தொப்பையை குறைக்கும் வழி .

 இயற்கை முறை!
* கல்லீரலில் உள்ள நச்சுத்தன்மையை நீக்குவது மிகவும் அவசியமாகும். மிகவும் அழுத்தம் அடைந்த கல்லீரலால் கொழுப்புகளை கரைக்க  முடிவதில்லை. 
இதனால் கொழுப்பானது வயிற்று பகுதியில் சேர்ந்து விடுகின்றது. 
ஆனால் எலுமிச்சை சாறு சுரப்பிகளை அதிகப்படுத்தி கல்லீரலை  சுத்தம் செய்து அதன் அன்றாட வேலைகளை செய்ய உதவுகின்றது.

* குருதிநெல்லி அல்லது கிரென்பெற்றி என்று கூறப்படும் பழ வகையில் அதிக அளவு மேலிக் அமிலம், சிட்ரிக் அமிலம் ஆகியவை உள்ளன. அவை  செரிமானத்திற்கு உதவுகின்றது. 
இவை கடுமையான கொழுப்புகளை கரைத்து நிணநீர் சுரப்பிகளில் உள்ள கொழுப்புகளையும் கரைத்து உடலை  சீர்செய்கிறது. குருதிநெல்லி சாறு சர்க்கரை சேர்க்காமல் அருந்தினால் பெரும் வித்தியாசத்தை காண முடியும்.

* மீன் எண்ணெயில் ஒமேகா-3 என்ற அமிலப்பொருள் உள்ளது. மேலும் இவற்றில் உள்ள ஈகோசாபென் டோனோலிக் அமிலம், டோக்கோசா  ஹெக்சானோலிக் அமிலம் மற்றும் லினோலின்ச் அமிலம் கொழுப்பை கரைக்க உதவுகின்றது. 
மீன் எண்ணெய் கிடைக்காவிட்டால் மீன்களை  உட்கொண்டு பலன்பெறலாம்.

* பொதுவாக இஞ்சி செரிப்பதற்கு ஏதுவாக இருக்கும் என்பது தெரியும். ஆனால் அவை உடம்பில் உள்ள வெப்பத்தை அதிகப்படுத்தி கொழுப்பை கரைக்க  உதவுகின்றது என்பது எத்தனை பேருக்கு தெரியும். தொப்பை வருவதற்கு அதிகமாக சாப்பிடுவது, அதிக மனஅழுத்தம் மற்றும் குறைந்த உடற்பயிற்சி  ஆகியவை காரணமாகும்.
 இஞ்சியினால் அந்த பிரச்னைகளிலிருந்து உங்களை சுலபமாக விடுவிக்க முடியும்.

* இதயத்திற்கு மிகவும் பயன்தரக்கூடிய பூண்டு, சிஸ்டோலிக் மற்றும் டலங்டோலிக் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. 
இவை நல்ல கொழுப்பு  சத்துக்களை சேர்க்க உதவாமல் டிரைகிளிசனாடுகளை குறைக்க செய்கின்றது. இவை பெருமளவில் உடல் எடையை குறைக்க உதவும்.
===============================================
உங்கள் சிறுநீரகத்தை 
காக்க 7 வழிகள்!

1. ரத்த அழுத்தத்தைக் கண்காணித்தல்

உயர் ரத்த அழுத்தம்தான் சிறுநீரகத்தின் முதல் எதிரி. எனவே, உங்கள் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைத்திருப்பதன் மூலம் சிறுநீரகப் பாதிப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பை பெருமளவு குறைக்கலாம். மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கும் உயர் ரத்த அழுத்தமே முக்கியக் காரணம். 
சராசரி ரத்த அழுத்தம் என்பது 120/80 மில்லி மீட்டர் மெர்க்குரி (mmHg) என்று இருக்க வேண்டும். 
உங்கள் ரத்த அழுத்த அளவு 129/89 என்ற அளவில் இருந்தால், உயர் ரத்த அழுத்தத்துக்கு முந்தைய நிலையில் உள்ளீர்கள் என்று அர்த்தம். வாழ்க்கைமுறை மற்றும் உணவுக் கட்டுப்பாடு மூலம் இதைத் தவிர்க்கலாம். 
உங்கள் ரத்த அழுத்தம் 140/90 அல்லது அதற்கு மேலே இருந்தால், டாக்டரிடம் சென்று ரத்த அழுத்தத்தைக் குறைக்க ஆலோசனை பெற வேண்டும்.

