ஒசாமா பின் லேடனை விற்­று­விட்­டார்கள்

அல் கைதா இயக்­கத்தின் ஸ்தாபகத் தலை­வ­ரான ஒசாமா பின் லேடன், அமெ­ரிக்கப் படை­யி­னரால் சுட்­டுக்­கொல்­லப்­பட்டு கடந்த 2 ஆம் திக­தி­யுடன் நான்கு வரு­டங்கள் பூர்த்தியா­கி­விட்­டன.

இந்­நி­லையில், பாகிஸ்தான் இரா­ணுவ அதி­கா­ரி­களே அமெ­ரிக்­கா­வுக்கு ஒசாமா பின் லேடனை விற்­பனை செய்த­தாக வெளி­யான கட்­டு­ரை­யொன்று சர்­வ­தேச ரீதியில் பர­ப­ரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

அமெ­ரிக்­காவைச் சேர்ந்த பிர­பல ஊட­க­வி­ய­லா­ள­ரான செய்மர் ஹேர்ஸ், பிரிட்­டனில் வெளி­யாகும் லண்டன் ரிவியூ ஒவ் புக்ஸ் எனும் சஞ்­சி­கையில் எழு­திய கட்­டு­ரை­யொன்றில்  மேற்­படி தக­வலை வெளி­யிட்­டி­ருந்தார். 

 பாகிஸ்­தானில் இஸ்­லா­மா­பாத்­துக்கு அரு­கி­லுள்ள அபோ­தாபாத் நக­ரி­லுள்ள வீடொன்றில் குடும்­பத்­தி­ன­ருடன் மறைந்­தி­ருந்த ஒசாமா பின்லேடனை, 02.05.2011 ஆம் திகதி ஹெலி­கொப்­டர்­களில் இர­க­சி­ய­மாக வந்­தி­றங்­கிய அமெ­ரிக்க கடற்­ப­டையின் சீல் எனும் விசேடப் படைப்­பி­ரி­வினர் சுட்­டுக்­கொன்­ற­தாக அறி­விக்­கப்­பட்­டது.

பின்­லேடன் அவ்­வீட்டில் இருப்­பது பாகிஸ்தான் அதி­கா­ரி­க­ளுக்கு தெரிந்­தி­ருந்­ததா என்­பது குறித்தும், பாகிஸ்தான் அர­சுக்கு அறி­விக்­காமல் அமெ­ரிக்கப் படை­யினர் உள்­நு­ழைந்து தாக்­குதல் நடத்­தி­யதால் பாகிஸ்­தானின் இறைமை மீறப்­பட்­டுள்­ள­தா­கவும் சர்ச்­சைகள் எழுந்­தி­ருந்­தன. ஒசாமா பின் லேடன் பாகிஸ்­தானில் இருந்­தமை தமக்குத் தெரி­யாது என பாகிஸ்தான் அர­சாங்கம் மறுத்­தது.

பின் லேடனின் குடும்­பத்தின் மர­ப­ணுவைப் பெறு­வ­தற்­காக போலியோ தடுப்பு நட­வ­டிக்­கை­யொன்றை மேற்­கொண்டு அமெ­ரிக்கப் புல­னாய்­வா­ளர்­க­ளுக்கு உத­வி­ய­ளித்த குற்­றச்­சாட்டில் மருத்­துவர் ஒரு­வரும் பாகிஸ்தான் அதி­கா­ரி­களால் கைது செய்­யப்­பட்டார்.

