குற்றாலம் கேரளாவுக்கே சொந்தம்

நதிநீர்ப் பிரச்சினையில் கேரளமும், தமிழகமும்!
கேரள சட்டசபையில் சில நாட்களுக்கு முன்பு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ஜெமிலா பிரகாசம் என்பவர் கூறுகையில், "சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற தேசிய அணைகள் பாதுகாப்புக் கமிட்டி கூட்டத்தில், முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், திருணக் கடவு மற்றும் பெருவாரிப்பள்ளம் ஆகிய நான்கு அணைகளும் தமிழ்நாட்டுக்குச் சொந்தம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஆனால், கூட்டத்தில் கலந்து கொண்ட கேரள அதிகாரிகள் அதை எதிர்க்கவில்லையே?" என்று கேட்டிருக்கிறார். இதற்கு விளக்கமளித்த முதலமைச்சர் உம்மன்சாண்டி "முல்லைப்பெரியாறு உட்பட நான்கு அணைகளும் இப்போது கேரளாவின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது. 
suran

அந்த அணைகள் முழுக்க முழுக்க கேரளாவுக்குச் சொந்தமானவை. 2009ஆம் ஆண்டு வரை இந்தியாவில் உள்ள பெரிய அணைகளின் பட்டியலில் இந்த நான்கு அணைகளும் தமிழ்நாட்டுக்குச் சொந்தமானவை என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆனால் கேரளா அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து 2012ஆம் ஆண்டு அந்த நான்கு அணைகளும் கேரளாவுக்குச் சொந்தம் என்று மாற்றப் பட்டது" என்று தெரிவித்திருக்கிறார்.
suran
மத்திய நீர்வள ஆணையத்தின் கூட்டம் 2013 டிசம்பர் 27ஆம் தேதி நடந்தது. அந்தக் கூட்டத்துக்குப் பிறகு ஜுன் 2014 வரை உள்ள விபரங்களுடன் கடயத சில நாட்களுக்கு முன்னர் பெரிய அணைகள் பற்றிய தேசியப் பதிவேடு வெளியிடப்பட்டது. அந்தப் பதிவேட்டில் முல்லைப் பெரியாறு, திருணக்கடவு, பெருவாளிப்பள்ளம், பரம்பிகுளம் ஆகிய நான்கு அணைகளும் கேரள அணைகள் பட்டியலில் சேர்த்து வெளியிடப்பட்டுள்ளன என்றும்; தமிழக அணைகளின் பட்டியலில் இவை சேர்க்கப்படவில்லை என்றும் செய்தி வெளிவந்துள்ளது.

