ஊழலற்ற

மே 26 அன்று தனது ஓராண்டு ஆட்சியின் நிறைவையொட்டி பிரதமர் நரேந்திர மோடி அனைத்துமொழி நாளேடுகளி லும் தனதுஆட்சியின் சாதனைபற் றிய விளம்பரங்களை வெளியிட்டிருந்தார்.

அதில், ”ஊழலற்ற, வெளிப்படையான தன்மைகொண்ட, கொள்கை அடிப்படையிலான நிர்வாகம், வேகமாக முடிவெடுத்தல் ஆகியவை தான் எங்கள் அடிப்படைக்கொள்கை” என்று பிரகடனப்படுத்தினார். 

உத்தரப்பிரதேசம், மதுரா மாவட்டம் நாக்லாசந்த்ரபான் கிராமத்தில் ஒருபொதுக்கூட்டத்தில், “கடந்த ஓராண்டில் ஊழலற்ற, நேர்மையான ஆட்சியை அளித்துள்ளோம். 
கடந்த 60ஆண்டுகளாக நாட்டைக்கொள்ளையடித்தவர்களுக்கு (அடல் பிகாரி வாஜ்பேயி பிரதமராக இருந்த பாஜகவின் 6 ஆண்டுகள் உட்பட?) முடிவு கட்டியுள்ளோம்”என்று முழங்கினார். 
உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கும் தன்பங்குக்கு அதைவழிமொழிந்தார். நிதிஅமைச்சர் அருண்ஜெட்லியோ,” கடந்த ஓராண்டில் ஊழலற்ற அரசை அளித்ததே மாபெரும் சாதனை” என்று பூரித்தார்.

சென்னையில் மே 26 அன்று பத்திரிகையாளர்களுக்குப் பேட்டியளித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம்யெச்சூரி, ”கடந்த ஓராண்டில் ஊழல்கள் ஏதும்நடக்கவில்லை என்றுபிரதமர் பெருமைப்பட்டுக் கொள்கிறார். 
ஒன்றை நாட்டுமக்கள் புரிந்துகொள்ளவேண்டும்: காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசின் மிகப்பெரும் ஊழல்கள்கூட முதல் ஆண்டில் வெளியாகவில்லை. 
இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரே வெளிச்சத்துக்கு வந்தன. அதுபோல இந்த அரசும் ஆட்சியைத் தொடரத்தான் போகிறது. 
அப்போது முந்தைய ஆட்சியைவிட மிகப்பெரிய ஊழல்கள் நிச்சயம் வெளிச்சத்துக்கு வரும்” என்றார்.
அவரின் பேச்சு இப்போது உண்மையாகிறது.ஒவ்வொரு பூனைக்குட்டியாக வெளி வருகிறது.

சுஷ்மா சுவராஜ்
யெச்சூரியின் பேட்டி வெளியான இரண்டுவாரங்களுக்குள் ரூ.750கோடி மோசடி ஊழலில் சிக்கி, சட்டத்தின் பிடியிலிருந்து தப்பி, லண்டனில் இருக்கும் லலித்மோடியின் கதையும், அதில் அவருக்கு உதவிய பாஜக அரசின்வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ்-ன் பங்கும் இந்தியாவையே அதிர வைத்தது. 
ஒருமோசடிப் பேர்வழிக்கு, இந்தியச் சட்டங்களுக்கும், விசாரணைகளுக்கும் அடிபணிய மறுத்து வெளிநாட்டுக்கு ஓடிப்போன குற்றவாளி லலித்மோடிக்கு பயணஅனுமதிவழங்க இங்கிலாந்துஅரசிடம் இந்தியவெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாதொடர்புகொண்டு உதவிய மன்னிக்க முடியாத குற்றம் வெளிவந்தது. 
ஒரு பொருளாதாரக் குற்றவாளிக்கு சுஷ்மாசுவராஜ் ஓடோடிச்சென்று உதவவேண்டிய அவசியம் என்ன? 
சுஷ்மாவின் மகள் பன்சரி சுவராஜ் லலித்மோடியின் வழக்கறிஞர் என்பதாலா? சுஷ்மாவின் கணவர் சுவராஜூக்கு லலித்மோடி பல லட்சக்கணக்கான ரூபாய்செலவில் ஆடம்பரஓட்டல்களில் தங்கவைத்து உபசாரம் செய்ததாலா? பதிலளிக்க முடியாத இந்தக்கேள்வி களுக்கு பாஜகவும், அதைஇயக்கும் ஆர்.எஸ்.எஸ்.-ம் தரும் ஒரே விளக்கம், 
“மனிதாபிமான அடிப்படையில் உதவிசெய்ததைக் கொச்சைப்படுத்தலாமா?” என்பதே! ”
இந்த மனிதாபி மான உதவிகள் குற்றவாளிகளுக்கு மட்டுமேசெய்யப்படுவது ஏன்? ஏழை,எளிய சாதாரண மக்களுக்கும், விவசாயிகளுக்கும் ஏன் இல்லை?” இந்தக்கேள்விகளுக்கு அவர்களிடம் பதில் இல்லை!

