மின்வெ ட்டு இல் லை


suran

ஜூன் ஒன்று முதல் தமிழ் நாட்டில் மின்தடை கிடையாது என்றுதான் ஜெயலலிதா சொன்னதாக பத்திரிகைகளில் செய்தி வெளியானதாக நினைக்கிறேன் .ஆனால் அதுவரை இருந்த மின்சாரம் அவர் அவ்வாறு ஏதோ சொல்லிய அடுத்த நாள் முதல் காணாமல் பொய் விட்டது.

தேர்தலை முன்னிட்டு வழங்கிய மி ன்சாரம் ஜுன் ஒன்று முதல் காணாமல் போனது .
தினசரி மின்வெட்டு முன்பைவிட அதிகம் இங்கு.
இரவை நினைத்தாலே அழுகைதான் வருகிறது.இடையிடையே மணிக்கணக்கில் மின்சாரம் வெட்டுபட தொடர் தூக்கம் வெட்டு பட்டு தொலைந்து துக்கம் மட்டுமே.
ஜெயலலிதா ஜூன் அறிவிப்புக்கு காரணமே தூத்துக்குடியில் புதிய அனல் மின் நிலையம் உற்பத்தியை துவக்கி 2000 மெகாவாட் மின்சாரத்தை தரும் என்பதுதான்.அந்த மின் நிலையம் கூட கருணாநிதி திட்டமிட்டு ஆட்சிகாலத்தில் உருவானதுதான்.இப்போது பலந்தருகிறது.
[சென்னையை கலக்க வரும் மெட்ரோ ரெயில் கூட கருணாநிதி திட்டம்தான்.அப்போது இந்த அம்மையார் அதை வேண்டாம் என்று போராடினார்.இன்று அதற்கு நிதி மோடியிடம் கேட்கிறார்.]
ஆனால் அம்மையாரோ தான் இரவுபகலாக திட்டமீட்டு மின்சாரத்தை வரவைத்ததாக அறிக்கையி கோடிகாட்டி இருந்தார்.
இது பக்கத்து வீட்டுக்காரன் குழந்தைக்கு தான் சொந்தம் கொண்டாடும் சின்னத்தனம்தான்.
ஆனால் இம்மாதம் மூன்றாண்டு சாதனை ஐந்து பக்க விளம்பர வருமானத்தை கணக்கிட்டுக் கொண்டிருந்த ஊடகங்கள் அதை பற்றி வாயை திறக்கவே இல்லை.
suran

அப்படி இல்லாவிட்டாலும் கூட நடுநிலை ஊடகங்களான அவைகளுக்கு அதை எழுத இடம் இருக்கவும் போவதில்லை.
ஜெயலலிதா காற்றாலை மின்சாரம்,கருணாநிதி மன்னிக்கவும் தூத்துக்குடி புதிய மின் நிலைய உற்பத்தி மின்சாரம் போன்றவற்றை கணக்கிட்டுத்தான் அந்த அறிக்கையையே வெளியிட்டார்.
அவை ஒன்றும் செல்லுபடியாகவில்லை.
முன்பைவிட மின் நிறுத்தம் அதிகரித்துதான் விட்டது.
மின்வாரிய ஊழியர்களுக்கு தொலைபேசியில் முதல்வர்  மின்வெ ட்டு இல் லை என்றார்.
நீங்கள் மின்னை வெட்டிக்கொண்டிருக்கிறீர்களெ என்றால்.
"நாங்கள் என்ன வைத்துக்கொண்டா தரமாட்டோம் என்கிறோம்.என்கிறார்கள்.
மீன்டும் கேட்டால் எரிச்சலில் நாங்களா மின்வெட்டு இல்லை என்றோம் சொன்னவரிடம் போய் மின்சாரம் கேளுங்கள் என்கிறார்கள்.
மின் சாரம் இல்லாமல் இரவில் நம் கூட இந்த ஆட்சியை கையாலாகா ஆட்சி என்று திட்டுபவர்கள் கூட பகலில் அவர்களுக்கே வாக்களிக்கும் நிலையில் நாம் தனியே தருமி மாதிரி புலம்புவதை தவிர என்ன செய்ய முடியும்.
நாங்கள் மாற்றிதான் போட்டோம் ஆனால் தேர்தல் ஆணையத்தின்  வாக்கு எந்திரம்தான் ஏதோ தில்லாலங்கடி வேலை செய்து விட்டது என்று சொல்லுகிறீர்களா ?
அதில் எனக்கு கூட சந்தேகம்தான்.ஏனென்றால் எங்கள்பகுதியில் 70%சூரியனுக்குதான் .சந்தேகமேயின்றி .ஆனால் எங்கள் பகுதியில் அதிமுகதான் எல்லாப் பகுதிகளையும் போல் அதிகம் வாக்குகளை குவித்திருக்கிறது.
suran
பாவ ஸ்டாரும்-பவர் ஸ்டாரும் 
------------------------------------------------------------------------------------------------------------
suran
ஜூன் 8

  உலக கடல்  தினம்
கடல் தான் நம் பூமியின் 
குளிர்சாதனப் 
பெட்டி, அழகிய
 நீலவண்ண வானம் தெரிவதற்குக் 
காரணமே கடல் தான். அதை விட
மூன்றில் ஒருபங்கு நிலத்திற்கு
மழைநீரைக்கொடுத்து வளமாக்குவதும் இந்த
கடல்தான் இது பொதுவாக அனைவருக்கு தெரிந்த ஒன்று தான். ஆனால்
 கடந்த 30 ஆண்டுகளாக நமது புவியின் குளிர்சாதனப்பெட்டி பல இடங்களில்
பழுதடைந்து வருகிறது.