கடந்த 2009 வரை இந்த நான்கு அணைகளும் தமிழகத்தின் பட்டியலில் இருந்தன. கேரளாவின் வலியுறுத்தலைத் தொடர்ந்தே இந்த நான்கு அணைகளும் கேரள பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த மாற்றம் 2012ஆம் ஆண்டு நடைபெற்றதாக கேரள முதலமைச்சர் கூறியிருக்கிறார்.
23-6-2014 அன்று தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட ஓர் அறிக்கையில், "காவேரி நதி நீர்ப் பிரச்சினையிலும், முல்லைப் பெரியாறு நதி நீர்ப் பிரச்சினையிலும் எப்படி தமிழ் நாட்டின் உரிமை என்னால் நிலைநாட்டப்பட்டதோ, அதேபோன்று பாலாறு நதி நீர்ப் பிரச்சினையிலும் தமிழ்நாட்டின் உரிமை நிலை நாட்டப்படும்" என்று தன்னைத் தானே புகழ்ந்து கொண்டாரே, கேரள முதல் அமைச்சர் நான்கு அணைகளும் 2012ஆம் ஆண்டு கேரளப் பட்டியலிலே மாற்றப்பட்டன என்று சொல்லியிருக்கிறாரே, இந்த உரிமை யாரால் நிலை நாட்டப்பட்டது?
காவேரி நதி நீர்ப் பிரச்சினையிலும், முல்லைப் பெரியாறு நதி நீர்ப் பிரச்சினையிலும் தன்னால் தமிழ்நாட்டின் உரிமை நிலைநாட்டப்பட்டது என்று சொல்லியிருக்கிறாரே, காவேரி நதி நீர்ப் பிரச்சினை தீர்ந்து விட்டதா? 
suran
மேலாண்மை வாரியம் உருவாக்கப்பட்டு விட்டதா? முல்லைப் பெரியாறு நதி நீர்ப் பிரச்சினையில் தமிழ் நாட்டின் உரிமை முழுமையாக நிலைநாட்டப்பட்டு விட்டதா? கேரள சட்டசபையில் அந்த மாநில நீர்வளத் துறை அமைச்சர், திரு- பி.ஜே.ஜோசப் கூறும்போது, "தேசிய நீர்வள மேம்பாட்டு முகமை, கேரளத்தின் பம்பை, அச்சன்கோவில் ஆறுகளை தமிழகத்தின் வைப்பாறுடன் இணைக்க யோசனை தெரிவித்துள்ளது; பம்பை, அச்சன் கோவில் ஆறுகளின் நீர், விவசாய மற்றும் பாசன பயன்பாட்டிற்கே சரியாக உள்ளது; தேவைக்கு அதிகமாக நீர் இருப்பதில்லை; இது தொடர்பாக வல்லுநர் குழு ஒன்று ஏற்கனவே அறிக்கை சமர்ப்பித்துள்ளது; எனவே நதிகள் இணைப்புத் திட்டம் சாத்தியமில்லை" என்று தெரிவித்திருக்கிறாரே, இதற்கு தமிழக அரசின் பதில் என்ன? இது தான் ஜெயலலிதா; நதி நீர் இணைப்புப் பிரச்சினையில் ஆக்கப் பூர்வமான நடவடிக்கை மேற்கொள்வதன் இலட்சணமா?
இது கலைஞர் கேள்வி?
குற்றாலத்தை காப்பாற்றும் முயற்சியில் முதல்வர் இறங்கி விட்டதால் இந்த நான்கு அணை பிரச்னையில் ஜெயா கருத்து தெரிவிக்கவில்லை.எதிர்க்கவில்லை.கடிதமும் எழுதவில்லை.
அப்படி அவர் கண்டு கொள்ளாமல் இருப்பதை இங்குள்ள வியாபார ஊடகங்களும் கண்டுகொள்ளவில்லை.
மாறாக நான்கு அணிகள் பிரச்னையில் முதல்வர் தலையிட கோரி கலைஞர் கோருவதை நக்கலடிக்கும் விதமாக பின்னூட்டங்களுடன் இணையங்களில் செய்தி வெளியிடுகின்றன.
முதல்வர் ஜெயாவுக்கு நீங்கள் இப்போது பாதுகாக்க புறப்பட்டிருக்கும் குற்றாலத்துக்கு தண்ணீர் கேரளா மழைக்கலங்க்களில்தான் வருகிறது.அதனால் குற்றாலம் கேரளாவுக்கே சொந்தம் என்று மத்திய அரசு அறிக்கையில் வரும் காலம் தூரத்தில் இல்லை.
ஆனால் அப்படி ஆனாலும் இங்குள்ள ஊடகங்களும் ,நீங்களும் அதற்கு காரணம் கருணாநிதிதான் என்று சொல்லிவிடுவீர்கள் .அதை இருனூறு ரூபாய வாங்கிக்கொண்டு மக்களும் ஒத்துக்கொள்ளுவார்கள்.
suran

------------------------------------------------------------------------------------------------------------
 கொய்யா


