நான்காண்டு சாதனைகள் பட்டியல்?


தமிழ் நாட்டில் உள்ள எல்லா வாக்காளர்களையும் சந்தித்து அரசின் சாதனைகளை பட்டியலிட்டு வாக்கு சேகரிப்பில் இறங்க அதிமுக செயலாளரும்,முன்னாள் மக்களின் முதல்வரும்,இந்நாள் தமிழ் நாடு முதல்வருமான ஜெயலலிதா கூறியுள்ளார்.
தெருக்கு இரு மதுக்கடைகள் திறந்ததை விட்டால் வேறு சாதனை கண்ணுக்கெட்டிய தூரம் வரை நமக்கு தெரியவில்லை.
இலவசங்கள் கொடுக்க மதுக்கடைகள் நடத்துவதை தவிர வேறு அழியில்லை என்று அமைச்சர் பேசியுள்ளார்.
சரி .
அம்மையாரின் இந்த அறைகூவலுக்கு இலண்டனில் இருந்து தோழர் தமிழ் செல்வன்  தினமலர்நாளிதழுக்கு  வாசகர் கடிதம் எழுதியுள்ளார்.
அக்கடிதம் உங்கள் பார்வைக்கு அப்படியே :

tamilselvan 
- london,யுனைடெட் கிங்டம்
17-ஆக-201509:05:06 IST Report Abuse
tamilselvanதிமுகவின் 1996-2001ம் ஆண்டு சாதனைக்கு பதிலடியாக அம்மையாரின் இன்றைய சாதனையை பட்டியலிடலாம்..
.திமுகவின் இந்த சாதனையில் அதிமுக 1% மதிப்பெண் எடுத்தாலும் அது சாதனை தான்... திமுகவின் இந்த சாதனையில் மென்பொருள் நிறுவனங்களை தவிர்த்து நான் குறிப்பிட்டுள்ளேன்...
அம்மாவின் அடிமைகள் அம்மையார் கொண்டு வந்த மென்பொருள் நிறுவனங்கள் இருந்தால் அதையும் சேர்த்து அம்மையாரின் கடந்த 9 ஆண்டு கால ஆட்சி காலாமான 2001-06....2011-15ம் ஆண்டுகளில் அம்மையாரால் கொண்டு வரப்பட்ட தொழிற்ச்சாலைகளோடு சேர்த்து  பட்டியலிடலாம்...
 .1996-2001 ஆண்டுகளில் 118 தொழிற்சாலைகளின் மூலம் நேரடியாக 19 ஆயிரம் பேர் நேரடியாக வேலை வாய்ப்புகளைப் பெற்றுள்ளனர்..
மறைமுகமாக 1 லட்சம் பேர் வரை வேலை வாய்ப்பை பெற்றனர்..
. 91-96 அம்மையாரின், ஐந்து ஆண்டுகளில், 22 தொழிற்சாலைகள் மட்டுமே தொடங்கப்பட்டு அவற்றின் மூலம் 4,230 பேர் மட்டுமே வேலை வாய்ப்பைப் பெற்றனர்..
..தமிழகத்தில் தொழில் தொடங்குவோருக்கு ஒற்றைச் சாளர முறையில் அனுமதிகள் வழங்க புதிய விண்ணப்ப படிவம் அறிமுகப்படுத்தப்பட்டது...
.ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் இருங்காட்டுக் கோட்டையில் புதிய கார் தொழிற்சாலை ஒன்றை 2,450 கோடி ரூபாய் முதலீட்டில் ஆண்டுக்கு 1 இலட்சத்து 20,000 கார்களை உற்பத்தி செய்யும் திறனுடன் தொடங்கியது. வெளிநாடுகளுக்கு இக்கார்களை ஏற்றுமதி செய்வதின் மூலம் அன்னியச் செலாவணியும் கணிசமான அளவில் கிடைக்கிறது.
ஏறத்தாழ 2,500 தொழிலாளர்களுக்கு நேரடி வேலை வாய்ப்பினையும், 25,000 தொழிலாளர்களுக்கு மறைமுக வேலை வாய்ப்பினையும் இத்தொழிற்சாலை வழங்கியது....திருவள்ளூரில் மிட்சுபிசி லேன்சர் கார் தொழிற்சாலை ஆண்டுக்கு ஒரு லட்சம் கார் தயாரித்திடும் ஆற்றலுடன், ஏறத்தாழ 320 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டது. 14.4.1998 அன்று உற்பத்தியைத் தொடங்கியது.
