போதை அடிமைகள்



 பணத்தை இழந்தால் சம்பாதிக்க முடியும். 
உடல் நலத்தை இழந்தால் அவ்வளவுதான். போதை வஸ்துக்கள் உடல் நலத்தையும் அதனால் ஏற்படும் நஷ்டத்தையும் தனிமனிதனுக்கு மட்டுமின்றி வீட்டிற்கும் நாட்டிற்கும் தருகிறது. 
பல ஆண்டுகளாக நாட்டில் நோய்களும், தற்கொலைகளும், போதை மருந்துகளின் நடமாட்டத்தால் அதிகரித்திருப்பது கவலை தரும் விஷயம். அந்தளவுக்கு எங்கு பார்த்தாலும் அரசு டாஸ்மாக் மது விற்பனை நடக்கிறது. 
அரசுக்கு டாஸ்மாக் வருமானத்தை விட மனமில்லை.
போதைக்கு அடிமையாவது குறித்து ஒவ்வொருவரும் வேறு வேறு காரணங்களை காட்டுகின்றனர்.
 பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பாமரர்கள் அவர்கள் பகுதியில் குறைந்த விலையில் கிடைக்கும் மட்ட ரக போதைப் பொருட்களை சிறு வயதில் நட்பு வட்டாரத்தின் மூலம் பழகி பின்பு அதற்கு நிரந்தர அடிமையாகின்றனர். படித்த, மேல்மட்டத்தினர் தகுதிக்கு ஏற்றவாறு அதிக விலையுள்ள போதை பொருட்களை உபயோகிக்கின்றனர்.
இந்தியாவில் 2 சதவீத மாணவர்கள் நிரந்தர போதை அடிமைகள் என உலக சுகாதார அறிக்கை கூறுகிறது. தடுப்பு மற்றும் ஒழிப்பு-
உலகின் போதை மருந்து விற்பனையாளர்களின் நெட் ஒர்க் 76 நாடுகளில் பரந்துள்ளது. சாதாரண ரிக் ஷாக்கரன் முதல் புகழ்பெற்ற நடிகர், நடிகை, தொழிலதிபர், ஏன் நாட்டின் அதிபர்கள், அரசியல்வாதிகளும் இந்த வியாபாரத்தில் ஈடுபடுவதாக தகவல்கள் ெவளியாகின்றன. இதில் கோடிக் கணக்கில் பணம் புரள்கிறது. 
சீனா, துருக்கி, பாகிஸ்தான் போன்ற நாடுகள் அதிக போதைப் பொருட்களை உற்பத்தி செய்கின்றன.
 நேபாளம், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை வழியாக அமொரிக்காவிற்கும், வங்கதேசம், சிங்கப்பூர், ஸ்பெயின், பிரான்ஸ் வழியாக இங்கிலாந்து நாட்டிற்கு போதைப்பொருட்கள் கடத்தப்படுகின்றன.
புகையிலை மற்றும் மதுபானங்களால் ஏற்படும் தாக்கம் அதிகம். 
15 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினர் மதுவினால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். 1992--2012 ஆண்டுகளில் 55 சதவீதம் பேர் மதுப் பழக்கம் கொண்டவர்களாக இருந்தனர். இந்த சதவீதம் இன்னும் கூடிக்கொண்டு இருக்கிறது. 
ஒருவர் இந்தியாவில் சராசரியாக ஒரு ஆண்டில் 33 லிட்டர் மதுபானம் அருந்துகிறார். 
ஆந்திராவில் 34.5 லிட்டராகவும், கேரளாவில் 36 லிட்டராகவும் மதுபான உபயோகம் உள்ளது. 
ஆண்டுதோறும் 25 லட்சம் பேர் இறக்கின்றனர். 
மது அருந்துவதால் 60 வித வியாதிகள் வருகின்றன. 20- முதல் 50 சதவீதம் குடிகாரர்கள் மஞ்சள் காமாலை, வலிப்பு, விபத்து மற்றும் புற்றுநோய்களால் பாதிக்கப்படுகின்றனர்.

