'தம் படங்கள் ' எனும் 'செல்பி'





இன்றைய காலத்தில்  'செல்பி' எனப்படும் தம்படங்கள் எடுத்துக் 
கொள்வது வெறித்தனமாய்ப் பரவி வரும் பழக்கமாக உள்ளது. 
இதனாலேயே, எந்த ஒரு மொபைல் போனிலும் முன்பக்கமாய் ஒரு கேமரா இருப்பது அவசியமான ஒரு அம்சமாக மாறிவிட்டது. 
அனைத்து மொபைல் தயாரிப்பு நிறுவனங்களும், முன்பக்க கேமரா, அதன் மெகா பிக்ஸெல் தன்மை குறித்து அவசியம் விளம்பரப்படுத்தி வருகின்றனர். 
ஸ்மார்ட் போன் வாங்குபவர்களும், செல்பி கேமரா குறித்து அறிந்த பின்னரே ஒன்றை வாங்குவது குறித்து முடிவு எடுக்கின்றனர். 
அதே சமயத்தில், செல்பி படம் எடுப்பது என்பது ஒழுக்கமற்ற நாகரிகத்தையும்,ஒருவித அச்சுறுத்தும் பழக்கமாக மாறி வருகிறது.விருப்பமில்லாதவர்களையும் தன்னுடன் இணைத்து படங்கள் எடுப்பது எந்தவகையில் நாகரிகம்.?
இந்த பழக்கத்தை ஒட்டி நமக்கு வந்த தகவல்களை இங்கு காணலாம்.

அண்மையில் சிங்கப்பூரைச் சேர்ந்த 21 வயது வாலிபர் ஒருவர், தன்னைத் தானே மொபைல் போனில் படம் எடுக்கும் முயற்சியில் இரண்டு மீட்டர் உயரத்தில் இருந்து கடலுக்குள் விழுந்து உயிரை விட்டார். 
இது நடந்தது இந்தோனேஷியாவில் பாலி என்ற இடத்தில். 
இதே போன்ற இன்னொரு விபத்தில், 21 வயது நிரம்பிய ரஷ்ய பெண், பாதுகாப்பு அதிகாரி விட்டுச் சென்ற 9 எம்.எம் துப்பாக்கியுடன் செல்பி படம் எடுக்கையில், துப்பாக்கி வெடித்து சம்பவ இடத்திலேயே பலியானார். 
இது நடந்தது மாஸ்கோ நகரில்.
 மக்களுக்கு அதிகம் தெரிந்த பிரபலமானவர்கள் பலர், மற்றவர்களுடன் செல்பி படம் எடுக்க மறுப்பு தெரிவிப்பார்கள். அண்மையில் பாரிஸ் நகரில் ப்ரெஞ்ச் ஓப்பன் டென்னிஸ் போட்டியில், முதல் சுற்றில் ரோஜர் பெடரர் வெற்றி பெற்ற போது, அவரின் மிகத் தீவிரமான ரசிகர் ஒருவர், தன்னுடைய இருக்கையிலிருந்து எழுந்து ஓடி அவரிடம் சென்று, இந்த நிகழ்வினை உங்களுடன் செல்பி எடுத்து பதிந்து வைக்க விரும்புகிறேன் என்று சொன்னார். 
பெடரர் அதிகக் கோபமுற்று, பாதுகாப்பில் இது ஒரு பெரிய குளறுபடி எனச் சத்தம் போட்டு தன் கோபத்தைக் காட்டினார். செல்பி படம் எடுக்க அனுமதிக்க முடியாது என கூக்குரலிட்டார். கேன்ஸ் திரைப்பட விழாவில், சிகப்பு கம்பள வரவேற்பின் போது, செல்பி போட்டோ எடுக்க அனுமதி கிடையாது. 
இந்த விழாக் குழு தலைவர் இது பற்றிக் கூறுகையில், செல்பி போட்டோவில் ஒருவர் மிகக் கோரமாக காட்சி அளிக்க வாய்ப்புண்டு என்றுரைத்தார்.