800 பேருக்கு மேல் நேரடி வேலை வாய்ப்பையும், 6,400 பேருக்கு மேல் மறைமுக வேலை வாய்ப்பையும் அளித்துள்ளது....ஃபோர்டு மோட்டார் தொழிற்சாலை மறைமலைநகரில் 1700 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட்டது. இந்நிறுவனம் ஆண்டுக்கு 1 லட்சம் கார்களைத் தயாரித்திடும் திறனுடன் 19.3.1999 அன்று தொடங்கிவைக்கப்பட்டது.
இதன் மூலம் 2000 பேருக்கு மேல் நேரடி வேலை வாய்ப்பும் 10,000 பேருக்கு மேல் மறைமுக வேலை வாய்ப்பும் கிடைத்துள்ளது...டான்டெக் அக்ரோ கெமிக்கல்ஸ் லிமிடெட் 12.16 கோடி ரூபாய் முதலீட்டில் கடலூரில் தொடங்கப்பட்டது..
..ப்ளூமிங் மெடோஸ் லிமிடெட் - மலர் பதப்படுத்தும் தொழிற்சாலை. இது 100 விழுக்காடு ஏற்றுமதி அடிப்படையில் ஆனது.
ஓசூருக்கு அருகே 5.42 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட்டு, 1997 ஜனவரியில் உற்பத்தியைத் தொடங்கியது....எஸ்.கே.எம். எக் புராடக்ட்ஸ் தொழிற்சாலை - 100 விழுக்காடு ஏற்றுமதி பொருள்களைத் தயாரித்திடும் இத்தொழிற்சாலை, 35 கோடி ரூபாய் முதலீட்டில் ஈ.ரோடு மாவட்டம், சோளங்கபாளையத்தில் 12.7.1997 அன்று தொடங்கப்பட்டது....பாரத் டெக்ஸ் ஃபேஷன்ஸ் லிமிடெட் தொழிற்சாலை 5.10 கோடி ரூபாய் முதலீட்டில் காஞ்சிபுரம் மாவட்டம் செட்டிபுண்ணியம் கிராமத்தில் 1997 அக்டோபரில் தொடங்கியது..
..தாப்பர் டூபான்ட் லிமிடெட் தொழிற்சாலை கும்மிடிப்பூண்டியில் 300 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட்டது...ஏசியன் லைட்டிங் ரிசோர்சஸ் இந்தியா லிமிடெட் தொழிற்சாலை 27 கோடி ரூபாய் முதலீட்டில் தாம்பரம் ஏற்றுமதி வளாகத்தில் 26.3.98 அன்று உற்பத்தியைத் தொடங்கியது....கரூர் யார்ன் லிங்க்ஸ் லிமிடெட் தொழிற்சாலை ஏற்றுமதி அடிப்படையிலானது.
கரூர் மாவட்டம் அப்பர்பாளையத்தில் 4.5 கோடி ரூபாய் முதலீட்டில் 1998 மார்ச் மாதத்தில் உற்பத்தியைத் தொடங்கியது...டவுரஸ் நவல்டீஸ் லிமிடெட் தொழிற்சாலை ஓசூருக்கருகில் சொக்கராசன்பள்ளி கிராமத்தில் 10.20 கோடி ரூபாய் முதலீட்டில் உற்பத்தியைத் தொடங்கியது....ஸ்ரீராம் ஆட்டோ உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை திருப்போரூர் அருகில் இடையன்குப்பம் கிராமத்தில் 21 கோடி ரூபாய் முதலீட்டில் 25.6.1998 அன்று உற்பத்தியைத் தொடங்கியது..
