இடுகைகள்

செப்டம்பர், 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தனியே தமிழ் "திரையுலக 100 விழா "?

படம்
 இயக்குனர் சங்க பொதுச்செயலாளர் ஆர்.கே.செல்வமணி: " சமீபத்தில் நடந்த சினிமா நூற்றாண்டு விழா வில் ஆந்திரா, தெலுங்கு, மலையாளம், கன்னட கலைஞர்களுக்கு மொத்தமாக அழைப்பிதழ் கொடுத்தார்கள்.  அவர்கள் தங்கள் கலைஞர்களுக்கு அதனை வணங்கி அனைவரையும பங்கேற்கச் செய்தார்கள்.  ஆனால் தமிழ் கலைஞர் களுக்கென்று தனி அழைப்பு இல்லை. அதனால் பெரும்பாலானோர் பங்கேற்க முடியவில்லை. திரைப்பட வர்த்தக சபை ஒன்றை தனியாக அமைக்க வேண்டும் என்று கூறிவந்தோம். அதன் அவசியத்தை சமீபத்திய விழாவில் உணர்ந்திருக்கிறோம்., இது யாருக்கும் எதிரானதல்ல. நமக்கு தேவையானது. " இயக்குனர் பார்த்திபன்:  "எங்கள் மண்ணின் இயக்குனர் பாரதிராஜா ஒரு ஞானகிறுக்கன். சினிமாவை தவிர அவருக்கு வேறெதுவும் தெரியாது. அரசியலுக்கு அப்பாற்பட்டவர், அவரை சினிமா நூற்றாண்டு விழாவில் கவுரவித்திருக்க வேண்டும். செய்யவில்லை. நம் மண்ணின் கலைஞனுக்கு நாமே விருது கொடுத்து கவுரவிப்போம்." இயக்குனர் பாரதிராஜா:  "எனக்கு அழைப்பு அனுப்பவில்லை,  கவுரவிக்கவில்லை என்று இங்கு வருத்தப்பட்டார்கள்.  தமிழ் சினிமாவுக்கு முதுகெலும்பில்லையே என்ன செய்ய முடியும். 1

தலைக்கு மேலே .

படம்
ஒரு ஆய்வின் படி மூளையின் சில பகுதிகள் பாதிக்கப்பட்டால் ஒருவனுக்கு உயர்நிலை ஆன்மீக அனுபவங்கள் ஏற்படலாம்.  என நினைக்க தோன்றுகிறது. தனக்குள் தானே ஆழ்தல்  ( Self Transcendence )   எனும் ஒரு தனிச்சான்றாண்மை இயல்பு (ஆளுமை இயல்பு  என்பதை கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டது.  சான்றாண்மை இயல்பு அல்லது ஆளுமை இயல்பு என்பது ஆன்மிக உணர்வு சிந்தனை, நடத்தை ஆகியவற்றின் ஒரு தெளிவற்ற அளவாகும். தனக்குள் தானே ஆழ்தல் என்பது தன்னுணர்வைக் குறைவாய் பிரதிபலிக்கின்றது. குறைவாய் சார்ந்திருக்கின்றது. ஒரு தனி ஆத்மா தன்னை இந்த பிரபஞ்சத்தின் ஒரு முழுமை பகுதியாய்க் கண்டு கொள்ளும் ஆற்றலையும் பிரதிபலிக்கின்றது. எனக்கருத்து தெரிவிக்கின்றார்கள் இந்த ஆய்வை நடத்தியவர்கள். அறுவைசிகிச்சை மூலம் மூளையில் ட்யூமர்க்கட்டி நீக்கப்பட்ட சிலரை அறுவை சிகிச்சைக்கு முன்னும், பின்னும் ஆராய்ந்திருக்கின்றார்கள்.அப்போது பின்மண்டைப் பகுதிகளில் மூளையில் ஏற்படும் பாதிப்பு தனக்குள் தானே ஆழ்தல் எனும் யோக நிலையை தூண்டும் மர்மம் தெரியவந்திருக்கின்றது. மூளை இயல்பாக செய்து கொண்டிருக்கும் வேலைகளுக்கும், தனக்குள் தான் ஆழ்ந்து விடும்.  யோக நிலைக்கும்

தங்கம் தோன்றியது எப்படி?