 செல்பி எடுக்க விதிக்கப்பட்ட தடை சரியே என்று வாதிட்டார். 
நிகழ்ச்சிக்குப் பொருந்தாத செயல் என்றும் குறிப்பிட்டார்.

 2013 ஆம் ஆண்டில், டானிஷ் பிரதமர் ஹெல் தார்னிங், பிரிட்டிஷ் பிரதமர் கேமரூன் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, நெல்சன் மண்டேலாவிற்கான நினைவு நிகழ்ச்சி ஒன்றில், செல்பி எடுப்பது குறித்த விஷயம் குறித்துப் பல முரண்பாடான கருத்துகளைத் தெரிவித்தனர். 
டேனிஷ் பிரதமர் (பெண்) அவருடைய ஸ்மார்ட் போனில் ஒரு செல்பி எடுத்தார். 
அந்த போட்டோவில், ஒபாமா மற்றும் கேமரூன் இரு புறமும் இருந்தனர். ஆனால், அது தகுதிக்குக் குறைவான செயல், ஒழுக்கம் குறைவதன் அறிகுறி மற்றும் மேற்கத்திய நாகரிகத்தின் வீழ்ச்சி என மக்கள் அனைவரும் கருத்து தெரிவித்தனர்.

 சென்ற ஆண்டில், செல்பி படங்கள் ஒரு விமான விபத்திற்குக் காரணமாய் அமைந்தது. கொலரடோவில் டென்வர் நகர் அருகே, அம்ரித் பால் சிங் என்பவர் தன்னையே செல்பி படம் எடுத்தார். 
அப்போது அவர் ஒரு விமானத்தை இயக்கிக் கொண்டிருந்தார். அப்போது வெளிப்பட்ட ப்ளாஷ் வெளிச்சம் அவருடைய கவனத்தைச் சிதறடித்து, விபத்தை ஏற்படுத்தியது என National Transportation Safety Board அமைப்பு இந்த விபத்து குறித்து மேற்கொண்ட விசாரணையில் தெரிவித்தது. வெளிச்சத்தினால் கவனம் சிதறிய விமானம் தரையில் மோதியது. 
சிங் மற்றும் ஒரு இந்திய பயணி இதில் மரணமுற்றனர். 
இந்தப் பயணி ஓர் இசைக் கலைஞர் ஆவார். 
சென்ற மே மாதம், இத்தாலியில், கிரிமோனா நகரில் மியூசியம் ஒன்றில், அங்கிருந்த நினைவுச் சிலை ஒன்றுடன் செல்பி போட்டோ எடுக்க முயன்ற ஒருவரின் எடை தாங்காமல், சிலையின் கிரீடத்தின் ஒரு பகுதி உடைந்தது. 
சென்ற மார்ச் மாதம், கலிபோர்னியாவிலிருந்து வந்த இரு பெண்கள், ரோம் நகரில் உள்ள கொலாசியத்தில், தங்கள் பெயரின் முன் எழுத்துகளைச் செதுக்கி பின் அவை தெரியும் வகையில் செல்பி எடுத்தனர். 
அங்கிருந்த பழங்காலச் சிலை புதிய எழுத்துகளால், தன் புகழை இழந்தது தான் மிச்சம்.
========================================================================
இன்று,
ஜூன்-30.
  • காங்கோ விடுதலை தினம்(1960)
  • ஒருங்கிணைக்கப்பட்ட சர்வதேச நேரத்தில் ஒரு லீப் வினாடி அதிகரிக்கப்பட்டது(1972)
  • முதலாவது ஹாரி பேட்டர் நூல் வெளியிடப்பட்டது(1997)
  • உலகின் முதல் அவசர தொலைப்பேசி எண்ணான 999 லண்டனில் அறிமுகப்படுத்தப்பட்டது(1937)
========================================================================
ஹாட் லைன் பீப்... பீப் ... செய்கிறதுவிண்வெளி ஆய்வு மையத்தின் தலைமை விஞ்ஞானி லைனில் காதை கொடுக்கிறார்.
