முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பக்செயும்- பாகற்காயும்,

தலைப்பில் ஒன்றாக வந்தாலும் கட்டுரைகள் தனித்தனிதான்.ஆனால் இலங்கை தேர்தல் முடிவுகள் பக்செக்கு கசப்பையும்,இலங்கை மக்களுக்கு பாகற்காய் தரும் நலனையும் தந்துள்ளது உண்மை.
இப்போது பக்சே.
--------------------------------
சிங்கள மக்களிடையே, ஒரு காலத்தில் ஹீரோவாக விளங்கிய ராஜபக் ஷே, தன் சர்வாதிகார போக்கு, குடும்ப ஆட்சி, ஊழல் போன்ற காரணங்களால், அதே சிங்கள மக்களால் தற்போது ஜீரோவாக்கப்பட்டுள்ளார். 

*ராஜபக் ஷே அதிபரானதும், முக்கிய அதிகாரங்களை எல்லாம், தன் வசம் வைத்து கொண்டார். இதற்காக, சட்ட திருத்தங்கள் கொண்டு வந்து, பார்லிமென்டில் நிறைவேற்றினார். 

*அரசியலிலும், ஆட்சியிலும் தனக்கு எதிரிகளே இல்லை என்பது போல், சர்வாதிகார போக்குடன் செயல்பட்டார். 
*அவரை எதிர்த்த பத்திரிகையாளர்கள் படுகொலை செய்யப்பட்டனர். முந்தைய அதிபர் தேர்தலில், ராஜபக் ஷேயை எதிர்த்து போட்டியிட்ட, முன்னாள் ராணுவ தளபதி சரத் பொன்சேகா, தேச துரோக வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார். 
*ஆட்சியில், ராஜபக் ஷே குடும்பத்தினர் மட்டுமே ஆதிக்கம் செலுத்தினர். மகன், நமல் ராஜபக் ஷே, எம்.பி.,யாகவுள்ளார்.
*ராஜபக் ஷேயின் சகோதரர் கோத்தபயா, சர்வ வல்லமை பொருந்திய ராணுவ செயலராகவும், மற்றொரு சகோதரர் பசில், அதிபரின் ஆலோசகராகவும், மூன்றாவது சகோதரர் சமல், இலங்கை பார்லிமென்ட் சபாநாயகராகவும் பதவி வகிக்கின்றனர். 

*இலங்கையின் மொத்த மக்கள் தொகையில், 12 சதவீதம் உள்ள தமிழர்களுக்கும், 9 சதவீதம் உள்ள முஸ்லிம்களுக்கும், ராஜபக் ஷே, ஆட்சி காலத்தில் எந்த அதிகாரமும் அளிக்கப்படவில்லை. 
*தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு, அதிகாரப்பகிர்வு அளிக்கும், 13வது சட்ட திருத்தத்தை அமல்படுத்தும்படி, இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகள் தொடர்ந்து வலியுறுத்தின. ஆனால், இந்த சட்ட திருத்தத்தை அமல்படுத்த, ராஜபக் ஷே, தொடர்ந்து மறுத்து வந்தார். 
*சிங்கள மக்களிடையே, ஒரு காலத்தில் ஹீரோவாக விளங்கிய ராஜபக் ஷே, தன் சர்வாதிகார போக்கு, குடும்ப ஆட்சி, ஊழல் போன்ற காரணங்களால், அதே சிங்கள மக்களால் தற்போது ஜீரோவாக்கப்பட்டுள்ளார். 

ஜோதிட மோகத்தால் ஏமாந்த ராஜபக் ஷே:இந்திய அரசியல்வாதிகளை போல, ராஜபக் ஷேவுக்கும் ஜோதிடத்தில், அபார நம்பிக்கை உண்டு. ஒவ்வொரு நடவடிக்கையையும், தன் பிரதான ஜோதிடரின் ஆலோசனையை கேட்டு செயல்படும் அளவுக்கு, ராஜபக் ஷேயை ஜோதிட மோகம் ஆட்டிப் படைத்தது. சுமனதாச அபய குணவர்த்தனே என்பவர் தான், அவரின் பிரதான ஜோதிடர். அரசியலிலும், ஆட்சியிலும், எதிரிகளை நடுங்க வைக்கும் அளவுக்கு செல்வாக்கு பெற்றிருந்த ராஜபக் ஷே, குணவர்த்தனேயை பார்த்தால், நெடுஞ்சாண்கிடையாக கீழே விழுந்து வணங்குவார் என்பது தான் பெரிய வேடிக்கை. 