படம்
உலகில் கிடைக்கக் கூடிய தங்கத்தில் பாதியளவு தென் ஆப்பிரிக்காவில் வெட்டி எடுக்கப்படுகிறது. கனடா, அமெரிக்க, ஆஸ்திரேலியா, கொரியா ஆகிய நாடுகளிலும், தென் அமெரிக்காவிலும், இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் கோலார் என்னுமிடத்திலும் தங்கம் கிடைக்கிறது. இலங்கையிலுள்ள பூக்கொடை என்னுமிடத்தில் களனி ஆற்றுப் பகுதியில் ஆற்று மண் படிவுகளில் தங்கம் அண்மைக் காலமாக பெறப்படுவதாக கூறப்பட்டாலும், மிக குறைந்த அளவே அங்கிருந்து கிடைக்கிறது. இந்த தங்க உலோகம் புவியில் தோன்றியது எப்படி?  புவி தோன்றிய பல ஆண்டுகளுக்கு பின்னர், இருபது பில்லியன் டன்களுக்கு மேற்பட்ட எடையுடைய எரிகல் ஒன்று பூமியின் மீது தங்கத்தையும், பிளாட்டினத்தையும் மழை போல பொழிந்துள்ளது. அதிலிருந்து தான் இன்றளவும் கிடைக்கின்ற தங்கம், பிளாட்டினம் உள்ளிட்ட விலைமதிப்பற்ற பல தனிமங்கள் வந்துள்ளன என்ற புவியியலாளர்கள் கூறுகின்றனர். எரிகல் பொழிவால் தங்கம் தோன்றியுள்ளது என பொதுவாக நம்பப்படுகிறது. ஆனால், இது தொடர்பாக நடத்தப்படட புதிய ஆய்வில், காலாவதியான மிக அடர்த்தியான விண்மீன்களின் மோதல்களால் புவியிலுள்ள தங்கம் தோன்றியிருக்கலாம் என்று அமெரிக்க ஆ

எவரும் தர முடியாத ........!

படம்
இலங்கையின் வட மாகாண சபைக்கு நடந்த தேர்தலில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சின்னத்தில் போட்டியிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பு அமோக வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 38 இடங்களில் 30 இடங்களை அது பெறுகிறது. அனைத்து மாவட்டங்களிலும் அந்தக் கட்சியே முன்னணி பெற்று, வெற்றி பெற்றது. மன்னார் மாவட்டத்தில் 3 இடங்களையும், கிளிநொச்சியில் 3 இடங்களையும், முல்லைத்தீவில் 4 இடங்களையும், வவுனியாவில் 4 இடங்களையும், யாழ் மாவட்டத்தில் 14 இடங்களையும் ( மொத்தமாக 28 இடங்கள்) அந்தக் கட்சி பெற்றுள்ளது. ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 7 இடங்களை பெற்று இரண்டாவது இடத்தில் இருக்கிறது. சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மன்னார் மாவட்டத்தில் மாத்திரம் ஒரு இடத்தை வென்றிருக்கிறது. ஆகவே போனஸாக இலங்கை தமிழ் அரசுக் கட்சிக்கு 2 இடங்கள் கிடைக்கும். ஆகவே மொத்தமுள்ள 38 இடங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு 30 இடங்களும், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்கு 7 இடங்களும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு 1 இடமும் கிடைத்துள்ளன. ஆகவே வட மாகாண சபைக்கான ஆட்சியை அமைக்கும் வாய்ப்பை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெ

"ஜெ " [‘இந்திய ] சினிமா 100’ விழா

படம்
ஜெ தலைமையில் நடைபெறும் ‘இந்திய சினிமா 100’ விழா பற்றி தேசிய விருது பெற்ற படத்தொகுப்பாளர்- இயக்குநர் பீ.லெனின். “கலைஞர் கருணாநிதி தமிழ் சினிமாவிற்கு அளித்த பங்கை யாராவது மறந்து விட முடியுமா?  இந்தியாவின் மற்ற மாநிலங்களில் அவரவர் மொழிப் படங்களுக்கு மாநில விருது வழங்கப்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில், தமிழ்நாட்டில் திரைப்படங்களுக்காக மாநில விருது வழங்கப்படவே இல்லை.  அதை கருணாநிதிதான் தொடங்கிவைத்தார்.  ந ான், பாலு மகேந்திர உள்ளிட்டவர்கள், விருதுத் தொகையை அதிகரித்துக் கொடுக்க சொன்னபோது அதை உடனே அதிகரித்து கொடுக்கவும் செய்தார். தவிர, உலகில் இந்த வயதிலும் பேனா பிடித்து எழுதும், அதுவும் யார் கேட்டாலும் சினிமா என்றால், தன்னை மறந்து அதில் மூழ்கிப் போகும், ஒரு கலைஞன் இந்த சினிமாவிற்கு அளித்த கொடையை ஏன் தமிழ்சினிமா மறந்து போனது? சிவாஜி கணேசன் என்கிற ஆளுமையை அடையாளம் காண வைத்து, தமிழர்களின் பகுத்தறிவை உசுப்பிவிட்ட, திராவிட இயக்கத்தின் தொடக்க கால காவியமான “பராசக்தி”, திரைப்படம் எங்கே போனது? கருணாநிதி ஆட்சியில் இருந்தபோது, அவரை கொண்டாடிய கூட்டம் ஏன் இதைப் பற்றி பேசவில்லை.