பிரதமர் அலுவலகத்திலிருந்து பிரதம செயலாளர் பேசுகிறேன். வணக்கம் ஐயா... பதறுகிறார் விஞ்ஞானி. 
ஏற்பாடெல்லாம் எப்படியிருக்கிறது. குறிப்பிட்ட காலத்திற்குள் தயார் செய்து விடுவீர்களா?
ஐயா.. அது.... சாதாரண விஷயமல்ல... எச்சில் முழுங்குகிறார்.
செயலாளரின் குரல் இறுகுகிறது. என்ன செய்வீர்களோ, ஏது செய்வீர்களோ எனக்குத் தெரியாதுபிரதமர் இன்னும் இரண்டு மாதங்களுக்குள் புவியில் இருக்கும் எல்லா நாடுகளுக்கும் போய் வந்து விடுவார். 
ஓரிரு நாட்கள் இந்தியாவில் தங்குவதே அவருக்கு கடினமான வேலை. உடனே ஏதாவது ஒரு கிரகத்திற்கு பயணப்படுவதற்கு ஏற்பாடுகளை துரிதப்படுத்துங்கள்.

இப்படி அவசரப்படுத்துகிறீர்களே, புவியில் உள்ள நாடுகளுக்கு சுற்றுலா போவது போல் அண்ட வெளியில் போக முடியாது.
ஓசோன் மண்டலம் இருக்கிறது, புவியீர்ப்பு விசையை கடக்க வேண்டும். அதை கடப்பதெல்லாம் சாதாரண விஷயமல்ல. 
எங்கள் அலுவலகத் திட்டத்தின்படி உலக நாடுகள் அனைத்தையும் மாரத்தான் சுற்றுச் சுற்றி இரண்டே மாதத்தில் முடித்து தொழில் வளத்தை பெருக்கி விடுவோம். அப்புறம் தொழில் வளத்தை பெருக்க கிரகங்களுக்குத்தான் போக வேண்டும். எனவே, உடனே ஏற்பாடுகளை செய்யுங்கள்.
அண்ட வெளியில் பயணம் செய்வது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. ஏராளமான பயிற்சிகள் வேண்டும். 
அதைபற்றியெல்லாம் நீங்கள் கவலை கொள்ள வேண்டாம்.
ஆர்எஸ்எஸ்காரர்களிடம் அவர் எல்லா பயிற்சிகளையும் பெற்றுவிட்டார். மேலும் ஏதாவது வேண்டும் என்றால் அதானி ஏற்பாடு செய்வார்.
 எந்த கிரகத்திற்கு முதலில் போகலாம் என்று சொல்லுங்கள்சந்திரன் வரைக்கும்தான் நாம் எட்டியிருக்கிறோம். 
சந்திராயன் திட்டத்தை வேகப்படுத்துகிறோம். ஆனால் அங்கு மக்கள் வசிக்கவில்லையே. அது தேவையில்லை. 
ஏற்கனவே, ரஷ்யர்கள், அமெரிக்கர்கள் நட்ட கொடிகள் இருக்கிறதே. அதற்கு பக்கத்தில் நமது கொடியையும் வைத்து படம் எடுத்தால் போதும். அடுத்தது செவ்வாய் என்று திட்டமிடலாமா?
ஐயா... கொஞ்சம் பொறுங்கள் தெரியாமல்தான் கேட்கிறேன். 
கோபித்துக் கொள்ளாதீர்கள். எதற்காக பிரதமர் இப்படி பறந்துக் கொண்டேயிருக்கிறார்.
சரியான டியூப் லைட்டாக இருக்கிறீர். 
தொழில் வளர்ச்சியில் இந்தியாவை முதல் நாடாக்கத்தான் இந்த பயணங்கள். எல்லோரையும் அழைத்து, எல்லோரும் வந்து, இந்தியாவை `ஃமேக்’ செய்யப்போகிறார்கள். இந்தியாவை மேக் செய்வதற்கு இந்தியர்கள் 120 கோடிபேர் இருக்கிறோமே.
