பாசிப்பயறு-எலுமிச்சை-கொய்யா



பாசிப்பயறு  சத்தான பயறு வகைகளில் ஒன்றாகும். 

பண்டைய காலம் முதலே இந்தியாவில் விளைவிக்கப்பட்டு வந்த இந்த வகை பயறுகள்,
பின் தெற்கு சீனா, இந்தோ சீனா, மேற்கிந்திய தீவுகள் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் விளைவிக்கப்பட்டது.

இதில் அதிக அளவு கால்சியமும், பாஸ்பரசும் அடங்கியுள்ளது. 

புரதம், கார்போஹைடிரேட், சிறிதளவு இரும்புச்சத்தும் அடங்கியுள்ளது. நார்ச்சத்தும், தாதுப்பொருட்களும் இதில் அடங்கியுள்ளன.
கர்ப்பிணிகளுக்கு ஏற்றது: 
கர்ப்பகாலத்தில் தாய்மார்களுக்கு வேகவைத்த பாசிப்பயிறை கொடுக்கலாம். எளிதில் ஜீரணமாகும்.

சத்துக்கள் நேரடியாக கருவில் உள்ள குழந்தைக்கு சென்று சேரும். குழந்தைகளுக்கும், வளர் இளம் பருவத்தினருக்கும் பாசிப்பருப்பு சிறந்த ஊட்டச்சத்து உணவு என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.


வயிறுக்கோளாறுகள் இருப்பவர்கள் பாசிப்பயிறு வேகவைத்த தண்ணீரை சூப் போல அருந்தலாம்.

காய்ச்சல் குணமாகும்: 

சின்னம்மை, பெரியம்மை தாக்கியவர்களுக்கு பாசிப்பயிரை ஊறவைத்த தண்ணீரை அருந்த கொடுக்கலாம். 
அதேபோல் காலரா, மலேரியா, டைபாய்டு போன்ற நோய்களை குணமாக்குவதில் பாசிப்பயறு சிறந்த மருந்துப் பொருளாக பயன்படுகிறது.

நினைவுத்திறன் கூடும்: மணத்தக்காளி கீரையோடு பாசிப்பருப்பையும் சேர்த்து மசியல் செய்து அருந்தினால் வெயில் கால உஷ்ணக் கோளாறுகள் குணமடையும். குறிப்பாக ஆசன வாய்க் கடுப்பு, மூலம் போன்ற நோய்களுக்கு இது சிறந்த மருந்தாகும்.

பாசிப்பருப்பை அரிசியோடு பொங்கல் செய்து சாப்பிட்டால் பித்தமும், மலச்சிக்கலும் குணமாகும். 


பாசிப்பருப்பை வல்லாரை கீரையுடன் சமைத்து உண்டால் நினைவுத்திறன் அதிகரிக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

அழகுசாதனப் பொருள்: குளிக்கும் போது சோப்பிற்கு பதிலாக பாசிப்பயறு மாவு தேய்த்துக்குளித்தால் சருமம் அழகாகும். 


தலைக்கு சீயக்காய் போல தேய்த்துக் குளித்தால் பொடுகுத் தொல்லை நீங்கும்.
எலுமிச்சை 
===============