'இப்போது உங்களுக்கு நேரம் நன்றாக இருக்கிறது. முன்கூட்டியே தேர்தலை சந்தித்தால், மீண்டும் ஐந்தாண்டு களுக்கு இலங்கையின் அதிபர் நீங்கள் தான்' என, குணவர்த்தனே கூறிய ஓரிரு வார்த்தைகள் தான், ராஜபக் ஷேயின் தலையெழுத்தையே இப்போது மாற்றி விட்டது. 

ஜோதிடரின் பேச்சுக்கு மறு பேச்சு பேசாமல், தன் பதவி காலம் முடிவடைவதற்கு இரண்டு ஆண்டுகள் முன் கூட்டியே, அதிபர் தேர்தலை அறிவித்தார், ராஜபக் ஷே. தேர்தலில், எந்த நாளில் வேட்புமனு தாக்கல் செய்வது, வேட்புமனு தாக்கல் செய்யும்போது, யார் யாரை உடன் அழைத்துச் செல்வது என்பது உட்பட, தன் ஒவ்வொரு அசைவையுமே, குணவர்த்தனே ஆலோசனையின்படி தான், ராஜபக் ஷே மேற்கொண்டார். 
ஆனால், ஜோதிடரை நம்பி, தனக்கு தானே குழி பறிந்து கொண்ட ராஜபக் ஷே, இப்போது பரிதாபமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். 
இன்னமும் சாமியார் மற்றும் சோதிடத்தை நம்பி அலைபவர்கள் பட்டியலில் நமக்கு தெரிந்து இருவர் இருக்கின்றனர்.
ஒருவர் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா,
மற்றவர் நாதஸ்வரம் பிரசாத்.