அவர்களெல்லாம் எதற்கு?
இப்படியெல்லாம் அசட்டுத்தனமாக கேட்கக் கூடாது. 
அவர்கள் வந்தால்தான் தொழில்கள் பெருகும், வேலை வாய்ப்புகள் குவியும், வீட்டுக்கு மூன்று, நான்கு என எடுத்துக் கொள்ளலாம்.ஏற்கனவே கறுப்புப் பணத்தையும் இப்படி பங்கிட்டுக் கொள்ளலாம். 
ஆளாளுக்கு 15 லட்சம் கிடைக்கும் என்று சொன்னீர்கள்.அது தேர்தலுக்காக சொன்னது. உடனே மறந்து விட வேண்டும்.
எனக்கு தெரிய நமது நாட்டில் விவசாயம் அடிப்படைத் தொழில் இல்லையா?
ஆமாம், அதற்கென்ன?
அதிலேயே ஒரு சமநிலை ஏற்படுத்தப்படவில்லை.
என்ன சொல்கிறீர்!

நிலக்குவியல் பகிரப்படவில்லை, நிலம் பயன்படுத்துபவர்கள் கையில் கிடைக்கவில்லை, எனவே, உணவு உற்பத்தி உயரவில்லை. கிராமங்களில் வறுமை, வட்டிக் கொடுமை தலைவிரித்தாடுகிறது. 
தற்கொலைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. 
விவசாயிகள் கிராமத்தை விட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள்.
இந்தக் கொடுமைகள் போதாது என்று சமூக நலத்திட்டங்களின் மானியங்களை வெட்டி, நூறுநாள் வேலைத் திட்டத்தைச் சுருக்கி, இப்போது நிலத்தைப் பறிக்கும் அவசரச் சட்டம் என்று அடிப்படைத் தொழிலான விவசாயமே அழிகிறதே!
 நீர் சொல்லும் விவசாயத்தை உயர்த்துவதற்குத்தான் அவர் பறந்து கொண்டிருக்கிறார்.
அது இந்தியாவில் இருந்து செய்ய வேண்டிய வேலையல்லவா?
உமக்கு பொருளாதாரம் தெரியவில்லை, விவசாயமெல்லாம் பழமையான தொழில், நவீன இந்தியாவுக்கு ஆகாது.
அப்படியென்றால் நவீன இந்தியா எப்படி வாழும்?அமெரிக்கர்களும், ரஷ்யர்களும், ஆப்பிரிக்கர்களும் பெரிய பெரிய தொழிற்சாலைகளை இந்தியாவில் கட்டுவார்கள், தொழில் பெருகும், வேலைகள் மலியும்.வேலை வாய்ப்புகள் உருவாவதற்கு அடிப்படை சிறு, குறு, நடுத்தரத் தொழில்களல்லவா?
 அதெல்லாம் பழைய கணக்கு, மோடிக்கு பிடிக்காது. அவர் போடுவதெல்லாம் புது கணக்கு.அதானியும், அமெரிக்கர்களும் இயந்திரங்களை நிறுவுவார்கள். மனிதர்களுக்கு வேலை வாய்ப்புகள் தர மாட்டார்களே.
அதற்காக சிறு, குறு தொழில்களை ஊக்குவித்து அவர்களை பகைத்துக் கொள்ள முடியுமா?
அப்படியானால் வேலை வாய்ப்பு எங்கிருந்து வரும் என்றுதான் கேட்கிறேன்.
நிலங்களைப் பறிக்கும் போது வீட்டுக்கு மூவருக்கு வேலைக் கொடுப்போம், கிராமங்களை விட்டு துரத்தும் விவசாயிகளுக்கு இலவசமாக வேலை கொடுப்போம். 
சிறு, நடுத்தர தொழில்களை எல்லாம் அழித்து அனைவருக்கும் வேலை கொடுப்போம்.வெளிநாட்டு மூலதனத்தைக் கொண்டு ஒவ்வொருவருக்கும் வேலை கொடுப்போம். 
