அரைத்த மாவு?

அவசரமான வாழ்க்கையில் இன்று யாரும் இட்லி -தோசைக்கு அரசி ஊறவைத்து மாவை கிரைண்டரில் கூட அரைத்துக் கொண்டிருப்பதில்லை.எல்லாம் பாக்கெட் மாவுதான்.ஆனால் அதனால் எவ்வளவு கேடு என்பதை பற்றி கொஞ்சம் கூட நினைத்துப்பார்ப்பதில்லை.
இதோ மாவு பாக்கெட்களின் மகத்துவம்.

 6 நாட்கள் வரை புளிப்பு வாசனை வராமல் இருக்க,நம் உடலில் ஏற்படும் காயத்திற்கும்,புண்ணிற்கும், கேரம் போர்ட் விளையாட பயன்படுத்தும் Boric Acid, ஆரோட் மாவு போன்றவற்றைக் கலந்து விற்பனைக்கு அனுப்பி வைக்கின்றனர்.

 ஒரு நாளைக்கு 3 – 6 மணி நேரம் அரைக்க வேண்டிய கிரைண்டர்கள், 12- 18 மணி நேரம் தொடர்ந்து ஓட்டுவதால் அந்த கல் கொஞ்சம் கொஞ்சமாக தேய்மானம் ஏற்பட்டு மாவுடன் கலந்து விடுகின்றது.
இதனால் சிறு நீரகத்தில் கல் உண்டாகும் அபாயம் இருக்கின்றது.

 பெரும்பாலும் உவர்தன்மையைக் கொண்ட கிணத்தடி தண்ணீர் மற்றும் எளிதாக கிடைக்கும் கண்ட தண்ணிரும்  பயன்படுத்தப்படுகின்றது.
கடை மாவில் யாரும் வெந்தயத்தை சேர்ப்பதில்லை!


மேலும், பால், தயிறு, முட்டை, காய்கறி, மாட்டிறைச்சிகளில் கானப்படும் ஈகோலி (E-COLI) எனப்படும் ஒருவகை பாக்டீரியாவானது,( – 24 )மைனஸ் 24 டிகிரிக்கு கீழே இருந்தால் தான் கொஞ்சமாவது கட்டுபடும் அவ்வகை பாக்ட்டீரியாக்கள் மாவுகளில் உருவாகி சிலருக்கு சாப்பிட்டவுடன் ஃபுட் பாயிஸன் என்றும், சிலருக்கு ஸ்லோ பாய்ஸனாக உடலில் கலந்து உயிரையேக் கொல்லும் அபாயமும் உள்ளது.
இந்த மாவு ஒரு உயிர்கொல்லி – [ஸ்லோ பாய்ஸன்] ஆக உள்ளது. பின் விளைவுகளை சற்று அலசிப் பார்த்தால்பயங்கரமான பின் விளைவுகள் தெரிகி றது!


 இதெல்லாம் சரிதான் அரிசி ஊறவைத்து மாவாக்க எங்களுக்கு பொறுமை இல்லை-நேரமும் இல்லை என்கிறீர்களா?
முடிந்த அளவு நமக்கு நன்கு தெரிந்த கலப்படம் செய்யாதவர்கள்   அரைத்து விற்பனை செய்யும் இட்லி,தோசை மாவுகளை மட்டும் வாங்குங்கள் .கடைகளில்  விற்கும் கண்ட மாவு தயாரிப்புகளை களை முற்றிலுமாகத் தவிர்ப்பது விடுவதுதான் நமக்கு நல்லது .
-------------------------------------------------------------------------------------------------------------------------------------

லட்சக்கணக்கான அப்பாவி மக்களை கொன்று குவித்த ஹிட்லர் எழுதிய தன் வாழ்க்கை புத்தகம் இணைய விற்பனை நிறுவனமான அமேசான் தள  விற்பனையில் அதிக விற்பனை பட்டியலில் இடம் பெற்றுள்ளதாம்.


---------------------------------------------------------------------------------------------------------------------------------

------------------------------------------------------------------------------------------------------------------------
தில்லை கோவிலை திரும்ப பெற்றுதந்ததற்கு நன்றி?

காலில் விழ வைப்பதும் ,குனியவைத்து அழகு பார்ப்பதும் ஈனர்களுக்கு மட்டும்தானா?
.Barathi @[554902511:2048:Barathi Thambi]மலிவு விலைத் தமிழனுக்கு ஒரு ரூபாய் இட்லி.
தில்லை தீட்சிதர்களுக்குக் கோடி ரூபாய் கோயில்
Good Question (Y)
 
------------------------------------------------------------------------------
சீனாவின் உலக சாதனை.
 
சீனாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி கடந்த ஆண்டு 4 டிரில்லியன் டாலர்கள் ( 4 லட்சம் கோடி டாலர்கள்) என்ற நிலையை எட்டியதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.ஏற்றுமதிக்காக வைக்கப்பட்டுள்ள சரக்குப் பெட்டகங்கள்

வேறு எந்த நாடும் இந்த அளவுக்கு சர்வதேச வர்த்தகத்தில் ஈடுபடவில்லை.

அமெரிக்கா கடந்த 2013 ஆம் ஆண்டின் முதல் 11 மாதங்களுக்கான தனது புள்ளிவிபரங்களை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. அந்த காலப்பகுதியில் அமெரிக்காவின் ஏற்றுமதி இறுக்குமதி 3.5 டிரில்லயன் என்ற அளவில் இருந்தது.

ஒரு பில்லியன் என்பது 100 கோடி. 1000 பில்லியன்கள் சேர்ந்தது ஒரு டிரில்லியனாகும்.

சீனப் புள்ளி விபரங்களின் நம்பகத்தன்மை குறித்து சில ஐயப்பாடுகள் இருந்தாலும், சிறிய அளவிலான மாற்றங்கள் ஏற்பட்டாலும், உலக வர்த்தகத்தில் சீனா முதலிடத்திலும், அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் இருக்கிறது என்பது மாறாது என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
நம்மை விட மக்கள் தொகையில் மிஞ்சிய சீனா சாதித்துக் கொண்டிருக்கிறது.உலகம் [அமெரிக்கா ]புகழ் பொருளாதார விற்பனர்கள்
மன்மோகன் சிங்,மாண்டேக் சிங் அலுவாலியா,ப.சிதம்பரம்.போன்ற மும்மூர்த்திகளை கொண்ட நம்மால் இறக்குமதி மட்டுமே செய்ய முடிகிறது.
காங்கிரசு ஆட்சி யை பற்றி ஒன்றுதான் சொல்ல முடிகிறது.
    "இறக்குமதி செய்யப்பட தலைமை ,     மூளையை அமெரிக்காவுக்கு
      ஏ ற்றுமதி செய்து விட்ட பிரதமர் எப்படிங்க இந்திய தேசப்பற்று இருக்கும்.
Harbin Ice and Snow Festival 2014
--------------------------------------------------------------------------------------------------------------------------------------

