இடுகைகள்

ஜூலை, 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

காங்கிரஸ் ஆட்சியும், ஊழல்களும் :

படம்
 சுதந்திரமடைந்த பின்னரும் இந்தியா உயர் மட்ட ஊழல்கள் பலவற்றைக் கொண்ட வர லாற்றை கொண்டுள்ளது.  பிரதான கட்சிகளாக அதிக காலம் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் ஆனாலும், சில காலம் ஆட்சியில் இருந்த இன்றைய பிரதான எதிர் கட்சியான பா.ஜ.க. ஆனாலும் இரண்டுமே ஊழல் வரலாற்றில் முன்னணியில் தான் உள்ளன. காங்கிரஸ் ஆட்சிகால ஊழல் வரலாறு1960லேயே துவங்கிவிட்டது. அப்போது வெளிவந்த தர்ம தேஜா கடனுதவி ஊழல் ரூ. 22 கோடி அளவிற் கான ஊழல்.  இன்றைக்கு நடைபெறும் ஊழல் களின் தொகையை ஒப்பிட்டு பார்த்தால் அது மிக மிக சிறிய தொகையாகத் தோன்றும். ஆனால் அது அன்றைக்கு நாடாளுமன்றத் தைப் புரட்டி போட்ட ஒன்று. இந்திரா காலத்தில் நகர்வாலா ஊழல் என்பதும் மிக வும், பரபரப்பாக பேசப்பட்ட ஒன்று. அது வெறும் 60 லட்சம் அளவிலானது.  மிகவும் பரபரப்பான எதிர்பார்ப்போடு ஆட்சிக்கு வந்த ராஜீவ் காந்தி ஆட்சி காலத்தில் 1987 ல் மிகவும் பிர பலமடைந்த போபர்ஸ் பீரங்கி ஊழல் இன் றைக்கும் பேசப்படும் பிரபலமான ஒன்று. அதில் திருமதி சோனியாவின் உறவினர் குத் ரோச்சி சம்பந்தப்பட்டிருந்தும், அவர் கைதா காமல் அரசின் பாதுகாப்போடு நாட்டை விட்டு அனுப்பப்பட்டதும்

வாக்களிப்பது உயிர் [போகும் ]கடமை?

படம்
மேற்கு வங்கத்தில், மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்., ஆட்சி நடக்கிறது. இங்கு, உள்ளாட்சி தேர்தல்களுக்கான அறிவிப்பு, சில மாதங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்தே அங்கு பல்வேறு அரசியல்கலாட்டாக்கள் அரங்கேறின.திரினாமுல்  காங்கிரசார் தாங்கள் எப்படியாவது வெற்றி  பெற வெண்டும் என்று பல அட்டுழியங்களை நிறைவேற்றி வருகின்றனர். மாற்றுக் கட்சியினர் வேட்பு மனூவை தாக்கல் செய்ய விடாமல் காவல்துறையினர் துணையுடன் தடுத்து தாங்களே போட்டியின்றி தேர்ந்தெடுக்கப் பட்டதாக அறிவித்துக்கொண்டனர். இவர்கள் நடந்து கொள்ளும் முறையைப்பார்த்தால் தமிழகத்தில் இப்போது நடந்து முடிந்த ஊராட்சி,கூட்டுறவு தேர்தல்கள் போல் இரு க்கிறது அல்லவா? தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யும் விஷயத்தில், முதல்வர் மம்தா பானர்ஜிக்கும், மேற்கு வங்க மாநில தலைமை தேர்தல் அதிகாரி, மீராவுக்கும் இடையே, கருத்து வேறுபாடு ஏற்பட்டது.  ஒரு வழியாக, சுப்ரீம் கோர்ட் தலையீட்டின்படி, ஆறு கட்டங்களாக தேர்தல்கள் நடந்து முடிந்தன.இடது சாரிகள் மட்டுமின்றி காங்கிரசாரும் தாக்கப்பட்டுள்ளனர்.இடது சாரி தொண்டர்கள்

காசில்லாமலேயே சாப்பிடலாம்......?

