இடுகைகள்

செப்டம்பர், 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

அப்பாக்களுக்கு டாஸ்மாக்-அம்மாக்களுக்கு அலைபேசி?

படம்
மகளிர் சுய உதவிக் குழுவினர்களுகெல்லாம் அம்மா அலை பேசியாம் . தமிழ் நாடு மிகவும் வேகமாக முன்னேறிக்கொண்டுதான் இருக்கிறது. இரண்டு நாள் முதலீட்டாளர் மாநாட்டில் 2 .5 லட்சம் கோடி முதலீடு. தமிழ் நாட்டில் மின் மிகை மாநிலமாகி மூன்று ஆண்டுகளாகி விட்டது.  பிள்ளைகளுக்கு மடிக்கணினி கொடுத்தாகி விட்டது. அம்மாக்களுக்கு  பாலூட்ட தனி இடம். இப்போது அலை  பேசி  ஏற்கனவே அப்பாக்களுக்கு டாஸ்மாக் அரசு  உற்சாகப் பானம் கொடுத்தாகி விட்டது. மகளிர் சுய உதவிக்குழுவினர்களுக்கு சுழல் நிதியோ ,வங்கிக்கடனோ கொடுக்காத  அம்மா அரசு இப்போது அலைபேசி கொடுக்க காரணம்? அப்போது இல்லாத பணம் 13000கோடிகளில் அலை பேசி கொடுக்க எங்கிருந்து வருகிறது? சுய உதவிக் குழு பெண்கள் எல்லோரும் அலை பேசியில் தன்னிடம் குறைகளை உடனுக்குடன் சொல்லவா? தமிழகத்தை வாட்டும் மின் வெட்டை நீக்க  இதுவரை 100 கூட செலவிடாத ஜெயலலிதா அரசு கோடிகளில் இலவசம் கொடுக்க பணம் உள்ளது. அமைச்சர்களும்,அதிகாரிகளும் கால்கடுக்க போயஸ் தோட்டத்தில் தவம் இருந்த பின்னர் இன்டர்காம் மூலம் மட்டுமே பேசும் முதல்வரை அவர்கள் அப்படி எளிதாக தொடர்பு கொள்ள முடியுமா? ஸ்டாலின் ஊர்,ஊரா

விண்டொஸ் 10 ம்,விண்டொஸ் 7 ம்

படம்
பலர் இன்னும் விண்டோஸ் 10 ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறாமல், நாங்கள் விண்டோஸ் 7 சிஸ்டமே பயன்படுத்தி வருகின்றனர் .  புதிய லேப்டாப் மற்றும் பெர்சனல் கம்ப்யூட்டர்களிலும், விண் 7 சிஸ்டத்தினையே தளவிறக்கம் செய்து பயன் படுத்துகின்றனர். அவர்களுக்காக விண்டோஸ் 7 சிஸ்டத்தில் கிடைக்கும் சில மாறுதலான வசதிகள் குறித்த டிப்ஸ்கள் இங்கு தரப்படுகின்றன. விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயனாளர்களிடையே ஊன்றி சில ஆண்டுகள் ஆகிவிட்டன. விண்டோஸ் எக்ஸ்பி சிஸ்டம் முடிவிற்கு வந்த பின்னர், பெரும்பாலானவர்கள் இதற்கு மாறிக் கொண்டு, இது தரும் வசதிகளை மிகவும் விரும்பி பயன்படுத்தி வருகின்றனர். இவர்கள் அனைவரும், விண்டோஸ் 7 சிஸ்டம் குறித்த இயக்கக் குறிப்புகளை சில நூல்கள் வாயிலாகவும், தங்கள் பயன்பாட்டின் மூலமும் தெரிந்து கொள்கின்றனர். ஆனாலும், விண்டோஸ் 7 சிஸ்டம் கொண்டுள்ள பல விஷயங்கள் இன்னும் பலருக்குத் தெரியாமலேயே உள்ளன.  இதற்குக் காரணம் எந்த நூல்களும் இது குறித்து எழுதாமல் இருப்பதுதான். பொதுவாகவே, கம்ப்யூட்டர் இயக்கத்தில், Undocumented Features எனச் சில உண்டு. இவற்றைப் பற்றி ஒரு சிலருக்குத் தெரிந்திருக்க வாய

27 செப்டம்பர் 2014.