கடல் நீரோட்டம் கடல்வாழ் உயிரினங்களுக்கு மிகவும் முக்கியமான
 ஒன்றாகும். விளைநிலத்திற்கு நதிநீரின் முக்கியத்துவம் எப்படியோ
 அதேபோல் கடல் வாழ் உயிரினங்களுக்கும் கடல் நீரோட்டம் மிகவும்
 முக்கியமானதாகும்.  1980 ஆம் ஆண்டு அர்ஜென்டினாவைச் சேர்ந்த என்ரிக்
 ஜொர்மிலோ என்பவர் உலகத்திற்கு ஒரு உண்மையை எடுத்துக் கூறினார். 
அதாவது தெற்கில் உள்ள பனிப் பாறைகள் உருகி வருகின்றன.
அதுவும் மிகவும் விரை வாக உருகி வருகின்றன. பொதுவாக புவி வெப்பமய
 மாதல் என்ற ஒரு ஆபத்து மனித குலத்தின் மீது படர்ந்து நிற்கிறது. இது
 அனைவரும் அறிந்ததே ஆனால் கடலில் உள்ளே இருந்தும் ஒரு ஆபத்து
 சூழ்ந்து கொண்டு வருகிறது. அது கடல் நீரோட்டங்களில் ஏற்படும் மாற்றம்
. இதை முதல் முதலாக என்ரிக் ஜொர்மிலோ கூறியபோது, உலகம்
 நம்பவில்லை. ஆனால் 1998 ஆம் ஆண்டு அமெரிக்க கண்டம் முழு வதும்
 ஏற்பட்ட வெப்ப மாற்றம் , கடல்பாசி மற்றும் கிரில்ஸ், ஈரால்கள் மற்றும்
 பவளப்பாறைகள் பாதிக்கப் பட்டன.
இவை அனைத்தும் கடலில் சேரும் கழிவுகளைச் சாப்பிட்டு கடலை
 தூய்மைப்படுத்தும் பணியைச் செய்யும் உயிரினமாகும். இந்த உயிரினத்தின்
பாதிப்பால் அட்லாண்டிக் மற்றும் பசிபிக் கடலில் கரையோரப் பகுதிகள்
 மிகவும் அதிமாக அசுத்தங்கள் சேர்ந்துவிட்டது. விளைவு ஆசிய மற்றும்
 அமெரிக்க கடற்கரையோரப் பகுதி நாடுகளில் சுவாசம் தொடர்பான நோய்கள்
 பெரிதும் பரவத் துவங்கிவிட்டது.     உலக சுகாதார மய்யம் எச்சரிக்கை விடும்
 அளவிற்கு நிலைமை மாறிவிட்டதால், கடல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு
 உலக நாடுகளுக்கு ஏற்படத் துவங்கியது.
இதன் விளைவாக 8 ஜூன் 1992 அன்று பிரேசில் நாட்டிலுள்ள ரியோ டி
 ஜெனிரோ என்ற இடத்தில் நடைபெற்ற பூமி கூட்டு மாநாட்டில் (Earth Summit)
 உலக கடல் தினம் (World Ocean Day) கடைபிடிப்பது என்று முடிவெடுக்கப்
 பட்டது.
அய்.நா. சபை கடல் பாதுகாப்பை வலியுறுத்தி 2009 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம்
 6 ஆம் தேதி நடைபெற்ற மால்டாவில் நடந்த உலக கடற்கரைப் பாதுகாப்பு
 மாநாட்டின்  கூட்டுக் கூட்டத்தில் முதல் ஜூன் 8 ஆம் தேதி உலக கடல்கள்
 தினமாக (World Ocean Day) அறிவித்து தீர்மானம் நிறைவேற்றியது.  உலகின்
 வளர்ச்சியடைந்த நாடுகள் கடல் பாதுகாப்பில் தங்களுடைய பங்கை அதிகம்
 செலுத்தி வருகின்றனர்.
ஆறுகளை தூய்மைப்படுத்துவது போல் நாம் கடல்களை
 தூய்மைப்படுத்தவேண்டும்.  கடந்த சில ஆண்டுகளாக நமது சென்னைக்
 கடற்கரையில் குளிர்பிரதேச டால்பின்கள் வருவதற்கு காரணம் என்ன
 தெரியுமா, வங்காள விரிகுடாக்கடலில் வெப்ப நீரோட்டத்தில் மாற்றம் 
 ஏற்பட்டதால் ஆண்டார்டிக் கடற்பகுதியில் உள்ள டால்பின்கள் தடம் மாறத்
 துவங்கிவிட்டது. இது நிலநடுக்கோட்டுப் பகுதியில் உள்ள நாடுகளில் பருவ
 நிலையை மாற்றிவிடும்.
வறட்சியை நாம் எதிர்நோக்க வேண்டி இருக்கும்.   இதுபோன்ற ஆபத்துகளை
 நாம் களைய வேண்டு மென்றால் கடலைப் பாதுகாக்கவேண்டும்.
  பாதுகாக்கத் தவறினால் நமது எதிர்காலத் தலை முறைக்கு நீலநிற கடலுக்கு
 மாற்றாக கருமையான அசுத்தங்கள் படர்ந்த அமில நீரையும் எப்போதும்
 இருள் சூழ்ந்த வானத்தையும், ஆக்சிஜன் இல்லாத பூமியையும் நாம் விட்டுச் 
செல்வோம்.
========================================================================
suran

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?