நூடுல்சில் காரீயம் சேர்ந்தால் என்ன?

                                                                                                                                  என்.ராமதுரை
பிரபல நிறுவனம்  நெஸ்லே  தயாரிக்கும்  மேகி நூடுல்ஸில் குறிப்பிட்ட வேதிப் பொருள் அதிக அளவில் இருந்ததுடன் அதில் காரீயமும் (lead) கண்டுபிடிக்கப்பட்டதாக செய்தி வெளியாகியுள்ளது.  அதைத் தொடர்ந்து தமிழ்நாடு உட்ப்ட சில மாநிலங்களில் அதன் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது. இப்போது   மேலும் பல மாநிலங்களில் அந்த நூடுல்ஸ் சாம்பிள்கள் பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன.

இந்த விவகாரம் பற்றி செய்தி வெளியிட்ட சில தமிழ் டிவி சேனல்கள் காரீயம் வேறு, ஈயம் வேறு என்பது தெரியாமல் நூடுல்ஸ் சாம்பிள்களில் ஈயம் இருந்ததாகத் தெரிவித்தன. ஒரு பத்திரிகை  lead  என்பதை அலுமினியம் என்று மொழி பெயர்த்தது.
 நூடுல்ஸ். படம்:விக்கிபிடியா
இன்னொரு தமிழ்ப் பத்திரிகையோ உடலில் ஈயம் கலந்தால் ஆபத்து என்பதாக செய்தி வெளியிட்டது. ஈயத்தையும் காரீயத்தையும் குழப்பிக் கொண்டதால் ஏற்பட்ட வினை இது. Lead  என்றால் ஈயம் என்று தவறாகப் புரிந்து கொண்டதே அதற்குக் காரணம்.

உண்மையில் ஈயம் வேறு, காரீயம் (Lead) வேறு, அலுமினியம் வேறு. ஈயம் என்பது  Tin  ஆகும். ஈயம் உடலுக்கு கெடுதல் செய்யக்கூடியது அல்ல.  Lead  அதாவது காரீயம் கெடுதல் செய்வதாகும்.

காரீயம் நுண்ணிய துகள் வடிவில் காற்றில் கலந்து சுவாசிக்கும் போது உடலுக்குள் சென்றாலும் சரி, தண்ணீர் அல்லது உணவில் கலந்து உடலுக்குள் சென்றாலும் சரி உடலின் பல உறுப்புகள் பாதிக்கப்படும்

காரீயம்   குறிப்பாக குழந்தைகளுக்கு மிகவும் கெடுதல் விளைவிக்கும். காரீயம் காரணமாக மூளை வளர்ச்சி பாதிக்கப்படும். உடல் வளர்ச்சி பாதிக்கப்படும்.

பொதுவில் காரீயம் சிறு நீரகம், கல்லீரல் போன்று உடலில் பல உறுப்புகளையும் பாதிக்கக்கூடியதாகும். எலும்பு வளர்ச்சி, தசை வளர்ச்சி பாதிக்கப்படும். சில தீங்கான பொருட்கள் உடலுக்குள் சென்றால் காலப் போக்கில் வெளியே கழித்துக் கட்டப்படும். ஆனால் காரீயம் உடலுக்குள் செல்லச் செல்ல மேலும் மேலும் சேர்ந்து கொண்டே போகும்.

  இப்போது ஈயத்துக்கு வருவோம். எவர்சில்வர் எனப்படும்  Stainless Steel  வந்ததற்கு முன்னர் வீடுகளில் சமையலுக்கு பித்தளைப் பாத்திரங்களே பயன்படுத்தப்பட்டன. பித்தளைப் பாத்திரங்களில் உணவை வைத்தால் கெட்டு விடும். ஆகவே பித்தளைப் பாத்திரங்களின் உட்புறத்தில் ஈயம் பூசிப் பயன்படுத்தினர். அந்த நாட்களில் ஈயம் பூசுவதற்கு என்றே தொழிலாளர்கள் இருந்தனர். "ஈயம் பூசலையா" என்று கூவியபடி தெருவில் செல்வர். முற்றிலும் ஈயத்தால் ஆன பாத்திரங்களும் (ஈயச் சொம்பு) இருந்தன.