=================================================
இனி பாகற்காய் 


பாகற்காய் தமிழ்நாட்டில் பரவலாக பயிரிடப்படும் கொடிவகை காய்கறிப் பயிர்களில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். 
இது ஒரு வெப்ப பிரதேசக்காய். பாகற்காயின் தாயகம் இந்தியாவாகும். பாகற்காய் `பிட்டர் குகும்பா’ `பால்சம் பியர்’ என ஆங்கிலத்திலும் `கரிலா’ என இந்தியிலும் `கக்கரா காயா’ என தெலுங்கிலும் `கைப்பகாய் என மலையாளத்திலும் அழைக்கப்படுகிறது.
 பாகற்காய் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்களில் பெருமளவு சாகுபடி செய்யப்படுகிறது. இளங்காய்கள் மற்றும் கொடி நுனிகள் வியத்தகு மருத்துவ குணங்களுக்காக உபயோகப்படுத்தப்படுகின்றன. இது உடல்நலத்துக்கான உணவாகக் கருதப்படுகிறது.
இதற்கு மருத்துவக் குணங்களும் உண்டு. 
பாகற்காயில் `வைட்டமின் சி’ அல்லது உயிர்ச்சத்து சி மற்றும் இரும்புச்சத்து மிகுந்த அளவில் உள்ளன.
 100 கிராம் பாகற்காயில் 2.1 கிராம் புரதச்சத்து, 2 மில்லி கிராம் இரும்புச்சத்து, 20 மில்லி கிராம் சுண்ணாம்புச்சத்து, 88 மில்லிகிராம் `வைட்டமின் சி’ அல்லது `உயிர்ச்சத்து சி’ 55 மில்லி கிராம் பாஸ்பரஸ் மற்றும் 210 ஐரு `வைட்டமின் ஏ’ உள்ளது. 
பாகற்காய் கசப்பு சுவைமிக்கது. இந்த கசப்பு சுவைக்கு காரணம் மொமார்டிசின் எனப்படும் இன்சுலினுக்கு இணையான பண்புரதமாகும். பாகற்காயின் கசப்பு சுவைக்கு பயந்தே பலர் அதை ஒதுக்கிவிடுகிறார்கள். ஆனால் கசப்புத்தன்மை அவர்கள் நினைப்பது போல விஷம் அன்று. 
மாறாக அமுதத்துக்கு சமமானது.
நம்முடைய உடம்பு தனக்கு தேவையான இந்த கசப்புச்சத்தை உறிஞ்சிக் கொண்டு எஞ்சியவற்றை கழிவுப்பொருட்களாக வெளித்தள்ளிவிடும். பாகற்காய்க்கு அதன் கசப்புதான் பலம், பலவீனம் இரண்டுமே. கசப்பைக் குறைக்க வேண்டுமானால் மேலேயுள்ள கரடுமுரடான முள்ளை சீவிவிடலாம். 
காயை நீளவாட்டில் வெட்டி விதைகளை நீக்கிவிட்டு உப்பு போட்டு பிசறி வைத்து உபயோகித்தால் கசப்பு சுவை குறையும்.
 சிறிதளவு வெல்லம் அல்லது சர்க்கரை போட்டு சமைத்தாலும் கசப்பு சுவை குறைந்து ருசியாக இருக்கும். மேலும் கரும்பச்சை நிற தோலுடைய பாகற்காயைவிட இளம்பச்சை நிற தோலுடைய பாகற்காயில் கசப்பு சுவை சற்று குறைவாகவே இருக்கும்.
 சாம்பலாகவோ, கறியாக்கியோ, வறுத்தோ, பொறித்தோ, குழம்பாகவோ, உருளைக்கிழங்கில் அடைத்தோ பல வகையிலும் சமைக்கலாம். வற்றல் போட்டும் சாப்பிடலாம். பாகற்காயிற்கு இரத்த சர்க்கரையளவைக் குறைக்கும் குணம்உண்டு.
கொம்பு பாகற்காய், மிதி பாகற்காய் என இரண்டு வகைகள் உண்டு. இரண்டுமே கறி சமைத்து உண்ணக்கூடியவை. 
இது எளிதில் ஜீரணமாகாது என்றாலும் கபம், பித்தம், குஷ்டம், மந்தம் மற்றும் காமாலை ஆகிய கொடிய நோய்களை எளிதில் போக்கும். இது “கல்லீரலின் காவலன்“ என்றும் அழைக்கப்படுகிறது.
பாக்டீரியா, டயாபடீஸ், ரத்தப் புற்றுநோய், மலச்சிக்கல் என்று பல உபாதைகளுக்கும் பயனளிக்கக்கூடியது.
' பாகற்காய் சிறந்த உணவுப்பொருளாக மட்டுமல்லாமல் மருந்துப் பொருளாகவும் பயன்படுகிறது. 
பாகற்காயின் ஒவ்வொரு பாகமும் உபயோகமானது.