வசுந்தரா ராஜே சிந்தியா
ராஜஸ்தான் முதல்வர் வசுந்தராராஜே சிந்தியா விவகாரமோ இன்னும் ஒருபடிமேல். 
மோசடிமன்னன் லலித்மோடிக்குத் தான் ஆதரவளிப்பதாகவும், இந்த உண்மை இந்தியஅரசுக்கோ,அதிகாரிகளுக்கோ தெரியக் கூடாது என்ற எழுத்துப்பூர்வ நிபந்தனையின்பேரில் ஓடுகாலிக்குற்றவாளியான லலித்மோடிக்கு உதவியுள்ளார். 
இதன் பின்னணியில் வசுந்தராவின் மகனும், பாஜக எம்.பி.யுமான துஷ்யந்த்க்கு லலித்மோடி கோடிக்கணக் கான பணத்தைப் துஷ்யந்த்தின் போலிநிறுவனத்துக்கு அளித்த ஊழல் வர்ணஜால மாய் எழுந்து நிற்கிறது. சத்தியவந்தரான நமதுநிதியமைச்சர் அருண்ஜெட்லியோ, “அது அவர்களுக்கிடையேயான வர்த்தகப் பரிமாற்றம்” என்று கூறிவிட்டு இப்போது மழுப்புகிறார்! “லலித்மோடியின் மெகா ஊழலில் சிக்கியுள்ள சுஷ்மாவையும், வசுந்தரா ராஜே சிந்தியாவையும் காப்பாற்றியே தீருவோம்” என்று பாஜகதலைவர் அமித்ஷா முதல் அத்தனை பரிவாரங்களும் களத்தில் இறங்கியுள்ளன.
 “ஊழலற்ற,வெளிப்படைத் தன்மைகொண்ட, கொள்கைஅடிப்படையிலான நிர்வாகம்” என்று விளம்பரப் படுத்திக்கொண்ட பிரதமர் நரேந்திரமோடி இதுபற்றி என்ன கூறுகிறார்? 
அவர் எங்கே? 
அவரதுகுரல் எங்கே? 
மேடைக்கு மேடை,’பெஹன் அவுர் பாயியோ” என்று அழைத்த அந்த அழைப்பு எங்கே?

