ஆண்களும் தலைமுடியும்'

பெண்கள் மட்டுமா ஆண்களும்  தலைமுடியை பராமரிப்பது மிகவும் முக்கியம்.
அவசியம்.
ஏனெனில், தற்போது இளவயதில் வழுக்கை, வெள்ளை முடி என பல பிரச்னைகள் வருகின்றன.
தலைமுடி சீராக வளர, எண்ணெய் தேய்ப்பது மிக அவசியமான ஒன்றாகும். மசாஜ் செய்வதும் தலையின் ரத்த ஓட்டத்தை சீராக்கும். தலைமுடியை பொதுவாக வறண்டது, எண்ணெய் பதமுள்ளது மற்றும் இயல்பானது என மூன்று வகையாக பிரிக்கலாம். 
உங்கள் தலைமுடிக்கு ஏற்றவாறு ஷாம்பூ, கண்டிஷனர் மற்றும் பராமரிப்பு பொருட்களை தேர்வு செய்வது அவசியம். 
இதனை தேர்வு செய்வதில் குழப்பம் இருந்தால், சரும மருத்துவரை கலந்து ஆலோசிக்க வேண்டும். வாரத்திற்கு இருமுறையாவது ஷாம்பூ போட்டு
குளிப்பது அவசியம். ஷாம்பூவை தேர்ந்தெடுத்து பயன்படுத்திய பிறகு, அடிக்கடி மாற்றுவது தேவையில்லாத பக்க விளைவுகளை ஏற்படுத்தும்.
கற்றாழை: 
தலைமுடிக்கு வலிமையையும், பளபளப்பையும் தருவதில், கற்றாழை முக்கிய பங்கு வகிக்கிறது. 
கற்றாழையின் ஜெல் போன்ற பசையை தலையில் அழுத்தி தேய்க்க வேண்டும். 
இவ்வாறு கற்றாழையின் ஜெல்லை வாரம் இருமுறை தேய்த்து வந்தால், முடி உதிர்வது படிப்படியாக குறையும்.
வெந்தயம்: இரண்டு அல்லது 3 மேசைக்கரண்டி வெந்தயத்தை தண்ணீரில், 8-10 மணி நேரம் ஊற வைத்து, அதனை பசை போல அரைத்து தலையில் தடவ வேண்டும். இப்படி செய்தால் தலைமுடி உதிர்வது குறைவதுடன், பொடுகுத் தொல்லையிலிருந்தும் பாதுகாக்கும்.
ஆரஞ்சு பழத்தோல்:
ஆரஞ்சு பழத்தோல்களை, மிக்ஸியில் போட்டு அரைத்து, தலைமுடியில் வாரம் ஒருமுறை தடவிக் குளித்தால், பொடுகுத் தொல்லை நீங்கும். 
வேப்பிலை: வேப்பிலையை அரைத்து பசை போலாக்கி, அதனைத் தலையில் தடவி குளித்தால், முடி உதிர்வது குறையும். வேப்பிலைப் பசையுடன் சிறிது தேனும், ஆலிவ் எண்ணெயும் சேர்த்துக் கொண்டால் சிறந்த பலனை பெறலாம்.
செம்பருத்தி: 
தேங்காய் எண்ணெய், செம்பருத்தி மற்றும் கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ள வேண்டும். இதனை இரவு தூங்கும் போது தலையில் தடவி, காலையில் நீரில் நன்கு அலசினால், வலிமையான தலைமுடியை பெறலாம்.
எண்ணெய் 
 எண்ணெய் தேய்ப்பது அவசியம். குறிப்பாக மசாஜ் செய்வதால், தலைமுடிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். 
பாதாம் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெயை கொண்டு மசாஜ் செய்வது நல்ல பலனை அளிக்கும். 
தேங்காய்ப்பால் கொண்டு மசாஜ் செய்தால், முடியின் வறட்சி ஓடியே போகும்.
========================================================================
சருமம் பற்றிய புரிதல் 