 கொய்யா பல்வேறு சத்துக்களை கொண்டுள்ளது.
ஆப்பிளைப் போலவே, கொய்யாப்பழத்திலும் அதிக சத்துக்கள் தோலில் மட்டுமே காணப்படுகின்றன. கொய்யாப்பழத்தில் கொ ஞ்சம் கொழுப்பு, புரோட்டீன் ஆகியவை உள்ளன.
suran
நாள்தோறும் ஒரு கொய்யாப் பழம் வீதம் தொடர்ந்து ஆறுமாதங்கள் சாப்பிட்டு வந்தால் உங்களுக்குப் புற்றுநோய் வரவே வராது. நெல்லிக்கு அடுத்து கொய்யாவில் அதிக அளவு விட்டமின் சி உள்ளது.
கொய்யா தற்சமயம் எல்லா காலங்களிலும் கிடைக்கிறது. வெள்ளைக் கொய்யா, சிவப்புக் கொய்யா என இருவகை உள்ளது.
குறைந்த விலையில் அதிகச் சத்துக்கள் பெற கொய்யாச் சாறு தினமும் அருந்தலாம். இனிப்பும், அமிலச் சத்துகளும் கலந்த ருசியான பழம். குளிர்ச்சி மிகுந்தது. கொய்யாவில் மறைந்திருக்கும் மருத்துவ குணங்கள் பற்றி பார்ப்போம்.
சளி தொந்தரவு நீங்க
சிலர் கொய்யா சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்று நினைக்கிறார்கள். இது தவறு. உண்மையில் கொய்யாப்பழம் சளி தொந்தரவை விரட்டும் மருந்து.
அதனால் கொய்யா பழத்தை சாப்பிட விரும்பாத குழந்தைகளுக்கு கொட்டைகள் நீக்கிய கொய்யாப் பழத்தை அரைத்து, அதனுடன் வெல்லம், சர்க்கரை சேர்த்து தோசையாக வார்த்து கொடுக்கலாம்.
மலச்சிக்கல் நீங்க
மலச்சிக்கல் இருப்பவர்கள் தினமும் ஒரு கொய்யாப் பழத்தை ஒரு டீஸ்பூன் தேனுடன் கலந்து ஒரு மாதம் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடனடி தீர்வு கிடைக்கும்.
ரத்த சோகைக்கு மருந்து
ரத்த சோகை இருப்பவர்களும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களும் தினமும் ஒரு கொய்யாப் பழத்தை சாப்பிட்டு சூடான தண்ணீர் குடிக்க வேண்டும்.
இப்படி 48 நாட்களுக்கு தொடர்ந்து செய்து வந்தால் ரத்தம் சுத்திகரிக்கப்பட்டு, உடலில் சக்தி ஏறும்.
உடல் சூடு நீங்க
சிலருக்கு உடல் சூடு அதிகமாக இருக்கும். இவர்கள் தினமும் ஒரு கொய்யாப் பழத்தை சாலட் போல் செய்து சாப்பிட்டால் உடல் குளிர்ச்சியடையும்.
வாய்ப்புண் குணமடைய
கொய்யா மரத்தின் வேர் மற்றும் பட்டையை சுத்தம் செய்து நசுக்கி, வெந்நீரில் கொதிக்க வைத்துக் குடித்தால் வாய்ப்புண் குணமடைவதுடன், அது மீண்டும் வராமலும் தடுக்கலாம்.
பல் பிரச்சனை நீங்க
மா இலையுடன் கொய்யா இலையை காய வைத்து அரைத்து, பல்பொடியாகப் பயன்படுத்தினால், பல்லில் ரத்தம் வடிதல், ஈறு வீக்கம் போன்றவை குணமாகும்.
இரத்த குழாய் அடைப்பு நீங்க
இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு, ரத்த ஓட்டம் போன்றவற்றை கொய்யாப் பழம் சீர்படுத்துகிறது. (இரத்தக் குழாயில் 80% சதவிகிதம் , 70% சதவிகிதம் அடைப்பு இருந்தால் அவைகளைப் போக்கிவிடும் என்று கூறமுடியாது. 5 லிருந்து 10% வரை அடைப்புகளைப் போக்கலாம்.
கொழுப்பு நீங்க
இளம் கொய்யா இலையில் தயாரிக்கப்படும் தேநீரை பருகுவதால் கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடின் அளவுகளில் பல மாற்றங்களை ஏற்படுத்துகிறது.
அதனால் அடுத்த எட்டு வாரங்களுக்கு பிறகு கொழுப்பு அளவுகளில் பல மாற்றங்கள் ஏற்படும்.
------------------------------------------------------------------------------------------------------------
திராட்சை 

பரு த்தொல்லைக்கு முற்றுப்புள்ளி வைப்பதுடன், பருக்கள் வராமலும் தடுக்கிறது பச்சை திராட்சைச் சாறு. இரண்டு புதினா இலைகளை இடித்து எடுத்த  சாறுடன் அரை டீஸ்பூன் கஸ்தூரி மஞ்சள் கலந்து கொள்ளுங்கள்.

இது பேஸ்ட்டாகும் அளவுக்கு சிறிது திராட்சைச்சாறு, எலுமிச்சைச் சாறு கலந்து முகத்தில் பூசுங்கள். 10 நிமிடம் கழித்து கழுவினால், முகத்தில்  இருக்கும் பருக்கள் மறையும். மேற்கொண்டு பருக்கள் வராமல் தடுக்கும். சருமமும் மிருதுவாகும்.

suran
தொய்வடைந்த தோலை இறுக்கமாக்கி, இளமைத் தோற்றம் தருகிறது பச்சை திராட்சைச் சாறு. ஒரு முட்டையின் வெள்ளைக் கருவை ஒரு  கிண்ணத்தில் எடுங்கள். அதே அளவுக்கு திராட்சைச் சாறையும் எலுமிச்சைச் சாறையும் எடுத்து, வெள்ளைக் கருவுடன் சேர்த்து நன்றாக அடித்துக்  கொள்ளுங்கள்.

