இடுகைகள்

ஜூலை, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

உணவு முழுக்க விசம் !

படம்
ரசாயன மய  விளை நிலங்கள்,? மக்களின் ஆரோக்கியத்தைக் கெடுத்துக் கொண்டிருக்கும் பூச்சிக்கொல்லிகளும் ரசாயன உரங்களும் விளைநிலங்களை மட்டும் விட்டு வைக்குமா என்ன?தமிழக அரசு நடத்தியிருக்கும் மண்வள ஆய்வு ஒன்றில், நச்சுத்தன்மை கொண்டதாக விளைநிலங்கள் மாறியிருப்பது தெரிய வந்துள்ளது. இதே நிலை தொடர்ந்தால் உணவுப் பொருள் உற்பத்திக்கே தகுதியற்ற மாநிலமாக தமிழகம் மாறிவிடலாம் என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.  ஏற்கெனவே, வளைகுடா நாடுகளிலும் ஐரோப்பிய நாடுகளிலும் நம்முடைய உணவுப் பொருட்கள் தரமற்றவை என்ற சர்ச்சை யில் இருக்கிறது. சமீபத்தில், ‘தமிழக காய்கறிகளில் நச்சுத்தன்மை அதிகம்’ என்று தமிழக விளைபொருட்களை வாங்க மறுத்ததுடன், தமிழக அரசுக்கு கடிதமும் அனுப்பியிருக்கிறது கேரள அரசு. ரசாயன உணவுகளாலேயே பல்வேறு பாதிப்புகளுக்கு நாம் ஆளாகி வரும் நிலையில், விளைநிலமே நஞ்சாகி இருப்பது என்னென்ன விளைவுகளை உண்டாக்கும் என இதய சிகிச்சை மருத்துவரான முகுந்தனிடம் கேட்டோம்.   ‘‘காய்கறிகளில் கலக்கிற பூச்சிக் கொல்லிகளும், ரசாயனங்களும் Micronutrients என்கிற நுண்சத்துகளை முழுமையாக அழித்துவிட்டன. குறிப்பாக மாலிப்டினம் (Molybdenum), செல

லேப்டாப் உபயோகிப்பதால் ஆண்மைக் குறைபாடு ஏற்படுமா?

படம்
இன்றைய தேதியில், மாணவர்கள் எல்லாவற்றையும் லேப்டாப்பிலேயே செய்து முடித்துவிடுகிறார்கள். ‘எலெக்ட்ரானிக்ஸ் புக்ஸ்’ என்கிற ட்ரெண்ட் இன்னும் விரிவாகப் போகிறது என்று நிச்சயமாக நினைக்கிறேன்’ என்கிறார் அமெரிக்க உளவியல் நிபுணர் ஸ்டீவன் பிங்கர்.  ப தமிழக அரசு வரிந்து கட்டிக் கொண்டு, மாணவர்களுக்கு லேப்டாப்புகளை இலவசமாக வழங்கிக் கொண்டிருக்கிறது.  இன்னொரு பக்கம் அவசியமோ, இல்லையோ அதை வைத்திருப்பதே ஃபேஷனாகி வருகிறது.  சினிமா தியேட்டரில் பாப்கார்ன் கொறிக்கிற இடைவேளையில் கூட மடியில் வைத்து லேப்டாப் உபயோகிக்கிற ஆசாமிகளைப் பார்க்கலாம்.  அது விந்தணுக்களை பாதித்து, குழந்தை பாக்கியத்தையே தடுத்துவிடும் என்பது அவர்களுக்குத் தெரிவதில்லை... பாவம்!  ‘லேப்டாப்போடு ஒரே ஒரு மணி நேரம் செலவழிக்கும் போது அதில் உற்பத்தியாகும் வெப்பம் இடுப்பை தாக்கி, விரைகளின் வெப்பநிலையை அதிகபட்சமாக3 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகமாக்கிவிடும். அது மிக மோசமாக விந்தணு உற்பத்தியை பாதிக்கலாம்’ என்கிறது ஸ்டேட் யுனிவர்சிட்டி ஆஃப் நியூயார்க் அறிக்கை ஒன்று.  ‘இது சாத்தியம்தானா?’  ‘‘பொதுவா, விந்தணு உற்பத்தி என்பது சாதாரண டெம்பரேச்சர்