சருமம் பற்றிய புரிதல் அதிகம் இல்லாமல், நம்மில் பலர் இருக்கின்றனர். வறண்ட சருமம், எண்ணெய் பசை சருமம் மற்றும் மிக மென்மையான சருமம் என, மூன்று வகைகளாக இருக்கிறது நம் சருமம். 
மிக மென்மையான சரும வகையை சேர்ந்தவர்கள், அழகு சாதனப் பொருட்கள் மற்றும் சருமத்துக்கான பிற பொருட்களை பயன்படுத்தும் போது கவனமாக இருக்க வேண்டும்.
மென்மையான 
மென்மையான சருமத்தினரை அதிகம் பாதிப்பது எதுவென்றால், சருமம் எளிதில் சிகப்பாக மாறுவது, மாய்ச்சரைசர்கள் உட்பட அனைத்து பொருட்களுக்கும் சருமத்தில் எதிர் விளைவுகள் உண்டாவது, சூரிய வெப்பத்தால், பாதிப்புக்கு உள்ளாவது, வெப்பம், குளிரில் விரைவாக பாதிக்கப்படுவது ஆகியவற்றை சொல்லலாம். 
இவர்கள், அழகு சாதனப் பொருட்கள் பயன்படுத்துவதை, போதியளவு குறைக்க வேண்டும். வாசனையற்ற, கிளென்சிங் மூலம் சருமத்தை சுத்தப்படுத்திய பின், மாய்ச்சரைசர் மற்றும் சன்ஸ்கிரீன் பயன்படுத்தலாம்.
அழகு சிகிச்சைகள் மேற்கொள்வதற்கு முன், சரும நிபுணரிடம் கேட்டறிவது நல்லது. பதப்படுத்தப்பட்ட, சர்க்கரை நிறைந்த உணவுப் பொருட்களை தவிர்க்க வேண்டும். 
வைட்டமின் ஏ, பீட்டா கரோட்டின் ஆகியவை மென்மையான சருமத்தினருக்கு சிறந்தது.

சரும பாதுகாப்பு
பவுடர் மேக்-அப் பயன்படுத்துவது நல்லது. 
திரவ பவுண்டேஷன் பயன்படுத்தினால், சிலிக்கானை அடிப்படையாக கொண்ட பவுண்டேஷனை பயன்படுத்துவது சருமத்துக்கு நல்லது. கண்களுக்கான அழகுப் பொருட்களில், பழைய பொருட்களை பயன்படுத்தக் கூடாது. பவுண்டேஷன் மற்றும் லிப்ஸ்டிக்கை, ஓராண்டு வரை பயன்படுத்தலாம்.
 மஸ்காராவை, மூன்று முதல் நான்கு மாதங்கள் வரையே பயன்படுத்த வேண்டும்.
முகப்பவுடரை இரண்டு ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம். மேக்-அப் பிரஷ் மற்றும் ஸ்பான்ஜ்களை அடிக்கடி முறையாக சுத்தம் செய்ய வேண்டும். பென்சில் ஐ லைனர், மெழுகை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்படுவதோடு, அவற்றில் பதப்படுத்தும் பொருள் குறைவாகவே சேர்க்கப்படுகிறது. 
இதனால், பென்சில் ஐ லைனர் பயன்படுத்துவது நல்லது. 
திரவ ஐ லைனரில், சேர்க்கப்படும் லேட்டக்ஸ், மென்மையான சருமத்தை உடைய சிலருக்கு, ஒவ்வாமையை தோற்றுவிக்கலாம்.
அதிகபட்சமாக, 10 பொருட்கள் மட்டுமே சேர்த்து தயாரிக்கப்பட்ட அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவதே சாலச்சிறந்தது. 
எந்த ஒரு புதிய அழகு சாதனப் பொருட்களை பயன்படுத்துவதற்கு முன்பும், முறையான சோதனை செய்ய வேண்டும்.
மென்மையான சருமத்தினர் ஒரு நாளைக்கு, மூன்று முறைக்கு மேல் அடிக்கடி முகம் கழுவுவதை தவிர்க்க வேண்டும். 
அடிக்கடி முகம் கழுவினால், தோலில் இயற்கையாக காணப்படும் எண்ணெய் தன்மை போய்விடும்.
========================================================================