ஆனால், பாகிஸ்தான் இரா­ணுவ ஜென­ரல்­களும், ஐ.எஸ்.ஐ. எனும் பாகிஸ்தான் புல­னாய்வுப் பிரிவு உயர் அதி­கா­ரி­களும் ஒசாமா பின் லேடனை, 2006 ஆம் ஆண்­டி­லி­ருந்து அபோ­தா­பாத்தில் வேண்­டு­மென்றே தங்­க­வைத்­தி­ருந்து, பணத்­துக்­காக அவரை அமெ­ரிக்­கா­விடம் காட்­டிக்­கொ­டுத்­து­விட்­டார்கள், அதா­வது விற்­று­விட்­டார்கள் என்­கிறார் செய்மர் ஹேர்ஸ். 
ஒசாமா பின் லேடன் தலைக்கு அமெ­ரிக்­கா­வினால் அறி­விக்­கப்­பட்­டி­ருந்த 25 மில்­லியன் டொலர் சன்­மா­னத்­துக்­காக பாகிஸ்தான் அதி­கா­ரிகள் இவ்­வாறு செய்­த­தாக செய்மர் ஹேர்ஸ் கூறு­கிறார்.

அபோ­தா­பாத்திலுள்ள வீட்டில் அமெ­ரிக்க சீல் படை­யினர் மாத்­தி­ரமே துப்­பாக்கிப் பிர­யோகம் செய்­தனர் என அவர் தெரி­வித்­துள்ளார். 

இம்­முற்­றுகை குறித்து பாகிஸ்­தானின் அப்­போ­தைய இரா­ணுவத் தள­ப­திக்கும் ஜெனரல் அஷ்ஃபாக் பர்வேஸ் கயா­னிக்கும் ஐ.எஸ்.ஐ. தலைவர் அஹமட் சுஜா பாஸா­வுக்கும் அமெ­ரிக்­கா­வினால் முன்­கூட்­டியே அறி­விக்­கப்­ப­ட­வில்லை என்­பதும் மிகப்­பெ­ரிய பொய் எனவும் ஹேர்ஸ் தெரி­வித்­துள்ளார்.

உலகில் அதிக கவ­னத்தை ஈர்த்த சம்­ப­வங்கள் குறித்து பர­ப­ரப்­பான புதிய தக­வல்­களை பலர் வெளி­யி­டு­வது வழக்கம். அவற்றில் சில தக­வல்கள் கற்­ப­னை­யா­ன­வை­யா­கவும் இருக்கும்.

ஆனால், செய்மர் ஹேர்ஸ் சாதா­ரண ஒரு ஊட­க­வி­ய­லாளர் அல்லர். 78 வய­தான செய்மர் ஹேர்ஸ் உலகப் புகழ்­பெற்ற புல­னாய்வு செய்­தி­யாளர் ஆவார்.

வியட்நாம் யுத்­த­த்தின்­போது ‘மைலாய்’ எனும் இடத்தில்  இடம்­பெற்ற மைலாய் படு­கொ­லைகள், அவற்றை அமெ­ரிக்கா மூடி மறைத்­த­விதம் ஆகி­ய­வற்றை அம்­ப­லப்­ப­டுத்­தி­யவர் இவர்.

இதற்­காக ஊட­கத்­து­றையின் அதி உயர் விரு­து­களில் ஒன்­றான புலிட்சர் விருதும் 1970 ஆம் ஆண்டு அவ­ருக்கு வழங்­கப்­பட்­டி­ருந்­தது. ஈராக்கிய அபு கிறைப் சிறைச்­சா­லையில் அமெ­ரிக்­கப்­ப­டை­யி­னரால் ஈராக்­கிய கைதிகள் துஷ்­பி­ர­யோ­கப்­ப­டுத்­தப்­ப­டு­வதை அம்­ப­லப்­ப­டு­வ­திலும் இவர் பங்­காற்­றினார்.

இதனால், ஒசாமா பின் லேடன் மரணம் குறித்து, செய்மர் ஹேர்ஸ் தெரி­வித்­துள்ள விட­யங்­களை முற்­றாக புறக்­க­ணிக்க முடி­யுமா என்ற கேள்வி எழு­கி­றது.

இந்­நி­லையில், செய்மர் ஹெய்சின் கூற்­றுக்கு ஆத­ரவாகவும் எதி­ரா­கவும் பலர் கருத்து தெரி­வித்­துள்­ளனர்.