..வி.எஸ்.என்.எல். எர்த் ஸ்டேஷன் 110 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட்டு, பி-டிஷ் பிரிவு 1998 ஜூன் மாதத்திலும், ஏ-டிஷ் பிரிவு 1999 ஜூன் மாதத்திலும் செயல்படத் தொடங்கியுள்ளன....லுமெக்ஸ் சாப்ளிப் இந்தியா லிமிடெட் தொழிற்சாலை 8.6 கோடி ரூபாய் செலவில், இருங்காட்டுக்கோட்டையில் அமைக்கப்பட்டது....ரமணசேகர் ஸ்டீல்ஸ் லிமிடெட் தொழிற்சாலை சென்னை மணலியில் 10.18 கோடி ரூபாய் முதலீட்டில் 1998 அக்டோபரில் உற்பத்தியைத் தொடங்கியது....ஜே.பி.எம். சங்வூ லிமிடெட் தொழிற்சாலை தகடு உலோகப் பாகங்கள் தயாரிக்கும் 45 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தொழிற்சாலை இருங்காட்டுக்கோட்டையில் அமைக்கப்பட்டு உள்ளது....ஜே.கே.எம். டெரிம் வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை இருங்காட்டுக்கோட்டையில் 17 கோடி ரூபாய் முதலீட்டில் அமைந்துள்ளது....மெட்-டெக் புராடக்ட்ஸ் லிமிடெட் தொழிற்சாலை திருப்பெரும்புதூர் அருகில் மானூர் கிராமத்தில் 27.70 கோடி ரூபாய் முதலீட்டில் 20.8.98 அன்று உற்பத்தியைத் தொடங்கியது....இல்ஜின் இந்தியா லிமிடெட் தொழிற்சாலை 40 கோடி ரூபாய் முதலீட்டில் இருங்காட்டுக்கோட்டையில் 1998ல் உற்பத்தியைத் தொடங்கியது..
.டைனமேட்டிக் குரூப் கம்பெனி வாகன உதிரிபாகங்கள் தயாரித்திட 23 கோடி ரூபாய் முதலீட்டில், இருங்காட்டுக்கோட்டையில் அமைக்கப்பட்டது..
..கார் கதவுகள் தயாரிக்கும் எச்.சி. மேனுபேக்சரிங் லிமிடெட் தொழிற்சாலை 9 கோடி ரூபாய் செலவில் இருங்காட்டுக்கோட்டையில் அமைக்கப்பட்டு உள்ளது....உலோகத் தகடு பாகங்கள் தயாரிக்கும் டோங்கி விஷன் இண்டஸ்ட்ரீஸ் தொழிற்சாலை 43 கோடி ரூபாய் செலவில் இருங்காட்டுக்கோட்டையில் அமைக்கப்பட்டது....கார் எக்சாஸ்ட் (Car Exhaust) தயாரிக்கும் ஷார்தா மோட்டார் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தொழிற்சாலை 9 கோடி ரூபாய் செலவில் இருங்காட்டுக்கோட்டையில் அமைக்கப்பட்டது.
ஆர்க்கிட் கெமிக்கல்ஸ் மற்றும் பார்மசூடிகல்ஸ் தொழிற்சாலை சென்னைக்கருகில் ஆலந்தூரில் 50 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட்டு, 1998 நவம்பரில் செயல்படத் தொடங்கியது....சிட்டிசன் வாட்சஸ் - வாட்ச் அசெம்ப்ளிங் புராஜக்ட் தொழிற்சாலை சென்னையில் 8 கோடி ரூபாய் முதலீட்டில் 1998 டிசம்பரில் செயல்படத் தொடங்கியது.
சுந்தரம் கிளேட்டன் லிமிடெட் நிறுவனத்தின் ஆட்டோமொபைல் பவுண்ட்ரி தொழிற்சாலை ஓசூரில் 1998 டிசம்பரில் உற்பத்தியைத் தொடங்கியது...சாம் க்ரீவ்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் ட்ராக்டர் மற்றும் அசெம்ப்ளிங் பிரிவு ராணிப்பேட்டையில் 44 கோடி ரூபாய் முதலீட்டில் 1998 டிசம்பரில் திறக்கப்பட்டது...அம்பிகா சர்க்கரை ஆலை 40 கோடி ரூபாய் முதலீட்டில் கோவையில் 1999 மார்ச்சில் தொடங்கி வைக்கப்பட்டது..
.டேன்பேக் இண்டஸ்ட்ரீஸ் (ப்ளோரோ பென்சீன் புராஜக்ட்) தொழிற்சாலை 11.60 கோடி ரூபாய் முதலீட்டில் கடலூரில் 1999 பிப்ரவரியில் உற்பத்தியைத் தொடங்கியது. ..டேன்பேக் இண்டஸ்ட்ரீஸ் (ஹைட்ரோ ப்ளோரிக் ப்ராஜக்ட்) தொழிற்சாலை கடலூரில் 1999 மார்ச்சில் தனது உற்பத்தியைத் தொடங்கியது...சேலம் அயர்ன் அண்டு ஸ்டீல் கம்பெனி லிமிடெட் தொழிற்சாலை 500 கோடி ரூபாய் முதலீட்டில் 31.3.99 அன்று தொடங்கப்பட்டது...எபாக்சி ரெசின் புராஜக்ட்-பெட்ரோ அரால்டைட் கம்பெனி மணலியில் 50 கோடி ரூபாய் முதலீட்டில் 1999 மார்ச்சில் உற்பத்தியைத் தொடங்கியது..
