ஏழாண்டுகள் நீட்டிக்கும் இளமை...,

ஒவ்வொரு நாளும் நம் உடல் நலம் பற்றிய செய்திகள் ஆய்வுகள் ஒவ்வொரு கருத்தை தருகின்றன.
ஒரு முறை காபி குடித்தால் தீங்கு என்கிறார்கள்.அடுத்து சில காலம் கழித்து காபி நம் உடலில் நோய் எதிர்ப்பை அதிகரிக்கிறது என்கிறார்கள்.ஒயின் இதயத்துக்கு நல்லது என்கிறது ஒரு ஆய்வு.
தொடர்ந்து அது ஒயின் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்ட பொய் தகவல் என்கிறது ஒரு செய்தி.
.சமீபத்தில் வெளியான ஆய்வு முடிவின்படி, தினந்தோறும் சுமார் அரை மணிநேரம் நாம் மேற்கொள்ளும் நடைப்பயிற்சி, நமது இளமையை மேலும் ஏழாண்டுகள் நீட்டிக்க வைக்கும் என்று தெரிய வந்துள்ளது.
ஆனால் இதுவரை வந்த ஆய்வு முடிவுகள்,செய்திகள் அனைத்தும் நடை பயிற்சியை நலமானதுதான் என்பதால் இச்செய்தியையும் நாம் தாராளமாக் நம்பி செயல் படலாம். 
ஐரோப்பிய இதயவியல் குழுமத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆய்வறிக்கையில், தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்து வந்தால், மாரடைப்பினால் ஏற்படும் பாதிப்பு, சரிபாதிக்கும் அதிகமாக குறைய வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த ஆய்வில் தலைமை வகித்த பேராசிரியர் சஞ்சய் ஷர்மா, ‘முதுமை தவிர்க்க முடியாத ஒரு பருவம் என்றாலும், அதனை தள்ளிப்போட இதுபோன்ற உடற்பயிற்சிகள் அவசியம்’ என்கிறார்.
மேலும், நாம் மேற்கொள்ளும் உடற்பயிற்சி சுமார் மூன்று முதல் ஏழாண்டுகளை நமது வாழ்நாளில் அதிகரிக்க உதவும் எனவும், மன அழுத்தம், புரிதிறன் செயல்பாட்டை இது கூட்டுவதால் ‘டிமென்ஷியா’ போன்ற மறதி நோய் உண்டாவதையும் தடுக்கும் என இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளதாக, அவர் கூறினார்.

அத்துடன், அந்தப் பேராசிரியர், இதய நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு அவர் ஒரு விசித்திரமான ஆலோசனை வழங்கியுள்ளார். 
அதாவது, இதய நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், ஓட்டப் பயிற்சி செய்யக்கூடாது, மாறாக மற்றவர்களிடம் பேச முடியும் வேகத்தில் நடக்க வேண்டும். அதற்காக, பாடக்கூடிய அளவிலான வேகத்தில் நடக்கக் கூடாது’ என்கிறார்.
எழுபது வயதில் நடைப்பயிற்சி மேற்கொள்வோர், பொதுவாக 80 வயதில் ஏற்படும் இதய துடிப்பில் ஏற்படும் இடையூறுப் பிரச்சனையில் இருந்து தம்மை காத்துக்கொள்ள முடியும்.
========================================================================
இன்று,
செப்டம்பர்-01.
  • சிங்கப்பூர் ஆசிரியர் தினம்
  • உஸ்பகிஸ்தான் விடுதலை தினம்(1991)
  • ரஷ்யாவின் செயிண்ட் பீட்டர்ஸ்பெர்க் நகரம் பெட்ரோகிராட் எனப் பெயர் மாற்றப்பட்டது(1914)
  • அமெரிக்க விமானப்படை பயிற்சி தளம் அமைக்கப்பட்டது(1982)
========================================================================

"பானிபூரி பயங்கரம்"

வீடுகளிலேயே இனிப்பு, காரம்  செய்து சாப்பிட்ட காலமெல்லாம் மலையேறிப்போக, தெருவுக்குத் தெரு பானிபூரி, சில்லி சிக்கன் கடைகள் முளைத்து  விற்பனையில் அசுர வளர்ச்சி கண்டிருக்கின்றன. வடமாநிலத்து உணவான பானிபூரியை நம் மக்கள் ஆரத்தழுவிக் கொண்டனர். 
சிறிய பூரிக்குள் மசாலா வைத்து, புதினா, மிளகு கலந்த ரசத்தில் மூழ்க வைத்துக் கொடுப்பதை நாம் லபக்கென ருசிக்கிறோம். அந்த ருசிக்குப் பின்னே... 

