ஊழலின் வேர்கள் எதுவரை?

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தமு.பக்தவச்சலம் முதலமைச்சராக இருந்த போது எருக்கன்சேரி என்ற இடத்தில் நில ஆர்ஜிதம் செய்ததில் ஊழல் நடந்தது என்று சட்டமன்றத்தில் கருணாநிதி பேசினார். 

அது குறித்துவிசாரிக்க குழு அமைக்கப்பட்டது. அக்குழுநில ஆர்ஜிதம் செய்ததில், ஊழல் நடைபெற்றுள் ளது என்று கண்டறிந்தது. இதற்குள் 1967ல், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சியில் அமர்ந்தது. 
எருக்கன்சேரி ஊழல் குறித்து மேல் நடவடிக்கை தேவையில்லை என்று திமுக முடிவு செய்தது.  திமுக ஆட்சியின் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்தன.
கருணாநிதி முதல்வராக இருந்தபோது அவர் மீது அடுக்கடுக்கான குற்றச் சாட்டுகள் எழுந்தன. மஸ்டர் ரோல் ஊழல், கோதுமைபேர ஊழல், வீராணம் குழாய் ஊழல், பூச்சிமருந்து ஊழல் என பட்டியல் நீண்டது. 
1972ல் திமுகவிலிருந்து பிரிந்துவந்த எம்.ஜி.ஆர்., குடியரசுத் தலைவரிடம், கருணாநிதியின் ஊழல்களை பட்டியலிட்டுக் கொடுத் தார்.
அன்றைய மத்திய அரசு அவற்றை வாங்கிவைத்துக்கொண்டு, நான்கு வருடம் கழித்து, 1976-ல் திமுக ஆட்சியை கலைப்பதற்காக அந்த ஊழல்பட்டியலை பயன்படுத்திக் கொண்டது. 
கருணாநிதியின் ஊழல்கள் குறித்து விசாரிப்பதற்கு மத்திய அரசு நீதிபதி சர்க்காரியா குழுவை அமைத்தது.
 அக்குழு ஊழல்கள் குறித்து விசாரித்து, ஊழல்கள் நடைபெற்றது உண்மைதான், அவை விஞ்ஞானப் பூர்வமாக நடைபெற்றுள்ளன எனவும் சான்றுஅளித்தது. இந்த அறிக்கையின் மீது சட்டப் படியான நடவடிக்கையை அன்றைய மத்திய அரசு மேற்கொள்ளவில்லை. 
மாறாக இதை வைத்துக்கொண்டு பிரதமராக இருந்த இந்திரா காந்தி அவ்வப்போது திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையை மிரட்டி, அரசியல் ஆதாயம் அடைந்துவந்தார்.

திமுகவிலிருந்து பிரிந்து வந்து தனிக்கட்சி அமைத்து ஆட்சியைப் பிடித்த எம்.ஜி. ஆர் ஆட்சி மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டன.

 பல்கேரிய நாட்டுடன், கப்பல் பேரத்தில் ஊழல் நடைபெற்றுள்ளது என சட்டமன் றத்தில் அவர் மீதும் குற்றம் சுமத்தப்பட்டது. 

எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில், எரிசாராயத்திற்கு அனுமதி வழங்குவதில் நடைபெற்ற ஊழலில்,தமிழ்நாடு அரசிற்கு பல ஆயிரம் கோடி ரூபாய்இழப்பு ஏற்பட்டது எனவும் குற்றம்சுமத்தப் பட்டது. 

உச்சநீதிமன்றம் தலையிட்டு, அந்நிய மதுபான மொத்த விற்பனைக்கு, தனியாருக்கு தமிழக அரசு அனுமதி வழங்கியதை ரத்து செய் தது. 