"அனைத்தையும் காணோம்?"

படம்
நிலக்கரி ஊழல்   முக்கியக் கோப்புகள் அனைத்தையும் காணோம்!   கோப்புகளுக்கு பதிலாக மீண்டும் பட்டிய ல்? ரூ1.86 லட்சம் கோடி அளவிற்கு மக்கள் பணம் சூறையாடப்பட் டுள்ள நிலக்கரிப் படுகை ஊழல் விவகாரத்தில் பெரும் நிறுவனங்க ளின் மின் திட்டங்கள் தொடர் பான கோப்புகளும் மாயமாகியுள் ளன. ரிலையன்ஸ்பவர், டாடா ஸ்பான்ஜ்அண்ட் அயர்ன், ரதி ஸ்டீல் அண்ட் பவர் லிமிடெட் ஆகிவற்றிற்கான நிலக்கரி ஒதுக்கீடு குறித்த கோப்புகள் மாயமாகி இருப்பதால் மீண்டும் ஒரு பெரும் சர்ச்சையில் காங்கிரஸ் தலைமை யிலான மத்திய அரசு சிக்கிக் கொண்டிருக்கிறது. கடந்த 2006ம் ஆண்டு காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது நிலக் கரிப் படுகைகள் தனியார் கம்பெனி களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த ஒதுக்கீட்டின் போது ரூ1.86 லட்சம் கோடி ஊழல் நடந்துள்ள தாக குற்றச்சாட்டு எழுந்தது. நாட்டின் தலைமை கணக்கு மற்றும் தணிக்கை அலுவலகம் (சி.ஏ.ஜி) நாடாளுமன்றத்தில் சமர்ப் பித்த அறிக்கையில் அரசுக்கு ஏற் பட்ட இந்த இழப்பு விவரம் குறிப் பிடப்பட்டிருந்தது. இந்த மெகா ஊழல் நடந்த போது, நிலக்கரித் துறை, பிரதமர் மன்மோகன் சிங் வசம் இருந்தது நினைவுக

"மண்ணில் புதைக்கப் படுகிறது."

படம்
ஜெயா அரசு தாது மணற் கொள்ளை விவகாரத்தை கையாளும் விதம் மிக சூழ்ச்சி மிக்கதாய் -குற்றவாளிகளுக்கு பக்க பலமாய் இருக்கிறது. லட்சம் கோடிகளில் மணற்கொள்ளை நடந்துள்ளது.விசாரணை குழுவும் மணற்கொள்ளை யை உறுதி செய்தே அறிக்கை அளித்துள்ளது.இதை 90%செய்த வைகுண்டராஜனை உள்ளே பி.ஆர்.பி.மாதிரி தள்ளாமல் வேறு இடங்களில் விசாரணை குழுவை ஆய்வு செய்ய சொல்லியும்-அதுவரை தாது மணற் சுரங்கங்களில் செயல்பாடுகளை நிறுத்த வேண்டும் என்று மட்டுமே முதல்வர் ஜெயலலிதா உத்திரவிட்டுள்ளார்.இதில் இருந்தே மணற்கொள்ளை யை  அப்படி புதைமணலில் புதைத்து வைகுண்டராஜனை காப்பாற்றும் எண்ணம் பகிரங்கமாகியுள்ளது. நில மோசடி வழக்குகளில் திமுகவினரை வெறும் ஆதாரமற்ற புகார்களை வாங்கிக்கொண்டே சிறையில் தள்ளியவர் கையும்-களவுமாக மாட்டியவர் மீது நடவடிக்கை எடுக்க தயங்குவது கூட்டு களவாணித்தனத்தை தானே காட்டுகிறது. " கார்னெட் என்பது கனசதுர உருவில் உள்ள உறுதியும் பளபளப்புமிக்க கனிமம்.  உறுதியான தரை அமைப்பதற்கும், கண்ணாடி – சலவைக்கல் முதலானவற்றைத் துண்டிப்பதற்கும், பளிங்குக் கற்களைப் பாலீஷ் செவதற்கும்,மோதிரம் முதலான அணிகலன்களி