இதை முகம், கழுத்து, கை ஆகிய பகுதிகளில் பேக் ஆகப் போட்டு 20 நிமிடம் காயவிட்டு கழுவுங்கள். பச்சை திராட்சை, சருமத்தை மிருதுவாக்கும்.  எலுமிச்சைச் சாறு, சருமத்தை சுத்தப்படுத்தும். முட்டை, தொய்வடைந்த தோலை இறுக்கமாக்கும். இதுபோல வாரம் இருமுறை செய்துவர முதுமைத்  தோற்றம் மறைந்து இளமை மிளிரும்.

சிவப்பழகை ஜொலிக்கச் செய்யும் தன்மையும் பச்சை திராட்சைக்கு உண்டு. ஆரஞ்சு பழத் தோலை உலர்த்தி பவுடராக்குங்கள். ஒரு டீஸ்பூன் இந்தப்  பவுடருடன், ஒரு டீஸ்பூன் திராட்சை ஜுஸ் கலந்து முகம் மற்றும் கழுத்துப் பகுதிகளில் பூசி கழுவுங்கள். இப்படிச் செய்வதால் தோலின்  முரட்டுத்தன்மை நீங்குவதுடன் நிறமும் கூடும்.

அழகுக்கு ஆதரவு தருவதில் காய்ந்த திராட்சைக்கும் கணிசமான பங்கு இருக்கிறது. காய்ந்த திராட்சையுடன், பீட்ரூட் சாறை கலந்து தினமும்  உதடுகளில் பூசி வர, உதடுகள் கோவைப்பழம் போல சிவக்கும்.

காய்ந்த திராட்சை, பாதாம் பருப்பு இரண்டையும் சம அளவு எடுத்து மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். இதை முகத்தில் பூசி, சிறிது  நேரம் ஊறவிட்டு கழுவினால், ஃபேஷியல் செய்தது போல முகம் ஜொலிக்கும்.

---------------------------------------------------------------------------------------------
அக்னி நட்சத்திரம்?
suran
ஒவ்வொரு ஆண்டும்  அக்னி நட்சத்திரம் -கத்திரி வெயில் குறித்த 



, செய்திகளும் இடம்பெறுவது வழக்கம். 

ஆனால், இது அறிவியல் 

உண்மை இல்லை .

கத்திரி வெயில் என்ற வார்த்தைகள் வானிலை ஆய்வாளர்களின்

பயன்பாட்டில் இல்லை .மேலும் அக்னி நட்சத்திரம் என்றும் இல்லை.,

அப்படியொரு கருத்தாக்கம் தவறானது


என்றும் ஆய்வாளர்கள் விளக்கு கின்றனர்.
கத்திரி வெயிலுக்கும் அறிவியலுக்கும் தொடர்பில்லை என்பதை விளக்கி

 சென்னை வானிலை ஆய்வு மய்ய இயக்குநர் எஸ். ஆர்.ரமணன்

கூறியதாவது:
கத்திரி வெயில் என்பது 100 சதவீதம் வானிலை துறையின் வார்த்தை

 கிடையாது.

அது பஞ்சாங்கத்தின் வார்த்தை. மேஷ ராசியில் சூரியன்

 நுழைவதை கத்திரி வெயில்என்று சோதிடர்கள் சொல்வா ர்கள். வானிலை

துறை ராசியின்

அடிப்படையில் இயங்குவதில்லை.

மே மாதம் வெப்பம் அதிகரிக்கும் .காரணம் வெயில் காலங்களில் கொளுத்தும்

வெயிலின் வெப்பத்தை கிரகித்த பூமி அதை வெளியிடுவதாலும் ,வெப்ப

சலனத்தாலும் மே மாதத்தில் அதாவது கோடை முடிவின்போது வெப்பம்

அதிகரிக்கும்,வெப்ப சலனத்தால் சில இடங்களில் மழையும் பெய்யும்  .
இது ஆண்டு தோறும் நிகழும் இயல்பான செயல். எனவே கத்திரி வெயில்

எப்போது தொடங்கும், எப்போது முடியும் என்று வானிலை துறை

கூறுவதில்லை.  இவ்வாறு அவர் கூறினார்.

suran



ஒவ்வொரு ஆண்டும் கத்திரி

 வெயில் என தனியாக தலைப்பிட்டு ஊடகங்களும் செய்தி

வெளியிடுகின்றன.

ஆனால், இது  அறிவியல் பூர்வமானதில்லை .வெறும் நம்பிக்கை மட்டும்தான்.











இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?