.அசோசியேட்டட் சிமெண்ட் கம்பெனியின் மதுக்கரை சிமெண்ட் புராஜக்ட் தொழிற் சாலை 33 கோடி ரூபாய் செலவில் 1999 மார்ச் மாதத்தில் உற்பத்தியைத் தொடங்கியது...ஹைதராபாத் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் Autoclayed Aerated Concrete Block Project தொழிற்சாலை ஏறத்தாழ 25 கோடி ரூபாய் முதலீட்டில் 1999 மார்ச்சில் உற்பத்தியைத் தொடங்கியது..
.லட்சுமி ஆட்டோ காம்பொனன்ட்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் ஆட்டோ உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை 43 கோடி ரூபாய் முதலீட்டில் ஓசூரில் 1999 மார்ச்சில் செயல்படத் தொடங்கியது...ஜி.எம்.ஆர்.வாசவி தனியார் மின் உற்பத்தித் திட்டம் 825 கோடி ரூபாய் முதலீட்டில் சென்னை பேசின் பிரிட்ஜில் 1999 மார்ச்சில் உற்பத்தியைத் தொடங்கியது...
திரு.ஆரூரான் சுகர்ஸ் சர்க்கரை ஆலை 22.90 கோடி ரூபாய் முதலீட்டில் தஞ்சை மாவட்டம் திருமண்டங்குடியில் 1999 ஜூன் திங்களில் செயல்படத் தொடங்கியது. விஸ்டன் பவர்ட்ரைன் சிஸ்டம் இந்தியா லிமிடெட் கம்பெனி 275 கோடி ரூபாய் முதலீட்டில் 1999ல் இயங்கத் தொடங்கியது. விஸ்டன் ஆட்டோமோடிவ் சிஸ்டம் இந்தியா லிமிடெட் தொழிற்சாலை 325 கோடி ரூபாய் முதலீட்டில் 1999ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது...மஹிந்த்ரா இண்டஸ்ட்ரியல் பார்க் லிமிடெட் தொழிற்சாலை சென்னைக்கு அருகில் சிங்கப் பெருமாள் கோவிலில் 210 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கப்பட்டு 1999 செப்டம்பரில் செயல்படத் தொடங்கியது...
.மட்சுசிட்டா ஏர் கண்டிஷனர் ப்ராஜக்ட் தொழிற்சாலை அறைகளுக்கு வைக்கக் கூடிய ஏர்கண்டிஷன் இயந்திரங்களைத் தயாரிக்கும் இத்தொழிற்சாலை இருங்காட்டுக் கோட்டையில் 59.54 கோடி ரூபாய் முதலீட்டில் 1999ல் செயல்படத் தொடங்கியது.
மேண்டோ ப்ரேக் சிஸ்டம் இந்தியா நிறுவனத்தின் வாகன உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை 30 கோடி ரூபாய் முதலீட்டில் இருங்காட்டுக் கோட்டையில் 1999ல் செயல்படத் தொடங்கியது....வேலியோ இந்தியா ப்ரிக்சன் மெட்டீரியல்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் கார் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை மறைமலை நகரில் 27 கோடி ரூபாய் முதலீட்டில் 1999ல் உற்பத்தியைத் தொடங்கியது..
.Schwing Stetter GmbH எனும் ஜெர்மனி நாட்டு கட்டுமான கருவிகள் தயாரிக்கும் தொழிற்சாலை 18 கோடி ரூபாய் முதலீட்டில் 1999ல் ஒரு பகுதி செயல்படத் தொடங்கி யது. ஆட்டோலெக் இண்டஸ்ட்ரீஸ் எண்ணெய் மற்றும் தண்ணீர் பம்புகள் தயாரிக்கும் தொழிற்சாலை 5 கோடி ரூபாய் செலவில் இருங்காட்டுக்கோட்டையில் 1999 அக்டோபரில் தனது உற்பத்தியைத் தொடங்கியது..
