்சம் கோடிகளில் முறைகேடுகள்  நடந்ததாக உலகையே அதிர வைத்த முறைகேடுகளின் ராசா இப்போது புதிய வழியில் நடைபோடுகிறது.அதில் இதுவரை உத்தமர்களாகவும்-புனிதர்களாகவும் வேடமணிந்தவர்கள் வேடங்கள் கலைகிறது. களைந்து விடாமல் இருக்க குற்றம் சாட்டப்பட்டவரை வாயைத்திற்க்கவிடாமல் செய்ய முயற்சிக்கிறார்கள் . ரூ.1.76 லட்சம் கோடி முறைகேடு நடந்த  2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா மேற்கொண்ட முடிவுகளை பிரதமர் அலுவலகம் முன்னதாகவே  ஆய்வு செய்து, ஒப்புதல் அளித்த விபரம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதை தொடர்ந்து ஒவ்வொரு முறைகேடுகளும் மன்மோகன் சிங் ,சோனியா ,ப.சிதம்பரம் உட்பட முக்கிய காங்கிரசு தலைகள் பங்களிப்புடனெ நடந்திருப்பதும் , இம்முறைகேடுகளில் ஆ.ராசா வை விட அதிகமான் பங்கு இருப்பதும் ஆ.ராசா.,திமுக இதில் பலியாடுகள் தான் என்பதும் இப் போ து வெட்ட வெளிச்சமாகி விட்டது. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படை யில் தனியார் தொலைபேசி நிறு வனங்களுக்கு 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு என்ற முடிவை 2008ம் ஆண்டில் தொலைத்தொடர்புத் துறை அமைச

நச்சு ஆலை ஸ்டெர்லைட்

படம்
தூத்துக்குடி சிப்காட் பகுதியில் தான் வெடிக்க காத்திருக்கும் வெடிகுண்டாக நச்சு ஆலை  ஸ்டெர்லைட் உள்ளது . இந்த ஆலை யை மூட வெண்டும்.அகற்ற வேண்டும் மக்கள் வாழ்வை காப்பாற்ற வே ண்டும்  என்று தூத்துக்குடி மக்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர். ஆனால் மத்திய ,மாநில அரசுகள் இது பற்றி கண்டு கொள்ளவே இல்லை. இந்தியாவில் எல்லா மாநிலங்களும் இந்த ஸ்டெர்லைட் ஆலையை இதன் நச்சுத்தன்மையை கணக்கில் கொண்டு  தங்கள் மாநிலத்தில் இயங்க அனுமதி மறுத்த போது இந்தியாவின் வீர மங்கை ஜெயலலிதாதான் தமிழகத்தின் முதல்வர்.அவர் வீரத்தை காட்டி பயப்படாமல் [போனால் மக்கள் உயிர்தானே போகிறது.ஆனால் வருவது...?என்ற கணக்கில் ]தமிழகத்தில் அதுவும் தூத்துக்குடி பகுதியில் இடம் ஒதுக்கி சிகப்பு கம்பளம் விரித்தார். பலன் அவருக்கும்,சசிகலாவுக்கும்,சிதம்பரத்துக்கும் [இதில் எல்லாம் ஒற்றுமையாக செயல்படுவார்கள்]வேதாந்தாவின் பங்குகள் பணபபெட்டியுடன் கிடைத்தது. அப்போது முதல் இந்த ஆலை எதிர்ப்பு போராட்டங்கள் நடந்து கொண்டுதான் இருகிறது. அரசியல் கட்சியினரும் முதலில் போராடினார்கள் பின்னர் ஸ்டெர்லைட் ஆலை அவர்களை கவர்[த ]ந்ததால்  நழுவி விட்டன