சர்க்கரை வியாதிக்கு மருந்தாக முற்றிய பாகற்காய் பயன்படுகிறது. 
பழுத்த பாகற்காய் இரத்தம் மற்றும் சிறுநீரில் கலந்துள்ள சர்க்கரையின் அளவை குறைக்க உதவுகிறது.
 ஏனெனில் பாகற்காயில் இன்சுலின் உள்ளது.
 பாகற்காயை ஜூஸ் செய்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் இன்சுலின் அளவு அதிகரிப்பது மட்டுமின்றி குளுக்கோஸ் சகிப்புத்தன்மையும் அதிகரிக்கிறது.
சர்க்கரை நோய் உள்ளவர்கள் ஒன்றிலிருந்து இரண்டு ஸ்பூன் பாகற்காய் ஜூசுடன் தண்ணீர் கலந்து அல்லது அப்படியே சாப்பிட்டால் சர்க்கரையின் அளவு மூன்று மாதத்தில் குறையும். 
மேலும் பாகற்காயை ஜூஸ் செய்து சாப்பிட்டு வந்தால் இரத்தக் கொதிப்பு, இரத்தக்கொதிப்பு காரணமாக உண்டாகும் அரிப்பு மற்றும் இரத்தக்கோளாறு போன்றவற்றிற்கு தீர்வுகிடைக்கும்.
கைகளில் ஏற்படும் அரிப்பு மற்றும் கால்களில் ஏற்படும் பூஞ்சை, தோல்தடிப்பு, சொரியாசிஸ் போன்ற நோய்கள் வராமல் தடுக்க பாகற்காய் ஜூஸ் உதவுகிறது.
இரண்டு ஸ்பூன் பாகற்காய் சாறுடன் எலுமிச்சை சாறு கொஞ்சம் சேர்த்து நான்கு முதல் ஆறு மாதங்களுக்கு வெறும் வயிற்றில் சாப்பிட்டு வர உடலின் ஆற்றல் மற்றும் நோய்எதிர்ப்பு திறன் அதிகமாகும். நல்ல தூக்கத்தை ஏற்படுத்தவும் பாகற்காய் சிறந்ததாகும்.
பாகற்காயில் அதிக பீட்டா கரோட்டின் மற்றும் பிற பண்புகள் அடங்கியுள்ளன. இது கண்ணில் ஏற்படும் சிக்கல்களை போக்க சிறந்த மருந்தாகும். பாகற்காய் பழம் சாப்பிட்டு வந்தால் கண் பார்வை பலப்படும்.ட பழம் டானிக்காகவும், மாதவிடாய் ஒழுங்கின்மையை சரிப்படுத்தவும் உதவுகிறது. 
பாகற்காய் பழத்தின் சாறு மதுபோதை மற்றும் நச்சுத்தன்மை நிறைந்த சிகிச்சைகளுக்கு சிறந்ததாகும். 
இது குடிப்பழக்கத்தினால் ஏற்படும் கல்லீரல் தொடர்பான பிரச்சனைகளை சரிசெய்ய மிகவும் பயனுள்ளதாகும். 
3 லிருந்து 8 வயதுள்ள குழந்தைகளுக்கு அரை டீஸ்பூன் பாகற்காய் ஜூஸ் கொடுத்து வந்தால் பிற்காலத்தில் ஏற்படும் கல்லீரல் தொடர்பான பிரச்சனைகளை தவிர்க்கலாம்.
பாகற்காய் நச்சுத்தன்மையை அகற்றி இரத்தத்தை சுத்திகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. சுவாசக்கோளாறு மற்றும் மூச்சுவிட சிரமம் ஏற்பட்டால் பாகற்காயை பொரியல் செய்தோ அல்லது ஜூஸ் செய்தோ சாப்பிட்டுவந்தால் சுவாசக்கோளாறுகளில் ஏற்பட்ட பிரச்சனை தீரும்.
 ஒரு டம்ளர் மோரில் மூன்று டீஸ்பூன் சாறு சேர்த்து மாதத்திற்கு மூன்று நாட்கள்வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மூலநோய் குணமாகும்.
 2 டிஸ்பூன் பாகற்காய் ஜூசுடன் தண்ணீர் சேர்த்து குடித்தால் மஞ்சள் காமாலை குணமாகும்.

