நேர்மையின் விலை


 சிறுமையாதல்?
 ======================================================

இந்தியாவில் மட்டும்தான் நேர்மையாக செயல் பட்டால் அந்த அதிகாரியை தூக்கிப் பந்தாடல்,அப்படியும் அடங்காவிட்டால் ஒரு காசு பெறாத மேசையடி வேலை கொடுத்தல் அப்படியும் அடாங்கா விட்டால் அவரைப்பற்றி அவதூறு பரப்பல்,முடிவில் அவரின் உயிரைப்பறித்தல் என்று ஆட்சியாளர்கள் பரிசுகளை அள்ளித்தருகிறார்கள்.
இதற்கு சில நாக்குத்தள்ளிய அவதார அதிகாரிகளும் வாலை  ஆட்டிக்கொண்டு உடந்தையாக இருக்கிறார்கள்.
இதோ நேர்மையாகப் போராடிய ஐ.ஏ.எஸ். அதிகாரி ரவி யின் மரணத்துக்காக கர்நாடக மாநிலமே பற்றி எரிகிறது.
 எந்த அமைப்பும் போராட்டத்தைக் கையில் எடுக்கவில்லை.
ஆனால் அவர் முன்பு பணிபுரிந்த கோலார் மாவட்டமே ஸ்தம்பித்துவிட்டது.
டி.கே.ரவி அங்கு பணிபுரிந்தது சில மாதங்கள்தான்.
ஆனால் அவரது மரணத்தைத் தாங்கிக்கொள்ள முடியாமல் ஒருவர் தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு அவரை மக்கள் நேசித்திருக்கிறார்கள்.
ஆயிரக்கணக்கான மக்களுக்கு அவர் ஹீரோ.
 காரணம், அவரது நேர்மை.
தமிழ் நாட்டில் எத்தனையோ மாவட்ட மக்களுக்கு தங்கள் மாவட்ட கலெக்டரின் பெயர் தெரியாது.
 தமிழ்நாட்டில் இருக்கும் நூற்றுக்கணக்கான  ஐ.ஏ.எஸ். அதிகாரிகளின் பெயர்தெரியாது.
ஆனால் சகாயத்தை எல்லோருக்கும் தெரியும்.

காரணம், அவரது நேர்மை.
முத்துக்குமாரசாமி என்ற வேளாண்மைத் துறை அதிகாரி ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.
அவரது மரணம் தமிழகத்தை உலுக்கியது. அவரது முகம் தெரியாத பலரும்கூட அவருக்காகப் போராடினார்கள்.
 காரணம், அதிகார நெருக்கடிகளுக்குப் பணிந்துகொடுக்காத அவரது நேர்மை.

பீகாரில் தங்க நாற்கர சாலை அமைப்பதில் நடந்த ஊழலை அம்பலப்படுத்த முயன்ற சத்யேந்திர துபே என்ற அதிகாரி சுட்டுக் கொல்லப்பட்டபோது இப்படித்தான் போராட்டம் வெடித்தது.
அதன்பின் உத்தரப் பிரதேசத்தில் கலப்பட எண்ணெய் விற்கும் மாஃபியா கும்பல் மீது நடவடிக்கை எடுத்த இந்தியன் ஆயில் நிறுவன அதிகாரி மஞ்சுநாத்துக்கும் இப்படித்தான் மரணம் நேர்ந்தது. அவரைக் கொன்றவர்களுக்கு கடந்த வாரம்தான் ஆயுள் தண்டனை வழங்கினார்கள். மத்தியப் பிரதேசத்தில் சுரங்கக் கொள்ளையர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்த ஐ.பி.எஸ். அதிகாரி நரேந்திர குமார் 3 ஆண்டுகளுக்கு முன் கொல்லப்பட்டார்.

