தொ[ல்]லை நோக்கு

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் இருப்பு 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் குறைந்து விட்டது.
சென்னையில், 2003இல் இருந்த குடிநீர்ப் பிரச்சினை தற்போது எழுந்துள்ள தாகவும், முடிந்த அளவு தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க முயல்வதாகவும் சென்னை குடிநீர் வாரியமே குடிநீர்த் தட்டுப்பாட்டுக்கு ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளது. சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் “சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் இருப்பு 15 ஆண்டு களில் இல்லாத அளவுக்குக் குறைந்து விட்டது. தற்போதைய இருப்பு மொத்த கொள்ளளவில் 10 சதவிகிதம் தான்”என்று தெரிவித்துள்ளனர். இதிலிருந்தே
குடிநீர்ப் பிரச்சினை எவ்வளவு பெரிதாக எழுந்துள்ளது என்பதைப் புரிந்து கொள்ளலாம். சென்னை குடிநீர் வாரியம் முன்பு 83 கோடி லிட்டர் குடிநீரை வினியோகித்தது. ஆனால் கடந்த இரண்டாண்டுகளாக 55 கோடி லிட்டர் குடிநீர் தான் நகர் முழுவதும் விநியோகிக்கப்பட்டு வருகிறது. தற்போது இதற்கும் சிக்கல் வந்து விட்டது. ஒரு நாள் விட்டு ஒரு நாள் தான் பல பகுதிகளுக்கு தண்ணீர் விடப்படுகிறது. தாய்மார்கள் காலிக் குடங்களுடன் குடிநீருக்காக அலையும் அவல நிலை தான் தற்போது எங்கும் நிறைந்துள்ளது.

தி.மு. கழக ஆட்சியில் நெம்மேலியில் தொடங்கப்பட்ட கடல்நீரைக் குடி நீராக்கும் நிலையம் தற்போது செயல்பாட்டில் உள்ளது. ஆனால் அதற்கு அருகே, அ.தி.மு.க. ஆட்சியில் 2013இல் அறிவிக்கப்பட்ட கடல்நீரைக் குடிநீராக்கும் இரண்டு நிலையங்கள் இன்னும் தொடங்கப்படவில்லை. மத்திய அரசிடம் நிதி உதவி கோரப்பட்ட நிலையிலேயே தொங்கலில் உள்ளது.
சென்னையின் நீராதாரமான ஏரிகளில் நீர் இருப்பு கவலைக்கிடமாக உள்ளது . சென்னைக்குக் குடிநீர் வழங்கும் பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகள் வேகமாக வறண்டு வருகின்றன. இதில் சோழவரம் ஏரி முற்றிலும் வறண்டு விட்டது. வீராணம் ஏரியிலும் மூன்றில் இரண்டு பங்கு தண்ணீர் தான் உள்ளது. தற்போது அங்கிருந்து தான் சென்னைக்கு தண்ணீர் வந்து கொண்டுள்ளது. ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் வருவதும் நின்று விட்டதால், பூண்டி ஏரியின் நீர் மட்டம் 52 மில்லியன் கன அடியாகக் குறைந்து விட்டது.
குடிநீரை அதிக விலை கொடுத்துப் பொது மக்கள் வாங்குகிறார்கள். வளசரவாக்கம் பகுதியில் ஒரு குடம் தண்ணீர் ஆறு ரூபாய்க்கு விற்கப்படுகிறது”“ என்று “மாலைமலர்”“ நாளேடே செய்தி வெளியிட்டுள்ளது. சென்னை நகரில், தியாகராய நகர் பகுதியில் கடும் குடிநீர்த் தட்டுப்பாடு நிலவுவதாகவும், சிறிதளவு கிடைக்கும் குடிநீர்த் தொட்டித் தண்ணீரும் ஓட்டலுக்கு விற்கப்படுவதாகவும் செய்தி வந்துள்ளது. பல்லாவரம் நகராட்சிப் பகுதிகளில் தேவையான அளவு குடிநீர் கிடைக்காததால், 10 முதல் 15 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் கிடைக்கிறதாம். கடந்த சில தினங்களாக தொடரும், சுகாதாரமற்ற குடிநீர் வினியோகத்தால், திருவல்லிக்கேணி, ராயப்பேட்டையில் வயிற்றுப் போக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகச் செய்தி வந்துள்ளது. புளியந்தோப்புப் பகுதியில் குடிநீரில் கழிவு நீர் கலந்து வருகிறதென்று கூறி, குடிநீர் வாரிய அலுவலகத்தையே பொது மக்கள் முற்றுகையிட்டுள்ளனர். இவ்வாறு ஒவ்வொரு பகுதியைப் பற்றியும் குடிநீர்த் தட்டுப்பாட்டின் விளைவுகள் பற்றித் தொடர்ந்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளன.
