இடுகைகள்

பிப்ரவரி, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

"மோடி"க்கு கார்ப்பரேட்கள் வாரி வழங்கிய நன்கொடை!

படம்
அதற்கு நன்றி தெரிவிக்கும் பட்ஜெட் ? தனிநபர் வருமான வரி விலக்கு உச்ச வரம்பில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை.  வருமான வரியை ஒழுங்காக செலுத்துபவர்கள் மாத சம்பளக்காரர்கள்,அரசு ஊழியர்கள்தான் பெரும் நிறுவனங்கள்,தொழிலதிபர்கள்,பெரும் வியாபாரிகள் அனைவருமே வருமானவரியை செலுத்துவதில் முறைகேடுகளை செய்பவர்கள்தான். எனவே நடுத்தர மக்களுக்குக்குத்தான் இந்த பட்ஜெட்டில் ஒன்றுமே இல்லை. ார்பரேட் வரி படிப்படியாக 25% வரை குறைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.  கார்பரெட்கள் வரியை எவ்வளவு ஒழுங்காக செலுத்துவார்கள் என்பது நோக்கியா,ரிலையன்ஸ்,அதானி,அம்பானி ,விஜய் மல்லையா,சகாரா,சாரதா,டெக்கான்  போன்ற குழுமங்கள் இதுவரை  எடுத்துக் காட்டியுள்ளன. அந்த  பெரும் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை. அதுவும் 25 சதவிகிதம். நாடு விளங்கிடும். சமையல் எரிவாயு மானியத்தை கைவிட வேண்டும்.   ஏழை மக்களுக்கான உணவுக்கான மானியம்,சமையல் வாயு உருளைக்கான மானியங்கள் படிப்படியாகக் குறைக்கப் படும்.  நிர்பயா  என்ற பெண்கள் பாதுகாப்புக்கு 1000 கோடிகள் .இந்த நிதியை என்ன வகைகளில் செலவிடுவார்கள்.? மக்களை கொடுமைப்படுத்தும்  சேவை வரி 14%

இந்தியா விற்பனைக்கு தயார்,.....,

படம்
மோடி  பாஜக அரசின் மொத்த விற்பனைசந்தை. 'பு டவையைத்தானே இழுக்கிறேன் பெண்ணே!  உன் சுந்தர தேகத்துக்கு ஆபத்து ஒன்றும் இல்லையே திரௌபதி!’ என்று அஸ்தினாபுரத்து இளவரசன் துச்சாதனன், சான்றோர் நிறைந்த சபையில் கூறினான். அதேபோலத்தான் இருக்கிறது...  'நீங்கள் விவசாயம் செய்யும் நிலங்களைத்தானே எடுக்கிறோம்.  உங்கள் உயிருக்கு ஆபத்து ஒன்றும் இருக்காது விவசாயிகளே’  -என்று இப்போது மத்தியில் ஆளும் பி.ஜே.பி அரசு சொல்வதும். முன்பு வியாபரத்துக்கு வந்து இந்தியாவையே அடிமையாக்கியது கிழக்கிந்திய கம்பெனி. அதை விடுதலை நாடாக்க லட்சக்கணக்கில் இந்தியர்கள் உயிர் நீக்கி போராடி மீட்டனர். ஆனால் இன்று மோடி அரசு இந்தியாவை ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்துக்கொண்டு மொத்தமாக அந்நிய கம்பெனிகளுக்கு விற்று கொண்டிருக்கிறது. அதற்கென பல அவசர சட்டங்களை மக்களின் பலத்த எதிர்ப்புக்கு நடுவிலும் அசராமல் மக்களவையில் அதே மக்கள் தந்த வாக்கை பயன் படுத்தி நிறைவெற்றிக்கொண்டிருக்கிறது. 100 ஆண்டு காலத்துக்கும் மேலான போராட்டத்துக்குப் பிறகு, வெள்ளைக்கார காலத்து அடிமை சட்டத்துக்குப் பதிலாக, கடந்த கால காங்கிரஸ் கூட்டண