இதுதான் எங்கள் திட்டம்.ஆமாம், இப்படித்தான் அருண்ஜெட்லியும் சொல்கிறார், அமைச்சர்கள், ஆர்.எஸ்.எஸ்-காரர்கள், சாத்விக்கள், சாதுக்கள் என எல்லோரும் சொல்கிறார்கள். 
எல்லோரும் சொல்கிறார்கள் இல்லையா? ஆமாம் சொல்கிறார்கள். எல்லோரும் சொல்வதைத்தான் நீரும் சொல்ல வேண்டும். எங்கே சொல்லும்.சொல்லலாம். 
ஆனால்...ஆனால் என்ன?
என் விஞ்ஞான அறிவுக்குப் பொருந்தி வரவில்லையே. ம்.... இப்போதுதான் புரிகிறது, நீர் யார் என்று. விஞ்ஞானத்தை நம்புகிறீரா. 
அப்படியானால் நீர் தேசபக்தர் இல்லை. இந்த தேசத்தில் இருப்பதற்கு உமக்குத் தகுதி இல்லை. கருத்து மோதல் செய்கிறீர். நீர் இந்துவே இல்லை.எனக்குப் புரியவில்லையே, புரியும்படி சொல்கிறேன்.... கேளும்..
. இந்துவாக இருப்பவன் சிந்திக்கக் கூடாது... சீர்திருத்த கருத்துக்களை கேட்கக் கூடாது. விஞ்ஞானத்தை நம்பக் கூடாது. விதியைத்தான் நம்ப வேண்டும். பட்டினியில் செத்தால் அவன் விதி. 
தற்கொலை செய்தால் அதுவும் விதிதான். பசி, பிணி எல்லாம் விதிதான்.இதனால் எல்லாம் பாதிக்கப்படுபவர்கள் பெரும்பான்மை இந்து மக்களல்லவா? 
தவறான கொள்கைகளையெல்லாம் மாற்றுவோம் என்று தேர்தலின் போது பேசினீர்களே, தேர்தல் என்றால் ஓட்டு வாங்க வேண்டாமா? 
இந்த பரதேசி, பஞ்சைகளிடம்தானே ஓட்டு இருக்கிறது.
இது அதர்மமில்லையா?
இல்லை, இதுதான் தர்மம்! 
ராஜ தர்மம்!! 
அதானி, அம்பானி வகையறாக்களுக்கு நாங்கள் செய்ய வேண்டிய கடப்பாடு. எங்கோ கிடந்த எங்களை இப்படி இந்தியாவின் முதன்மை நாற்காலிகளில் உட்கார வைத்தவர்கள் அவர்களல்லவா!என்ன கொடுமை இது.... ஓட்டுப்போட்ட மக்களை இப்படி வஞ்சிக்கிறீர்களே. 
உமக்கு அரசியல் ஞானமே இல்லை. எந்த ஞானமும் இல்லாதவர்கள்தானே இப்போது அரசின் தலைமை பொறுப்புகளில் இருக்கிறார்கள். 
அவர்களுக்கு என்ன ஞானம் இருக்க வேண்டுமோ, அது இருக்கிறது. கல்வியை வர்ணாசிரம கல்வியாக்க, கல்விக் கூடங்களை, ஆய்வு நிறுவனங்களை... மனுவின் பர்ண சாலைகளாக்க தகுதியானவர்களைத்தான் நியமித்திருக்கிறோம்.
அப்படியானால்.... சொல்லும்....புஷ்பக விமானங்களை, பறக்கும் கம்பளங்களை, கண்டுபிடித்தவர்களை வைத்து ஐ.ஐ.டியையும் நிர்வகித்தால் என்ன? சரியாக சொன்னீர், 
இதோ வருகிறது... உமக்கு டிஸ்மிசல் உத்தரவு !

நன்றி:தீக்கதிர்.
=========================================================================  
                      

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?