இதன் தொடர்ச்சியே தமிழ்நாட்டில் இன்று செயல்படும் டாஸ்மாக்கின் தோற்றத்திற்கு அடிப்படையாக அமைந்தது.
எம்.ஜி.ஆரை தொடர்ந்து ஆட்சிக்கு வந்த ஜெயலலிதாவின் மீதும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்தன.
 சில நீதிமன்றங் களிலும் விசாரிக்கப்பட்டன. 
டான்சி நில ஊழல், பிளசன்ட் ஸ்டே விடுதி கட்ட அனு மதி வழங்கியதில் ஊழல் என்பவை ஓரிரு வழக்குகளாகும்.
அவர் முதலமைச்சராக இருந்த 1991-96 வரை 5 ஆண்டுகளில், வருமானத்திற்கு மேல் ( ஒரு ரூபாய் ஊதியம் பெற்றுக்கொண்ட முதலமைச்சர்) கோடிக் கணக்கில், சொத்துசேர்த்த வழக்கில் தற்போது நான்கு ஆண்டுகால சிறைத் தண்டனை பெற்றுள்ளார். 
இந்த வழக்கு நடைபெற்ற 18 ஆண்டுகாலத்தில், 10 ஆண்டுகாலம் தமிழ்நாட்டில் ஆட்சியிலிருந்தது திமுகவே.
இந்தவழக்கில், பல அரசு தரப்புசாட்சிகள் பிறழ் சாட்சிகளாகவும் மாறியுள்ளன. 
அப்படி பிறழ் சாட்சிகளாக மாறியஅதிகாரிகள் மீது துறைவாரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அரசு விதிமுறைகள். 
அப்படி எந்த ஒரு அதிகாரி மீதும் திமுக அரசு நடவடிக்கை எடுத்த தாக தகவல் இல்லை. 
இந்த வழக்கு முடிந்து தீர்ப்பு வெளிவந்தவுடன், திமுக தலைமை மௌனம் சாதித்தது கண்டு ஆச்சரியம்கொள்ள ஒன்றுமில்லை.
 ஏனெனில், ஜெயலலிதா வழக்கில் தண்டிக்கப்பட்டது ஜெயலலிதாவிற்கு வேண்டியப்பட்ட மூவரே. 
ஆனால் எதிர்நோக்கியுள்ள 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தண்டனை பெறக் கூடியவர்கள், திமுக தலைமையின் உற்றார் உறவினர் என்று ஏராளமானோர் தீர்ப்பை எதிர்நோக்கிக் கொண்டுள்ளனர்.
 இதனால்தான் திமுக தலைமை ஆற அமரயோசித்து, ஜெயலலிதா விற்கு வழங்கப்பட்ட தீர்ப்பு குறித்த கருத்தை நிதானத்துடன் சொல்ல நேரிட்டது.

ஜெயலலிதாவின் 1991-96 ஆட்சிக்காலத்தை ஒரு சிலர் எளிதாக மறந்துவிடுகின்ற னர். 
ஒவ்வொரு மாவட்டத்திலும் சொத்துக் களை வாங்கி குவிப்பதில், மக்களை மிரட்டு வதில், குறிப்பிட்ட ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் நடந்துகொண்டமுறை தமிழக மக்களைஅச்சத்தில் அன்று, உறையவைத்தது.
இதை திமுக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த போது, ஜெயலலிதா ஆட்சியின் அத்து மீறலைதுணிச்சலுடன் வெளிப்படுத்தியது மார்க் சிஸ்ட் கட்சி ஒன்றே ஆகும். 
ஜெயலலிதாவின் ஊழல்களை பட்டியலிட்டு, அச்சிட்டு, இலட்சக்கணக்கில் வீடு வீடாகச் சென்று விநியோ கம் செய்தது மார்க்சிஸ்ட் கட்சியே ஆகும்.
1996-2001 வரை திமுகவும், 01-06 வரை அதிமுகவும் 06-11 வரை திமுகவும் 11லிருந்து தற்போது வரை அதிமுகவும், மாறி மாறி ஆட்சிபொறுப்பை பங்கிட்டுக்கொண்டு வருகின் றன. 
இவை ஒன்றின் மீது ஒன்று ஊழல் குற்றச் சாட்டுகளை சுமத்திக் கொண்டும், ஒருவர் மீது ஒருவர் வழக்குகள் தொடுத்துக்கொண்டும் வருகின்றனர்.
ஆனால் இவை எல்லாம் ஒரு நிழல்யுத்தமே ஆகும். 
வழக்குகளை விரைந்து நடத்த வோ, வழக்கிற்கு தேவையான ஆவணங்களை நீதிமன்றத்திற்கு அளித்திடவோ இவை தயாராக இல்லை.
 இருபது ஆண்டுகளாக இவ்விரு கட்சிகளும் தமிழக மக்களுக்கு கண்கட்டிவித்தை காட்டி வருகின்றன. பல ஆயிரக்கணக்கான கோடி கொள்ளை போய்க்கொண்டிருக் கின்றது. 
ஒன்றிரண்டு மட்டுமே வெளி வந்துள் ளது. தமிழ்நாட்டில், மூன்றாவது மாற்று ஒன்று,ஆட்சிக்கு வருமென்றால், இந்த 47 ஆண்டு களில் திமுகவும், அதிமுகவும், இலைமறை, காய்மறைவாக செய்துள்ள ஊழல்கள் வெட்ட வெளிச்சமாகும் என்பதில் ஐயமில்லை.