ஆனால் அ.தி.மு.க. அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது? அமைச்சர் தற்போது தான் அதிகாரிகளை அழைத்துப் பேசுகிறார்! அரை மணி நேரம் மட்டுமே நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தக் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க என்ன வழி என்று பேசப்பட்டதா? “வீடியோ கான்ஃப்ரன்ஸ்”“ மூலமாக “அம்மா”“ ஏதாவது குடிநீர்த் திட்டங்களைத் திறந்து வைத்தாரா? அப்படி இல்லாவிட்டாலும், அரசு செய்தி வெளியீடாகத் தருவதற்காகவாவது ஏதாவது செய்யப்பட்டதா? ஐந்து நாட்களுக்கு ஒரு முறையோ, பத்து நாட்களுக்கு ஒரு முறையோ முதலமைச்சர் தலைமைச் செயலகத்திற்கு வருவார்; அப்படி ஒரு நாள் வரும்போதும் அதிகப் பட்சம் அரை மணி நேரம் மட்டுமே இருப்பார்; அந்த அரை மணி நேரத்தில், அமைச்சரவைக் கூட்டம், கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம், ஐந்தாறு திட்டங்களுக்கு தொடக்க விழா நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வார்! அ.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களை யெல்லாம் தலைமைச் செயலகத்திற்கே அழைத்து முதலமைச்சர் ஆலோசனை நடத்தினாராம்! மாநிலத்திலே உள்ள அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களையெல்லாம் அழைத்து முதலமைச்சர், நம் மாநிலத்திற்குத் தேவையான திட்டங்களை மத்திய அரசிடம் கேட்டுப் பெறுவதற்காக, தலைமைச் செயலகத்திலே கூட்டம் நடத்தலாம்.
ஆனால் ஒரு கட்சியின் நாடாளு மன்ற உறுப்பினர்களை மட்டும் முதலமைச்சர் தலைமைச் செயலகத்திற்கு அழைத்து நாடாளுமன்றத்தில் எப்படிப் பேசவேண்டுமென்று விவாதிப்பது முறை தானா? இல்லை, இந்த ஆட்சியில் தலைமைச் செயலகமே அ.தி.மு.க. வின் கட்சி அலுவலகம் ஆகி விட்டதா? இதைப்பற்றி யெல்லாம் கவலைப்பட யாருக்கும் நேரமில்லை. தாய்மார்களைக் கவலைப்பட வைக்கும் குடிநீர்ப் பிரச்சினை பற்றியா எங்களுக்கு அக்கறை என்று கேட்கின்ற ஆட்சியாகத் தான் இன்றைய ஆட்சி காலத்தைத் தள்ளிக் கொண்டிருக்கிறது. குடிநீர்த் தட்டுப்பாடு வரக் கூடுமென்று நான் பிப்ரவரி மாதத்திலேயே எச்சரித்த போதே நடவடிக்கை எடுத்திருந்தால், இந்தக் குடிநீர்த் தட்டுப்பாடு ஓரளவாவது தடுக்கப் பட்டிருக்கலாம் அல்லவா?
தமிழ் நாடு முழுக்க குடி நீர் தட்டுப்பாடுதான்.