ரயில்வேத் துறையில்
நேரடி அந்நிய முதலீட்டை
காங்கிரசு  அரசு  அனுமதிஅளிக்க உள்ள து. புறநகர் பகுதிகள் புதிய அதிவேக பாதைகள் மற்றும் துறைமுகங்கள், சுரங்கங்கள், மின்நிலையங்கள் ஆகியவற்றை உருவாக்குவதில் நேரடி அந்நிய முதலீடு கொண்டு வரப்படுகிறது.
தற்போது அரசின் வசம் உள்ள பயணிகள் மற்றும் சரக்குப் போக்கு வரத்து செயல்பாடுகள் நேரடி அந்நிய முதலீட்டாளர்களுக்கு தரப்பட வில்லை. உலகின் 4 -வது பெரிய ரயில் போக்குவரத்தாக உள்ளஇந்திய ரயில்வேயில் போக்குவரத்து நெரிசல் பிரச்சனையாக இருக்கிறது.
 இதனால் ரயில் பயண மும் மெதுவாக இருக்கிறது. இதனைதவிர்ப்பதற்கான வழிகளும் ஆராயப்படு கின்றன.ரயில்வேயில் நேரடி அந்நிய முதலீடு அனுமதிக்கப்படுவது குறித்துதொழில் கொள்கை மற்றும் மேம்பாட்டுத்துறையின் அதிகாரிகள் கூறு கையில், புறநகர் பாதை, அதிவேக ரயில் திட்டங்கள், சரக்கு வழி திட்டங்கள் ஆகியவற்றில் 100 சதவீத நேரடி அந்நியமுதலீட்டை அதிகரிக்க உத்தேசிக்கப் பட்டுள்ளது.
அரசின் நடவடிக்கையால், ஆயிரம் கோடி டாலர் நேரடி அந்நிய முதலீடு அடுத்த 5 ஆண்டுகளில் கிடைக்கும் என்றனர்.
முந்தைய இலக்குகளில் இந்தியாவின் உள் கட்டமைப்பை மேம்படுத்த தனியார் முதலீடு பெற முயற்சி எடுக்கப்பட்டது.ஆனால் ஜெனரல் எலெக்ட்ரிக் கம்பெனி மற்றும் பாம்பார்டியர் நிறுவனங்கள் மட்டும் சாதகமாக பதில் அளித்தன.இந்திய ரயில்வே பிரிட்டிஷ் காலனி ஆட்சியின் போது நிர்மாணிக்கப்பட்டது.
இந்த ரயில்வே அமைப்பை சீனாவின் அதி வேக ரயில்வே மிஞ்சி விட்டது.இந்திய ரயில்வே பயணம் அதிக செலவு இல்லாதது ஆகும். இந்த ரயில்வேயில் தினமும் 250 லட்சம் பயணிகள் பயணிக்கிறார்கள். ஆனால் ரயில்வேயில் அதிக முதலீடு இல்லாததால் அதன் சேவை மந்தமாகியுள்ளது. மேலும் விபத்துக்கள் ஏற்படுகின்றன.
குறிப்பாக இந்த வாரத்தில் ஏற்பட்ட ரயில் தீ விபத்தில் 9 பேர் பலியாகி உள்ளனர். ரயில்வேயின் இத்தகைய நிலைமையை சரிசெய்ய திட்டமிடாத மன்மோகன் அரசு, இதுதொடர்பான பணிகளை அந்நியரிடம் விட்டுவிடுவதே தீர்வு என்று நாசகர யோசனையில் இறங்கியுள்ளது.
நாடு சுதந்திரம் அடைந்த பின்னர் 66 ஆண்டுகளில் இந்தியாவில் 13ஆயிரம் கிலோ மீட்டர் (8077மைல்கள்) ரயில்வே பாதையில் கூடுதலாக சேர்க்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து இந்திய ரயில்வே பாதையின் மொத்த தூரம் 64 ஆயிரம் கிலோ மீட்டராக (39ஆயிரத்து 767மைல்) அதிகரித்து இருக்கிறது.கடந்த 2006ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை நாட்டில் 1750 கிலோ மீட்டர் தூரம் மட்டுமே கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.
ஆனால் அதே கால கட்டத்தில் சீனா 14 ஆயிரம் கிலோ மீட்டர் தூரம் புதிய ரயில்பாதையை அமைத்துள்ளது. ரயில்வேயின் பாதை அதிகரிப்பு மந்தமாக உள்ள நிலையில் சாலை வழி சரக்கு போக்குவரத்து 60 சதவீதமாக அதிகரித்து இருக்கிறது.
அமெரிக்காவில் சாலை வழி சரக்கு போக்குவரத்து 44 சதவீதமும், சீனாவில் 22சதவீதமும் அதிகரித்துள்ளது.இதில் சீரமைப்பு பணி மேற் கொள்வதற்கு ரயில்வே மற்றும் நிதித்துறை அமைச்சகங்கள் ஏற்றுக்கொண்டுள்ளன. இந்தியாவின் பொரு ளாதாரத்தை மக்களவைத்தேர்தலுக்கு முன்னர் மீட்டெடுத்துவிட்டதாக காட்டுவதற்கு மன்மோகன் அரசு துடிக்கிறது.
 இதன்படி பணிகளை அறிவித்தால், சீன நிறுவனம் சி.எஸ்.ஆர். கார்ப்பரேஷன் லிமிடெட், ஜெர்மனியின் சீமன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இந்திய ரயில்வே திட்ட பணிகளை மேற்கொள்ள ஆர்வம் காட்டுகின்றன.
இந்திய ரயில்வேயி ன் ஒப்பந்ததாரர்களாக ஏற்கனவே உள்ள ஜப்பானிய நிறுவனங்களும் இந்த திட்டங்களில் பங்கேற்கும் நிலை உள்ளது.குஜராத்தில் ரயில் பெட்டித் தொழிற்சாலையை 94 கோடி டாலரில் அமைக்கும் கருத்துருவை கனடாவைச்சேர்ந்த பாம்பார்டியர் நிறுவனம் வரவேற்றது.

தில்லியில் உள்ள மெட்ரோ ரயில் களுக்கான பெட்டிகளை உருவாக்க அந்ததொழிற்சாலை 2008ம் ஆண்டில் அமைக்கப்பட்டது.
இந்தியாவில் முதலீடு செய்வதற்கு வடக்கு அமெரிக்கா, ஐரோப்பா, அமெரிக்கா, மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் பன்னாட்டு நிறுவனங்கள் ஆர்வம் கொண்டிருக்கின்றன.
சில்லரை, விமானப் போக்குவரத்து, மருந்துகள் துறை,தொலை தொடர்புத்துறை,மற்றும் பாதுகாப்புத் துறை ஆகியவற்றில் நேரடி அந்நிய முதலீட்டை அதிகரிக்க மன்மோகன் அரசு தீவிரமாய் செயல்பட்டு வருகிறது.இத்தனை முயற்சிகள் மேற் கொண்டாலும், உலகப்பொருளாதார மந்தம் காரணமாக கடந்த ஏப்ரல் -அக்டோபர் கால கட்டத்தில் இந்தியா வில் நேரடி அந்நிய முதலீடு (எப்டிஐ) முந்தைய ஆண்டைக்காட்டிலும் 15 சதவீதம் குறைந்துள்ளது.
இதன் படி இந்த கால கட்டத்தில் 1260 கோடி டாலர்  நேரடி அந்நிய முதலீடு [எப்.டி.ஐ ]கிடைத்துள்ளது என தெரி விக்கப்பட்டுள்ளது.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?