2. ரத்தத்தில் சர்க்கரை அளவு


சர்க்கரை நோய் பாதிப்புக்கு ஆளானவர்களில் பாதிப்பேருக்கு சிறுநீரகப் பாதிப்பும் ஏற்படுகிறது. அதில் 30 சதவிகிதத்தினருக்கு முழுமையாக செயலிழப்பு ஏற்படுகிறது. 
எனவே, சர்க்கரை நோயாளிகள் மற்றும் மரபியல் ரீதியாக சர்க்கரை நோய் பாதிப்புக்கு ஆளாகக்கூடிய வாய்ப்பு உள்ளவர்கள் தொடர்ந்து சிறுநீரகச் செயல்பாடு குறித்தப் பரிசோதனைகளைச் செய்துகொள்வது நல்லது. 
ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருப்பது நல்லது.
3. ஆரோக்கிய உணவு மற்றும் உடல் எடைக் கட்டுப்பாடு

சத்தான சமச்சீரான உணவைச் சாப்பிட்டு, உடலைக் கட்டுக்குள் வைத்திருப்பது சிறுநீரகப் பாதிப்புடன் தொடர்புடைய சர்க்கரை நோய் மற்றும் மாரடைப்பையும் தவிர்க்கும். 
உடல் எடை அதிகரிப்பது சர்க்கரை நோய்க்கு வழிவகுத்துவிடும் என்பதால், உடல் எடையைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். ரத்த அழுத்தத்தை உப்புச் சத்து தூண்டுகிறது. எனவே, உணவில் உப்பைக் குறைத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளில் ஒருவருக்குத் தேவையான உப்பின் அளவு ஐந்தில் இருந்து ஆறு கிராம் மட்டுமே. இதைவிடவும் குறைவான அளவு உப்பு எடுத்துக்கொள்வதும் நல்லதுதான். 
பதப்படுத்தப்பட்ட மற்றும் உணவகங்களில் தயாரிக்கப்படும் உணவுகளைச் சாப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும். 

சிப்ஸ், ஊறுகாய் போன்ற உப்புச் சத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்களைத் தவிர்த்து, காய்கறி மற்றும் பழ வகைகளைச் சாப்பிட வேண்டும். இது உடம்பில் ஏற்கெனவே அதிகப்படியாகச் சேர்ந்திருக்கும் உப்பின் அளவைக் குறைப்பதற்கும் பெரிய அளவில் உதவும். ரெட் மீட்’ என்று சொல்லக்கூடிய ஆட்டிறைச்சி, மாட்டிறைச்சி போன்ற உணவுகளும் தவிர்க்கப்பட வேண்டியவையே. 
வாழைத்தண்டு சாப்பிடுவது சிறுநீரகக் கற்களை வெளியேற்றும் என்று மாற்று மருத்துவத்தில் கூறப்படுகிறது. 
வாழைத் தண்டில் உள்ள டையூரிடிக்ஸ் (Diuretics) என்கிற பொருள் அதிக சிறுநீர் கழித்தலைத் தூண்டி, சின்னச் சின்னக் கற்களை வெளியேற்றிவிடுகிறது.

4. குடிநீர் அளவு


வெப்பப் பிரதேசமான நம்முடைய நாட்டில் குறைந்தது ஒரு நாளைக்கு இரண்டரை முதல் மூன்று லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வேண்டும். 
(சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்த அளவு முறை பொருந்தாது. எனவே அவர்கள் மருத்துவர் பரிந்துரைக்கும் அளவிலேயே தண்ணீர் குடிக்க வேண்டும்). 
அதற்காக ஒரே மூச்சில் லிட்டர் கணக்கில் தண்ணீர் அருந்துவதும் தவறு. ஒரு நாளில் அவ்வப்போது அளவான முறையில் தண்ணீர் அருந்துவதுதான் சரியான முறை. 

இன்றைய சூழலில் நிறைய பேர் ஏ.சி. அறையில் உட்கார்ந்து வேலை பார்ப்பதால், அவர்களுக்கு தாகம் எடுப்பது இல்லை. ஏ.சி. அறையில் இருந்தாலும் சரி, தினமும் 2 முதல் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். 
இப்படித் தண்ணீர் குடிக்கும்போது சிறுநீரகத்தில் சோடியம், யூரியா உள்ளிட்ட நச்சுப் பொருட்கள் வெளியேற்றம் சீராக நடக்கும். 
சிறுநீரகப் பாதிப்பு வருவதற்கான வாய்ப்பும் பெருமளவில் குறையும். 
சிறுநீரகக் கற்கள் ஏற்படுவதையும் தவிர்க்கலாம்.

5. புகை பிடிக்காதீர்கள்!


