பயத்தினால் இறப்பவர்கள்தான்




இன்றைய இந்தியாவை தனது பாதிப்பால் பன்றிக்காய்ச்சல் பயமுறுத்தி வருகிறது.

எய்ட்ஸ் ,எபோலா போல் இதுவும் அமெரிக்க மருத்துவ நிறுவனங்கள்,ஆராய்ச்சி ,உயிரி ஆயுத ஆய்வு போன்ற காரணிகளால்தான் உலகில் வளரும் நாடுகளில் பரவி வருகிறது என்பது மருத்துவர்களின் கணிப்பாக உள்ளது.

அதே போல் இந்த வியாதிகளுக்கு மருந்து,மாத்திரைகளை தயாரிக்கும் நிறுவனங்கள் உலகிலேயே அமெரிக்காவில் மட்டும்தான் உள்ளது. இந்த சந்தேகத்தை உறுதி படுத்துகிறது.

சுவைன் புளு என்ற பன்றிக்காய்ச்சல்க்கான டாமிபுளு மருந்தை உலகிலேயே அமெரிக்க நிறுவனம் ஒன்று மட்டும்தான் தயாரிக்கிறது.

அந்த மாத்திரைகள்,ஊசி மருந்துகளை உலக நாடுகள் கோடிக்கணக்கில் வாங்கி இருப்பு வைக்கின்றன.

இத்தனைக்கும் டாமி புளு மாத்திரைகளின் மூலக்கூறுகளில் அன்னாசி பூ,துளசி இலைகளின் மூலக்கூறுகள்தான் உள்ளதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.
அதை நம் நாட்டிலேயே ஆய்வு செய்து பன்றிக்காய்ச்சல் தடுப்பு மருந்தை தயாரிக்கலாம் என்றால் அந்நிய நிறுவன ஆதரவாளர்களான மத்திய அரசு கண்டு கொள்ளவில்லை.
500,5000 ரூபாய்களில் தடுப்பு மருந்துகளை வாங்கி இறக்குமதி செய்வதில்தான் ஆர்வமாக உள்ளனர்.
{அதில்தான் அவர்களுக்கு பலன் கிடைக்கும்}


'ஆர்சனிக் ஆல்பம்' .

இப்போது மத்திய அரசு சுகாதாரத்துறை பன்றிக்காய்ச்சலை "ஓமியோபதி மருந்தான ஆர்சனிக் ஆல்பம் கட்டுப்படுத்துவதாகவும்.

அதை உபயோகிக்கலாம்" என்றும் அறிவித்துள்ளது.

ஹொமியோபதி மருத்துவத்தில் டெங்கு, சிக்கன் குனியா, எலிக்காய்ச்சல், பன்றிக்காய்ச்சல், வைரஸ் காய்ச்சல், என்று எல்லா நோய்களுக்கும் தடுப்பு மருந்துகளும், நோய் குணமாக மருந்துகளும் இருக்கின்றன . உங்கள் பகுதியில் டெங்குவின் பாதிப்பு இருக்குமானால் கீழ்க்கண்ட மருந்துகளை  ஹோமியோபதி மருந்துக் கடைகளில் வாங்கி நீங்களும் சாப்பிடலாம். மற்ற நண்பர்களுக்கும், குடும்பத்தினர்களுக்கும், கொடுக்கலாம். அலோபதி மருந்துகளைப் போல எந்தப் பக்கவிளைவுகளும் கிடையாது. பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.
1.   EUPATORIUM    PERFOLIATUM – 200 C   - 1 DRAM PILLS         இந்த மருந்துகளை தினமும் காலை ஒரு மருந்தும் மாலை ஒரு மருந்தும் மூன்று             
2.   RHUSTOX  -200C                                    - 1 DRAM PILLS        
   உருண்டைகளை[மாத்திரைகளை] மூன்று தினங்கள் சாப்பிட்டு வர டெங்கு வுங்க்களை நெருங்காது.



அதே போல் நம் தமிழ் மருத்துவர்கள் கபசுரக் குடி நீர் பன்றிக் காய்ச்சலை கட்டுப்படுத்தும் என்று அறிவித்துள்ளனர்.
டெங்கு காய்ச்சலை தடுக்க சித்த மருத்துவத்தில் நிலவேம்பு குடிநீர் இருப்பது போல் பன்றிக் காய்ச்சலை கபசுரக் குடிநீர் மூலம் கட் டுப்படுத்த முடியும் என்றும் இது குறித்து அரசு விழிப்பு ணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும் சித்த மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
குஜராத், மகாராஷ்டிரா, தெலுங்கான மற்றும் வட மாவட்டங்களில் பரவி பலரது உயிரைப் பறித்த பன்றிக்காய்ச்சல் தமிழகத் திலும் தற்போது பரவத் தொடங்கி உள்ளது. இதை தடுக்க பல்வேறு நடவ டிக்கை எடுக்கப்பட்டு வரு கிறது. முன்னெச்சரிக்கை யாக அரசு மருத்துவமனை டாக்டர்களுக்கு தடுப்பூசி போடப்படுகிறது.
இந்த நிலையில் டெங்குக் காய்ச் சலை தடுக்க நிலவேம்பு குடிநீர் இருப்பது போல் பன்றிக்காய்ச்சலை தடுக்க வும் குடிநீர் இருப்பதாக சித்த மருத்துவர்கள்தெரிவித்தனர்.