.தூத்துக்குடி துறைமுகப் பொறுப்புக் கழகத்தின் சார்பில் துறைமுகத்தை ஆழப்படுத்தும் திட்டம் 202 கோடி ரூபாய் முதலீட்டில் 1999 நவம்பரில் தொடங்கி வைக்கப்பட்டது...
இந்தியன் அண்டு நேச்சுரல் மெடிகல் புரொடக்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் தொழிற்சாலை சென்னைக்கருகில் 5.60 கோடி ரூபாய் முதலீட்டில் 1999 டிசம்பர் முதல் செயல்பட்டு வருகிறது. இன்வோல் மெடிக்கல் (இந்தியா) லிமிடெட் தொழிற்சாலை: திருப்பெரும்புதூரில் 15 கோடி ரூபாய் முதலீட்டில் 2000 ஆண்டு மார்ச் திங்களில் உற்பத்தியைத் தொடங்கியது..
.ரினால்ட்ஸ் பால் பென் காம் பொனன்ட்ஸ் தொழிற்சாலை இருங்காட்டுக் கோட்டை யில் 30 கோடி ரூபாய் முதலீட்டில் 2000 ஆண்டு மார்ச் மாதம் உற்பத்தியைத் தொடங்கியது...சிங்கப்பூரைச் சேர்ந்த செம்பவாங் ஸ்ரீராம் பொருள் விநியோகத் தொழிற்சாலை 33 கோடி ரூபாய் செலவில் புழல் கிராமத்தில் நிறுவப்பட்டது. மார்க்யூப் இந்தியா காகித அட்டை தயாரிக்க உதவும் எந்திர உற்பத்தித் தொழிற்சாலை 50 கோடி ரூபாய் செலவில் இருங்காட்டுக்கோட்டையில் 2000-மார்ச்சில் உற்பத்தியைத் தொடங்கியது..
.கோவேமா வுட் பிளாஸ்ட் பி.வி.சி. தகடுகள் தயாரிக்கும் தொழிற்சாலை 44 கோடி ரூபாய் செலவில் இருங்காட்டுக்கோட்டையில் 2000 மார்ச்சில் உற்பத்தியைத் தொடங்கியது...
.இன்ட்ஸில் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் வாகன உதிரிபாகங்களைத் தயாரிக்கக்கூடிய இத்தொழிற் சாலை 12.5கோடி ரூபாய் முதலீட்டில் மார்ச் திங்களில் உற்பத்தியைத் தொடங்கியது....ஆப்டிக் பைபர் கேபிள் தொழிற்சாலை தமிழ்நாடு அரசு நிறுவனமான டிட்கோ, மத்திய அரசு நிறுவனமான டி.சி.ஐ.எல். (Telecommunications Consultants India Limited) மற்றும் ஜப்பான் நாட்டின் ஃப்யூஜிகூரா நிறுவனம் ஆகியவை இணைந்து மிக நவீனமான ஆப்டிக் பைபர் டெலிகாம் கேபிள்ஸ் (Optic Fibre Telecom Cables) உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை 28.50 கோடி ரூபாய் செலவில் 26.5.2000 அன்று நிறுவியது..
..ப்ராக்ஸ் ஏர் இந்தியா பிரைவேட் லிமிடெட் (PRAX AIR INDIA PRIVATE LIMITED) தொழிற்சாலை 60 கோடி ரூபாய் முதலீட்டில் திருப்பெரும்புதூர் தொழில் வளாகத்தில் அமைக்கப்பட்டு, அதனை நான் 21.8.2000 அன்று திறந்து வைத்துள்ளேன்.
இது தொழிற்சாலைகளுக்கான வாயுக்களை (Industrial Gases) தயாரித்து வழங்குகிறது. ப்ராக்ஸ் ஏர் நிறுவனம் மொத்தம் 175 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பல்வேறு தொழில் பிரிவுகளை அமைத்துள்ளது. செயின்ட் கோபைன் கண்ணாடித் தொழிற்சாலை இருங்காட்டுக்கோட்டை சிப்காட் வளாகத்தில் பிரெஞ்சு நாட்டுத் தொழில்நுட்பத்துடன் 525 கோடி ரூபாய் செலவில் முதற்கட்டமாக அமைக்கப்பட்டு 27.9.2000 அன்று தொடங்கப்பட்டது.