ஒளிரும் இந்தியா

படம்
2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெ டுப்பின்படி சமூக, பொருளாதார மற்றும் சாதிய அடிப்படையிலான சில உண்மைகள் நம் கவனத்திற்கு: இந்தியாவில் உள்ள மொத்த தலித் குடும்பங் களின் எண்ணிக்கை 4,42,26,917.இதில் 74 சதத்திற்கும் அதிகமான குடும்பங்கள் கிராமப்புற இந்தியாவில் தான் வசிக்கின்றன.. மீதமுள்ள 26 சதத்திற்கும் குறைவான குடும்பங்கள் தான் நகர்ப்புற இந்தியாவில் வசிக்கின்றன.எண்ணிக்கையில் சொல்வதானால், 3,29,19,665 தலித் குடும்பங்கள் கிராமப்புறத்திலும், 1,13,07,252 தலித் குடும்பங்கள் நகர்ப்புறத்திலும் வசிக்கின்றன. அதே போல இன்னொரு கவனிக்க வேண்டியஅம்சம் என்னவென்றால், மொத்தமுள்ள தலித் மக்களில் 60 சதமானம் பேர் இந்தியாவில் உள்ள 6 மாநிலங்களில் மட்டும் வசிக்கின்றனர்.  உத்தரப்பிரதேசத்தில் 76.49 லட்சம் குடும்பங்களும், மேற்கு வங்கத்தில் 51.40 குடும்பங்களும், தமிழ் நாட்டில் 37.59 லட்சம் குடும்பங்களும், ஒன்றுபட்ட ஆந்திராவில் 36.71 குடும்பங்களும், மகாராஷ்டிராவில் 33.11 லட்சம் குடும்பங்களும், பீகாரில் 32.30 லட்சம் குடும்பங்களும் வசிக்கின்றன. இன்றைக்கும் தண்ணீருக்கு அடிபம்பினை நம்பி வாழும் தலித் குட

காலை எழுந்தவுடன்

படம்
  தினமும் காலையில் எழுந்தவுடன் வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பது நல்லது என பலரும் கூறியது கேள்விப்பட்டிருப்போம். ஆம், தண்ணீர் குடிப்பதால் எண்ணற்ற நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கலாம். தினமும் தண்ணீர் குடிப்பதால் வயிறு சுத்தமாவதுடன், உடலில் உள்ள நச்சுக்கள் சிறுநீர், மலம் மூலம் வெளியேறிவிடும். பெரும்பாலான நபர்களுக்கு உடலில் நீர்ச்சத்து குறையும்போது தான் தலைவலி ஏற்படுகிறது, அத்தகைய நபர்கள் தினமும் தண்ணீர் குடித்து வருவது நல்லது. குறிப்பாக காலையில் அவசர அவசரமாக வேலைக்கு கிளம்பும் நபர்கள், சாப்பிடாமல் செல்வது வழக்கமாகிவிட்டது. இவர்கள் தினமும் தண்ணீர் குடிக்கும் போது பசி எடுப்பதுடன் அல்சர் தொல்லையிலிருந்து தப்பிக்கலாம். வெதுவெதுப்பான தண்ணீரை குடித்தால் உடலின் மெட்டாபாலிசம் அதிகரிப்பதுடன், உண்ணும் உணவு விரைவில் செரிமானமாகி விடும். மேலும் இரத்த சிவப்பணுக்களின் வளர்ச்சியானது அதிகரித்து, இரத்தமானது அதிகப்படியான ஆக்சிஜனை கொண்டிருப்பதால் உடலானது எனர்ஜியுடன் இருக்கும். எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த வரப்பிரசாதம் என்றே சொல்லலாம். முகமும் பொலிவுடன் இருப்பதுடன், பர

தொ[ல்]லை நோக்கு

படம்
சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் இருப்பு 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்து விட்டது. சென்னையில், 2003இல் இருந்த குடிநீர்ப் பிரச்சினை தற்போது எழுந்துள்ள தாகவும், முடிந்த அளவு தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க முயல்வதாகவும் சென்னை குடிநீர் வாரியமே குடிநீர்த் தட்டுப்பாட்டுக்கு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளது. சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் “சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் இருப்பு 15 ஆண்டு களில் இல்லாத அளவுக்குக் குறைந்து விட்டது. தற்போதைய இருப ்பு மொத்த கொள்ளளவில் 10 சதவிகிதம் தான்”என்று தெரிவித்துள்ளனர். இதிலிருந்தே குடிநீர்ப் பிரச்சினை எவ்வளவு பெரிதாக எழுந்துள்ளது என்பதைப் புரிந்து கொள்ளலாம். சென்னை குடிநீர் வாரியம் முன்பு 83 கோடி லிட்டர் குடிநீரை வினியோகித்தது. ஆனால் கடந்த இரண்டாண்டுகளாக 55 கோடி லிட்டர் குடிநீர் தான் நகர் முழுவதும் விநியோகிக்கப்பட்டு வருகிறது. தற்போது இதற்கும் சிக்கல் வந்து விட்டது. ஒரு நாள் விட்டு ஒரு நாள் தான் பல பகுதிகளுக்கு தண்ணீர் விடப்படுகிறது. தாய்மார்கள் காலிக் குடங்களுடன் குடிநீருக்காக அலையும் அவல நி

சின்ன ,சின்னஅழகுக் குறிப்புகள்.