அமெ­ரிக்க வெள்ளை மாளி­கையும் அமெ­ரிக்க இரா­ணுவத் தலை­மை­ய­க­மான பெண்­ட­கனும் செய்மர் ஹேர்ஸின் கூற்­று­களை நிரா­க­ரித்­துள்­ளன.

பாகிஸ்­தானின் உத­வி­யின்றி தனி­யா­கவே அமெ­ரிக்கா  அபோ­தா­பாத்தில் மேற்­படி முற்­று­கையை நடத்­தி­யது என வெள்ளை மாளி­கையின் தேசிய பாது­காப்புச் சபை பேச்­சா­ள­ரான நெட் பிரைஸ்  தெரி­வித்­துள்ளார்.

இம்­முற்­று­கைக்கு பாகிஸ்தான் உத­வி­ய­ளிக்­க­வில்லை என அமெ­ரிக்க இராஜாங்கத் திணைக்­க­ளமும் தெரி­வித்­துள்­ளது. 

பின்­லே­டனை தானே சுட்­டுக்­கொன்­ற­தாக கூறும், மேற்­படி முற்­று­கையில் பங்­கு­பற்­றிய ‘சீல்’ படைப்­பி­ரிவின் 6 அங்­கத்­த­வர்­களில் ஒரு­வ­ரான ரொபர்ட் ஓ நீலும், ஹேர்ஸின் கூற்­றுகள் அபத்­த­மா­னவை எனத் தெரி­வித்­துள்ளார். 

ரொபர்ட் ஓ நீலின் துப்­பாக்கிப் பிர­யோ­கத்­தில்தான் ஒசாமா இறந்தார் என உறு­தி­யாகக் கூற முடி­யாது என அமெ­ரிக்க அதி­கா­ரிகள் கூறு­கின்­றனர். தற்­போது இவர் சீல் படைப்­பி­ரி­வி­லி­ருந்து வில­கி­விட்டார். 

ஆனால், ஹேர்ஸின் கட்­டு­ரையை தான் முதலில் வாசித்தபோது அது ஒரு ஜோக் எனக் கருதியதாக ரொபர்ட் ஓ நீல் கூறுகிறார்.  

கதவுக்கூடாக வந்த துப்பாக்கித்தோட்டாக்களை எதிர்கொண்ட எனது நண்பர்கள் ஹேர்ஸின் கருத்துடன் உடன்பட மாட்டார்கள்" என அவர் தெரிவித்துள்ளார்.

ஆனால், பாகிஸ்தான் புலனாய்வு அமைப்பிலிருந்து விலகிச் சென்ற ஒருவர், பின் லேடன் முற்றுகையில் அமெரிக்காவுக்கு உதவியளித்தார் என  பாகிஸ்தானின் முன்னாள் இராணுவ அதிகாரிகள் இருவர் கடந்த செவ்வாய்க்கிழமை தெரிவித்ததாக ஏ.எவ்.பி. செய்தி வெளியிட்டுள்ளது. 
===================================================================
இன்று,
செப்டம்பர்-03.
  • ஆஸ்திரேலிய கொடி நாள்
  • கத்தார் விடுதலை தினம்(1971)
  • சீனா ராணுவ படை தினம்
  • உலகின் மிகச் சிறிய நாடான சான் மரீனோ, புனித மரீனசினால் உருவாக்கப்பட்டது(301)
இந்தியாவுடன் சேர பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர் பகுதி மக்கள் விருப்பம் தெரிவித்துள்ளது பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.  அண்மையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயணம் மேற்கொண்ட அஞ்சுமென் மென் ஹெச் ரசூல் அமைப்பின் தலைவரான சையத் அத்தர் ஹுசேன் ஹெலாவி இதனை தெரிவித்துள்ளார். அங்குள்ள மக்கள் பாகிஸ்தானில் அதிகரித்து வரும் தீவிரவாத நடவடிக்கைகளால் வெறுப்படைந்துள்ளதாகவும், அமைதியான வாழ்க்கையை நடத்த விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