படம்
கிராமப்புறங்களில் ஒரு நாளைக்கு ரூ.27, நகர்ப்புறங்களில் ரூ.33 செலவு செய்து வாழுகிற தகுதி படைத்தவர்கள் ஏழைகள் அல்ல என்று வறுமைக்கோடுக்கு மத்திய திட்டக்கமிஷன் இலக்கணம் வகுத்துள்ளது.இது பற்றிய அறிவிப்பு நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக அனல்பறக்கும் விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில், மும்பையில் ஒருவர் ரூ.12–க்கு முழுச் சாப்பாடு சாப்பிட முடியும் என்று காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ராஜ் பாப்பர் எம்.பி. கூறி, எரிகிற தீயில் எண்ணெய் வார்த்திருக்கிறார். மற்றொரு காங்கிரஸ் எம்.பி. ரஷீத் மசூத், டெல்லியில் ஜூம்மா மசூதி அருகில் 5 ரூபாய்க்கு சாப்பாடு சாப்பிடலாம் எனக்கூறி கொளுந்து விட்டு எரிகிற தீயில் மேலும் எண்ணெய் வார்த்துள்ளார். ஆனால் ஜூம்மா மசூதி பகுதியில் டீக்கடை நடத்தி வருகிற ஒருவர், ’’ ரஷீத் மசூத் அந்தக் காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவர் மறுபடியும் ஜூம்மா மசூதி பக்கம் வந்து செல்லட்டும்’’ என கூறி இருக்கிறார். டெல்லி டீக்கடைகளில் கிடைக்கிற மலிவு விலை ரொட்டியின் விலையே ரூ.3 என்பது குறிப்பிடத்தக்கது. இதுபற்றி பெயர் குறிப்பிட விரும்ப

‘வரலாறு காணா விலைவாசி உயர்வு’

படம்
 - எனும் வாக்கியம் எக்காலத் திற்கும் பொருந்தும் போலும்! அந்த அளவுக்கு முந்திய காலத்தைவிட அதற்கு அடுத்த காலத்தில் அது உயருகிறதே தவிர, குறைந்தபாடாய் இல்லை. இப்போதும் இதே நிலைதான்.  ‘உயர்ந்தவன் யார் ? கிராமவாசியா- நகரவாசியா?  இல்லை,  'விலைவாசி’!' எனும் கந்தர்வனின் கவிதை நித்திய உண்மையாகிப் போனது. நல்ல பொன்னி அரிசி விலை கிலோ ரூபாய் ஐம்பதைத் தாண்டிவிட்டது.பருப்பு விலை நூறை எட்டிவிட்டது.நல்லெண்ணைய் விலை லிட்டர் இருநூற்றி ஐம்பதை நெருங்கிவிட்டது. இப்படியெல்லாம் ஆகும் என்று சில ஆண்டுகளுக்கு முன்புகூட யாரும் நினைத்திருக்க மாட்டார்கள்.விலைவாசி உயருகிறது என்பதை அவர்கள் அறிவார்கள். ஆனால் இந்த வேகத்தில் அது எகிறும் என்று நினைத்த தில்லை.  முந்திய காலங்க ளுக்கும் தற்போதைய காலத் திற்கும் உள்ள வித்தியாசம் இதுதான் & இந்தப் படுவேகம் தான். நுகர்வோர் விலைவாசிப் புள்ளியானது ஆண்டுக்கு 9%க்கும் மேலே உயர்ந்து வருகிறது. அதிலும் உணவுப் பொருட்களின் விலையானது கிட்டத்தட்ட 11 % உயர்ந்து வருகிறது. “ இது மிகவும் அதிகம்தான்” என்று ரிசர்வ் வங்கி கவர்னர் (7.6.13 இல்) ஒப்புக் கொண

ஏழைகளே இல்லை.

படம்
மன்மோகன் சிங் வாயை திறந்து பேசுவதில்லை. பேச ஆரம்பித்தால் பொய். பொய்யைத்தவிர வேறில்லை. பிரதமர் மன்மோகன் சிங்கை தலைவராகவும், மான்டேக் சிங் அலுவாலியாவை துணைத் தலைவராகவும் கொண்ட மத்திய திட்டக்கமிஷன், நேற்று முன்தினம், புள்ளிவிவர அறிக்கை ஒன்றை வெளியிட்டது.  அதில், நாட்டில் ஏழைகள் எண்ணிக்கை குறைந்து விட்டத.  மக்களின் வருமானம் அதிகரித்து விட்டது என புள்ளிவிவரங்கள் இடம்பெற்றிருந்தன. மத்திய அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிவரத்தின்படி, தமிழ்நாட்டில் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழும் ஏழைகள் நூற்றுக்கு பதினோரு பேர் மட்டும்தான்.  கிராமத்தில் ஏழைகள் விகிதம் நூற்றுக்கு 15 பேர் என்றால், நகரத்தில் 7 பேர்தான் ஏழைகள்! டெண்டுல்கர் கணிப்புமுறையில், 2004-05-ஆம் ஆண்டில் இந்தியாவில் வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்ந்த ஏழைகள் எண்ணிக்கை 40 கோடி. 2011-12-ஆம் நிதியாண்டில் ஏழைகள் எண்ணிக்கை 27 கோடியாகக் குறைந்துவிட்டது; அதாவது 13 கோடி பேர் வறுமைக் கோட்டை தாண்டிக் குதித்துவிட்டார்கள்! இந்தக் கணிப்புமுறையில், ஐந்து நபர்கள் உள்ள ஒரு குடும்பம், நகர்ப்புறத்தில்மாதம்  தலா ரூ.1,000 சம்பாதிக்கும் எ