கபசுரக் குடிநீர்

இதுகுறித்து சித்த மருத்துவரும் முதுநிலை பயிற்சி மாணவருமான ரமேஷ்  கூறியதாவது: -
"விலங்குகள், பறவைகளின் கிருமிகளில் இருந்து மனிதர்களுக்கு பரவும் நோய் தொற்றுகளை தடுக்கும் ஆற்றல் மூலிகை மருந்துகளில் உள்ளது. பன்றிக்காய்ச்சலின் அறி குறியாக சளி, இருமல் ஆகிய வை கூறப்படுகிறது. மூலிகை கள் மூலம் தயாரிக்கப்படும் கபசுரக்குடிநீர் சளி, இரும லால் ஏற்படும் எந்தவித மான காய்ச்சலையும் போக் கக்கூடியது.
இதில் இரண்டு விதமான மூலிகைமருந் துகளை தயாரிக்கலாம். முதலாவதாக நன்னாரி, தூதுவளை, சிறுகாஞ் சொறி வேர், ஆடுதொடா, கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய், சுக்கு, இம் பூரம், பங்கம்பாளை ஆகிய மூலிகைகளை கொண்டு தண்ணீர் கலந்து கஷாயம் தயாரித்து 8ல் ஒரு பங்காக வற்றவைத்து அருந்த வேண்டும்.
மற்றொரு முறை யில் உத்தாமனை, நொச்சி, கண்டங்கத்திரி, நெல்லி தோல், இஞ்சி, ஆடாதொ டா ஆகியவற்றை இட்லி அவிப்பது போல் பிட்டவித்து பின்னர் இடித் துப் பிழிந்து திப்பிலி பொடி சேர்த்து மூலிகைக் குடிநீர் தயார் செய்து நாளொன் றுக்கு இருவேளை 30 மில்லி வீதம் 3 முதல் 5 நாட்கள் அருந்தினால் எத்தகைய சளி மற்றும் காய்ச்சலும் குணமடையும்.
இதில், பெரும்பாலான மூலிகைச் செடிகள் நெல்லை சித்த மருத்துவக் கல்லூரியில் வளர்க்கப்படுகின்றன.
எனவே, நிலவேம்பு குடிநீர் போல் கபசுரக்குடிநீர் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதுடன் சித்த மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் இதை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் ".
 சித்த மருத்துவத்தில் பன்றிக் காய்ச்சலுக்கு என தனியாக மருந்து இல்லாவிட்டாலும் எல்லாவிதமான காய்ச்சல் மற்றும் சளியின் தன்மைக்கு ஏற்ப மூலிகை மருந்துகள் உள்ளன.
இதை நோயாளிகளை பரிசோதித்து' கபசுரக் குடிநீர்'வழங்க சித்த மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர்.
பன்றிக்காய்ச்சல் மட்டுமல்ல எந்த காய்ச்சலும் அதற்கான கிருமிகளும் இந்த குடி நீருக்கு கட்டுப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.
மலேரியா,டைபாய்ட்,டெங்கு  போன்ற காய்ச்சல்களையும் ஆரம்பத்தில் கண்டுணர்ந்து அதற்கான மருத்துவம் செய்து கொள்ளாவிட்டால் உயிருக்கு ஆபத்துதான்.
அதே போல் தான் இந்த பன்றிக்காய்ச்சலும்.ஆனால் இதற்கு மத்திய அரசு அதிகப்பயங்காட்டி வருவதை தவிர்த்து இரத்தப் பரிசோதனை செய்ய 5000 ரூபாய்கள் பிடுங்கும் மருத்தவ் பரிசோதனை நிலையங்கள் மீது நடவடிக்கை எடுப்பதும் ,எல்லா அரசு மருத்துவமனைகளிலும் இதற்கான வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தாலே போதும்.இந்த பன்றிக்காய்ச்சலை மட்டுமல்ல அதனால் உண்டாகும் பயத்தையும் மக்களிடமிருந்து போக்கிடலாம். அரசு விளம்பரம்-சிகிச்சை தரும் மருத்துவர்கள் செய்து கொள்ளும் பாதுகாப்பு ஏற்பாடுகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை மனதளவில் பலவீனப்படுத்தி விடுகிறது.பயமே மக்களின் பாதி  உயிரை வாங்கி விடுகிறது.
பாம்பு கொத்தி விடத்தினால் இறந்தவர்களை விட பயத்தினால் இறப்பவர்கள்தான் அதிகம்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?