இடுகைகள்

மே, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சம்பா அரிசி மகத்துவம்.

படம்
-- சம்பா அரிசி மகத்துவம்.   சம்பா அரிசி அதிலும் கைக்குத் தல் அரிசி .வயிறை மட்டும் நிரப்பாது.உங்கள் உடல் நலனையும் பாதுகாக்கும் . அரிசியானது வெகு குறைவான தோல் நீக்கப்பட்டது. நெல்லின் வெளிப்புற தோலை நீக்கியப் பிறகு மிதமான பழுப்பு நிறத்தில் இருக்கும்.  இது தானியத்தின் சுவையுடன் வாயில் மெல்லக் கூடிய தன்மை கொண்டது. இவ்வகை அரிசி வெகுவாக தீட்டப்படாததால், மிகுந்த சத்துள்ளதாக இருக்கும்.  ஆனால் இதை சமைப்பதற்கு சாதாரண அரிசியை விட, சிறிது அதிக நேரம் அதிகமாகும். கைக்குத்தல் அரிசிச் சோறு ஒரு முழு தானிய உணவு. இதில் சத்தான வைட்டமின் பி, பாஸ்பரஸ், செலினியம், மாங்கனீசு, பொட்டாசியம், மெக்னீசியம் போன்றவை உள்ளன.  மேலும் இதில் உடல் எடையைக் குறைக்கும் நார்ச்சத்து மற்றும் ஃபைட்டோ நியூட்ரியண்ட்ஸ் சத்துக்கள் (Phytonutrients) மிகுதியாக உள்ளன. இப்போது இந்த கைக்குத்தல் அரிசியை சாப்பிட்டால், என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைத் தெரிந்து கொள்வோமா! பெருங்குடல் புற்றுநோய்--கைக்குத்தல் அரிசியில் செலினியம் இருப்பதால். பெருங்குடல் புற்றுநோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறைக்கப்படுகிறது. இந்த அரிச

புகையிலை எதிர்ப்பு .....!

படம்
புகைப்பிடிக்கும் பழக்கம் ஆண்டுதோறும் அதிகரிக்கிறது.  பள்ளி மாணவர்களும் இப்பழக்கத்துக்கு அடிமையாவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் எத்தனையோ உயிர் பறி போனாலும், அதில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கிறதே தவிர குறைந்தபாடில்லை.  இதுபற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த மே 31 ம் தேதி, உலக புகையிலை எதிர்ப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. "அனைத்து வித புகையிலை விளம்பரங்கள், ஸ்பான்ஷர்ஷிப்பை தடைசெய்தல்' என்பது இந்தாண்டு இத்தினத்தின் மையக் கருத்து. "புகையிலையால் ஏற்படும் ஆபத்தையும், அவற்றிலிருந்து விடுபடும் வழிகளையும் எடுத்துரைப்பதே' இத்தினத்தின் நோக்கம். புகையிலையால் கிடைக்கும் வருமானத்தை விட, புகையிலை பாதிப்பால் ஏற்படும் நோய்களை தீர்ப்பதற்கு, ஒவ்வொரு நாட்டின் அரசுக்கும் அதிகம் செலவாகிறது.  மனித உயிர்களுக்கு இறப்பை அளிக்கும் இரண்டாவது முக்கிய காரமாக புகையிலை இருக்கிறது.  புகையிலை என்றதும் நினைவிற்கு வருவது "சிகரெட்'.  இதில் உள்ள நிக்கோடின் என்ற நச்சுப்பொருள், புகைப்பவர்களை அடிமையாக்குகிறது. ஒரு சிகரெட்டில் 4 ஆயிரம் வேதிப்பொருட்கள் கலந்

கசக்கும் உண்மைகள்?