பானிபூரி சுடுவதற்கான மாவை காலில் மிதிக்கிற புகைப்படம் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பகிரப்பட்டது. அது  மட்டுமல்ல... சாலையோர தள்ளுவண்டிக்கடைகளில் பானிபூரி விற்கப்படுகிறது. சில கடைகள் சாக்கடைக்கு அருகிலேயே  இருக்கின்றன. 
சுற்றுச்சூழலே சுகாதாரமற்று இருக்கிறது. 
பூரியை பெருவிரலால் உடைத்து அதனுள் மசாலாவைத் திணித்து  புதினா நீரில் முக்கி எடுக்கின்றனர். கை பெருவிரல் நகத்தில் படிந்திருக்கும் அழுக்கு பானிபூரியிலும் ஒட்டிக்கொள்ளும்.  
இப்படியாக சுகாதாரக் குறைபாடுள்ள பானி பூரியை சாப்பிடும் நமக்கு என்ன ஆகும்? 

 கையால் உடைத்து, தண்ணீரில் முக்கிக் கொடுக்கிறவரது கை எந்த அளவு சுத்தமாக இருக்கிறது என்பதைப் பார்க்க வேண்டும்.  Hookworms, Pinworms போன்ற புழுக்கள் கைகளில் இருந்துதான் பரவுகின்றன. அதைச் சாப்பிடும்போது வயிற்றில் இப்புழுக்கள் உற்பத்தியாவதற்கான வாய்ப்புகள் அதிகம். கைகளில் பாக்டீரியா தொற்று ஏதேனும் இருந்தால் வாந்தி, வயிற்றுப்போக்கு ஆகியவைஏற்படலாம். வைரஸ் மூலம் பரவும் ‘ஹெபடைடிஸ் ஏ’ ஏற்படுவதற்கான அபாயமும் உள்ளது. 
 பூரி தயாரிப்பதற்குப் பயன்படுத்தும் எண்ணெய் எப்படிப்பட்டது என்பதும் அவசியம். எண்ணெயை ஒருமுறைதான் கொதிக்க  வைத்து பயன்படுத்த வேண்டும். நடைமுறையிலோ எண்ணெயை மீண்டும் மீண்டும் கொதிக்க வைத்துப் பயன்படுத்துகிறார்கள்.  ஒரு முறைக்கு மேல் பயன்படுத்தும்போது அந்த கெட்ட எண்ணெய் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு பாதிப்பை  ஏற்படுத்தும். 

 புதினா ரசம் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் தண்ணீர் சுகாதாரமற்றதாக இருந்தால் அது பற்பல விளைவுகளை ஏற்படுத்தும்.  எனவே தெருவோரக் கடைகளில் விற்கப்படுகிற, சுகாதாரத்துக்கு உத்தரவாதமில்லாத இத்தகைய உணவுகளைத் தவிர்ப்பது  அவசியம் .

 நொறுவை உண வுகளிலேயே அதிகம் கிருமித்தொற்று ஏற்பட வாய்ப்பிருப்பது பானி பூரியில்தான். சாலையோரக் கடைகளில் விற்கப்படும் பானிபூரிகளை சாப்பிடாமல், சுகாதாரமான முறையில் தயாரிப்பதை சாப்பிடலாம். குறிப்பாக இவற்றை குழந்தைகள் மற்றும் கர்ப்பிணிகள் அவசியம் தவிர்க்க வேண்டும். 

 மூன்று வேளை உணவு எடுத்துக் கொள்வதை 5 வேளையாக பிரித்து எடுத்துக் கொள்வது நல்லது. பொதுவாகவே  எல்லோருக்கும் மாலை வேளையில் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்து விடுவதால்தான், ஏதாவது சாப்பிடத் தோன்றுகிறது.  மாலை வேளையில் கொஞ்சம் சாப்பிடுவதை அவசியம் பின்பற்ற வேண்டும். அப்போதுதான் இரவு வேளையில் தேவையான  அளவு மட்டுமே உணவை எடுத்துக் கொள்வோம். 

 குழந்தைகள், கர்ப்பிணிகள்,சர்க்கரை நோயாளிகள் புரதச்சத்துள்ள உணவுப்பொருட்களான தயிர்வடை, பச்சைப் பயறு அடை, உளுந்தங்களி, கொண்டைக்கடலை, முளைகட்டிய பயறுகளை சாப்பிடலாம். எடை குறைக்க நினைப்பவர்கள் ஃப்ரூட் சாலட், முளைகட்டிய பயறு வகைகளை பச்சையாக சாப்பிடலாம். பானிபூரிசாப்பிடுவதால் நமக்கு எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை எனும்போது ருசிக்காக ஏன் நோயை விலை கொடுத்து வாங்க வேண்டும்?
நாம்தான் மாற்றிக்கொள்ள வேண்டும்!

                                                                                                                                         - கி.ச.திலீபன்

நன்றி:தினகரன்,
=================================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?