படம்
அந்தக் காலத்தில் சாதாரணமாக ஏரி, குளங்களில் குளிக்கச் செல்லும் பெண்கள், இலையும் பூவுமாய் இருக்கும் ஆவாரம் செடியிலிருந்து ஒரு கொத்தை உடைத்து  நசுக்கித் தலையில் தேய்த்துக் குளிப்பார்கள்.  எள்ளுச் செடியும் இதற்குப் பயன்படும்.  கூந்தல் பூப்போல மென்மையாக மிளிறும். நவீனத்தின் தாக்கத்தில் ஷாம்புவுக்கும் விதவிதமான பசைகளுக்கும் மாறிய பெண்கள், அவற்றின் பக்க விளைவுகளை அறிந்துகொண்டு மீண்டும் பாரம்பரிய வழியில் அழகைக் காப்பாற்றிக்கொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள். காரணம், பக்க விளைவுகள் எதுவும் இல்லை. செலவும் கைக்குள் இருக்கும்! கஸ் தூரி மஞ்சள், பூலாங்கிழங்கு, ரோஜா மொட்டு, சம்பங்கி விதை, தவனம், வெட்டிவேர், மகிழம்பூ, ஆவாரம்பூ, திரவியப்பட்டை இதை எல்லாம் தேவையான அளவுக்கு வாங்கி அரைத்து பயன்படுத்தலாம். தினமும் இதில் குளித்தால் சருமம் பளபளக்கும்.  கூந்தல் உதிராது.  சோப்புக்கு பதிலாக உபயோகிப்பவர்கள் கடலைப் பருப்பு, பயத்த மாவு இரண்டையும் இதில் சேர்த்துக்கொள்கிறார்கள்ஒரு சிலருக்கு வறண்ட சருமம் இருக்கும்.  சிலருக்கு சருமம் எண்ணெய்ப் பசையாய் இருக்கும். அவரவருக்குத் தகுந்த மாதிரி தனித் தனியாக மூல

5000 கோடிகள் அம்போ...?

படம்
, 2004 ஏப்ரல் முதல், மத்திய அரசும்; 2003 முதல், தமிழக அரசும், சி.பி.எஸ்., திட்டத்தை அறிமுகம் செய்தன.  இதன்படி, 2003க்குப் பின், பணியில் சேர்ந்த ஒரு லட்சம் அரசு ஊழியர்களுக்கு, சி.பி.எஸ்., திட்டப்படி, மாத அடிப்படை ஊதியம் மற்றும் தர ஊதியத்தில், 10 சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது.இதன்படி, 50 ஆயிரம் ஆசிரியர்கள் பங்களிப்பு ஓய்வூதியம் செலுத்துகின்றனர்.  இவர்களில், பள்ளிக்கல்வித் துறை கட்டுப்பாட்டிலுள்ள உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு, பொதுக் கணக்கு அலுவலகம்; தொடக்கப் பள்ளி, உள்ளாட்சி நிர்வாகப் பள்ளி ஆசிரியர்களுக்கு, சென்னை அரசு தகவல் தொகுப்பு மையத்தில், பங்களிப்பு ஓய்வூதியத் திட்ட எண் பராமரிக்கப்படுகிறது. இதில் தான்,  தமிழ் நாடு அரசு செயல்படாமல் சில ஆண்டுகளாக பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.  தொடக்க மற்றும் உள்ளாட்சி பள்ளிகளில் பதவி உயர்வு பெற்று, பள்ளிக் கல்வித்துறையின் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு செல்வோருக்கு, பழைய பங்களிப்பு கணக்கு எண் கைவிடப்பட்டு, பொதுக் கணக்கு அலுவலகத்தில் புதிய எண் துவங்கப்படுகிறது.  இதனால்,  பல ஆண்டுகள் பணம் கட்டிய, அந்த ஓய்வூதியக்