டி.கே.ரவி இறந்த இதே கர்நாடகாவில் கூட்டுறவு சங்க நில ஒதுக்கீடு முறைகேட்டை அம்பலப்படுத்திய மகந்தேஷ் என்ற அதிகாரியை இரும்புக் கம்பியால் அடித்து கொடூரமாக சாகடித்தார்கள்.
 இன்னும் பலர் டிரான்ஸ்பர் என்ற அஸ்திரத்தால் தினம் தினம் சாகடிக்கப்படுகிறார்கள்.
அசோக் கெம்கா, சஞ்சீவ் சதுர்வேதி, துர்கா சக்தி நாக்பால் என பலர் இந்தப் பட்டியலில் உண்டு.

சகாயமும் இப்படி பலமுறை பந்தாடப்பட்டிருக்கிறார். 23 ஆண்டு பணிக்காலத்தில் 24 டிரான்ஸ்பர்கள். என்ன ஒரு நாடோடி வாழ்க்கை! ஒரு பதவி யில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் இருப்பதற்கு எல்லா ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கும் நியாயமான உரிமை உண்டு.
 ஆனால் நேர்மையாக செயல்பட்ட ஒரே காரணத்துக்காக எப்போதும் மூட்டை முடிச்சுகளைக் கட்டிக்கொண்டு ஊர் ஊராகப் பயணித்துக் கொண்டிருப்பது எவ்வளவு நிம்மதியற்ற குடும்பச் சூழலை ஒருவருக்குக் கொடுக்கும்! 

பொது வாழ்வில் நேர்மை என்ற குணம் அரிதாகிவிட்ட காலத்தில், நேர்மையாக இருப்பது என்பது அபாயகரமான விஷயமாக ஆகிவிட்டது. எப்போது என்ன வலை விரித்து நம்மை சிக்க வைப்பார்களோ என 24 மணி நேரமும் விழித்திருக்க வேண்டும். முதுகின் பின்னால் குத்த சக ஊழியர்களே க்யூவில் நிற்பார்கள்.
 எல்லாம் சாக்கடையாகிப் போன ஒரு சிஸ்டத்தில் ஒரே ஒரு நேர்மையான அதிகாரி வந்து நின்றால், ‘சம்பாதிக்க’ நினைக்கும் அத்தனை பேருக்கும் அவர்தானே முதல் எதிரி!

