இடுகைகள்

ஜூன், 2014 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சாதனையா?வேதனையா??

படம்
தனது சாதனையாக  முதல்வர் ஜெய லலிதா குறிப்பிட்டு வரும் அம்மா உணவகங்களின் கதையைக் கேட்டால் பரி தாபமாக இருக்கிறது.  என்ற பெயரில் சவலைப்பிள்ளைப் போல செயல்பட்டு வரும் இந்த உணவகங்களின் உண்மைக்கதை கதை சென்னையில் இருந்து துவக்குவோம்.  சென்னை மாநகராட்சி யில் “மலிவு விலை உணவ கத் திட்டம்’’ என்ற பெய ரில் கடந்த 2013 மார்ச் 19 ம் தேதி சாந்தோமில் ஜெயலலிதாவால் இத் திட்டம் துவங்கப்பட்டது.  இட்லி ஒரு ரூபாய்க்கும், சாம்பார் சாதம் 5 ரூபா ய்க்கும், தயிர் சாதம் 3 ரூபாய்க்கு விற்கப்படும் என அறிவிக்கப்பட்ட இத்திட் டம் சென்னை மாநகராட் சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மான வடிவத்தால் “அம் மா உணவகம்’’ என பெயர் மாற்றிக் கொண்டது. சென்னை மாநகராட்சி யின் சார்பில் முதலில் 127 இடங்களில் துவங்கப் பட்டு தற்போது 200 இடங் களில் இத்திட்டம் விரிவு படுத்தப்பட்டுள்ளது.  சென்னை மாநகராட்சியை தொடர்ந்து மற்ற மாநக ராட்சிகளுக்கும் இத் திட் டம்விரிவுபடுத்தப்படுமென சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.  திருச்சி, மதுரை, கோ வை, திருப்பூர், திருநெல் வேலி, சேலம், வேலூர், தூத்துக்குடி, ஈரோடு ஆகிய 9 மாநகராட்சிகளிலும், “அ

மூன்றாண்டு

படம்
 ஜெயா ஆட்சி  -  கொக்கரக்கோ சௌம்யன் .. ஆட்சி யில் மூன்றாண்டுக்கு முன்னர் ஜெயா முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டபோது அவர் சில வாக்குறுதிகளை கொடுத்தார்.ஆனால் இப் போது மூன்றாண்டுகளான போதும் அந்த வாக்குறுதிகள் அப்படியே இருக்கின்றன. இப்போதைய மக்களவை தேர்தலிலும் அறுதியாக வென்று விட்டார்.தனியே கூட்டணி இல்லாமல் தேர்தலை சந்தித்ததாக சொல்லிக்கொண்டிருந்தாலும் ஜெயாவின் கூட்டனிதான் வலிமையானது.தேர்தல் ஆணையம்-காவல்துறை-எடுபிடி அரசு அலுவலர்கள் -காசு  என்ற வலுவான கூட்டணி ஜெயா அமைத்துத்தான் இத்தேர்தலை சந்தித்தார்.இதே கூட்டணி சட்டப்பேரவை தேர்தலிலும் அமைந்தால் முடிவு இப்போது போல்தான் அமையும். திமுக உட்பட்ட எதிர்கட்சிகள் அதற்குள் பிரவீன்குமாரை அதற்குள் தமிழ் நாட்டை விட்டு தேர்தல் ஆணையர் பதவியை விட்டு வெளியேற்ற வேண்டும் . ஊடகங்களோ ஜெயா அரசு தரும் விளம்பர காசுத்துண்டுகளுக்காக நாக்கை தொங்க விட்டு அலைகிறது.அரசுக்கு எதிரான செய்திகள் வடிகட்டப்படுகின்றன.தங்களின் பத்திரிக்கை நேர்மையை சாதனை விளம்பரங்களுக்காக சாகடித்து ஜெயாவின் மக்கள் தொடர்பு அலுவலராக மாறி விட்டன. இங்கே நம்ம தமிழகத்தில் மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாக

குற்றாலம் கேரளாவுக்கே சொந்தம்

படம்
நதிநீர்ப் பிரச்சினையில் கேரளமும், தமிழகமும்! கேரள சட்டசபையில் சில நாட்களுக்கு முன்பு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ஜெமிலா பிரகாசம் என்பவர் கூறுகையில், "சமீபத்தில் டெல்லியில் நடைபெற்ற தேசிய அணைகள் பாதுகாப்புக் கமிட்டி கூட்டத்தில், முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், திருணக் கடவு மற்றும் பெருவாரிப்பள்ளம் ஆகிய நான்கு அணைகளும் தமிழ்நாட்டுக்குச் சொந்தம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஆனால், கூட்டத்தில் கலந்து கொண்ட கேரள அதிகாரிகள் அதை எதிர்க்கவில்லையே?" என்று கேட்டிருக்கிறார். இதற்கு விளக்கமளித்த முதலமைச்சர் உம்மன்சாண்டி "முல்லைப்பெரியாறு உட்பட நான்கு அணைகளும் இப்போது கேரளாவின் கட்டுப்பாட்டில் தான் உள்ளது.  அந்த அணைகள் முழுக்க முழுக்க கேரளாவுக்குச் சொந்தமானவை. 2009ஆம் ஆண்டு வரை இந்தியாவில் உள்ள பெரிய அணைகளின் பட்டியலில் இந்த நான்கு அணைகளும் தமிழ்நாட்டுக்குச் சொந்தமானவை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் கேரளா அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததைத் தொடர்ந்து 2012ஆம் ஆண்டு அந்த நான்கு அணைகளும் கேரளாவுக்குச் சொந்தம் என்று மாற்றப் பட்டது" என்று தெ

பேரா சிறி யர் ?