இன்று,
ஜூன்-23.
  • பிரிட்டன் நாடாளுமன்றம் நிலமானிய முறையை நீக்கியது(1825)
  • கனடாவில் மரண தண்டனை தருவது நிறுத்தப்பட்டது(1976)
  • புளூட்டோவின் சாரண் என்ற துணைகோள் கண்டுபிடிக்கப்பட்டது(1978)
  • சுவீடன் தேசிய கொடி பெறப்பட்டது(1906)
========================================================================

கிரிக்கெட் ஊழல்களில் 

அருண்ஜெட்லிக்கு 

தொடர்பா?


மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி அனுமதி இல்லாமல் இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திலோ (பிசிசிஐ), இந்தியன் பிரிமியர் லீக்கிலோ (ஐபிஎல்) எதுவும் அசையாது என்றும் அவற்றைத் தன்னுடைய முழுக் கட்டுப்பாட்டில் அவர் வைத்திருந்தார் என்றும் ஐபிஎல் மோசடி மன்னன் லலித் மோடி பகிரங்கமாக புகார் கூறியுள்ளார்.
லலித்மோடி மீது அந்நியச் செலாவணி முறைகேடுகள் தொடர்பாக அமலாக்கத்துறையினர் வழக்கு தொடுத்து விசாரணை செய்து வரக்கூடிய நிலையில், வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜும், ராஜஸ்தான் மாநில முதல்வர் வசுந்தரா ராஜேயும் உதவியதை அடுத்து, அவர் உலகம் முழுதும் சுற்றித்திரிந்து கொண்டிருப்பது குறித்து ஊடகங்கள் புயலைக் கிளப்பி இருக்கக்கூடிய சூழலிலேயே லலித் மோடி இவ்வாறு அருண்ஜெட்லி மீது தாக்குதல் தொடுத்திருக்கிறார். தற்போது வாஷிங்டனில் பயணம் மேற்கொண்டிருக்கும் அருண்ஜெட்லி, லலித் மோடிக்கும் வசுந்தரா ராஜேயின் மகன் துஷ்யந்த் சிங்கிற்கும் இடையே 11 கோடி ரூபாய் பணப் பரிமாற்றம் நடந்திருப்பது “வணிகரீதியான’’ ஒன்று எனக் குறிப்பிட்டதற்கு மறுநாள்,
லலித் மோடி இவ்வாறு கூறியிருக்கிறார். கடந்த பல ஆண்டுகளாகவே இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அருண்ஜெட்லியின் முழுக் கட்டுப்பாட்டின்கீழ்தான் இருந்து வருகிறது என்றும், அருண் ஜெட்லியின் மிகவும் “நீண்டகால நண்பர்’’ - கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவர் என். சீனிவாசன் - ஊடகங்களாலும் நீதிமன்றத்தாலும் குற்றவாளி என முடிவு செய்யப்பட்ட பின்னரும்கூட இது நீடிக்கிறது என்றும் லலித்மோடி மேலும் தெரிவித்தார்.
இந்தியன் பிரிமியர் லீக் சீசன் 2ன்போது நடந்த அந்நியச் செலாவணி முறைகேடுகள் அனைத்திற்கும் அருண்ஜெட்லியுடன் இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் வலுவானமுறையில் செயல்பட்ட தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர் சரத் பவார், காங்கிரஸ் தலைவர் ராஜீவ் சுக்லா மற்றும் என். சீனிவாசன் ஆகிய அனைவரும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் லலித் மோடி தொலைக்காட்சி அலைவரிசை ஒன்றிற்கு அளித்துள்ள நேர்காணலின்போது தெரிவித்திருக்கிறார்.
=======================================================================


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?