ஆண்டுக்கு நூறு கோடி ரூபாய் அளவுக்கு அன்னியச் செலாவணி கிடைக்கச் செய்யும்...24.85 கோடி ரூபாய் முதலீட்டில் மலர் பதப்படுத்தும் டான்ப்ளோரா இன்ஃப்ராஸ்ட்ரக்சர் பார்க் - மலர்த் தொழில் பூங்கா ஓசூரில் 220 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டு வருகிறது.
2001 மார்ச்சில் ஏற்றுமதியைத் தொடங்கும். இத்திட்டத்தின் மூலம் 500 பேருக்கு நேரடியாகவும்,1000 பேருக்கு மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு கிடைக்கும்...தமிழ்நாடு அரசு, டிட்கோ ஆகியவை இந்திய வர்த்தக மேம்பாட்டு நிறுவனத்துடன் (ITPO) இணைந்து கண்காட்சி மற்றும் மாநாட்டுக் கூடத்துடன் கூடிய இந்திய வர்த்தக மையம் ஒன்றினை சென்னைக்கருகே நந்தம்பாக்கத்தில் அமைக்கிறது. இவ்வளாகம் 2 இலட்சம் சதுர அடி பரப்பளவில் அனைத்துக் கட்டமைப்பு வசதிகளுடனும், சாதனங்களுடனும் அமையும்.
முதல் கட்டத்தில் 50000 சதுர அடி பரப்புடைய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது....மெட்ராஸ் ரீபைனரீஸ் லிமிடெட் - இருங்காட்டுக் கோட்டையில் செயின்ட் கோபைன் கண்ணாடித் தொழிற்சாலைக்கு அருகில் சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை நிறுவனம் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர்தர மோட்டார் ஸ்பிரிட், அதிவேகப் பயணத்திற்கு உகந்த டீசல் ஆகியவற்றின் விற்பனை மையத்தினை அமைத்து வருகிறது...
.சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள மெட்ராஸ் ரீபைனரீஸ் நிறுவனத்தின் மணலி தொழிற்சாலை பிரிவு 2360 கோடி ரூபாய் செலவில் 30 லட்சம் மெட்ரிக் டன் கச்சா எண்ணையை சுத்திகரிப்பு செய்யும் திறனுடையதாக விரிவுபடுத்தப்பட்டு வருகிறது....எபோமின் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் தொழிற் சாலை திருப்பெரும்புதூர் தொழில் வளாகத்தில் 2 கோடியே 88 லட்சத்து 59ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகிறது....முக்குட்ஸ் பேக்கேஜிங் லிமிடெட் தொழிற்சாலை திருப்பெரும்புதூர் தொழில் வளாகத்தில் 1 கோடியே 20 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வருகிறது..
..கடலூர் மாவட்டம் திருச்சோபுரம் கிராமத்தில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த பென்னார் ரிபைனரீஸ் லிமிடெட் கம்பெனியின் பெட்ரோலியம் சுத்திகரிப்பு ஆலை 3480 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஆண்டுக்கு 6.5 மில்லியன் கச்சா எண்ணெயைச் சுத்திகரிப்பு செய்யும் தொழிற்சாலை ஒன்றை நிறுவி வருகிறது....கும்மிடிப்பூண்டியில் 224 ஏக்கர் பரப்பில் 19 கோடியே 90 இலட்சம் ரூபாய் செலவில் ஏற்றுமதி தொழில் மேம்பாட்டுப் பூங்கா (Expert Promotion Industrial Park) அமைப்பதில் மத்திய அரசின் வர்த்தக அமைச்சகமும் சிப்காட்டுடன் பங்கெடுத்து வருகிறது..
..நர்மதா டெக்ஸ்டைல்ஸ் கம்பெனி ஆடைகள் ஏற்றுமதியில் ஒரு முன்னணி நிறுவனம். 80 கோடி ரூபாய் முதலீட்டில் நர்மதா டெக்ஸ்டைல்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ஒரு நவீன ஆடை தயாரிப்புப் பிரிவினை அமைத்திட “டிட்கோ” திட்டமிட்டது. 33.64 கோடி மதிப்பீட்டில் எடுத்துக் கொள்ளப்பட்டுள்ள முதல்கட்ட திட்டப் பணிகள் 2001 மார்ச் மாதத்தில் முடிவடையும்...தர்மபுரி மாவட்டத்தில் 377 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முற்றிலும் நூறு சதவீதம் ஏற்றுமதி செய்யக்கூடிய ஒருங்கிணைந்த ஜவுளி ஆலை (Composite Textile Mills) ஒன்றினை அமைத்திட, “டிட்கோ” நிறுவனம், திருவாளர்கள் வாசவி தொழில் குழுமத்துடன் ஓர் ஒப்பந்தம் செய்துள்ளது.