இதல்லாமல் ஈயம் பூசப்பட்ட தகர டப்பாக்களில் பல பொருட்களும் அடைக்கப்பட்டு விற்கப்பட்டன. ஈயம் உடலுக்கு கெடுதல் செய்கிற உலோகமே அல்ல.

ஆனால் காரீய உலோகம் நிச்சயம் கெடுதல் செய்யக்கூடியது. சிறிதளவு காரீயம் சேர்ந்தால் பரவாயில்லை என்று கூடச் சொல்ல முடியாது. எந்த உணவுப் பொருளிலும் மிகச் சிறு அளவுக்குக் கூட காரீயம் இருத்தல் ஆகாது.

ஒரு காலத்தில் வாஷ் பேசின் குழாய், தண்ணீர் குழாய் போன்றவற்றை செய்ய காரீயம் பயன்படுத்தப்பட்டது.  விளையாட்டுப் பொருட்கள் காரீயம் கலந்த பெயிண்ட் பூசப்பட்டவையாக இருந்தன. டார்ச் செல்கள் காரீயத்தில் செய்யப்பட்டவையாக இருந்தன.

இதல்லாமல் பெட்ரோலில் குறிப்பிட்ட காரணத்துக்காக சிறிதளவு காரீயம் சேர்க்கப்பட்டது. காரீயம்  தீங்கானது என்பது தெரிய வந்ததும் பெட்ரோலில் காரீயத்தைக் கலக்கக்கூடாது என்று மேலை நாடுகளில் தடை விதிக்கப்பட்டது.

அதற்குப் பல ஆண்டுகளுக்குப் பிறகு தான் இந்தியா போன்ற நாடுகளில் தடை விதிக்கப்பட்டது. உலகில் இன்னமும் சில நாடுகளில் காரீயம் கலந்த பெட்ரோல் விற்கப்படுகிறது.

ஒரு கால கட்டத்தில் காரீயம் எந்த அளவுக்கு உலகைப் பாதித்தது என்பதற்கு ஓர் உதாரணத்தைக் கூறலாம். அமெரிக்க விஞ்ஞானி கிளேர் பேட்டர்சன் பூமியின் வயதைக் கணக்கிட மிக வயதான பாறையைத் தேடினார். ஆனால்  அவர் உலகில் எந்தப் பாறையைத் தேர்ந்தெடுத்தாலும் அது காரீயத் துணுக்குகள் படிந்ததாக இருந்தது. உலகில் கார்களிலிருந்து வெளிப்படும் புகையில் அடங்கிய காரீயத் துணுக்குகள் பூமியின் பாறைகளில் படிந்திருந்ததே காரணம். கடைசியில் அவர் விண்ணிலிருந்து விழுந்த விண்கல்லை வைத்துத் தான் பூமியின் வயது சுமார் 450 கோடி ஆண்டுகள் என்று 1956 ஆம் ஆண்டு வாக்கில் கண்டுபிடித்தார்.

அதே பேட்டர்சன் பின்னர் பெட்ரோலில் காரீயத்தைத் கலப்பதைத் தடுக்க வேண்டும் என சர்வ வல்லமை படைத்த பன்னாட்டு பெட்ரோலிய எண்ணெய்க் கம்பெனிகளுக்கு எதிராக பெரிய இயக்கத்தைத் தொடங்கி அதில் வெற்றி பெற்றார்.

பெயிண்டுகளில்   குறிப்பிட்ட அளவுக்கு மேல் காரீயம் இருக்கக்கூடாது என்று அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் தடை உள்ளது. இது கண்டிப்புடன் அமலாக்கப்படுகிறது. இந்தியாவில் அப்படி இல்லை.