அரசின் கஞ்சா இன்றும் இந்திய அரசு உ.பி. காசிப்பூர், மகாராஷ்டிரா, அசாம் மாநிலங்களில் கஞ்சா தொழிற்சாலைகளை நடத்துகிறது. 
25 ஆயிரம் எக்டேரில் கஞ்சா பயிரிடப்பட்டு அபின் தயாரிக்கப்பட்டு ஜப்பான், இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவிற்கு ஏற்றுமதியாகிறது. அரசு விலை கிலோவிற்கு ரூ.1500 தான். ஆனால் கள்ள மார்க்கெட்டில் கிலோ ரூ.50,000 ஆகும்.
 இதன் மூலம் அரசுக்கு ஆண்டிற்கு ரூ.432 கோடி வருவாய் கிடைக்கிறது.
இந்தியாவில் ஹெராயின் போதைக்கு 34 லட்சம் பேர் அடிமையாக உள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. 
இதனால் சராசரியாக தினமும் 7 பேர் இறக்கிறார்கள். 
ஆண்டுதோறும் பல ஆயிரம் பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். 
2004ல் 2000 பேர், 2005ல் 2500 பேர், 2009-ல் 3000 பேர், 2013-ல் 5000 பேர் இறந்துள்ளனர்.
இந்தியாவில் போதை தடுப்பு மற்றும் மறுவாழ்வு சிகிச்சை மையங்கள் 401 உள்ளன. அதில் சராசரியாக 8500 நோயாளிகள் உள்ளனர். 
10 கோடி கிலோ ஹெராயின் இதுவரை பிடிபட்டுள்ளது. பிடிபடாத ஹெராயின் மருந்து அளவு பல கோடி கி.ட்டமா திட்டமா ஆபத்தான மருந்துகள் சட்டம், விஷ மருந்துகள் சட்டம், போதைப்பொருட்கள் சட்டம், மருந்து மற்றும் அழகு சாதனப் பொருட்கள் சட்டம் போன்றவை இருந்தாலும் அவை கடுமையாக பின்பற்றப்படவில்லை.
 குறைந்த அளவு அபராதம், சிறைத்தண்டனை மட்டுமல்லாமல், அதிகாரிகளும், சாட்சிகளும் எளிமையாக வளைக்கப்படுவதால், இச்சட்டங்கள் நீர்த்துப் போகின்றன. 
பன்னாட்டு
வியாபாரிகளும், பயங்கரவாத அமைப்புகளும் திட்டம் போட்டு கைகோர்த்து செயல்படுவதால்
குறைந்த அளவு :போதை மருந்துகளே பிடிபடுகிறது. 
பெரும் அளவு கள்ளச்சந்தையில் மாயமாகி விடுகின்றன.
சீனா, அரபு நாடுகள், ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளில் இச்சட்டம் கடுமையான விதிகள் மற்றும் தண்டனைகளை உள்ளடக்கி போதை மருந்துகளை ஒழிப்பதில் முன்னிலையில் உள்ளன. 
கடுமையான சட்டங்கள் மட்டும் போதாது. திறமையான திட்டங்களும் உடனே தேவை.
தன் ஒழுக்கம் தேவை- சமூகத்தில் பிரபலமானவர்கள் செய்யும் செயல் மற்றும் சினிமா, 'டிவி' பிரபலங்கள் மூலம் தரும் விளம்பரங்களைப் பார்த்தும் கேட்டும் இளையதலைமுறையினர் இதுதான் வாழ்க்கை முறை என நினைத்து திசை மாறிப் போகிறார்கள்.
 பெண்களில் பலர் மது மற்றும் சிகரெட் புகைப்பதன் மூலம் தாங்கள் சமூகத்தில் ஆண்களுக்கு சமமானவர்கள் என்று நினைப்பதும், மேலும் இது தங்களுக்கான அதிகாரம் என்று நினைப்பதும் இன்று சாதாரணமாகிவிட்டது. விளம்பரம் வேறு, சமூக வாழ்க்கை முறை வேறு என்பதை இளையதலைமுறை நன்கு சிந்தித்து போதையின் பாதையில் செல்லாமல் கட்டுப்பாடான வாழ்வைப் பேண வேண்டும்.

தன் ஒழுக்கம் மேன்மையைத் தருவதால் அதுவே உயிரினும் சிறந்ததாகப் போற்றப்படுகிறது என்பதை வள்ளுவர்,'ஒழுக்கம் விழுப்பம் தரலான் ஒழுக்கம்உயிரினும் ஓம்பப் படும்'என்கிறார்.

பள்ளி, கல்லுாரிகளில் முன்பு இருந்து வந்த நன்னெறி வகுப்புகள் இன்று மறைந்து பிறருக்கு தெரியாமல் ரகசியமாகக் கெட்டுப் போகும் வாய்ப்புகளை கல்வி நிறுவனங்களும் பெற்றோர்களுமே தருவதால் விளக்கை நாடும் விட்டில் பூச்சிகளாய் ஆசையில் மோசம் போய் விடுகின்றனர். 
புற்று நோய், இதய நோய், பால்வினை நோய் போன்றவைகளுக்கு போதை வஸ்துக்களே காரணம். தீயொழுக்கம் தனி மனிதனுக்கு மட்டுமல்ல அது சமுதாயம் முழுமைக்கும் என்றும் துன்பம் தருவதாகும். 
பொருள், காலம், உடல் விரயம் செய்து மனம் காணும் சுகம் எத்தனை நாளோ? வேண்டாமே போதை. 
என்றும் நடப்போம் நல்ல பாதை.