எலுமிச்சையின் மருத்துவக் குணங்கள் ஏராளம், அவற்றில் சில: எலுமிச்சை விட்டமின் ‘சி’ சத்து நிறைந்துள்ளதால் ஸ்கர்வி என்னும் நோயைப் போக்க வல்லது. 
(விட்டமின் `சி’ குறைவால் பற்களுக்கும், ஈறுகளுக்கும் இடையே இடைவெளி ஏற்பட்டு ரத்தம் கசிகிற நிலையாகும். மேலும் இது ரத்த சோகையை உண்டு பண்ணுவதாகும். கணுக்கால் மற்றும் காலிலுள்ள தசைகளில் சற்று சிவந்த வீக்கத்தையும் தருகிற நோய்).
வயிற்றிலுள்ள வாயுவைப் போக்கி சீரண உறுப்புகளை பலப்படுத்தும்
.* வயிற்றுக் கோளாறுகளை போக்கும்.* ஒவ்வாமையால் வரும் நோய்களைத் தடுக்கும்.
* தொற்று நோய்க் கிருமிகளை அழிக்கும்.
* யுனானி மருத்துவர்கள் இதன் சர்பத்தை நீரிழிவுக்கு பரிந்துரை செய்வார்கள்.
* இருமல், கக்குவான், சளி, காய்ச்சல், பித்த சம்பந்தமான நோய்கள் எலுமிச்சையால் விலகும்
.* எலுமிச்சை சாற்றை மேல் பூச்சாகப் பூச தேமல் தொழு நோய், வெண்ம நிறத்தோல் ஆகியன குணமாகும்.
* எலுமிச்சையின் இலைகளும், காம்புகளும் தொற்று நோய்க் கிருமிகளைப் போக்க வல்லவை.
100 கிராம் எலுமிச்சம் பழத்தில் அடங்கியுள்ள மருத்துவ சத்துக்கள்:* 100 கிராம் எலுமிச்சம் பழ ரசத்தில் 50 கிராம் நீர்சத்து, 1.0 கிராம் கொழுப்புச்சத்து, 1.4 கிராம் புரதச்சத்து , 11கிராம் மாவுச்சத்து, 0.8கிராம் தாதுப்பொருட்கள் , 1.2 கிராம் நார்ச்சத்து , 0.80 மி.கிராம் சுண்ணாம்புச்சத்து, 0.2மி.கிராம் பாஸ்பரஸ், 0.4மி.கி இரும்புச்சத்து, 12மி.கிராம் கரோட்டீன், 0.2 மி.கி தயாமின், 0.1 மி.கி நியாசின், 1.8 மி.கி விட்டமின் ஏ, 1.5மி.கி விட்டமின் பி, 63.0 மி.கி விட்டமின் சி ஆகிய சத்துக்கள் அடங்கியுள்ளன.
* 100கிராம் எலுமிச்சம் பழச்சாற்றில் 4 முதல் 50மி.கி வரையிலான விட்டமின் ‘சி’ சத்து இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் “கரோட்டின்‘’ விட்டமின் `பி’ சத்துக்களும் உள்ளன.
* எலுமிச்சையில் உள்ள “பைப்ளேவனாய்ட்’’ என்னும் சத்து ரத்த நாளங்களின் உட்சுவர்ப் பகுதியை பலப்படுத்துகிறது.
குறிப்பாக சிறைகள், தமனிகள் ஆகியவற்றை செம்மைப்படுத்துகிறது. இதனால் நரம்புச் சுற்று தவிர்க்கப்படுகிறது. மேலும் “ஆர்ட்டிரியோ செலிரோஸிஸ்’’ என்னும் ரத்த நாளங்களின் அடைப்பையும் தடுத்து தடையற்ற குருதி ஓட்டத்தைத் தருகின்றது. ஈரல் வயிறு, குடல் பகுதிகளில் ஏற்படும் நோய்த் தொற்றினைப் போக்க வல்லது.* எலுமிச்சை சாறு பருகுவதால் மார்பகப் புற்று நோயை உண்டாக்கும் செல்கள் பரவுவது தடுக்கப்படுவதோடு, புற்றுநோய் வருவதையும் தடுக்கிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
* சிறுநீரகக் கற்கள் உருவாவதை எலுமிச்சை தடுக்கிறது. அன்றாடம் எலுமிச்சை சாறு பருகுவதால் “யூரினரி சிட்ரேட்’’ என்னும் தாதுப் பொருள் உற்பத்தியாகி சிறுநீரில் படிகங்கள் உருவாகி அவை பின்னர் சிறுநீரகக் கற்களாக மாறுவதைத் தடுக்கிறது.
எலுமிச்சை சாற்றில் பொட்டாசியம் சத்து மிகுந்திருப்பதால் அதிக ரத்த அழுத்தத்தை குறைப்பதோடு வாந்தி, குமட்டல், மயக்கம் ஆகியவற்றைத் தணிக்க வல்லது.
* தொண்டைக்கட்டு ஏற்பட்ட போது அல்லது தொண்டையில் தொற்று நோய் கண்ட போது உப்புத் தண்ணீரால் வாய் கொப்பளிப்பது வழக்கம். அதற்குப் பதிலாக எலுமிச்சை சாற்றை சிறிது நீரில் கலந்து வாய் கொப்பளிப்பதால் விரைவில் குணம் தெரியும்.
* எலுமிச்சை சாற்றை சிறிது நேரம் வாயில் அடக்கி வைப்பதால் பல்வலி போவதோடு ஈறுகளினின்று ரத்தம் கசிவது நிற்கும்.
=====================================================================