ஆனாலும் இந்த குடி நீர் தட்டுப்பாடு ஆளும் அதிமுகவினரால் வேண்டும் என்றெ உருவாக்கப்படுவதாகத் தெரிகிறது.
தூத்துக்குடியில் குடி நீர் வழங்கும் தாமிரபரணி படுகையில் அதிக நீர் வரத்து இருந்தும் அதை முன் போல் மக்களுக்கு கொண்டு செல்ல மாநகராட்சி முயற்சி செய்வதில்லை.தனியார் நிறுவனங்களுக்கு[ஸ்டெர்லை,கோககோலா,ஸ்பிக் மற்றும் தொழிற்சாலைகள் ,ஓட்டல்களுக்கு ]லாரி ,லாரியாக குடி நீர் விநியோகம் மட்டும் முறையாக காசு வாங்கிக்கொண்டு நடக்கிறது.
அதேபோல் சென்னைக்கு குடி நீர் ஆதாரமான ஏரியில் மணலை கொட்டி தூர்த்து சாலை அமைக்கிறார்கள்.அதுவும் இது தனியார் கல்லூரிக்காக.
 இருக்கும் கொஞ்சம் குடி நீர் ஆதாரங்களையும் மக்கள் எதிர்ப்பையும் மீறி தூர்த்து விடும் இந்த ஆட்சி மக்களுக்கானதா?யாருக்கானது?கல்லாவில் நிரம்பும் பணம் மட்டும்தான் இப்போது ஆளும் அதிமுக ஜெயா ஆட்சிக்கு குறி.
இதே ஜெயலலிதா ஆட்சிக்கு வரும் போது நிர்வாகத்திறமை மிக்கவர் இவர் ஆட்சியில் தமிழகம் எங்கோ செல்லப்போகிறது 2020 இவரின் தொலை நோக்கு பார்வை என்றார்கள்.
உண்மைதான் 2015 லேயே 2020 இல் இருக்ககூடிய குடி நீர் தட்டுப்பாட்டை கொண்டு வந்து விட்டாரே?
இவற்றின் தொ[ல்]லை நோக்கும்,நிர்வாகத்திறமையும் யாருக்கு வரும்?
==================================================



இன்று,
ஜூலை-27.
  • த மிழறிஞர் நாவலர் சோமசுந்தர பாரதியார் பிறந்த தினம்(1879)
  • 3வது ஜெனீவா உடன்படிக்கை ஏற்பட்டது(1929)
  • பெலாரஸ், சோவியத் யூனியனில் இருந்து விடுதலையை அறிவித்தது(1990)
  • பிரெட்ரிக் பாண்டிங் தலைமையிலான டொரண்டோ பல்கலைக்கழக விஞ்ஞானிகளால் இன்சுலின் கண்டறியப்பட்டது(1921)
"திருமணம் தடைபடுவது, காதல் பிரச்சனை, ஆண்மை குறைவு போன்ற காரணங்களால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்ற மத்திய விவசாயத்துறை அமைச்சர் ராதா மோகன் சிங்கின் பேச்சு.
விவசாயிகள் பற்றி இந்த அரசு கவலைப்படவில்லை என்பதையே இது காட்டுகிறது. இந்த வருட நிதி நிலை அறிக்கையில் விவசாயிகளுக்கான நிதியை 5000 கோடி ரூபாய் குறைத்து விட்டு தங்க , வைர நகைகளுக்கு 75,592 கோடி ரூபாய் சுங்க வரி விலக்கு அளித்து, அரசு கஜானாவிற்கு நஷ்டம் ஏற்படுத்தி உள்ளது மத்திய அரசு. நாட்டில் உள்ள பெரும்பாலான மக்களின் நலன் பற்றி கவலைப்படாமல் கார்ப்ரேட்டுகளுக்காகவே மத்திய அரசு செயல்படுகிறது என்பது தெளிவாகிவிட்டது."
 - மு.க ஸ்டாலின்


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?