வாய்ப்பு வழங்கப்படுமானால் இந்தியாவுடன் மீண்டும் சேர விரும்பும் அவர்கள் இது குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று விரும்புவதாக ஹெலாவி கூறியுள்ளார். 
பாகிஸ்தான் தங்கள் பகுதியை புறக்கணித்து வருவதாக கூறியுள்ள மக்கள் இந்தியாவுக்கு எதிரான தீவிரவாதத்தை வளர்ப்பதற்கு மட்டுமே தங்கள் பகுதியை அரசு பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளனர். 
கடந்த ஆண்டு காஷ்மீரில் நிகழ்ந்த வெள்ளம், இந்த ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம், ஆகிய நிகழ்வுகளில் இந்திய அரசு மேற்கொண்ட நிவாரண நடவடிக்கைகளையும், பாகிஸ்தான் அரசு எடுத்த நடவடிக்கைகளையும் அவர்கள் ஒப்பிட்டு இந்தியாவை புகழ்நதுள்ளனர். 

வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு சென்ற பாகிஸ்தான் பிரதமர் நவாஷ் ஷெரீப்பை திரும்பி செல்லுமாறு மக்கள் முழக்கமிட்டதையும் ஹெலாவி சுட்டிக்காட்டியுள்ளார். பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மக்களிடம் ஏற்பட்டுள்ள மாற்றம் குறித்து பாகிஸ்தான் ஊடகங்களே செய்தி வெளியிட்டுள்ளதால் அந்நாட்டு தலைவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
========================================================================
இதயம் பலவீனமானவங்க தவிர்க்க வேண்டிய உணவுகள்:
  • மீன் தவிர அத்தனை அசைவ உணவுகளையும்.
  • ஒரு முட்டைல 210 மி.கி. கொலஸ்ட்ரால் இருக்கிறதால, அது கூடவே கூடாது.
  • பேக்கிங் பவுடர் சேர்த்துச் செய்தவை, நெய், வெண்ணெய், சீஸ், தேங்காய், காபி, டீ, உருளைக்கிழங்கு சிப்ஸ், டின்ல அடைச்ச உணவுகள், தக்காளி  சாஸ் கெட்ச்சப், ஃப்ரோஸன் உணவுகள்  அதாவது உறைநிலை உணவுகள், அஜினோமோட்டோ இந்த எதுவும் வேண்டாம்.
  • ‘ஊறுகாயும் அப்பளமும் இருந்தா போதும், வேற எதுவும் வேணாம்’னு சாப்பிறவங்க பலர். இந்த ரெண்டையும் போல ஆபத்தானது வேற இல்லை.  காரணம், அதுல சேர்க்கப் படற உப்பு. அந்தக் காலத்துல அப்பளம் நல்லா விரிஞ்சு பொரியணும்னு பிரண்டை சாறு விடுவாங்க. இப்ப அதுக்குப் பதில்  சோடியம். ஊறுகாயும் அதே மாதிரிதான். அதிக உப்பு ரத்தக்கொதிப்பை அதிகமாக்கி, இதய நலனைப் பாதிக்கும்.

சாப்பிடக்கூடிய உணவுகள்:
  • கீரை, முழு தானியங்கள், காய்கறிகள்,
  • அசைவத்துல மீன் மட்டும் (அதுல உள்ள ஒமோக 3 கொழுப்பு அமிலம் இதயத்துக்கு நல்லது)
  • ஓட்ஸ், பூண்டு, சின்ன வெங்காயம்.
  • தினசரி சமையல்ல சாதாரண புளிக்குப் பதிலா கொடம்புளி உபயோகிக்கலாம். கோக்கம்னு சொல்லப்படற கொடம்புளியை எந்தவித குழம்புலயும்  சேர்க்கலாம். ரத்தத்துல கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தி, இதயத்தைப் பாதுகாத்து, உடல் எடையையும் குறைக்கும் இது. கொழுப்பு குறைஞ்சாலே,  இதயம் உள்ளிட்ட அத்தனை உறுப்புகளும் ஆரோக்கியமாக இருக்கும்.
========================================================================


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?