பெயிண்டுகளில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் காரீயம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என வெறும் அறிவுரை மட்டும் கூறப்பட்டுள்ளது. நடைமுறையில் அறிவுரை கூறப்பட்ட அளவை விட பல மடங்கு காரீயம் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதற்கிடையே பெங்களூருவைத் தலைமையிடமாகக் கொண்ட ஜார்ஜ் பவுண்டேஷன் என்னும் அமைப்பு காரீய ஆபத்து பற்றிக் கரடியாகக் கத்தி வருகிறது. 1995 ஆண்டிலிருந்து செயல்படும் அந்த அமைப்பு உடல் நலத்துக்கான செயிண்ட் ஜான்ஸ் அகாடமியுடன் சேர்த்து பல நகரங்களிலும் குழந்தைகளிடம் ரத்த பரிசோதனை நடத்தி வந்துள்ளது.

 பல நகரங்களில் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளிடம் இப்படி நடத்தப்பட்ட ரத்த சோதனைகளில் அவர்களில் 51 சதவிகிதத்தினரிடம் ரத்தத்தில் காரீய அளவு அதிகமாக இருப்பதாகக் கண்டறியப்பட்டது.

இது ஒரு புறம் இருக்க, குறிப்பிட்ட பிராண்ட் நூடுல்ஸ் மீது தடை விதிப்பதால் பிரச்சினை தீர்ந்து விடப் போவதில்லை. இந்த நூடுல்ஸ் பற்றிய டிவி விளம்பரங்களில் நடித்த பிரபலங்கள் மீது நடவடிக்கை எடுப்பதாலும் பிரச்சினை தீரப் போவதில்லை.

 சினிமாத் துறை, விளையாட்டுத் துறை பிரபலங்கள் நடிக்கும் விளம்பரங்கள் பற்றி ஒரு வார்த்தை. இவ்வித விளம்பரங்கள் பற்றி ஒரு தமிழ் டிவி சேனலில் விவாதம் நடந்தது. மாடல் அழகி ஒருவர் கலந்து கொண்டார். பிரபலங்கள் இவ்விதம் விளம்பரங்களில் நடிப்பது அவர்கள் விளம்பரப்படுத்தும் பொருட்களின் தரம் குறித்து உத்தரவாதம் அளிப்பது போல் ஆகாதா என்ற கேள்வி எழுந்தது. அந்த மாடல் அழகி உடனே பத்திரிகைகளில் வருகின்ற பல விளம்பரங்களைக் குறிப்பிட்டு, பத்திரிகைகள் அந்த விளம்பரங்களில் இடம் பெறுகின்ற பொருட்களுக்கு உத்தரவாதம் அளிப்பதாகக் கூற முடியுமா என்று பதிலுக்கு கேட்டார். நியாயமான கேள்வி.

இதில் வேடிக்கை என்னவென்றால் இவ்வித விள்ம்பரங்களில் தோன்றுகின்ற பிரபலங்கள் விளம்பரத்தில் தோன்றித்தான்  சம்பாதித்தாக வேண்டும் என்ற அவசியமில்லாத கோடீஸ்வரர்கள்.

மறுபடி நூடுஸ்ஸுக்கு வருவோம்.  நூடுல்ஸ் மாதிரி எவ்வளவோ உணவு சமாச்சாரங்கள் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு விற்கப்படுகின்றன. ஒரு மளிகைக் கடை வாசலில் தோரணங்கள் போல பாக்கெட்டுகள் தொங்கும். இவை அனைத்தும் கொரிப்பதற்கான உணவு வகைகள். இவை எல்லாம் எவ்விதக் கலப்படமும் இல்லாத தரமான தயாரிப்புகளா?

நூடுல்ஸ் போன்றவற்றைப் பலகாரமாக்கக் குறைந்தபட்சம் வெந்நீர் தயாரிக்க அடுப்பை மூட்டியாக வேண்டும். அப்படியின்றி கடையில் வாங்கியவுடன் சாப்பிடக்கூடிய கேக், ஐஸ் கிரீம் போன்று  பல வகைகள் உள்ளன. இவை அல்லாமல் ஓட்டல் பலகாரங்கள். இவற்றின் தரம் என்ன?

இவை எதுவும் வேண்டாம் என வீட்டிலேயே பலகாரம் பண்ணலாம் தான். அதற்கென மளிகைக் கடையில் மஞ்சள் பொடி, மிளகாய்ப் பொடி என பல பொருட்களை வாங்க வேண்டும். இவற்றின் தரம் என்ன? இவற்றில் கலப்படமே இல்லையா?