படம்
0 "தினமும் குளிப்பதற்கு முன் ஒரு டீஸ்பூன் வேப்பம்பூ விழுது, அரை டீஸ்பூன் மாம்பழ சதை, அரை டீஸ்பூன் நல்லெண்ணெய் கலந்து முகத்தில் பூசுங்கள். பருக்கள் மறைந்து விடும். இதிலுள்ள நல்லெண்ணெய், தோலின் பள பளப்பைக் கூட்டி, கூடுதல் மிருதுவாக்கும். " • காய்ந்த வேப்பம் பூவில் உப்பு கலக்காத வேப்பம்பூ 50 கிராம் -  அதை 100 கிராம் தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளம் சூடு பதத்திற்கு ஆறியதும், வேப்பம் பூவுடன் சேர்த்து எண்ணெயை தலையில் நன்றாகத் தேய்த்து அரை மணிநேரம் ஊறிக் குளித்தால், பொடுகு பிரச்னை தீரும். அதிகம் பொடுகு உள்ளவர்கள், வாரத்திற்கு ஒரு முறையோ, இரண்டு முறையோ, மூன்று வாரங்கள் குளித்தால் பொடுகு சுத்தமாக நீங்கி விடும். • வெள்ளரிக்காய், மஞ்சள், வேப்பம்பூ சேர்த்து அரைத்து பின்னர் குளித்து வந்தால், உடல் சிவப்பாக மாறும். • நல்லெண்ணை வேப்பம்பூ கலந்து தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் பொடுகு தொல்லை நீங்கும்.. • வேப்பிலை, புதினா, துளசி இலைகளை சமமாக எடுத்து அரைத்து பொடி செய்து கொள்ளவும்..அதனுடன் ஒரு ஸ்பூன் பன்னீர் கலந்து முகத்தில் தடவி அரை மணிநேரம் கழித்து முகம்

Web Development மொழிகளை இலவசமாக கற்க ..........

படம்
Web Development குறித்து படிக்க விரும்பும் நண்பர்கள் நிறைய பேருக்கு அது குறித்த அறிவு இருந்த போதும் நேரமின்மை மற்றும் சில காரணங்களினால் வெளியே எங்கும் சென்று படிக்க முடியாத நிலை இருக்கும். ஆனால் இணையத்தில் இருந்தால் எளிதாக அவர்கள் படிக்க முடியும் என்று நினைப்பார்கள். அத்தகைய வசதியை இலவசமாக பெற முடிந்தால்?   Web Development மொழிகளை இலவசமாக கற்க உதவும் தளங்களை பற்றி பார்க்கலாம் . Web Development Language என்ன ?  இவற்றின் மூலம் தான் எந்த ஒரு தளமும் இயங்குகிறது. ஒரு தளத்தை உருவாக்க, நடத்த, மேம்படுத்த இவை அவசியம் ஆகிறது. 1. W3Schools - http://www.w3schools.com/ மிக அதிகமான தகவல்களை கொண்டுள்ள இந்த தளம் Web Development க்கு தேவையான அனைத்தையும் இலவசமாகவே சொல்லித் தருகிறது. மிக எளிமையாக கற்று தரும் இந்த தளத்தின் மூலம் Web Development குறித்த அடிப்படை அறிவே இல்லாதவர் கூட விரைவில் அவற்றை கற்றுக் கொள்ளலாம். Certificate வேண்டும் என்பவர்கள் 95$ கட்டி பெற

"அய்யா தெரியாதையா"

படம்
" கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் உள் தேர்வுகளை ஆங்கில மொழியில் எழுத வேண்டும் என்ற உத்தரவு என்னுடைய கவனத்திற்குக் கொண்டு வரப்படாமல் தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்தால் வெளியிடப்பட்டுள்ளது " --என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர்  வெளியிட்ட அறிக்கையில், "தமிழ்நாட்டில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் மாணவ – மாணவியர் தங்களுக்கான உள் தேர்வுகளை ஆங்கில மொழியில் எழுத வேண்டும் என்று தமிழ்நாடு அரசு உத்தரவிட்ட செய்திகள் வந்துள்ளன. இது குறித்து இன்று தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர் மற்றும் உயர்கல்வித் துறை செயலாளர் ஆகியோருடன் விரிவாக விவாதித்தேன். இந்த விவாதத்தின் போது,  ஆங்கில வழியில் பயிலும் மாணவ-மாணவியர் ஆங்கில மொழி திறனை வளர்த்துக் கொள்ள தங்களது உள் தேர்வுகளை ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என்று தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் உத்தரவிட்டு இருப்பதாகவும், தமிழ் வழியில் பயிலும் மாணவ-மாணவியருக்கு இது பொருந்தாது என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த உத்தரவு என்னுடைய கவனத்திற்குக