சமீபத்தில் தமிழ்நாட்டு மக்களை திடுக்கிடவைத்த ஆவின் பால் கொள்ளையில் சம்பந்தப்பட்டவர்களின் அரசியல் செல்வாக்கு கட்சிகள்பேதமின்றி உள்ளது. 
2001லிருந்து சென்னை மாநகருக்கு, கிராமப்புறங்களிலிருந்து கொண்டு வரப்படும், பால் லாரிகளை திண்டிவனத்திற்கு அருகில் நிற்க வைத்து, ஒவ்வொரு லாரியிலும், நாள் ஒன்றிற்கு, ஆயிரம் முதல் இரண்டாயிரம் லிட்டர் வரை பால் திருடப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது. 
இதற்கு சூத்திரதாரியாக விளங் கிய வைத்தியநாதன் என்பவர் அதிமுக பிரமுகர்ஆவார்.
 இவருக்கு மட்டும், 83 பால் லாரிகள் சொந்தமாக உள்ளன.
இந்த அதிமுக பிரமுகர்திமுக ஆட்சிக்காலத்திலும், பால் கொள்ளை யை வெகு விமர்சையாக தொடர்ந்து நடத்திவந்திருக்கிறார் என்பதுதான் நாம் அறிந்து கொள்ள வேண்டிய உண்மையாகும். 
10 வருடங்களாக, அமைச்சர் பெருமக்களின் கண்காணிப் பில் அதிகாரிகளின் அரவணைப்போடு, தினசரி பால் கொண்டுவரும் லாரிகளை நிறுத்திமின் மோட்டார் மூலம் பாலை திருடிக் கொண்டு, அதற்கு மாற்றாக தண்ணீர் கலந்துஅனுப்பப்பட்டுள்ளது. 
இதனால் ஆவின் பால் நிறுவனத்திற்கு ஏற்பட் டுள்ள இழப்பு ரூ.500 கோடி இருக்கும் என்றுஅதிகாரப்பூர்வமான தகவல்கள் தெரிவிக் கின்றன. 
ஆனால் ஆயிரம் கோடியையும் தாண்டும் என்று ஊடகங்கள் தெரிவிக்கின் றன.
சிபிசிஐடியின் முதற்கட்ட விசாரணை யில், தினசரி 1.5 இலட்சம் லிட்டர் பால் கொள் ளையடிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
 முழு விசாரணையில் இதில் சம்பந்தப்பட்ட, முதலைகளின் முழுத் தகவல்கள் கிடைக்கும் என நம்பலாம்.
தமிழ்நாட்டில் கனிமவளக் கொள்ளை என்பதும் இவ்விரு ஆட்சிக்காலங்களில் தங்குதடையின்றி நடைபெற்று வருகின்றது.
 மதுரை மாவட்டத்தில் ஒரு மாவட்ட ஆட்சித் தலைவர் மேற்கொண்ட முயற்சியின் காரணமாக வெளிப்படுத்திய, கனிமவளக்கொள்ளை தமிழக மக்களின் புருவத்தை உயர்த்தியது. 
இதேபோல் தமிழகத்தின் எல்லா மாவட்டங் களிலும், குறிப்பாக மேற்குத்தொடர்ச்சி மலை ஓரங்களில் கனிமங்கள் பல ஆண்டுகளாக கட்சி பேதமின்றி கொள்ளை போய்க்கொண்டிருப்பதை மார்க்சிஸ்ட் கட்சி சுட்டிக் காட்டி வந்துள்ளது. 
மதுரை மாவட்ட கிரானைட் ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்ட தனியார் ஒருவரை காப்பாற்ற இவ்விரு கட்சிகளும்எப்படிப் பாடுபட்டன என்பதை மக்கள் அறிவர்.தூத்துக்குடி கடல் பகுதியில் மட்டும் அறிந்திருக்கக் கூடிய தாதுமணல் கொள்ளை யில் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் தமிழ்நாட்டு அரசிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. 