படம்
நேற்று முதலாமாண்டு முடிவுற்றது.ஆமாம்.ஜெயலலிதா சொத்துக்குவிப்பு ஊழல் வழக்கில் குற்றவாளி.நான்காண்டுகள் சிறை என்று நீதியரசர் மைக்கேல் டி குன்கா தீர்ப்பளித்து முன்னாள் முதல்வராக ஜெயலலிதா சிறை சென்ற முதலாமாண்டு நினைவு நாள். ஆனால் அதன் பின் கணித மேதையும் நீதிக்கு அரசருமான குமாரசாமியின் கணித தேற்றம் மூலம் வெளியே வந்தது தனிக்கதை.சாண்டில்யனின் கதைகளை விட அதிகமான பக்கங்களையும் எதிர்பார்த்த திருப்பங்களையும் கொண்ட அக்கதை நம்மால் வெளியிட முடியாது.வெளியிட்டாலும் உங்களால் படிக்க காலம் போதாது. எனவே முதல்வர்  ஜெயலலிதா காரின் கொடி கழற்றப்பட்டு முன்னாள் முதல்வராக்கப்பட்ட தின நிகழ்வுகள் மட்டும் உங்கள் நினைவுகளுக்காக. நன்றி: சவுக்கு தளம். இந்த நாளை ஜெயலலிதா எப்படி அணுகியிருப்பாரோ தெரியவில்லை, ஒரு மாதமாகவே இரவு உறங்க முடியவில்லை. துளியும் உறக்கம் இல்லாமல் பல்வேறு ஊடகவியலாளர்கள் மற்றும் அதிகாரிகளோடு இரவு நெடு நேரம் விவாதித்துக் கொண்டிருந்த நாட்கள் பல. என்ன ஆகும் இந்தத் தீர்ப்பு ?  ஜெயலலிதா தப்பித்து விடுவாரா ?  இது வரை மற்ற ஊழல் வழக்குகளில் இருந்து தப்பித்ததுபோல தப்பித்து விடுவாரா ?  அவரிடம் உள்ள அச

அதிர்ச்சி பிரதமர்& தொழிலதிப நண்பர்.

படம்
பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் ஆஸ்திரேலியா சென்றுள்ளதை யொட்டி, அவருடன் ஒரு வர்த்தகர் குழுவும் (business delegation) சென்றுள்ளது. அங்கிருந்து ஒரு அதிர்ச்சியான தகவல் வெளியாகி இருக்கிறது.  வர்த்தகக் குழுவில் இடம் பெற்றுள்ளவர்களில் ஒருவர் – மோடிஜியின் நெருங்கிய நண்பர். குஜராத்தில் பல முதலீடுகளை செய்துள்ள தொழிலதிபர் (அதானி க்ரூப்ஸ் தலைவர் ) கௌதம் அதானி. இவரது கம்பெனிக்கு ஆஸ்திரேலியாவில் Carmichael (Queensland )என்கிற இடத்தில் சுரங்க கம்பெனி ஒன்றைத் துவக்க ஆஸ்திரேலிய அரசு இன்று அனுமதி கொடுத்திருக்கிறது. இந்த அதானி கம்பெனி, ஆஸ்திரேலியாவில் துவங்கும் நிலக்கரி சுரங்கத்திற்கு, இந்தியாவின் முன்னணி அரசு வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (State Bank of India ) ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் கடனாகக் கொடுக்கிறது. கோடிக்கணக்கான டாலர்களில் இந்திய முதலீடு ஆஸ்திரேலியாவிற்கு போகிறதே என்கிற அச்சத்தில் கூகுளில் தேடினேன் – ஒரு பில்லியன் அமெரிக்க டாலரின் மதிப்பு இந்திய ரூபாயில் எவ்வளவு என்று - 1 billion US dollars are equal to how many Indian rupees? அதிர்ச்சியளிக்கிறது

மின்வெட்டுக்கும்,மின் தடைக்கும் உள்ள வித்தியாசங்கள்

படம்
தமிழகத்தில் தினசரி இரண்டு மணி முதல் நான்கு மணி நேரம் இருக்கும் மின்சாரம் இல்லா நேரத்துக்கு பெயர் மின்தடையா,மின் வெட்டா?குறைந்த பட்சம் தமிழகம் எங்கும் நான்கு மணிநேரம் மின்சாரம் இல்லா காலம் இருக்கிறது.அதற்கு என்ன பெயர் வைக்கலாம்?அமைச்சர் விசுவநாதனோ சட்ட மன்றத்திலேயே தமிழகத்தில் மின்சாரம் மிகையாக இருக்கிறது.மின்தடையே இல்லை என்று மனம்,வாய் கூசாமல் அறிக்கை படிக்கிறார்.சட்டப்பேரவையில் பதிவான வாசங்களை வாக்களித்த மக்கள் நம்பித்தான் ஆக வேண்டும்.நம்பிட்டோம்.ஆனால் இங்கு விலையில்லா போன்று மின்சாரமில்லா நேரங்களுக்கு என்ன பெயர் வைக்கலாம் அமைச்சர் அவர்களே வழமை போல் அம்மா பெயரை வைத்து விடலாமா?  தமிழக சட்டப் பேரவையில் மின் துறை அமைச்சர் மின்வெட்டே கிடையாது என்று பலமுறை சொல்லியிருக்கிறார்.  ஆனால்  ஆங்கில நாளேட்டில் வந்த செய்தி, காற்றாலை மின் உற்பத்தி குறைவு காரணமாக தமிழ்நாட்டில் மீண்டும் மின்வெட்டு வந்துள்ளது.  2 நாளில் 2400 மெகாவாட் மின்சாரம் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது என்று எழுதப்பட்டுள்ளது. தமிழக அரசின் இந்த நிலைமையை தமிழகத்தில் உள்ள பெரும்பாலான நாளேடுகள் மறைத்த போதிலும்,  தினகரன் நாளேடு சற்று