'மக்கள் தளபதி"க்கு

படம்
தளபதி ஸ்டாலின் வாழ்த்துகள்.! கலைஞரின் குடும்பத்தில் இருந்ததால் தளபதி ஸ்டாலினுக்கும் இளம் வயதிலேயே அரசியலில் ஆர்வம் இருந்தது.  அவர் வசித்து வந்த கோபாலபுரம் பகுதியிலேயே அவர் அரசியல் நட வடிக்கைகளை மேற்கொண்டு 1967-1968 இடைப்பட்ட ஆண்டுகளில் பள்ளி மாணவராக படித்துக் கொண்டிருந்தபோது தன் நண்பர்களை இணைத்துக் கொண்டு கோபாலபுரம் இளைஞர் திமுக என்ற அமைப்பினை முடி திருத்தும் கடையில் ஏற்படுத்தினார் .  அதன்மூலம் அரசியல் வாழ்க்கையைத் தொடங்கி இவ்வமைப்பின் மூலம் அந்த பகுதியில் உள்ள மக்களுக்கு பொதுப்பணிகளையும் சமூகப்பணிகளையம் செய்து வந்தனர்.  ஆனாலும் அவரின் அரசியல் ஈடுபாடு அவ்வளவாக இல்லையென்றாலும் 1975ம் ஆண்டு இந்திராகாந்தி அரசால் மிசா காலகட்டத்தில் தளபதி திரு ஸ்டாலின் அவர்களை கைது செய்து சித்தரவதை செய்து வலுக்கட்டாயமாக அரசியலுக்கு இழுத்து வரப்பட்டார்.  அன்று அவர் வாங்கிய அத்தனை அடிகளும் சித்தரவதைகளையும் அவர் மீதானா மக்களின் பார்வை திரும்பியது.  இதன் தொடர்சியாக அவர் முழுநேர அரசியல்வாதியாக வலம் வந்தவர் 1980 இல் மதுரையிலே உள்ள ஜான்சிராணி பூங்காவிலே அமைப்பு ரீதியாக திமுக இ

கொழுப்பும் -ஆண் மலடும்

படம்
 மனித உடலில் ஐந்து வகையான கொழுப்புகள் உள்ளன.  உள்ளுறுப்புக் கொழுப்பு உடலுறுப்புகளைச் சுற்றி இருப்பது.  வெள்ளைக் கொழுப்பு ஆற்றலைச் சேமித்து வைக்கக் கூடியது.  பழுப்புக் கொழுப்பு கலோரிகளை எரிக்க உதவுகிறது.  தோல் அடிக் கொழுப்பு, தோலுக்கு அடியில் இருக்கக்கூடியது.  தோல் அடிக் கொழுப்பும் உள்ளுறுப்புக் கொழுப்பும் சேர்ந்த கலவையே வயிற்றுக் கொழுப்பு.  உணவு எப்படி பொரிக்கப்படுகிறது என்பதை நாம் கவனிக்க வேண்டும். ஆலிவ், சூரியகாந்தி எண்ணெயில் பொரிக்கப்படும் உணவு வகைகளைச் சாப்பிடுபவர்களுக்கு இதய நோய் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை. இவர்கள், பொரித்த உணவு வகைகளை தவிர்ப்பவர்களுக்குச் சமமான இதய ஆரோக்கியத்துடன் திகழ்வார்கள். ஆண்களைப் பொறுத்தவரை 37 முதல் 40 அங்குலம் இடுப்பளவு இருந்தால் அதிக உடல் எடை என்று கொள்ளலாம். 40 அங்குலத்தை தாண்டிவிட்டால் பருமன் என்று சொல்லலாம். பெண்களைப் பொறுத்தவரை இடுப்பளவு 31.5 முதல் 34.6 அங்குலம் இருந்தால் அதிகஉடல் எடை. இடுப்பளவு 34.6-யைத் தாண்டிவிட்டால் பருமன் என்று கொள்ளலாம். ==========================================================

