செல் பேசியின் தந்தை யார்?



 கூப்பர்?
 
ஸ்டுபிர்ஃபீல்டு?
  
இன்றைய காலக்கட்டத்தில் செல் பேசி மூலம், தொலைத் தொடர்பு, இணையத்தில் உலாவருதல், பொழுதுபோக்கு, இசை முதலிய சேவைகள் பெறுவது, நமது அன்றாட வாழ்க்கையில் பிரிக்க முடியாதது..
உலக தொலைத் தொடர்பு ஒன்றியம் 2013-ஆம் ஆண்டு வெளியிட்ட அறிக்கையில், தற்போது, உலகளவில் செல்பேசியைப் பயன்படுத்துவர்களின் எண்ணிக்கை 680கோடி அடைந்துள்ளது.
suran
 இது, உலகின் பொது மக்கள் தொகையில் 96விழுக்காட்டு வகிக்கிறது. செல்லிட பேசியைப் பயன்படுத்துகின்ற போது, அதனைக் கண்டுபிடித்தவர் பற்றி, உங்களுக்கு தெரியுமா?
1973-ஆம் ஆண்டு, மார்ட்டீன் கூப்பர், உலகில் முதலாவது செல் பேசியைக் கண்டுபிடித்தார்.
நவீன செல்பேசியின் தந்தை என்னும் பெருமையை அவர் பெற்றார்.
 எனினும், 2008-ஆம் ஆண்டு மே 13-ஆம் நாள், பிரிட்டானின் டெய்லி மெயில் (Daily Mail) ஏட்டில் வெளியிட்ட தகவலில், நாதன் ஸ்டுபின்ஃபீல்ட் (Nathan ubblefield) என்ற அமெரிக்கரே, செல்பேசியைக் கண்டுபிடித்த முதலாவது நபர் என வெளியாகியுள்ளது.
மேலும், Virgin செல்பேசி வலைபின்னல் நிறுவனர் சர் ரிச்சார்டு பிரான்சனும், நாதனின் செல் பேசி தந்தையாக கருதுகின்றார்.
நாதனின் கண்டுபிடிப்பு, உலகின் தொலைதொடர்பை மேம்படுத்தும் வழிகளில் ஒன்றாகும் என்று சார் ரிச்சார்டு பிரான்சன் கூறினார்.
மேலும், நாதனின் நினைவாக, சார் ரிச்சார்டு பிரான்சன் ஒரு சிறப்பு இணையப்பக்கத்தையே அமைத்து விட்டார். மார்ட்டீன் கூப்பர், நாதன் ஸ்டுபிர்ஃபீல்டு, யார்தான்  செல் பேசி தந்தை?
suran
நாதன் ஸ்டுபிர்ஃபீல்டு
உண்மையில், நடமாடும் தகவல் தொடர்புத் துறையில் ஈடுபடும் பணியாளர்களைத் தவிர, மார்ட்டீன்கூப்பர், நாதன் ஸ்டுபின்ஃபீல்டு பற்றி அறிந்தோர் மிகவும் குறைவாகவே உள்ளனர். ஆனால், அவர்கள் ஆற்றிய பங்கு, எடிசன் முதலியோருடன் ஒப்பிடுகையில், குறைவாக இல்லை.
 நாதன் ஸ்டுபின்ஃபீல்டு, தொலைதொடர்புத் துறை பணியாளர் அல்ல. அவர், அமெரிக்காவின் கென்டகி மாநிலத்தில் வாழ்ந்த விவசாயி ஆவார்.
 உள்ளூர் சமூக நிறுவனம், குடிமக்களுடன் தொடர்புக் கொள்வதற்காக உதவி செய்வது என்பது, நாதன் ஸ்டுபின்ஃபீல்டு செல்பேசியை ஆராய துவக்கிய நோக்கமாகும்.
1902-ஆம் ஆண்டு, சளையாத முயற்சியுடன், முதலாவது செல்பேசியை நாதன் ஸ்டுபின்ஃபீல்ட் வெற்றிகரமாக தயாரித்தார்.
6 ஆண்டுகளுக்குப் பின்பு, செல் பேசிக்கான அறிவுசார் காப்புரிமையை அவர் தடையின்றி பெற்று விட்டார்.
இருப்பினும், நாதன் ஸ்டுபின்ஃபீல்ட் தயாரித்த இந்தச் செல் பேசியின் தோற்றம், குப்பை தொட்டியின் மூடி போன்று பெரியது. காந்த் புலத்தின் மூலம், ஒலி மற்றும் இசையை ஒரு செல்பேசியிலிருந்து மற்றொரு செல்பேசிக்கு அனுப்ப  முடியும்.
suran
மார்ட்டீன் கூப்பர்
செல்பேசி தந்தை என கருதப்படும் மற்றொருவரான  மார்டீன் கூப்பர், பொறியியல் தொழில் நுட்ப பணியாளராவர்.