செந்தமிழ் சீமான்கள் பார்வைக்கு

படம்
தமிழை பள்ளிகள்,கல்லூரிகளில் இருந்து ஜெயலலிதா எடுத்துக் கொண்டிருக்கிறார்.அவரின் சிலை வைக்கும் முயற்சிக்கு வாழ்த்து  தெரிவித்து விட்டு ,பள்ளிகளில் தமிழை ஒழிக்கும் முயற்சிக்கு வாயை திறக்காமல் இருக்கும் செந்தமிழ் சீமான்கள் பார்வைக்கு மொழியை வளர்க்கும் விதம் பற்றி ஒரு செய்தி :- "பிரான்ஸ் நாட்டின் பல்கலைகளில், ஆங்கிலத்தில் பாடங்களை போதிக்க, அந்நாட்டு அரசியல் பிரமுகர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். பிரெஞ்ச் மொழி 1635ம் ஆண்டிலிருந்து வழக்கத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்த மொழியிலிருந்து தான், ஆங்கிலத்தில் பல மொழி சேர்க்கப்பட்டுள்ளதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும், ஆங்கிலம் அளவுக்கு, பிரெஞ்ச் மொழி சர்வதேச அளவில் வளரவில்லை. கடந்த மார்ச் மாதம், பிரான்ஸ் உயர்கல்வி அமைச்சர், ஜெனிவிவி பியாரசோ கூறியதாவது: நம்நாட்டில், 3,000 இந்திய மாணவர்கள் மட்டுமே படிக்கின்றனர். லண்டனை ஒப்பிடுகையில், இது மிகவும் குறைவு. எனவே, நம்முடைய பல்கலைகளில், ஆங்கிலத்தில் பாடங்களை போதித்தால், வெளிநாட்டு மாணவர்களை அதிகம் கவர முடியும். எனவே பல்கலைகளில் ஆங்கிலத்தில் கல்வி போதிக்க நடவடிக்கை எடுக்க

செம்மொழியான[ மலையாளம்] மொழியாம் .

படம்
 வழக்கு நிலுவையில் இருந்த போதும், சாகித்ய அகடமியே பலமாக எதிர்த்த போதும், அத்தனையையும் மீறி, மலையாள மொழிக்கு, செம்மொழி அந்தஸ்தை, மத்திய அரசு தந்துள்ளது. இதன்மூல செம்மொழி வரிசையில், தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளோடு, தற்போதுமலையாளமும் சேர்ந்துள்ளது. "ஒரு மொழியை செம்மொழியாக அறிவிக்க வேண்டும் எனில், குறிப்பிட்ட நிபந்தனைகளையும் விதிமுறைகளையும் உள்ளடக்கிய தாக, அந்த மொழி இருக்கவேண்டும்' என, "யுனெஸ்கோ' அமைப்பு தெரிவித்துள்ளது. அதன்படி" ஒரு மொழி, செம்மொழியாக அறிவிக்கப்பட வேண்டும் எனில், அந்த மொழியானது, குறைந்தது, 2,000ஆண்டுகள் பழமையானதாக இருக்க வேண்டும்.  அதே கால அளவுக்கு, பேச்சுவழக்கிலும், அந்த மொழி இருந்திருக்கவேண்டும்.  வேற்று மொழி சொற்கள் கலந்திருக்காமல், தனக்கே உரிய இலக்கண தொன்மையுடன், அந்த மொழி உயரிய பழம்பெருமை வாய்ந்ததாக இருக்க வேண்டும" இந்த நிபந்தனைகளை எல்லாம், பூர்த்தி செய்த மொழிகள் என்பதால், சமஸ்கிருதம், ரோமன், கிரேக்கம், சைனீஷ் போன்ற மொழிகள் செம்மொழி அந்தஸ்தை பெற்றன.  இந்த மொழிகள் அனைத்திற்கும், எந்த வகையிலும், குறைச்சல் இ