நேர்மையாகப் பணியாற்றியதற்காக ஒருவர் உயிரைக் கொடுக்க வேண்டும் என்றால், அவரைக் காப்பாற்றத் தவறியதற்கு இந்த தேசம் வெட்கப்பட வேண்டும். தன் பணியை நேர்மையாகச் செய்வது மக்களுக்கு தான் செய்ய வேண்டிய கடமை என நினைக்கும் ஒரு அதிகாரியை மக்கள்தான் கொண்டாட வேண்டும்
; பாதுகாக்க வேண்டும்.
 ‘இவருக்கு ஏதாவது நிகழ்ந்தால் மக்கள் பொங்கி எழுவார்கள்’ என்ற பயம்தான் அவருக்கான பாதுகாப்புக் கவசம்.
இப்போது கர்நாடக மக்களின் போராட்டத்தை ஒன்றும் இல்லாமல் ஆக்க ரவி மீது காதல் விவகாரம் கிளப்பி விடப்பட்டுள்ளது.
அவர் கடைசியாகப்பேசியதில் உள்ள ஒரு பெண் அதிகாரியிடம் ரவி தன்னை ஒருதலையாகக் காதலித்ததாக வாக்கு மூலம் வாங்கி அதனால்தான் ரவி தற்கொலை செய்து கொண்டார் என்ற திரைக்கதையை அரசு உருவாக்கி வருகிறது.
ஆனால் ரவி தந்தை கடைசியாக பேசிய அலை பேசி பேச்சுக் களில் பல காவல்துறையால அழிக்கப்பட்டிருக்கிறது.அந்த பெண்  அதிகாரிதான் பேசியுள்ளார்.அதுவும் ரவி இறந்த பின்தான் அவர் அலைபேசியில் பேசி யுள்ளதாக தெரிவிக்கிறார்.எது உண்மை.
நெல்லையில் வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி ஒரு அதிமுக கட்சிக்காரரிடம் பேசி கோபத்தில் தனது வண்டியை அங்கேயே விட்டு விட்டு அலைபேசியில் வெறு யாரிடமோ பே சியபடி சென்று ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதை வீட்டுக்கடன் விடயமாக வருமானவரி விசாரணைக்குப்பயந்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார் என்று நம் சிபிசிஐடி கிளப்பி விட்டது போல் ரவியின் கதையில் நடக்கிறது.மாநிலங்கள் மாறினாலும் மணல் கொள்ளையர்களும்,அரசியல் கொள்ளையர்களும் அவர்கள் கூட்டனியும்,புத்தியும் மாறுவதில்லை என்பதைத்தான் இரு சம்பவங்களும் காட்டுகின்றன.
இன்று இந்த கொள்ளையர்களிடம் இலக்காக இருப்பது நமது சகாயம்.
அவருக்கு வரும் மிரட்டல்களுக்கு வேறு ஒருவராக இருந்தால் வேலையை விட்டு விவசாயம் பார்க்க போயிருப்பார்.தமிழ் நாடு ஆட்சியாளர்கள் அதிகாரி சகாயத்துக்கு தரும் பாதுகாப்பை விட இடைஞ்சல்கள் தான் அதிகம்.அலுவலகத்துக்கு கூட இடம் தரவில்லை.இருக்கும் மாநகராட்சி கடை யை கூட காலி செய்யக் கூறி நோட்டீசை கதவில் ஒட்டி அசிங்கப்படுத்தி வருகிறார்கள்.நீதிமன்றம் கூறிய பாதுகாப்பு கூட சரிவர வழ ங்கப்பட வில்லை.
அவரைப்போன்றவர்களுக்கு மக்கள்தான் பாது காப்பை வழ ங்க வேண்டும் .நேர்மையானவர்களே இல்லை என்று புலம்பும் மக்கள்தான் அரிதாக இருக்கும் சகாயம் போன்ற நேர்மையாளர்களுக்கு பாதுகாப்பாக இருக்க
வேண்டும்.பாதுகாக்க வேண்டும் .

முன்பெல்லாம் நேர்மையாக ஒரு அதிகாரி இருந்தால், தப்பு செய்யும் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் அவரிடம் பயந்து ஒதுங்குவார்கள். ஆனால் இப்போது நேர்மை மனிதர்கள்தான் தப்பான ஆசாமிகளிடமிருந்து ஒதுங்க வேண்டியிருக்கிறது.காரணம் மக்கள் தங்களுக்கு மீண்டும் வாக்களிப்பதை பற்றிய பயம் தான்.ஆனாலின்று 500 ரூபாய்க்கு வாக்குகளை மக்கள் விற்று விடுவதுதான்.அதை வாங்க பணம் தேவையே.அதற்கு எந்தவகைகளில் எல்லாம் பணம் கிடைக்கும் என்று பதவி மூலம் சம்பாதிக்கும் நிலைக்கு ஆட்சி செய்யும் அரசியல்வாதிகள் வந்து விட்டனர்.மக்கள் மன நிலை மாறும் வரை சகாயம்,முத்துக் குமாரசாமி,
 ரவி போன்ற அதிகாரிகளுக்கு ஆபத்துதான் அவர்கள் மீது  மேலும்  அவதூறு சேறுகள் அள்ளி வீசப்படலாம்.
நேர்மையாளர்களை பாதுகாக்க வேண்டியது ஆட்சியாளர்களை கடமையல்ல.அவர்களைப் பாதுகாக்க மக்கள்தான் போராட வேண் டும் .
==========================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?