இந்தியாவில் உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வதற்கான பொருட்களைத் தயாரித்து அளிப்பதே பெரிய தொழிலாக மாறியுள்ளது.

ஆனால், இவற்றையெல்லாம் தடுப்பதற்கு ஒருங்கிணைந்த கடுமையான சட்டங்கள் இல்லை .மத்திய அரசிலிருந்து முனிசிபாலிடி வரை ஒவ்வொரு அதிகார அமைப்பும் வெவ்வேறான அதிகாரங்களைப் பெற்றுள்ளன. அகில இந்திய அளவில்  நாடு முழுவதுக்குமாகப் பொருந்துகிற தகுந்த ஏற்பாடு இல்லை. ஆகவே தான் ஒவ்வொரு மாநிலமும் நூடுல்ஸை சோதிக்க தனித்தனியே நடவடிக்கை எடுக்கிறது. 

மொத்தத்தில் பிரச்சினை நூடுல்ஸோடு மட்டும் நிற்பதல்ல. பிரச்சினை நூடுல்ஸை விட அதிக சிக்கல் கொண்டது.
நன்றி:அறிவியல்புரம்.


=======================================================================
ஸ்டாலின் 

ஒவ்வொரு முறை நெருக்கடியில் சிக்கும்போதும் ரஷ்ய மக்களின் நினைவு ஜோசப் ஸ்டாலினையே நோக்கிச் செல்கிறது என்று அல்ஜசீரா செய்தி நிறுவனத்தின் ஆய்வு தெரிவிக்கிறது.
அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிராகத் தொடர்ந்து செய்திகளை வெளியிட்டு வந்தாலும், அல்ஜசீரா செய்தி நிறுவனம் கம்யூனிச எதிர்ப்பு செய்திகளுக்கும் முக்கியத்துவம் தருவது வழக்கம். 
இந்த ஆய்வையும் ஸ்டாலினுக்கு எதிரான கருத்துக்களை பரப்புவதற்கு பயன்படுத்தும் முயற்சியாகவே அந்த நிறுவனம் மேற்கொண்டது. ஆனால், ஆய்வு விபரங்கள் ஸ்டாலின் மீதான மதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது என்பதைத்தான் காட்டியது.
குறிப்பாக, விளாடிமிர் புடின் ஆட்சிக்காலத்தில் ஸ்டாலின் ஆதரவாளர்கள் குரல் பெருகியுள்ளது, வலுவாகியுள்ளது என்று ஆய்வு தெரிவிக்கிறது.லட்சக்கணக்கான ரஷ்ய மக்களின் ஆதரவு மட்டுமின்றி, கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக இருந்தபொதுப்பணியில் ஈடுபட்ட தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உயர் அதிகாரிகள் மற்றும்கிறித்தவ தேவாலயக் குருமார்கள் சிலர் கூடஸ்டாலினுக்கு ஆதரவு தெரிவிக்கத் துவங்கியுள்ளனர்.
ஸ்டாலினைப் பற்றி மேற்கத்திய ஊடகங்களில் வெளியான ஏராளமான புரட்டுச் செய்திகளைக் கூட மேற்கோள்காட்டி, அப்படிப்பட்ட நபரையே மக்கள் ஆதரிக்கத் துவங்கி விட்டார்கள் என்று அல்ஜசீரா செய்தி தனது ஆதங்கத்தைப் பதிவு செய்துள்ளது.
ஆனால், இதேபோன்ற ஆய்வு சில ஆண்டுகளுக்கு முன்பாகவும் வெளியானது. அதிலும் லெனினையும், ஸ்டாலினையும் உயர்த்திப் பிடிப்பது ரஷ்யாவில் அதிகரித்திருக்கிறது என்றுதான் தெரிய வந்தது. 
தற்போது மேலும் அதிகரித்துள்ளது.மக்களிடம் ஸ்டாலினுக்குக் கிடைத்து வரும் ஆதரவு ஆளும் விளாடிமிர் புடின் அரசு மீதே தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.கடந்த மாதம் மே 9 ஆம் தேதியன்று நாஜி ஜெர்மனி மீதான சோவியத்தின் வெற்றியைக் கொண்டாடும் வகையில் 70வது ஆண்டு நிறைவு விழாவை அரசு நடத்தியது. 
அப்போது, அரசு ஊடகங்களில் வெற்றியைக் கொண்டாடும் செய்திகள், கட்டுரைகளோடு, அதை சாத்தியமாக்கிய ஸ்டாலின் பற்றியும் ஏராளமான செய்திகள் வெளி யிடப்பட்டன.