பங்கஜா முண்டே
ஊழல்இதோ, அவரைக் கண்டுபிடிக்கும் முன் மகாராஷ்டிரத்தில் இன்னும் ஒரு ஊழல். 
மகாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக- சிவசேனா கூட்டணி ஆட்சியின் முதல்வர் பட்னாவிஸ் தலைமையிலான அமைச்சரவையில் பெண்கள் மற்றும் குழந்தைகள் வளர்ச்சித்துறை அமைச்சராக உள்ளவர் பங்கஜாமுண்டே. இவர்மறைந்த பாஜக தலைவர் கோபிநாத் முண்டேவின் மகள். இவர் செய்துள்ள ஊழல் ஒரே நாளில் 24 அரசு உத்தரவுகளின் மூலம் வெறும் ரூ.206கோடி மட்டுமே!
மாகாராஷ்டிர அரசில் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேலான எந்தப்பொருள்களை வாங்குவதானாலும் ஈ-டெண்டர் மூலம் மட்டுமே வாங்கவேண்டும். எந்த நேரடி ஒப்பந்தம் மூலமும் வாங்கக்கூடாது என்ற விதி நடைமுறையில் உள்ளது. 
இதை அம்மாநில நிதியமைச்சர் சுதிர்முங்கன்திவார் உறுதிப்படுத்தியுள்ளார்” ரூ.ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட எந்த ஒரு பொருள் வாங்கலும் முழுமையாக ஈ-டெண்டர் கோரிப்பெற்றே வாங்கவேண்டும்:
 நேரடி காண்ட்ராக்ட் மூலம் வாங்கக்கூடாது” என்ற விதியை, எல்லா அமைச்சகங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளதாக வும் கூறியுள்ளார். 
இவை அனைத்தையும் மீறியவர் பங்கஜாமுண்டே! 
ஏனெனில் அவர்”மக்களின் முதல்வர்” அல்லவா?
 பங்கஜாமுண்டேவின் ஊழல் எதில் தெரியுமா? குழந்தைகளுக்கு வழங்கும் தின்பண்டங்களில்! 
தயாரிப்பாளர் யார் என்றே அரசுக்குத் தெரியாத ஒரு அரசுசாரா நிறுவனத் திடம் ரூ.80கோடிக்கு ஆர்டர் வழங்கியுள்ளார்.
 இந்தத்திண்பண்டங்கள் ஒருங்கிணைந்த குழந்தைகள் ஊட்டச்சத்து மையங்களுக்கு வாங்கப்பட்டன. இவை அந்த மையங்களுக்குவந்தபோது அவற்றில் களிமண்ணும், கற்களும் கலக்கப்பட்டுக் குழந்தைகள் உண்ணமுடியாத நிலையில் இருந்தன. 
அகமதாபாத் மாவட்ட ஊராட்சித்தலைவர் மஞ்சுஸ்ரீகுண்ட் ஆதிவாசிக்குழந்தைகளுக்கு வாங்கப்பட்ட தின்பண்டங்கள் களிமண்ணும், கற்களும் கலந்து கெட்டு உண்ண முடியாதவையாகஇருந்ததை ஒரு கடிதம் மூலம் தெரிவித்தார். 
இந்தக் கடிதம்தான் பாஜக-சிவசேனா கூட்டணி அரசின் ரூ.206 கோடி மாபெரும் ஊழலை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்துள்ளது.

குடிநீர், மருந்து, பாடக்குறிப்பேடுகளிலும்
குழந்தைகளின், குடிநீர் சுத்திகரிப்பு சாதனங்கள், முதலுதவிப் பெட்டி மருந்துகள் பாடக்குறிப்பேடுகள், தேசப்படங்கள் என பங்கஜாமுண்டேவின் ஊழல் பரவி நிற்கிறது. 
ஐ.சி.டிஎஸ்.ஆணையர் விநிதாசிங்கால் நாசிக்கில் உள்ள ஒரு தரமான நிறுவனத்தில் குடிநீர்சுத்திகரிப்பு சாதனத்தை ஒன்றுரூ.4,500/வீதம்வாங்கிட ஒப்பந்தம் செய்தார். 
ஆனால், அமைச்சர் பங்கஜாமுண்டேவோ அதை ரத்து செய்துவிட்டு உற்பத்திக்கூடமே இல்லாத எவரெஸ்ட் நிறுவனத்திடம் ஒன்று ரூ.5200/ என விலையை உயர்த்தி நிர்ணயித்து வாங்கியுள்ளார்.
 காசோலைகள் வழங்கி யுள்ளார்.குழந்தைகளின் வளர்ச்சியை அளவிடும் மெஷின்களை வாங்க ரூ.6 கோடிக்கும். ரூ.8 கோடிக்கும் இரண்டு நிறுவனங்களில் ஒரேவிதமானமெஷின்களை வாங்கக் காசோலைகள் அளிக்கப்பட்டுள்ளன. 
ரூ.720/மதிப்புள்ள மருத்துவ முதலுதவிப் பெட்டி களை ரூ.500/என விலைகுறைத்து அதற்கேற்பக் குறைவான மருந்துகளை வழங்குமாறு ஒப்பந்ததாரரிடம் பங்கஜாமுண்டே தெரிவித்துள்ளார். 
குழந்தைகளுக்கான பாடக்குறிப்பேடுகள், தேசப்படங்கள் அச்சிட்டுவழங்க டெண்டர் ஏதுமின்றி 5.6கோடி ரூபாய் காசோலையை ஒருதனி நபருக்கு, அச்சகத்துக்கு அல்ல- பங்கஜாமுண்டே அளித்துள்ளார்.