இது வெளிவந்த பிறகும் கூட கொள்ளையர் களை காப்பாற்றும் முயற்சிகளிலேயே இவ்விரு கட்சிகளும் ஈடுபட்டன. சென்னைஉயர்நீதிமன்றத்தில், மணல் தொடர்பாக, கனிமக் கொள்ளை தொடர்பாக தொடரப்பட்ட வழக்குகளில் தற்போதைய அரசு மேற் கொண்டு வரும் நிலைபாடுகள் அரசு நலனை பாதுகாப்பதை விட கொள்ளையர்களை பாதுகாக்கும் நடவடிக்கையாகவே உள்ளது என் றால் அது மிகையாகாது.
உச்சகட்டமாக, கனிமவளத் திருட்டை விசாரிக்க, இ.ஆ.ப அதிகாரி சகாயம் அவர்களை சென்னை உயர்நீதி மன்றம்நியமனம் செய்ததை எதிர்த்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்திற்கு சென்றது “பூனைக் குட்டி வெளியே வந்துவிட்டது” என்பதையே நமக்கு உணர்த்துகிறது. 
மேல்மட்டத்தில் ஊழல் தலைவிரித்தாடு கையில், அரசு நிர்வாகத்தின் அடிமட்டத்தில் துர்நாற்றம் எடுத்து வீசுகிறது.
 சாதாரண மக்கள்அரசு அலுவலகங்களுக்கு, குறிப்பாக காவல்நிலையங்களுக்கு செல்லவே அஞ்சுகின்றனர். 
ஒளிவு மறைவாக இருந்த லஞ்ச லாவண்யம் இன்று பகிரங்கப்படுத்தப்பட்டுள்ளது. அரசுநிர்வாகத்தில் கோலோச்சும் ஊழல், கும்பகோணம் பள்ளி தீ விபத்திலிருந்து, மௌலிவாக்கம் கட்டிட விபத்து வரை பல குழந்தை களை, அப்பாவி மக்களை பலிகொண்டுள்ளது.
இத்தகைய ஊழல் நடவடிக்கைகளுக்கெதிராக, கறைபடாத கரங்களுக்கு சொந்தக்காரர்களான கம்யூனிஸ்ட்டுகள் இன்று களத்தில் இறங்கியுள்ளனர். மேற்குவங்கம், கேரளா, திரிபுரா ஆகிய மூன்று மாநிலங்களில், முதுபெரும் தலைவர் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாட்டிலிருந்து இந்தியாவின் ஏழை முதலமைச்சர் என்று போற்றப்படும், மாணிக் சர்க்கார் வரை 10 முதலமைச்சர்கள், நூற்றுக்கணக்கான அமைச்சர்கள், ஆயிரக்கணக்கான சட்டமன்ற உறுப்பினர் கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் பணியாற்றி ஊழலுக்கு அப்பாற்பட்டவர்களாக விளங்கி வருகிறார்கள்.
                                                                                            -க.ராஜ்குமார்.
சுரன் 24112014
 சாரதா நிதி நிறுவன மோசடியில் அதிக பலன் அடைந்தவர் மம்தாவே என்று அவரது கட்சி எம்.பி யான குணால் கோஷ் குற்றஞ்சாட்டி உள்ளார்.