ஸ்டெம் செல்

படம்
நம் உடலில் உள்ள பாகங்கள் நோய்கள் மற்றும் விபத்துகளால் பாதிக்கப்படும்போது   உதவுபவை ஸ்டெம் செல்கள்தான். புற்றுநோய், மாரடைப்பு, அல்சீமர்ஸ், எய்ட்ஸ் உள்ளிட்ட பல நோய்களுக்கான உயிர் காக்கும் சிகிச்சைகள் தொடங்கி, உடல் பாகங்களுக் கான மாற்று பாகங்களை  சோதனைக்கூடத்தில் உற்பத்தி செய்வது வரையிலான பல அதிச யங்களை நிகழ்த்தி வருகின்றன ஸ்டெம் செல்கள்.  உடலின் எல்லா வகையான உயி ரணுக்களையும், உற்பத்தி செய்யும் திறனுள்ள  கரு ஸ்டெம் செல்கள் களின் ஊற்றான கருக் களை சிதைக்காமல், கருஸ்டெம் செல்களை உற்பத்தி செய்ய முடியாது. இதனால் கருத விர்த்த உடலின் இதர பகுதிகளில் உள்ள ஸ்டெம்செல்களைக் கொண்டு உடலின் பல்வேறு வகையான உயிரணுக்களை உற்பத்தி செய்வதும், தோல் உயிரணுக்கள் உள்ளிட்ட பல உயிரணுக்களில் இருந்து ஸ்டெம் செல்களை உருவாக்கியபின் அவற்றை சிகிச்சைகளுக்கு பயன்படுத்துவதுமான பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சுவாரசிய மாக, தாய்ப்பால் சுரக்கும் மார்பக திசு மற்றும் தாய்ப்பாலில் கரு ஸ்டெம் செல்களைப் போன்ற ஸ்டெம்செல்கள் இருக்கின்றன எனும் ஆச்ச ரியமான அறிவியல் உண்மையை கண்டுபிடித் திருக்கிறார்

கறுப்பு ஜுலை-30ஆண்டு.

படம்
'நான் இறந்த பின்பு எனது இரு கண்களையும் ஒரு தமிழனுக்குக் கொடுங்கள். மலரப் போகும் தமிழீழத்தை நான் அந்த இரு கண்களாலும் பார்க்க வேண்டும்" ஆனால் மண்டைகள் பிளக்கப்படுகின்றன. வயிறுகள் கிழிக்கப்படுகின்றன; கை, கால்கள் வெட்டப்படுகின்றன; ஆணுறுப்புகள் அறுக்கப்படுகின்றன. தமிழீழத்தைக் காண தன் தன் கண்களை இன்னொருவனுக்கு வழங்கும்படி கேட்டுக் கொண்ட குட்டிமணியின் கண்கள் தோண்டப்பட்டு புத்தரின் காலடியில் போடப்படுகின்றன.   குட்டிமணி தங்கத்துரை, ஜெகன் உட்பட 34 தமிழ் இளைஞர்கள் அங்கு சிதைக்கப்பட்ட பிணங்களாக விழுந்து கிடக்கின்றனர்.   1983 ஆம் ஆண்டு ஜூலை 23 இலங்கை வரலாற்றில் கறுப்புத்தினம் இரத்தக் கறைபடிந்த நாள். பேரின வாதிகள் மிருகங்களாக மாறித் தமிழர்களை வேட்டையாடிய கொடுமை மிகுநாள். ஆயிரக் கணக்கான அப்பாவித் தமிழர்கள் கொலையுண்ட 29 ஆவது நிறைவு ஆண்டு. இலங்கையில் கறுப்பு ஜுலை கலவரமாகிய 1983 ஆம் ஆண்டு இனக்கலவரங்கள் இடம்பெற்று இன்றுடன் 30 வருடங்களாகின்றன. ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் இதில் கொல்லப்பட்டனர். பெரும் எண்ணிக்கையானவர்கள்