டி.எம்.செளந்தரராஜன்,

படம்
டி.எம்.எஸ். என்று அனைவராலும் அழைக்கப்படும் பழம்பெரும் பின்னணி பாடகர் டி.எம்.செளந்தரராஜன் (91) உடல்நலக் குறைவால் சென்னையில் சனிக்கிழமை (மே 25) காலமானார். சில மாதங்களுக்கு முன்பு வீட்டில் கால் தவறி விழுந்ததில், டி.எம்.எஸ்-க்கு தலையில் காயம் ஏற்பட்டது. இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடந்த மாதம் வீடு திரும்பினார். சில நாள்களுக்கு முன்பு மீண்டும் டி.எம்.செளந்தரராஜனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து மயிலாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்ற அவர்,  19-ஆம் தேதி வீடு திரும்பினார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய சில நாள்களில் அவரது பேரனுக்கு திருமணம் நடைபெற்றது.  22-ஆம் தேதி நடைபெற்ற திருமணத்தில் டி.எம்.எஸ். கலந்து கொண்டார். சென்னை மந்தைவெளியில் தனது குடும்பத்தாருடன் வசித்து வந்த அவருக்கு, உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டிருந்ததால் சில நாள்களாக டாக்டர்கள் அவரது வீட்டிற்கே வந்து சிகிச்சையளித்தனர். இந்த நிலையில் சனிக்கிழமை பிற்பகலில் டி.எம்.எஸ்-க்கு கடும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. பிற்பகல் 3.50 மணிக்கு அவரது உயிர் பிரிந்த

நான்காண்டுகள் நிறைவு சிறப்பு முறைகேடு ! ......!

படம்
ஐக்கிய முற்போக்குக்கூட்டணி -2 அரசின் நான்காண்டுகள் நிறை வடைந்துள்ளதையொட்டி அரசின் சாதனைப் பட்டியலை பிரதமர் மன் மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் வெளியிட் டுள்ளனர். இதற்கான விழாவில் காங்கிரஸ் தலைகள் தவிர கூட்டணி அரசில் அமைச்சர் பதவியை பெற்றுள்ள சரத் பவார், அஜித் சிங், பரூக் அப்துல்லா ஆகியோர் பங்கேற்றுள்ளனர். கூட்ட ணியை வெளியிலிருந்து ஆதரிப்ப தாக கூறிக்கொள்ளும் லாலு பிரசாத் யாதவ், ராம் விலாஸ் பஸ்வான் ஆகி யோரும் கலந்துகொண்டுள்ளனர்.  கூட்டணி ஆட்சி பதவியேற்றபொழுது அதில் இடம் பெற்றிருந்த திமுக, திரி ணாமூல் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தற்போது கூட்டணியில் இல்லை. அரசுக்கு ஆபத்து வரும்போதெல் லாம் மத்திய புலனாய்வுத்துறை விரட்ட, வேறு வழியில்லாமல் உறுதி யான ஆதரவு அளித்துவரும் முலாயம் சிங் யாதவ், மாயாவதி போன்றவர்கள் இந்த விழாவில் பங்கேற்கவில்லை. நியாயமாக இந்த விழாவில் மத்திய புலனாய்வுத்துறையின் இயக்குநரும் பங்கேற்றிருக்கவேண்டும். ஏனென் றால், மத்திய புலனாய்வுத்துறையின்புண் ணியத்தில்தான் இந்த அரசின் ஆயுள் காலம் நீட்டிக்கப்பட்டு வருகிறது. உண்மையில் சொல்லப்போனால்,