புகை பிடிக்கும்போது சிறுநீரகத்துக்குச் செல்லும் ரத்தத்தின் அளவு குறையும். 
குறைந்த அளவிலான ரத்தம் சிறுநீரகத்துக்குச் செல்லும்போது, அது சிறுநீரகத்தின் செயல்பாட்டைப் பாதிக்கும். சிறுநீரகப் புற்றுநோய் மற்றும் நீர்ப்பை புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பையும் அதிகரிக்கும்.

6. சுய மருத்துவம் வேண்டாம்


மூட்டு வலி, முதுகு வலிக்கு எடுத்துக்கொள்ளும் வலி நிவாரணிகள் மற்றும் ஆன்டிபயாடிக் மருந்துகள் சிறுநீரகத்தை அதிகம் பாதிக்கும். சாதாரணமாக சிறுநீரகம் ஆரோக்கியமாக இருக்கும்போதும் அல்லது அவசரக் காலத்தின்போதும், உரிய ஆலோசனையுடன் இந்த மாத்திரைகளைச் சாப்பிடுவதில் தவறு இல்லை. ஆனால், அடிக்கடி சாப்பிட்டால் பாதிப்பு ஏற்படும். 
எனவே, நீண்ட நாட்களாக முதுகு வலி அல்லது மூட்டு வலி என்று தவிப்பவர்கள் மருத்துவரின் ஆலோசனைப் பெற்று வலி நிவாரணிகளைச் சாப்பிட வேண்டும். மாற்று மருத்துவம் என்ற பெயரில் தகுதிஇல்லாத ஒரு சிலர் தயாரிக்கும் லேகியங்களில் அதிக அளவில் உலோகங்கள் கலக்கப்படுகின்றன. 
இந்த உலோகங்கள் சிறுநீரகத்தைப் பாதிக்கக்கூடியவை. 
எனவே, கவனம் தேவை.

7. உங்கள் சிறுநீரகத்தின் செயல்பாட்டை அறிய…

சிறுநீரக நோய் வரும் என்பதை முன்கூட்டியே கண்டறிய எந்தத் தொழில்நுட்பமும் இல்லை. 
எனவே, 40 வயதைக் கடந்தவர்கள், சர்க்கரை நோயால் அவதிப்படுகிறவர்கள், உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், பருமனாக இருப்பவர்கள், மரபுரீதியான சிறுநீரகப் பிரச்னை உள்ள குடும்பங்களைச் சேர்ந்தவர்கள், சிறுநீரகத்தில் ரத்தம் கலந்து வரும் பிரச்னை உடையவர்கள் மற்றும் ஒரு முறைக்கு மேல் சிறுநீரகத் தொற்று ஏற்பட்டவர்கள்  சீரான கால இடைவெளியில், சிறுநீரகப் பரிசோதனை செய்துகொள்வது நல்லது.

ரத்தம்  சிறுநீர் பரிசோதனை மற்றும் ரத்த அழுத்தப் பரிசோதனையுடன் அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் செய்தும் சிறுநீரகச் செயல்பாட்டினைத் தெரிந்துகொள்ளலாம். இதயம், கல்லீரல் பாதிப்பு, அதிக ரத்த சோகை போன்றவையும்கூட சிறுநீரகத்தைப் பாதிக்கும். 
50 வயது கடந்த ஆண்களுக்கு விந்துச்சுரப்பியில் (ப்ராஸ்டேட்) ஏற்படும் வீக்கத்தால் சிறுநீரகப் பிரச்னை வரலாம். எனவே, இவர்கள் மருத்துவரின் ஆலோசனையை முன்கூட்டியே பெறுவது நல்லது. சிறுநீரகச் செயலிழப்பு ஏற்பட்டால், வாரத்துக்கு மூன்று நாட்கள் டயாலிசிஸ் செய்துகொள்ள வேண்டிய நிலை ஏற்படும். சில சமயம் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை அளவுக்குக்கூட இது கொண்டுபோய் விட்டுவிடும். 
எனவே, ஏழு விதிகளையும் தவறாமல் கடைப்பிடித்தால் சிறுநீரகப் பிரச்னை வராமல் காத்துக்கொள்ள முடியும்.
நன்றி:தினகரன்.
========================================================================
இன்று,
ஆகஸ்ட்-13.

  • ஹரி பிரியர்லி, துருப்பிடிக்காத எஃகுவை கண்டுபிடித்தார் (1913)
  • பாகிஸ்தான் தனது தேசிய கீதத்தை முதன் முறையாக வானொலியில் ஒலிபரப்பியது(1954)
  • மத்திய ஆப்ரிக்க குடியரசு விடுதலை தினம்(1960)
  • சர்வதேச இடது கையாளர்கள் தினம்.