வர்த்தக ரீதியிலான உற்பத்தியினை இந்நிறுவனம், அடுத்த ஆண்டில் (2001-2002) தொடங்கும்...உலகச் சந்தையில் போட்டியிடும் நோக்கில், ஆடைகள் தயாரிக்கும் பூங்கா ஒன்றை 60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் டிட்கோ கூட்டுத் துறையில் சென்னைக்கருகே அமைக்கவுள்ளது. அடுத்த ஆண்டில் இந்த ஆடைகள் பூங்கா வர்த்தக ரீதியில் செயல்படத் துவங்கும்..
.நாங்குனேரியில் உயர் தொழில்நுட்பத் தொழிற்பூங்கா: அமெரிக்காவைச் சேர்ந்த இன்ஃபேக் இந்தியா குரூப் மற்றும் ஆக்ஸஸ் டெக்னாலஜிஸ் என்ற நிறுவனங்களுடன் சேர்ந்து இணைத் துறையில் டிட்கோ இப்பூங்காவை அமைத்து வருகிறது. இந்தத் தொழிற்பூங்காவில் அமெரிக்கா, ஜப்பான், கொரியா போன்ற நாடுகள் தொழில் தொடங்குவதற்குத் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தரப்படும். இங்கு அமையவுள்ள தொழிற்சாலைகளில் 8000 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு செய்யப்படும்.
.மத்திய வர்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சர் திரு.முரசொலி மாறன் 31.3.2000 அன்று அறிவித்த ஏற்றுமதி மற்றும் இறக்குமதிக் கொள்கையில் (EXIM POLICY) நாங்குனேரி உயர்தொழில் நுட்பத் தொழிற்பூங்காவைச் சிறப்புப் பொருளாதார மண்டலமாக (SPECIAL ECONOMIC ZONE) அறிவித்துள்ளார்.
இதனால், இந்தத் தொழிற்பூங்காவில் உருவாகும் தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப்பொருட்கள் மற்றும் தேவையான சாதனங்கள் இறக்குமதி எளிதாக அமையும்...ஏறத்தாழ 2 இலட்சத்து 22 ஆயிரத்து 569 பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கும் 46 ஆயிரத்து 91 கோடி ரூபாய் முதலீட்டிலான 25 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு 37 புதிய தொழிற்சாலைகள் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன..
 ..இதனை முழுமையாக அதிமுகவினர்  படித்து இருந்தால்...சமுதாய அக்கறை இருந்தால்....தமிழகத்தின் மீது பற்று இருந்தால்.. உங்களை நீங்களே சுய பரிசோதனை செய்து கொள்ள வேண்டிய நேரமிது...


ஆமாம் இதை எல்லாம் படித்து விட்டு இந்த அதிமுக ஆட்சியின் நான்காண்டு சாதனைகளாக எதை கூறுவார்கல்?
தெருருக்கு இரண்டு டாஸ்மாக் கடைகளைத் திறந்ததை விடவா மேலே உள்ளவை சாதனை களாகி விடும்.
குடி மக்களுக்கு அதை விட வேறு என்ன வேண்டும் .
முகனூல் கூறுவது.



========================================================================
இன்று,
ஆகஸ்ட்-18.

  • தாய்லாந்து தேசிய அறிவியல் தினம்
  • லாத்வியாவின் ரீகா நகரம் அமைக்கப்பட்டது(1201)
  • செவ்வாய் கோளின் ஃபோபோஸ் கண்டுபிடிக்கப்பட்டது(1877)
  • இந்திய சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இறந்த[தாகக் கூறப்படும்] தினம்(1945)


                               15-08-1947வெள்ளையர்களுக்கு வழியனுப்பு விருந்தின் போது .
========================================================================

இது இந்தியாவுக்கு போற காரா/நான் இங்கேயே இறங்கிடுறேன் .
இந்த சுற்றுலாவில் இந்தியா போறதா இல்லையே!
=======================================================================





இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?