சாரதா நிதி நிறுவன முறைகேடு தொடர்பாக கடந்த ஆண்டு கைது செய்யப்பட்ட திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட குணால் கோஷ் எம்.பி., கொல்கத்தா நீதிமன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். 
அப்போது, ''சாரதா நிதி நிறுவன விவகாரத்தில் மிகப்பெரிய அளவில் பயனடைந்தவர் மம்தா பானர்ஜிதான்.

அவர் தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காகவே கட்சித் தொண்டர்களின் கூட்டங்களை நடத்துகிறார். மம்தா ஒரு கோழை. அவரை என் முன்னாள் உட்கார வைத்து விசாரிக்க வேண்டும். இந்த வழக்கில் என்னையும் அவரையும் சி.பி.ஐ. கூட்டாக விசாரிக்க வேண்டும்" 
-என்றார்.இதை மறைக்கவே மத்திய அரசை விமர்சித்து  அது தனக்கு எதிராக இருப்பது போலாவும்,அதை தாக்கி பேசியதால் அரசியல் பழி வாங்க  சாரதா ஊழலில் தன்னை கைது செய்ததாக மக்களிடம் காட்டிக்கொள்ள மம்தா நாட்கமாடுகிறார்.என்று குணால் கூறியுள்ளார்.
================================================================================