பாகல் இலையின் சாறுடன் சிறிது வறுத்துப் பொடித்த சீரகத்தூளை கலந்து காலை, மாலை இரண்டு வேளையும் உட்கொண்டால் விஷ சுரம் நீங்கும்.
பாகல் இலையை அரைத்து உடம்பெல்லாம் தடவி ஒரு மணி நேரம் ஊறிய பின் குளிக்க வேண்டும். 
இவ்வண்ணம் மூன்று நாட்கள் செய்து வந்தால் நாய்க்கடியின் விஷம் உடம்பில் ஏறாது. மேலும் பாகல் இலை சாற்றைக் குடிப்பதால் பாம்பு விஷம் நீங்கும்.
பாகல் இலை சாற்றில் காசிக்கட்டியை உரைத்து சிரங்கின் மேல் தடிப்பாக தடவி வந்தால் இரத்தம் சுத்தம் செய்யப்பெற்றுச் சிரங்கு உதிர்ந்துவிடும்.
இரண்டு டீஸ்பூன் பாகல் இலை சாறு, டீத்தூள், வெங்காயச்சாறு மற்றும் எலுமிச்சைச் சாறு சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஆரம்ப கட்டத்தில் காலராவினால் ஏற்பட்ட வாந்தி பேதி குணமாகும்.
மேற்கிந்திய தீவுகளில் சிறுநீரகக் கற்களுக்கும் ஜுரணத்திற்கும், குடல்புண், வாயுத் தொல்லைகளுக்கும் பாகல் இலை சாறு மருந்தாகிறது.
 மேலும் இலையைக் கொதிக்க வைத்து சாறு எடுத்து கல்லீரல் உபாதைக்கு பயன்படுத்துகிறார்கள். 
இது உணவுப்பையில் உள்ள பூச்சிகளைக் கொல்லும். பசியைத் தூண்டும். பித்தத்தை தணிக்கும். மூலத்தை இளக்கும்.
1 அவுன்ஸ் பாகல் இலைச்சாற்றில் உளுந்தளவு பெருங்காய பொடியை கலந்து சாப்பிட்டு வந்தால் நீரழிவு நோய் நிரந்தரமாக குணமாகும்.
1 அவுன்ஸ் பாகல் இலைச்சாறுடன் அதே அளவு ஆட்டுப்பால் அல்லது பசுவின் மோர் கலந்து 3 நாட்கள் காலையில் சாப்பிட்டு வந்தால் காசநோயை கட்டுப்படுத்த முடியும்.
2 அவுன்ஸ் பாகல் இலைச்சாறுடன் சிறிதளவு வெல்லத்தைக் கரைத்து சாப்பிட்டால் வயிற்றிலிருக்கும் நாக்குப்பூச்சிகள் வெளியேறும்.
பாகல் இலைச்சாற்றில் சிறிதளவு குங்குமப்பூவை அரைத்துச் சாப்பிட்டால் பெருத்திருந்த வயிறு சிறுத்துவிடும்.
பாகல் இலையை உலர்த்தி பீடிபோல சுற்றிக்கொண்டு அதன் புகையை உறிஞ்சினால் பல் நோய்கள் பறந்தோடிவிடும்.
                                                                      ந.ஆ.தமிழ்செல்வி
                                                                                                                                 சி.தங்கமணி
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பாடகர் கே.ஜே.யேசுதாஸின் பிறந்த தினம் [ஜனவரி-10]இன்று.
சிறந்த பாடல் பாடியமைக்காக ஏழு முறை தேசிய விருது பெற்ற பெருமைக்குரியவர்.
மாநில அளவில் கேரளம், தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரப்பிரதேசம் மற்றும் மேற்கு வங்க அரசுகளிடம் மொத்தம் 45 முறை சிறந்த திரைப்பாடகராக விருது பெற்றுள்ளார்.
இசைப்பேரறிஞர் விருது, பத்மசிறீ விருது, பத்மபூசன், சங்கீத கலாசிகாமணி ஆகிய விருதுகளைப் பெற்று தனித் திறனோடு உலா வருகும் பாடகர் கே.ஜே.யேசுதாஸுக்கு நமது பிறந்த நாள் நல்வாழ்த்துகள் .
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++


கர்னாடக இசைக் கலைஞரும், புகழ்பெற்ற திரைப்படப் பின்னணிப் பாடகருமான கட்டச்சேரி ஜோசஃப் யேசுதாஸின் ,

 கேரள மாநிலம், கொச்சியில் பிறந்தவர். தந்தை பிரபல இசைக் கலைஞர் மற்றும் நடிகர். ஐந்து வயதிலேயே தனது ஆரம்ப இசைக் கல்வியை தந்தையிடம் கற்றார். திருப்புனித்துறை இசை அகாடமியில் இசை கற்றார். சிறிது காலம் வேச்சூர் ஹரிகர சுப்பிரமணிய அய்யரிடமும், செம்பை வைத்தியநாத பாகவதரிடமும் இசை பயின்றார்.