-முனைவர் மா.த.ச.பூர்ணாச்சாரி,
வழக்குரைஞர்,மதுரை.94432 66674
poornacharimd@gmail.com
நன்றி:தினமலர்.
========================================================================
இன்று,
ஜூன்-26.
  • சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம்
  • ருமேனியா கொடி நாள்
  • மடகாஸ்கர் விடுதலை தினம்
  • அஜர்பைஜன் ராணுவ மற்றும் கடற்படை தினம்
  • உலகின் மிக உயரமான கட்டிடமான கனடாவின் சி.என் கோபுரம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது(1976)
==============================================
ஒவ்வொரு -------க்குப் பின்னும் ஒரு பெண்ணிருப்பார்?

லலித் மோடிக்கு, பயண ஆவணங்களை அளித்து உதவும்படி, பிரிட்டன் அரசிடம், ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே, கேட்டுக் கொண்ட விவகாரம், பெரிதாக வெடிக்கத் துவங்கியுள்ளது; இதை, காங்., ஊதி பெரிதாக்கி வருகிறது.

துணை நின்றன:இந்நிலையில், இப்பிரச்னை தொடர்பாக, பா.ஜ.,வின் தகவலறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:துவக்கத்தில், லலித் மோடிக்கு, சுஷ்மா சுவராஜ் உதவியதாக, செய்திகள் வெளியான போது, அவருக்கு ஆதரவாக கட்சியும், அரசும் துணை நின்றன. 
ஆனால், வசுந்தராவின் பெயர் அடிபட துவங்கியதும், அந்தளவுக்கு ஆதரவு குரல் எழவில்லை.
டில்லிக்கு வந்து, பா.ஜ., தலைவர் அமித் ஷாவை நேரில் சந்தித்து, விளக்கமளிக்க வசுந்தரா முயன்றும், அந்த சந்திப்பு நடக்கவில்லை.
இதை, ஊடகங்கள்
சுட்டிக்காட்டியதும், மூத்த
அமைச்சர் நிதின் கட்காரி, ஜெய்ப்பூருக்கே சென்று, வசுந்தராவை சந்தித்தார்; 'வசுந்தராவின் மீது குற்றம் ஏதுமில்லை; 
அவர், ராஜினாமா செய்யமாட்டார்' என,
பேட்டியும் அளித்தார்.
பின், லலித் மோடிக்கும், வசுந்தராவின் மகனுக்கும் இடையிலான, பண பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்கள் வெளியாகின.
 'அந்த ஆவணங்கள் குறித்து, தீர விசாரிக்காமல் முடிவுக்கு வர இயலாது' என்று கூறி, பா.ஜ., சமாளித்தது.
ஆனால், இவை அனைத்தையுமே, நேற்று முன்தினம், காங்., தலைவர் ஜெய்ராம் ரமேஷ் வெளியிட்ட ஆவணங்கள், தலைகீழாக புரட்டிப்போட்டுவிட்டன.
வசுந்தரா, எதிர்க்கட்சித் தலைவராகவும், எம்.எல்.ஏ.,வாகவும், அரசியலமைப்பு சட்டப் பதவிகளில் இருந்து கொண்டே, சட்டத்தின் பிடியிலிருந்து தப்பி வாழும், லலித் மோடிக்கு உதவும்படி, தன் கையெழுத்தை இட்டு, கடிதம் தந்துள்ளார். 
பிரிட்டன் அரசுக்கு எழுதப்பட்டுள்ள அந்த ரகசிய கடிதத்தில், தன் கோரிக்கையை, இந்திய அரசுக்கு தெரிவிக்க வேண்டாமென்றும் கேட்டுள்ளார்.
நிதின் கட்காரி, வசுந்தராவை சந்தித்த சமயத்தில், வேறு ஏதும் ஆவணங்கள் வெளியாக வாய்ப்புள்ளதா என, கேட்கப்பட்ட போது, 'கண்டிப்பாக இருக்காது' என, உறுதியளிக்கப்பட்டது. 
அதனால் தான், வசுந்தராவை ஆதரிக்க, கட்சி முன்வந்தது.
ஆனால், இப்போது வசுந்தரா கையெழுத்திட்ட கடிதம் வெளியாகி இருக்கிறது. 'கையெழுத்தெல்லாமா போட்டு தொலைப்பீர்கள்' என, பா.ஜ., தலைமை கோபமடைந்திருக்கிறது.
இதுகுறித்து, இரு நாட்களுக்குள் விளக்கம் அளிக்கும்படி, கட்சியிடமிருந்து, வசுந்தராவுக்கு தகவல் போய் உள்ளது.
அதேநேரத்தில், ராஜஸ்தான் முதல்வர் பதவியில் இருந்து, வசுந்தராவை விடுவிப்பது என்பது, பா.ஜ.,வுக்கு எளிதான காரியமல்ல.
காரணம், வசுந்தரா மாநிலத்தில் செல்வாக்கு
மிக்க தலைவர்; மக்கள் மத்தியிலும், கட்சி
தொண்டர்கள் மத்தியிலும், பெரும் ஆதரவை
பெற்றுள்ளவர்.
இந்நிலையில், வசுந்தராவுக்கு பதிலாக, வேறு ஒருவரை முதல்வர் பதவியில் அமர வைத்தால், கட்சி உடையுமா என்பது வரை, பா.ஜ., தலைமையால், அலசப்பட்டு வருகிறது. 
மம்தா பானர்ஜியை போல, வசுந்தராவும், தனிக்கட்சி துவங்கி, டில்லி தலைமைக்கே, தலைவலியாகலாம் என்ற அச்சமும், மூத்த தலைவர்களிடத்தில் உள்ளது.