படம்
சென்னை எத்திராஜ்கல்லூரியில் இணைப்பேராசிரியராக இருந்த கல்யாணி மதிவாணன், 2011 ஏப்ரல்9 ம் தேதி மதுரை காமராசர் பல்கலைக் கழகத் துணைவேந்தராக நியமனம் செய்யப்பட் டார்.  இவர்  நியமனத்துக்கு ஒரே தகுதி முன்னாள் அதிமுகஅமைச்சர் நெடுஞ்செழியனின் மருமகள் ஆவார். அவர் பதவியேற்ற நாளிலிருந்தே, ஆசிரியர், மாணவர், ஊழியர் விரோதப்போக்கில் ஈடுபட்டார்.  தன்னை எதிர்த்து பேசுபவர்களை அடியாட்கள் வைத்து மிரட்டினார்.இதனால் இவரை எதிர்த்து பல போராட்டங்கள் மாணவர்களாலும்,ஆசிரியர்களாலும்,அலுவலர்களாலும் நடத்தப்பட்டன.ஆனால் அதிமுக கட்சி தலைமை இவருக்கு ஆதரவாக இருந்ததால் இவரை ஒன்றும் அசைக்க முடியவில்லை.ஆனால்  பல்கலைக் கழகத்தில் பல போராட்டங்கள் நடைபெற்றன .இந்நிலையில், பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி)வகுத்துள்ள விதிமுறைகளின் படி, பத்தாண்டுகள் பேராசிரியர் பணியில் இருந்தவரே துணைவேந்தராக நியமனம் செய்யப்பட வேண்டும். ஆனால் கல்யாணி மதிவாணன் எத்திராஜ் கல்லூரியில் இணைப்பேராசிரியராக மட்டுமே இருந்தவர். ஆனால் அவர், இணைப்பேராசிரியர் என்பதை மறைத்து, பேராசிரியராக இருந்ததாகத் தன்னுடைய விண்ணப்ப மனுவில் தவறான தகவலைக் கூறி, துணைவ

மோடி சுழலில் இந்தியா

படம்
உயர் தொழில் நுட்பத்தில் கோயபல்ஸ் பாணி மோடி வித்தை காட்டி ஆட்சியை பிடித்த பாஜக ஆட்சி தனது சுயமுகத்தை காட்ட ஆரம்பித்து விட்டது. மோடி அலையை இந்தியா முழுக்க வீச[?]ஆரம்பித்த போதே உண்மை நிலையை இடது சாரிகள் உட்பட பலர் புட்டு,புட்டு வைக்க ஆரம்பித்தனர்.ஆனாலும்வாங்கிய  பணக்காற்றில் ஊடகங்கள் எழுப்பிய மோடி பு[கழ்]ழுதிப் புயல்  மக்களின் கண்ணை மறைத்து வாக்குகளை மாற்றி விட்டது. காங்கிரசின் ஆட்சியும் மக்கள் விரோத ஆட்சிதான். யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் சிறுபான்மை ஆட்சி வந்தால் மக்கள் நலனுக்கு நல்லது .என்று எதிர்பார்த்தது நடவாமல் போய்விட்டது. இதோ மோடி ஆட்சி . குஜராத்தில் எல்லா துறைகளையும் தனியாரிடம்,அந்நிய முதலீட்டுக்கு விற்று விட்டதால் எப்போதும் போல் முதலில் நல்லது போல் காட்டப்பட்டது. அதே நிலைதான் இன்று இந்தியாவுக்கு. ரெயில் கட்டணம் இருமடங்காகி விட்டது.அது போக தனி யார்களிடம் விற்கும் வேலை நடக்கிறது.இந்தியை பரப்பும் பணி நடக்கிறது. டீசல் விலை மதம்,மாதம் கூட்டும் காங்கிரசின் பனி தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சமையல் எரிவாயு உருளை விலை மதம் மாதம் 10 ரூபாய் கூட்டப்படுமாம். பா

இந்தி 26 விழு க்காடு?

படம்
தற்போது கடந்த மே 27 ஆம் தேதி பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகள், வெளியுறவுத் துறை உள்ளிட்ட எல்லா அமைச்சகங்களின் அதிகாரிகள் துவங்கி அலுவலர்கள் வரை சமூக வலைத்தளங்களில் அனைத்தையும் இந்தியில் எழுத வேண்டும் என்று  உள்துறை அமைச்சகத்திலிருந்து உத்திரவிட்டிருக்கின்றனர். அடுத்து வெளியான ஒரு சுற்றறிக்கையில் இப்படி கறாராகப் பின்பற்றும் முன்னணியான ஊழியர்களுக்கு பரிசுத் தொகையையும் உள்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது. உடனடியாக கருணாநிதி இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். ”ஒருவரது விருப்பத்திற்கு மாறாக அவர் மீது அரசாணை மூலம் இந்தி மொழியைத் திணிக்கும் செயலின் ஆரம்பம்தான் இது” என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.  ”1938ல் இந்தியை கட்டாய பாடமாக்கிய போதும், 1965ல் இந்தி ஆட்சி மொழிச்சட்டம் நடைமுறைக்கு வருமென்று அறிவித்த போதும் ஏற்பட்ட பேரெழுச்சிகளையும், கிளர்ச்சியையும் வரலாறு விரிவாக பதிவு செய்திருக்கிறது.” ”மொழிப் போர்க்களங்கள் இன்னும் உலர்ந்து போகவில்லை” எனக் காட்டமாக அறிக்கை வெளியிட்டிருந்தார். ”எட்டாவது அட்டவணையில் உள்ள 22 மொழிகளையும் சமமாகப் பாவிக்க வேண்டும். அ