கடந்த ஆண்டு உக்ரைனிலிருந்து கிரீமியாவை ரஷ்யாவோடு இணைத்த நிகழ்வை, நாஜிகளுக்கு எதிரான வெற்றியோடு ஒப்பிட்டு மகிழ்ந்து கொண்டது விளாடிமிர் புடினின் நிர்வாகம். அரசு ஊடகங்கள் ஸ்டாலினோடு, விளாடிமிர் புடினை பொருத்தி பல செய்திகளை வெளியிட்டுக் கொண்டன.
கிரீமியாவில் ஸ்டாலின் அமர்ந்திருக்கும் சிலையொன்றையும் அமைத்து பிப்ரவரி மாதத்தில் திறந்தனர். சோவியத் யூனியன் சிதறுண்டபிறகு, ஸ்டாலின் சிலையை வைப்பதற்கு இங்குதான் முதன்முறையாக அனுமதி அளித்துள்ளனர். 
அந்த சிலையில் ஸ்டாலினோடு அமெரிக்க அதிபர் ரூஸ் வெல்ட் மற்றும் பிரிட்டன் பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் ஆகிய இருவரும் அமர்ந்திருப்பதுபோன்று வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
கிரீமியாவின் யால்டா நகரில் அமைக்கப்பட்டுள்ள இந்த சிலைக்கு கிரீமிய மக்களிடம் பெருத்த வரவேற்பு கிடைத்திருக்கிறது. இரண்டாம் உலகப்போருக்குப் பின் நடந்த நிகழ்வுகளை யால்டாவில் இந்த மூன்று தலைவர்களும் நடத்திய பேச்சுவார்த்தைதான் தீர்மானித்தது. 
அதை நினைவுகூரும் வகையில்தான் இந்த சிலை அமைக்கப்பட்டிருக்கிறது.
எங்கும் ஸ்டாலின்
மனித உரிமைகள் அமைப்பு என்ற பெயரில் கம்யூனிச எதிர்ப்பாளர்கள் சிலர், ஸ்டாலினின் சிலைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், புடினின் அரசோ மக்களின் கோபத்துக்கு ஆளாக வேண்டாம் என்று கருதி அனுமதி வழங்கியது. கடந்த சில மாதங்களாக, சுவரொட்டிகள், பதாகைகள், பேருந்துகள் மற்றும் ரஷ்யாவின் பல நகரங்களில் ஸ்டாலினின் முகங்கள் பளிச்சென்று தெரிகின்றன. 
ஸ்டாலின் பற்றிப் பேசுவதற்கு இருந்த தயக்கத்தைப் பலர் உதறிவிட்டதை பேருந்துகளில், ஓட்டல்களில், ரயில்களில், அலுவலகங்களில் நடைபெறும் உரையாடல்கள் காட்டுகின்றன.கருத்துக் கணிப்புகளில் ஸ்டாலின் மதிப்பு பெருமளவில் உயர்ந்திருப்பது தெரிய வருகிறது.
ஸ்டாலினைப் பற்றி எப்போதும் எதிர்மறையான ஆய்வுகளை மேற்கொள்ளும் லெவாடா மையத்தின் ஆய்வில் கூட, 2008 ஆம் ஆண்டில்ஸ்டாலினுக்கு 27 சதவிகிதத்தினர் ஆதரவு தெரிவித் தனர் என்றும், தற்போது அது 45 சதவிகிதமாக உயர்ந்துள்ளது என்று வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஸ்டாலினின் தவறுகளை விட, அவரது சாதனைகள் அளப்பரியது என்று ஐந்தில் மூன்று பேர் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள். இத்தகைய கருத்துக்கள்தான், இதுவரை இல்லாத அளவுக்கு வெற்றிப் பேரணியைக் கொண்டாடுவதில் போய் நிறுத்தியிருக்கிறது. 
அதில் ஸ்டாலினின் பங்களிப்பை மறுக்க முடியவில்லை.
                                                                                                                                                                                                  -கணேஷ்
========================================================================
இன்று,
ஜூன்-05.