வசுந்தரா போக, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானி, மகாராஷ்டிரஅமைச்சர் பங்கஜ் முண்டே என, பெண்
பிரபலங்கள் நால்வர் ஒரே நேரத்தில், சர்ச்சையில் சிக்கியுள்ளது தான், பா.ஜ.,வை கவலையில் ஆழ்த்தி உள்ளது. 
இவர்களுக்கு எதிராக, எதிர்க்கட்சிகள் போர்க்கொடி உயர்த்தி நெருக்கடியை அளித்தாலும், வசுந்தரா விஷயத்தில் தான், பா.ஜ., அதிக சிக்கலில் மாட்டியிருக்கிறது.
அவர் மீது, கட்டாயம் நடவடிக்கை எடுத்தாக வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
மார்ட்டின்; பிரபல லாட்டரி அதிபர். 
இவரைத் தெரியாத தமிழ் நாட்டினர் இருக்க முடியாது.சுரண்டல் லாட்டரி மூலம் பல குடும்பத்தை தெருவில் விட்டவர்.கேரளா மற்றும் வடகிழக்கு மாநில லாட்டரி டிக்கெட்களை விற்று வந்தவர். 
அவர் மீது பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பல மாதங்கள் வேலுார் சிறையில் இருந்தவர், நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பின், ஜாமினில் வெளிவந்தார்.
மத்தியில் மோடி ஆட்சி அமைந்ததும், பா.ஜ.,வில் இணைய, தமிழக பா.ஜ., தலைவர்களை அணுகினார். ஒரு சில தலைவர்கள், இதற்கு ஆதரவு தெரிவித்தாலும், மார்ட்டின் மீது போடப்பட்ட வழக்குகளை மேற்கோள்காட்டி, பெரும்பாலான தமிழக தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால், பா.ஜ.,வில், மார்ட்டினால் இணைய முடியவில்லை. 
அத்துடன், இந்திய ஜனநாயக கட்சியில் இணைந்து, மாநில மகளிர் அணி பொறுப்பாளராக இருந்த, மார்ட்டின் மனைவி லீமா ரோசும், பா.ஜ.,வில் இணைய முயற்சித்தார்; இதற்கும், தடை போடப்பட்டது.
அதனால், மார்ட்டின் மகன் சார்லஸ் ஜோசை, கட்சியில் இணைக்க, தமிழக பா.ஜ., தலைவர்கள் சிலர் முயன்றனர். அப்போதும், வழக்கு - வம்பு பிரச்னைகளை காரணம் காட்டி, சிலர் தடை போட்டனர்.

பா.ஜ., தேசிய செயலராக இருக்கும் ராம் மாதவை, சார்லஸ் ஜோஸ் சந்தித்தார்; பின், அவர் முன்னிலையிலேயே, பா.ஜ.,வில் இணைந்துள்ளார். 
ஊழலுக்கெதிரான கட்சி பாஜக வாம்.
நம்புங்கள்.
========================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?