கொய்யா
=========

இன்று நமக்கு மலிவான விலையில் கிடைக்கும் பழங்களுள் ஒன்று கொய்யா. இந்த பழம் மலிவானது மட்டுமல்ல. 
பல்வேறு நன்மைகளையும் கொண்டது. 4 ஆப்பிள் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மையானது ஒரேயொரு கொய்யாபழத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. கொய்யாபழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரித்து, நோய்களின் தாக்கத்தை குறைக்கும். 
இதில், முக்கிய உயிர்சத்துக்களும், தாது உப்புக்களும் அடங்கியுள்ளன. கொய்யா மரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய கனி மட்டுமல்லாது, இலை, பட்டை என அனைத்துமே மருத்துவகுணம் கொண்டவையாகும். கொய்யாபழத்தில் வைட்டமின் பி மற்றும் சி ஆகியவை உள்ளன. அதுமட்டுமின்றி, கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து போன்றவையும் உள்ளன. 
கொய்யாப்பழத்தில் அதிக அளவில் நார்ச்சத்து இருப்பதால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தி ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும். 
பல்வேறு மருத்துவ குணம் உள்ள கொய்யாபழத்தை இரவில் சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிட்டால், வயிற்றுவலி உண்டாக்கும்.   
மலச்சிக்கல் பிரச்னை இருப்பவர்கள் தொடர்ந்து கொய்யாப்பழத்தை சாப்பிடலாம்.  
கொய்யாபழத்தில் வைட்டமின் ஏ இருப்பதால், இவற்றை தினமும் சாப்பிட்டு வந்தால் கண்களில் ஏற்படும் குறைபாடுகளை தடுக்கலாம். 

ஈறுகளில் வீக்கம் அல்லது வலி இருந்தால், கொய்யா மரத்தின் இலைகளை தண்ணீரில் போட்டு காய்ச்சி சிறிது நேரம் கழித்து வாயை கொப்பளித்தால், வலி மற்றும் ஈறு வீக்கம் குறையும். 
 மழைக்காலத்தில் பெரும்பாலானோருக்கு இருமல் மற்றும் தொண்டைப்புண் வரக்கூடும். இவ்வாறு பாதிக்கப்படுபவர்கள் கொய்யா இலைகளை தண்ணீரில் போட்டு காய்ச்சி, வாயை கொப்பளித்தால் விரைவில் குணமாகும். 

மது போதைக்கு அடிமையானவர்கள் அப்பழக்கத்தில் இருந்து விடுபட கொய்யாப்பழத்தை அதிகம் சாப்பிட வேண்டும்.

இதன்மூலம் மது மற்றும் போதை பழக்கத்தில் இருந்து விடுதலை பெற முடியும்.  
வாதநோய், ஆஸ்துமா போன்ற நோய் உள்ளவர்கள் கொய்யாபழத்தை சாப்பிடக்கூடாது.
=====================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?