1954-ஆம் ஆண்டு முதல், அவர் மோட்டார்ரோலா நிறுவனத்தில் வேலை செய்ய துவக்கினார். அவர் நடமாடும் தொலைத் தொடர்பு வசதியை ஆராய பாடுபட்டு வந்தார்.
1973-ஆம் ஆண்டு, புகழ்பெற்ற மன்ஹாட்டன் வணிகப் பிரதேசத்துக்கு அருகிலுள்ள சாலை ஒன்றில் மார்ட்டீன் கூப்பர் நின்று, Dyna TAC எனும் செல்பேசியை அவர் பொது மக்களுக்கு எடுத்துக்காட்டினார்.
தற்போதைய செல் பேசியுடன் ஒப்பிடுகையில், Dyna TAC எடை மிகவும் அதிகம்.
அதன் நீளம் 33சென்டி மீட்டர், எடை 794 கிராம். அதன் மூலம், ஒரு மணி நேரம் தொடர்புக் கொண்டு பேச முடியும்.
அதில் 30 தொலைபேசி எண்களை சேமிக்கப்பட முடியும். இதுதான் இன்றைய செல்பேசியுடன் ஒத்துப்போகக் கூடிய வடிவமை ப்புடன் இருந்தது.
இந்தச் செல்பேசிக்கு, பேசுதல் சேவை புரியம் தான். Dyna TAC, தற்போதைய செல் பேசியின் மூலப்படிமமாகும்.
suran
அது அதிக எடையுடன் இருந்த போதிலும், Dyna TAC உருவானது தான், கம்பியில்லா தொலைத் தொடர்பு என்ற புதிய காலத்தின் துவங்கியதை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது.
கடைசியில், மாட்டீன் கூப்பர்தான் செல்பேசியின் தந்தை என்ற பெருமையை தட்டிக்கொண்டு  போனார்..
கூப்பர் தயாரித்த செல் பேசி, தற்போது பொது மக்கள் பயன்படுத்துகின்ற செல்பேசியுடன் மிகவும் ஒத்திருக்கிறது.
மேலும், மாட்டீன் கூப்பர் இந்த செல்பேசியை வெற்றிகரமாக சந்தையில் விற்பனைக்கு விட்டார்.இச்செல்பேசியும் விற்பனையில் வேகம் பெற்று உலகெங்கும் பரவியது.அதன் வடிவமைப்பும் இன்று பெருமளவு மாறி விட்டது.கிட்டதட்ட ஒரு கணினியின்  பணியை செல்பேசி மூலமெ செய்து முடிக்கலாம் என்ற அளவில் அதன் வசதிகளும் - பயன்பாடுகளும்  வளர்ந்து விட்டது. .
சொந்த வீடும்,வாகனமும் இல்லா மனிதர்களை பார்க்க முடியும்.ஆனால் இந்த செல்பேசி இல்லா மனிதனைக் காண்பது மிக அரிது என்றாகி விட்டது.
 
உதவி:சீன தமிழ் வானொலி
---------------------------------------------------------------------------------------------------------------------
--------------------------------------------------------------------------------------------------------------------------
உலகின் தகவல் தொழில் நுட்ப தரவரிசைப் பட்டியலில்,வளரும் நாடுகளில் இடங்கள் பின் தங்கியே  இருக்கின்றன.
உலகப் பொருளாதார மன்றம் அண்மைக்காலமாக வெளியிட்ட 2014ஆம் ஆண்டு உலக தகவல் தொழில் நுட்பம் பற்றிய அறிக்கையில் அது தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.

பின்லாந்து, சிங்காப்பூர், ஸ்வீடன் ஆகிய நாடுகள், இந்த தரவரிசையில் முதல் மூனறு இடங்களைப் பிடித்துள்ளன.
 வளரும் நாடுகளில் ரஷியா, சீனா, பிரேசில், தென்னாப்பிரிக்கா, இந்தியா முறையே 50-வது, 62-வது, 69-வது, 70-வது மற்றும் 83-வது இடத்தில் வகிக்கின்றன என்று அறிக்கையில் வெளியிட ப்பட்டுள்ள து.
-------------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?