  • உலக சுற்றுச்சூழல் தினம்
  • டென்மார்க் அரசியல் நிர்ணய தினம்
  • முதலாவது தனிக்கணினியான ஆப்பிள் 2 விற்பனைக்கு வந்தது(1977)
  • சிங்கப்பூரின் முதலாவது அரசு பதவியேற்றது(1959)


========================================================================
முப்பாட்டன் முருகனுக்கு வேல் தூக்கியும் சைமனால் தமிழர்களை ஏமாற்ற முடியலையே?
பொய் சொல்ல அஞ்சாத இவர் இதுவரை பேசியவைகளில் 8.15 சதவிகிதம் மட்டுமே பொய்யாக இருக்கலாம் என்று இவரை விட்டு விடலாமா?

தீக்குளிக்கும் இனிய நாள் என்றோ?
============================================================================================= 

 மேகி நூடுல்ஸில் குறிப்பிட்ட அளவைவிட அதிக அளவில் காரீயம் இருப்பதாக வந்த செய்திகளையடுத்து, தமிழகத்திலும் உணவுப் பொருள் மற்றும் மருந்து நிர்வாகத் துறை ஆய்வுகளை மேற்கொண்டதாகக் கூறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் 65 மாதிரிகள் சோதனைக்காக எடுக்கப்பட்டன. சென்னையில் மட்டும் 17 மாதிரிகள் சோதனைக்கு எடுக்கப்பட்டன. இவற்றில் 7 மாதிரிகளுக்கான சோதனை முடிவுகள் பெறப்பட்டுள்ளதாகவும் அதில், 6 மாதிரிகளில் காரீயத்தின் அளவு, உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள அளவைவிட அதிகமாக இருப்பதாக தெரியவந்துள்ளது என தமிழக அரசு கூறியுள்ளது.
4 பிராண்டுகளுக்குத் தடை
நெஸ்லே நிறுவனத்தின் மேகி, வை வை எக்ஸ்பிரஸ் நூடுல்ஸ், ரிலையன்ஸ் செலக்ட் இன்ஸ்டண்ட் நூடுல்ஸ், ஸ்மித் அண்ட் ஜோன்ஸ் சிக்கன் மசாலா நூடுல்ஸ் ஆகியவற்றில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட காரீயத்தின் அளவு அதிகமாக இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது என தமிழக அரசின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, 2006ஆம் ஆண்டின் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டத்தின் படி இந்த நூடுல்ஸ்களை தமிழகத்தில் தயாரிக்க, சேமித்துவைக்க, விற்பனை செய்ய மூன்று மாதங்களுக்குத் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் கடைகளிலிருந்து இந்த நூடுல்ஸ்களைத் திரும்பப் பெறவும் அரசு உத்தரவிட்டுள்ளது.
கடைகளில் விற்கப்படும் உடனடி நூடுல்ஸ்களில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட காரீயமும் மோனோ சோடியம் க்ளூடோமேட் என்ற உப்பும் அதிகமாக இருப்பதாக செய்திகள் வெளிவந்ததையடுத்து, தில்லி, உத்தராகண்ட், காஷ்மீர், கேரளா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்கள் ஏற்கனவே  மேகி நூடுல்ஸ் விற்பனைக்குத் தடைவிதித்தன.
அசாமில் மேகி ஆய்வு.
========================================================================
அருண்ஜெட்லியின் பலமுகங்கள்.