 முதன் முதலில் கால்பாடுகள் என்ற மலையாளத் திரைப்படத்தில் 1960-ல் பின்னணி பாடினார். தமிழில் எஸ். பாலசந்தரின் பொம்மை படத்தில் ‘நீயும் பொம்மை, நானும் பொம்மை’ பாடலின் மூலம் அறிமுகமானார். 1970-களில் இந்தித் திரைப்படங்களில் பாடத் தொடங்கினார்.

 மலையாளம், தமிழ், இந்தி உள்ளிட்ட 12 மொழிகளிலும், மலாய், ரஷ்ய மொழி, அரபி, லத்தீன், ஆங்கிலம் உள்ளிட்ட வெளிநாட்டு மொழிகளையும் சேர்த்து, 17 மொழிகளில் பாடல்களைப் பாடியுள்ளார். 40,000க்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்களைப் பாடியுள்ளார். ஏழுமுறை தேசிய விருது பெற்றுள்ளார்.

 இசைப் பேரறிஞர் விருது, பத்ம விருது உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ளார். உலகம் முழுவதும் பல்வேறு முக்கிய நகரங்களில் இவரது இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றுள்ளன. 1965-ல் ரஷ்யாவின் பல்வேறு நகரங்களில் இசை நிகழ்ச்சி நடத்துவதற்காக ரஷ்ய அரசு இவரை அழைத்திருந்தது.

 இன்டர்நேஷனல் பார்லிமன்ட் ஃபார் சேஃப்டி அன்ட் பீஸ் அமைப்பின் செனட் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 1971-ல், இந்திய-பாகிஸ்தான் யுத்தம் நடைபெற்றபோது, கேரளா முழுவதும் தன் இசைக் கச்சேரிகள் நடத்தி பிரதம மந்திரி யுத்த நிதிக்காக பணம் திரட்டினார்.

 கேரளம், தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரம், மேற்கு வங்க மாநில அரசுகளின் சிறந்த பாடகருக்கான விருதை மொத்தம் 45 முறை பெற்றுள்ளார். ஏராளமான ஃபிலிம்பேர் விருதுகளையும் வென்றுள்ளார். சங்கீத சிகரம், சங்கீத சக்ரவர்த்தி, சங்கீத ராஜா, சங்கீத ரத்னா, கான கந்தர்வா ஆகிய எண்ணற்ற பட்டங்கள் இவருக்கு வழங்கப்பட்டுள்ளன.

 ஏராளமான கர்நாடக இசைக் கச்சேரிகளையும் நிகழ்த்தி யுள்ளார். பக்திப் பாடல்கள், மெல்லிசைப் பாடல்கள் அடங்கிய இசைத் தொகுப்புகளையும் வழங்கியுள்ளார்.

 ஒரு பாடகனாக நான் வலம் வருவதற்கு என் அப்பாதான் காரணம் என்று கூறும் இவர், எனது குருமார்கள், செம்பை வைத்தியநாத பாகவர், குமாரசாமி அய்யரையும் என்னால் மறக்கவே முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

 1964-ல் தொடங்கிய இவரது இனிய இசைப் பயணம் அரை நூற்றாண்டைக் கடந்துள்ளது. 1980-ல் திருவனந்தபுரத்தில் தரங்கிணி ஸ்டூடியோ மற்றும் தரங்கிணி ரெகார்ட்ஸ் ஆகிய நிறுவங்களை தொடங்கி நடத்திவருகிறார்.

 இவர் பாடியுள்ள ஐயப்பன் பாடல்கள் மிகவும் பிரசித்தம். 2006-ல் சென்னை ஏ.வி.எம். அரங்கில் ஒரே நாளில் நான்கு தென்னிந்திய மொழிகளில் 16 திரைப்படப் பாடல்களைப் பாடி சாதனை நிகழ்த்தியவர்.
++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?