ஹோமி ஜஹாங்கிர் பாபா

இந்தியாவின் அணு ஆற்றல் திட்டத்தை உருவாக்கிக் கொடுத்த சிற்பியும், பன்முகத் திறமையும் கற்பனைத் திறனும் கொண்ட ஒரு நிர்வாகியும், இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவருமான ஹோமி ஜஹாங்கிர் பாபா ஒரு தீவிரமான தேசியவாதியும் கூட.
பாபா 1909 அக்டோபர் 30 அன்று மும்பையைச் சேர்ந்த வசதியானதொரு பார்சி குடும்பத்தில் பிறந்தார். 
எல்ஃபின்ஸ்டன் கல்லூரி மற்றும் சயன்ஸ் ராயல் இன்ஸ்டிட்யூட்டில் கல்லூரிப் படிப்பை முடித்தார். அவருக்கு இயல்பாக அறிவியலில் இருந்த ஆர்வத்தின் காரணமாக,15 வயதிலேயே ஐன்ஸ்டீன் எழுதிய சார்பியல் தத்துவம் மீதான புத்தகம் உட்பட வீட்டு நூலகத்தில் இருந்த அறிவியல் புத்தகங்கள் அனைத்தையும் படித்து முடித்துவிட்டார்.
இயற்பியல் மீதும் கணிதத்தின் மீதும் பாபாவுக்கு ஆர்வம் அதிகம் இருந்தது. ஆனால் அவரது தந்தையின் விருப்பத்திற்கு இணங்க பொறியியல் படிப்பில் சேர 1927-ல் கேம்பிரிட்ஜ் புறப்பட்டார்.
 இந்த விஷயத்தில் பாபாவின் தந்தை இன்றைய பெரும்பாலான பெற்றோர்களைப் போலவே நடந்து கொண்டாலும் மகனின் விருப்பம் நிறைவேற தான் இடையூறாக இருக்கக் கூடாது என்பதிலும் தெளிவாக இருந்தார். 
பொறியியல் படிப்பில் முதன்மையாகத் தேறினால் பாபா விரும்பிய துறையில் மேற்படிப்பு படிக்க உதவி செய்வதாக அவர் உறுதியளித்தார். 1930-ல் பாபா எந்திரவியல் படிப்பில் முதல் வகுப்பில் தேறியதும், கோட்பாட்டு இயற்பியல் துறையில் ஆராய்ச்சிப் பிரிவு மாணவராகச் சேர்ந்தார். 
என்ரிகோ ஃபெர்மி, கிரேமர்ஸ் போன்ற புகழ் பெற்ற இயற்பியலாளர்களுடன் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பினைப் பெற்றார். 1933-ல் “காமா கதிர்களை உட்கிரகிப்பதில் எலெக்ட்ரான் பொழிவுகளின் பங்கு” பற்றி அவர் சமர்ப்பித்த அறிவியல் கட்டுரைக்கு ஐசக் நியூட்டன் படிப்புதவி கிடைத்தது. 1934-ல் டாக்டர் பட்டம் பெற்றார்.
1937-ல் ஹெய்ட்லருடன் இணைந்து “எலெக்ட்ரான் பொழிவுகளில் காஸ்கேட் கோட்பாடு” என்ற தலைப்பில் ஆய்வுக் கட்டுரை சமர்ப்பித்தார்.
1939-ல் இந்தியா திரும்பிய அடுத்த ஆண்டில் பெங்களூர் இந்திய அறிவியல் கழகத்தின் காஸ்மிக் கதிர்கள் ஆய்வுத் துறையில் ரீடர் பதவி ஏற்றார். 1942-ல் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். 
ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சேருமாறு வந்த அழைப்பினை பாபா நிராகரித்தார். இந்தியாவில் ஒரு மிகச் சிறந்த அறிவியல் ஆராய்ச்சிக் கூடத்தை நிர்மாணிக்க வேண்டும் என்பதே அவரது லட்சியமாக இருந்தது. பாபாவின் தொலைநோக்குப் பார்வையும் தேசபக்தியும் அடிப்படை ஆராய்ச்சிக்கான டாடா நிறுவனம்அமைய வழிவகுத்தது. 
இன்று அது கூஐகுசு உலகின் முன்னணி ஆராய்ச்சி நிறுவனங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது. அணு ஆற்றலைப் பயன்படுத்துவதின் மூலமாகவே இந்தியாவின் ஆற்றல் பிரச்சனையைத் தீர்க்க முடியும் என்பது பாபாவின் நம்பிக்கை. 
1948-ல் அணு ஆற்றல் கமிஷனின் தலைவராக பாபா நியமிக்கப்பட்டார். பின்னர் டிராம்பேயில் அணு ஆற்றல் நிறுவனம் உருவாவதற்கு பாபாவே காரணமாக இருந்தார். 
அணு ஆற்றலில் இந்தியா சுயசார்புள்ள நாடாக வேண்டும் என்பதற்காக அவர் உழைத்தார். மற்ற நாடுகளில் இருந்த தொழில்நுட்பங்களிலிருந்து இந்தியா கற்றுக் கொள்ளலாமே தவிர, தன்னுடைய சொந்த வளங்களையும் விஞ்ஞானிகளையும் பயன்படுத்திக் கொள்வதற்கே முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று பாபா வலியுறுத்தினார்.
உலகம் முழுவதும் இருந்த இந்திய விஞ்ஞானிகளை தாயகம் திரும்பும்படிக் கேட்டுக் கொண்டார்.
 இந்தியா வந்த விஞ்ஞானிகள் அவரது வழிகாட்டுதலின் கீழ் அணுசக்தி வளர்ச்சிக்காக செயலாற்றத் தொடங்கினர்.
 அப்சரா, யுரேனியம் மற்றும் சிர்கோனியம் உலைகள், வான் டி கிராஃப் மற்றும் சைக்ளோட்ரான் கருவிகள் எல்லாம் ஹோமி பாபா இந்தியாவிற்குத் தந்த கொடைகள். 

1966ஆம் ஆண்டு ஜனவரி 24 அன்று ஒரு சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்வதற்காகச் சென்று கொண்டிருந்தபோது அவர் பயணித்த விமானம் விழுந்து நொறுங்கியதில் 56 வயதே ஆன பாபா அகால மரணமடைந்தார்.

 இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானிகளில் ஒருவரின் வாழ்வு இப்படி துயர மான முடிவாக ஆகிப் போனது.

  நன்றி:தீக்கதிர்,                                                               -- பேராசிரியர் கே. ராஜு
=================================================================================


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?