மத்தியில்ஆளும் பாஜக அரசின் நிதி மற்றும் தகவல் ஒலிபரப்புத்துறைகளின் அமைச்சராகவும், பா.ஜ.க.வின் முடி வெடுக்கும் அதிகாரம்கொண்ட மூவர்குழுவில் மோடி, அமித்ஷா வுடன் மூன்றாவது இடத்திலும் உள்ள அருண்ஜெட்லி தன்வாழ் நாள்முழுவதும் இரட்டைவேடதாரியாக விளங்கி வருபவர் என்பதை ‘தி கேரவன்’ ஆங்கில ஏடு ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியுள்ளது.

நிலக்கரி ஒதுக்கீட்டில்

2012ல் இவர் மாநிலங்களவையில் பாஜக எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். அப்போது மன்மோகன்சிங் அரசில், நிலக் கரி ஒதுக்கீடு பற்றிய புகார் எழுந்தது. மாநிலங் களவை எதிர்க்கட்சித்தலைவராக இருந்த இவர், மக்களவை எதிர்க்கட்சித்தலைவராக இருந்த சுஷ்மா ஸ்வராஜூடன் இணைந்து கடுமையான அறிக்கை ஒன்றை வெளியிட் டார்.
 “நாங்கள் நாடாளுமன்றத்தை நடத்த விட மாட்டோம். 
இது வெறும் அரசியல் பிரச்சனை மட்டுமல்ல. பொதுமக்களின் மகத் தான நன்மைக்காக நமது பொருளாதார ஆதாரவளங்களைப் பாதுகாக்கும் போராட் டம்” என்று முழங்கினார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம், ‘தன்னிச்சையானது’, ‘பாரபட்சமானது’, ‘ஊழல்’ என்றெல்லாம் வர்ணித்தார். ‘தி இந்து’ நாளேட்டில் `பாதுகாக்கஇயலாதவற்றைப் பாதுகாக்க’ என்று கூறி அரசுக்கு இழப்பு ஏற்படுவதைச் சகித்துக் கொள்ளமுடியாது என்றார். இது அவரது ஒருமுகம்!
கார்ப்பரேட்களின் நண்பராக

ஆனால் இதற்குச் சில ஆண்டுகள்முன் ’ஸ்ட்ராஜெடிக் எனர்ஜி டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட்’ என்ற டாடா சன்ஸ் மற்றும் தென் ஆப்பிரிக்க நிறுவனங்களின் மாபெரும் கூட்டு நிறுவனத்துக்கு அதன் வழக்கறிஞர் என்ற முறையில் அற்புதமான சட்ட ஆலோசனைகளை வழங்கினார்.
 2008ல் அந்த நிறுவனம் நிலக்கரி ஒதுக் கீட்டுக்கு விண்ணப்பித்தபோது அதனால் மிகப்பெரும் லாபத்தைப் பெறவுள்ள அந்தநிறுவனம் தனது லாபத்தில் ஒருபகுதியை அரசுக்கு அளிக்கலாமா? 
எனச் சட்ட ஆலோசனை கேட்டது. ’பொதுமக்களின் மகத்தான நன்மைக்காக நமது பொருளாதார ஆதாரவளங்களைப் பாதுகாக்கும்’ இந்தப்புண்ணியவான் தனது 21பக்க ஆலோசனையில், ‘சட்டப்பூர்வமாகத் தனது லாபத்தை அந்த நிறுவனம் அரசுடன் பகிர்ந்துகொள்ள வேண்டிய அவசிய மில்லை’ என்றார் -இது அவரது இன்னொரு முகம்!