ரயில்வே பட்ஜெட்

தமிழகத்துக்கு ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட ரயில்வே திட்டங்களைநிறைவேற்ற 2015- 2016-ம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில் தேவையான நிதி ஒதுக்கப்படவில்லை. அதற்கும் மேலாக அந்த திட்டங்களையே மோடி அரசு கைவிட்டுள்ளது மிக அதிர்ச்சியைதருகிறது.  2013- 2014-ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டில் தமிழகத்துக்கு 12 புதிய ரயில்கள் அறிவிக்கப்பட்டன. அதன் பிறகு, கடந்தகாங்கிரஸ் கூட்டணி அரசால் போடப்பட்ட இடைக்கால பட்ஜெட்டிலும், 2014- 2015-ம் ஆண்டுக்கான பாஜக அரசின் பட்ஜெட்டிலும் போதிய புதிய ரயில்கள் அறிவிக்கப் படவில்லை. அதிலும், கடந்த 3 ஆண்டுகளில் தமிழக தென் மாவட்டங்களுக்கு புதிய ரயில்கள் அறிவிக்கப்படவில்லை. தமிழகத்துக்கு ஏற்கனவே அறி விக்கப்பட்ட ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற ரூ.10 ஆயிரம் கோடி நிதி தேவைப்படுகிறது. ஆனால், இதுவரை ரூ.679 கோடி நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதி அனைத்தும் தமிழகத்தின் புதிய ரயில் பாதை திட்டங்கள், இரு வழிப்பாதை திட்டங்கள், அகலப்பாதை திட் டங்களுக்கானதாகும். 2015- 2016-ஆம் ஆண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு வியாழக்கிழமை தாக்கல் செய்தார். ஆனால், அவ

தோழர் மாயாண்டி பாரதி.

படம்
அவர் எங்கே சென்றாலும் அவரைச் சுற்றி ஒரு சிறு கூட்டமே கூடிவிடும். அவருடைய விமர்சனங்கள் கூர்மையாக இருக்கும். ஆனால் எவர் மனதையும் புண்படுத்தாது. மார்க்சியத்தின் மீதும், அதன் இறுதி வெற்றி நிச்சயம் என்பதிலும் அவருக்கு உறுதியான நம்பிக்கையுண்டு. ‘டால்ஸ்டாயின் ஆறடி நிலம்‘, ‘அரசு என்றால் என்ன’ போன்ற சில நூல்களையும் அவர் எழுதியுள்ளார். ஒரே குடும்பத்தில் மூன்று தலைமுறையினருக்கு திருமணம் நடத்திவைத்த பெருமையும் அவருக்கு உண்டு. 12 ஆண்டுகள் சிறைவாசம், பல ஆண்டுகள் தலைமறைவு வாசத்தை அனுபவித்துள்ளவர்தான்  ஐ.மா.பா.என்று அழைக்கப்படும் தோழர் மாயாண்டி பாரதி.  மாபெரும் தேசபக்தராகவும், பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தை உயர்த்திப் பிடித்த கம்யூனிஸ்ட்டாகவும் ஏழை- எளிய மக்களிடம் மிகுந்த பரிவு கொண்ட மாபெரும் மனிதாபிமானியாகவும் விளங்கினார் . மிகச் சிக்கலான விஷயங்களைக் கூட சாதாரண மக்களும் புரிந்து கொள்ளும்படி எழுதுவதிலும், விளக்குவதிலும் அவருக்கு இணை அவரேதான். ஏழை - எளிய மக்களுடன் மிகவும் ஒன்றிவிடுவார். கம்யூனிஸ்ட் இயக்கப் பாடகர்களாகயிருந்த பாவலர் வரதராஜன் மற்றும் அவரது தம்பிகளுக்கு ஐ.மா.பா.

குற்றவாளியின் பிறந்த நாளை

படம்
  கொண்டாடும் அரசு.  மக்கள் பணத்தை கொள்ளையடித்து வருவாய்க்கு மீறி சொத்துக் குவித்த ஊழல் வழக்கில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் 67 ஆவது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது.    ஒரு சட்ட மன்ற உறுப்பினராகக் கூட இல்லாத ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழாவுக்காக அரசு எந்திரமும், அரசு நிதியும் சட்டவிரோதமாக பயன்படுத்தப்பட்டுள்ளது. அ.தி.மு.க. அரசின் சாதனைக் கண்காட்சி என்ற பெயரில் சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தில் ஜெயலலிதாவின் புகழ்பாடும் கண்காட்சிக்கு அரசு செலவில் ஏற்பாடு ஜெயலலி தாவின் பிறந்தநாளையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள 670 தனியார் மருத்துவமனைகளில் இலவச மருத்துவ முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.  நேற்று தொடங்கி 8 நாட்களுக்கு ஒவ்வொரு நாளும் 60 முதல் 100 மருத்துவமனைகளில் இலவச மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த மருத்துவ முகாம்களில் கலந்து கொள்பவர்களுக்கு மேல் சிகிச்சை ஏதேனும் தேவைப்பட்டால், அவர்களுக்கு அதே மருத்துவமனையில் தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவக்காப்பீட