சிவராஜ் சிங் சவுகான் 
மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் பேசிய சர்ச்சைக்குரிய ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாஜகவைச் சேர்ந்த அமைச்சர்கள் ஊழல் மற்றும் மோசடிப் புகாரில் சிக்கி வரும் நிலையில் பாஜகவின் மூத்த தலைவரும் ம.பி. முதல்வருமான சிவராஜ் சிங் சவுகானும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
 பாஜகவைச் சேர்ந்தராஜேந்திர சவுத்ரி என்பரிடம் பேசியதாகக் கூறப்படும் அந்த ஆடியோவில், மண்டசூர் மாவட்டம், கரோத் சட்டசபை இடைத் தேர்தலில் கட்சி வேட்பாளருக்கு ஆதரவு தருமாறு இன்னொரு பாஜக தலைவர் ராஜேந்திர சௌத்ரியிடம் கூறுகிறார் முதல்வர் சவுகான்.
அப்படிச் செய்தால் அரசாங்கத்தில் அவருக்கு நல்லதொரு பதவி தரப்படும் என்றும் உறுதியளிக்கிறார். 
இந்த ஆடியோ வெளியாகி அங்கு பரபரப்பைக் கிளப்பியுள்ளது. கரோத் தொகுதி இடைத் தேர்தல் சனிக்கிழமை நடைபெறவுள்ளது. 
இந்த நிலையில் இந்த ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
,இது தவிர தண்டனையை குற்றவாளி ஜெயலலிதாவை அருண் ஜெட்லி மெனக்கெட்டு வந்து சந்தித்தாரா.அவர் கணக்கிட்டில் பிழையேற்பட்டு குமாரசாமியால் விடுதலை செய்யப்பட்டார்.இதன் திரைமறைவில் நடந்த பேரம் ஏன்ன?

பாஜக என்ன செய்யும்?
எதில்தான் ஊழல்செய்வது என்ற விவஸ்தைபாஜகவிடம் இல்லைபோலும்! இல்லாவிட்டால் ஏழை -எளிய குழந்தைகள் உண்ணும் உணவிலும், குடிநீர் சாதனங்களிலும், முதலுதவிப் பெட்டிகளிலும், பாடக்குறிப் பேடுகளிலும் ஊழல் செய்யத் துணிவார் களா?
 இனி பா.ஜ.க.என்ன செய்யும்? 
அமித்ஷாவின் தலைமையில் பா.ஜ.க. உயர்மட்டத்தலைவர்கள் கூடுவார்கள். அதற்குமுன் அமித்ஷா ஆர்.எஸ்.எஸ். தலைமையிடம் கீதாபதேசம் பெற்றுவருவார்.
 பின்னர் அவர்கள் சுஷ்மா சுவராஜ், வசுந்தரா ராஜே சிந்தியாவை மட்டுமல்ல: மறைந்த மாபெரும் தலைவர் கோபிநாத் முண்டேவின் வாரிசான பங்கஜாமுண்டேவையும் பாதுகாக்க அணிவகுப்பார்கள்.
“பாவம்: பெண்கள்மீது ஊழல் குற்றம் சாட்டுவது நியாயம் தானா? பெண்மையை இழிவு படுத்தலாமா?
” பெண்களை முன்நிறுத்தி அவர்கள் பெயரில் ஊழல்திருவிளையாடல்களை நிகழ்த்தி அதன்பயன்களை அனுபவிக்கும் ஒரு தந்திரமாக இருக்குமோ? உலகின் சாதுரியமான பேச்சாளர் என்று பெயரெடுத்த பிரதமர் நரேந்திரமோடியோ மௌனம் சாதிப்பார். விளம்பரங்களில் “ஊழலற்ற அரசு” என்று மின்னுகிறார்!

========================================================================
இன்று,
ஜூன் -27.

  • உலகின் முதலாவது ஏ.டி.எம்., லண்டனில் அமைக்கப்பட்டது(1967)
  • உலகின் முதல் அணுகரு ஆற்றல் உற்பத்தி மையம் மாஸ்கோவில் திறக்கப்பட்டது(1954)
  • கோலாலம்பூர் சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டது(1998)
  • சிபூட்டி பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது(1977)
========================================================================



இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?