பிரசார் பாரதியில்

இந்திய நாட்டில் அரசின் கட்டுப்பாட்டிலிருந்து விலகிச்சுதந்திரமாகச் செயல்படும் அமைப் பாக நீதித்துறை உள்ளது. அதுபோலவே ‘தூர்தர்ஷன்’, ‘ஆல் இண்டியா ரேடியோ’ என்ற தகவல் ஒலி/ஒளிபரப்புத்துறை நிறுவனங்கள் இதுவரை செயல்பட்டு வந்தன. இவற்றின் சிறகுகளை வெட்டிக் கூண்டுப்பறவையாக்கும் முயற்சியில் இப்போது அருண்ஜெட்லி இறங்கியுள்ளார். 
பிர சார் பாரதியின் தலைவராக சூர்ய பிரகாஷூம், முதன்மைச் செயல் அலுவலராக ஜவஹர் சர்க்காரும் உள்ளார்கள் ‘பிரசார்பாரதி சட்டப் பிரிவின்படி தூர்தர்ஷன், ஆல் இண்டிய ரேடி யோ போன்றவற்றில் டைரக்டர் ஜெனரல் உள்ளிட்ட அனைத்துப் பதவிகளுக்கும் நியமனக்குழுவைக் கலந்து நியமிக்கும் அதிகாரம் பிரசார் பாரதியினுடையது.
 பிரசார் பாரதி யின் சுதந்திரமான செயல்பாட்டைப் பறித்துஅதன் சிறகுகளைவெட்டித் தனதுகருத்துக் களைமட்டுமே ஒளி/ஒலிபரப்பும் கூண்டுக் கிளியாக மாற்ற முனைந்துள்ளார் அருண் ஜெட்லி.

வீணாஜெயின் நியமனம்

தூர்தர்ஷன் செய்தித்துறையின் டைரக்டர் ஜெனரலாக வீணாஜெயின் என்பவரை அருண்ஜெட்லி தன்னிச்சையாக விதிகளை மீறி நேரடியாக நியமனம் செய்துள்ளார். 
இந்த நியமனத்துக்கான உத்தரவின் நகல் கூட பிரசார்பாரதியின் தலைவருக்கு அனுப் பப்படவில்லை. அதுமட்டுமல்லாமல் ஏப்ரல் 30 அன்று எல்லா வானொலிநிலையங் களுக்கும் `அந்த நிலையங்கள் ஒலிபரப்பும் எல்லா நிகழ்ச்சிகளின் உள்ளடக்கங்களை யும் தகவல் ஒலிபரப்புத்துறை அமைச்சகத்துக்கு அனுப்பவேண்டும்’ என்றும் `அவற்றின்மீது அமைச்சகம் அளிக்கும் விளக்கங்களுக்கேற்பச் செயல்படவேண்டும்’ என்றும் ஓர் உத்தரவுசுற்றறிக்கையாக அனுப்பிவைக்கப்பட்டுள் ளது. 
இது தனது அரசு, எதைப்பொதுமக்கள் கேட்கவேண்டும் என்று கருதுகிறதோ அதை மட்டுமே ஒலிபரப்பச் செய்யும் தந்திரமாக அருண்ஜெட்லி கையாண்டுள்ளார். இது அருண்ஜெட்லியின் ஒருமுகம்!
எல்லாம் சட்டப்படியே...! 
பிரசார் பாரதியின் தலைவர் சூர்யபிரகாஷ் பிரசார்பாரதி சட்டத்திற்கு முரணான இந்தநடவடிக்கைகளை மறுபரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார். தேசிய வரலாற்று ஆய்வுக்கழகத்தின் தலைவராக ஒய்.சுதர்சன்ராவையும், பாடத்திட்டக் குழுவில் மாமேதை(!) தீனநாத் பாத்ராவையும் நியமித்ததுபோல பிரசார்பாரதிக்கும் ஆர்.எஸ்.எஸ்-ன் கையாள் ஒருவரைத் தலைவராகக் கொண்டுவர அருண்ஜெட்லி முயற்சிக்கக் கூடும். ஆனால் அவர் வெளியே என்ன கூறுகிறார்? 
`நாங்கள் ஊழலுக்கு அப்பாற் பட்டவர்கள். சட்டத்தின்படியே எங்கள் செயல்பாடுகள் இருந்துவருகின்றன. நீதி மன்றம் மற்றும் பிரசார்பாரதி உள்ளிட்ட எல்லா நிறுவனங்களும் சுதந்திரமாக இயங்குவதை நாங்கள் உறுதிப்படுத்தியுள்ளோம்” 
இது ‘இந்தப் பூனையும் பால் குடிக்குமா?’ 
என்பதுபோன்ற அப்பாவித் தோற்றம் காட்டும்அருண்ஜெட்லியின்  இன்னொரு மதவெறி முகம்!

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?