  • நைட்டிங்கேல்,

நோயாளிகளின் சேவைக்கே தன் வாழ்க்கையை அர்ப்பணித்துக் கொண்ட ப்ளோரன்ஸ் நைட்டிங்கேல் நினைவு தின சிறப்பு பகிர்வு

இங்கிலாந்தின் உயர்குடியை சேர்ந்த வில்லியம் எட்வர்ட் நைட்டிங்கேல் - பிரான்சஸ் ஸ்மித் தம்பதி இத்தாலி நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பொழுது அவர்களுக்கு ஒரு அழகிய பெண் குழந்தை ப்ளோரன்ஸ் நகரில் பிறக்கவே அந்த பெண் குழந்தைக்கு அப்பெயரையே சூட்டினார்கள். பருவ வயது வந்ததும் அவருக்கு திருமணம் செய்து வைக்க முயன்றார்கள்.

"என்னிடம் மனம் முழுக்க அன்பு செலுத்து என்கிற குரல் தான் கேட்கிறது ! அதற்கான விடை கிடைத்த பிறகு இதைப்பற்றி யோசிக்கலாம் !" என்று உறுதியாக மறுத்துவிட்டு செவிலியர் பணிப்பயிற்சியில் இவர் இணைந்தார். செவிலியர் பணி என்பது அன்றைக்கு ஏழைப்பெண்கள் மட்டுமே மேற்கொள்ளும் இழிவான தொழிலாக பார்க்கப்பட்டது. இவர் அதைப்பற்றி கவலைப்படாமல் சேவைப்பயிற்சியை முடித்தார். புன்முறுவலோடு நோயாளிகளிடம் ஆறுதல் வார்த்தை பேசினார் ; அவர்களின் காயங்களை துடைத்து மருந்து போட்டார். அவர்களுக்கு ஆறுதல் தந்தார்.
ரஷ்யா மற்றும் இங்கிலாந்து இடையே நடந்த கிரிமியன் போரில் வீரர்கள் காயம்பட்டு உதவ ஆளில்லாமல் இருக்கிறார்கள் என்று தெரிந்து முப்பத்தி எட்டு செவிலியரோடு துருக்கி போனார். அங்கே வீரர்களுக்கு உதவிகளை போர்க்களத்தில் அஞ்சாமல் செய்தார். அவர்களின் வீட்டு முகவரியை கேட்டு கடிதம் மற்றும் பணம் அனுப்பினார். இரட்டை இலக்கத்தில் இருந்த மரண சதவிகிதம் இவரால் ஐந்து சதவிகிதத்துக்கும் கீழே போனது. இரவெல்லாம் கூட கையில் விளக்கேந்தி வீரர்களுக்கு சேவை செய்ததால் அவரை கை விளக்கேந்திய காரிகை என்று போற்றினார்கள்.

திருமணமே செய்து கொள்ளாமல் தொடர்ந்து நோயாளிகளின் சேவைக்கே தன் வாழ்க்கையை அவர் அர்ப்பணித்துக்கொண்டார். அவர் எழுதிய நோட்ஸ் ஆன் நர்சிங் நூல் இன்றைக்கும் இத்துறைக்கு வருகிறவர்களுக்கு வேதநூல். பன்னிரெண்டு வருடங்கள் எழுந்து நடமாட முடியாத சூழலில் கூட செவிலியர்களின் செயல்பாடுகள் எப்படி அமையவேண்டும் என்பது போன்ற வெவ்வேறு தலைப்புகளில் இருநூறு புத்தகங்களுக்கு மேலே எழுதியவர் அவர்.

அவரின் சேவைகளை பாராட்டி வழங்கப்பட்ட ஐம்பதாயிரம் டாலரை மிகப்பெரிய நர்ஸ் பயிற்சி நிறுவனம் அமைக்க முழுக்க கொடுத்துவிட்டார் அவர். "காலம் மிகக்குறைவு ! ஆகவே,எல்லாரையும் அன்பு செய்யுங்கள் !" என்கிற தாரகமந்திரத்தை போதித்து அப்படியே தன் வாழ்க்கையை அமைத்துக்கொண்ட அவரை நினைவு கூர்வோம்.

- பூ.கொ.சரவணன்
பர்மாவில் பெய்து வரும் கன மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் இதுவரை 69 பேர் பலியாகி உள்ளனர். 
2 லட்சத்து 50 ஆயிரம் பேர் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். 
இந்நிலையில் ஐராவதி பிராந்தியத்தில் உள்ள ஹிந்தாட நகரில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் இருந்து தன்னை தற்காத்துக் கொள்ள காலியான தண்ணீர் பாட்டில்களை மிதவையாக பயன்படுத்தி தப்பிக்கும் சிறுவன்.

========================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?