நூறாண்டு காணா மழை...!



சென்னையில் கடந்த 100 ஆண்டில் இல்லாத மழை அளவால் தலைநகரம் வெள்ளக்காடானது. ஆயிரக்கணக்கான வீடுகள் மூழ்கியதால் மக்கள் அவதியுற்றுள்ளனர்.
சென்னை உள்ளிட்ட மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
தென்மேற்கு வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை அதே இடத்தில் நீடிப்பதால் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய 3 மாவட்டங்களுக்கு டிசம்பர் 3 மற்றும் 4-ம் தேதி பொதுவிடுமுறையை தமிழக அரசு அறிவித்துள்ளது. தொழிலாளர்கள் விடுப்பு எடுக்க அனுமதிக்குமாறு தனியார் நிறுவனங்களுக்கு தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.
நேற்று செய்தியாளர்களிடம் பேசிய சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன், "தென் மேற்கு வங்கக் கடலில் இலங்கை மற்றும் வட தமிழகத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்தில் நீடிக்கிறது. இதனால் அடுத்த 3 அல்லது 4 நாட்களுக்கு தமிழகம், புதுச்சேரியின் பெரும் பாலான பகுதிகளில் மழையும், ஒரு சில இடங்களில் கனமழையும் பெய்யும் வாய்ப்புள்ளது.
கடலோர மாவட்டங்கள், கடலூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அதி கனமழை பெய்யும். நீலகிரி, கோவை போன்ற மலை மாவட்டங்களில் கன மழை பெய்யும் வாய்ப்புள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திரு வள்ளூர் மாவட்டங்களில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். விட்டுவிட்டு மழை பெய்யும். ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும்" என்றார்.
100 ஆண்டில் இல்லாத அளவு
சென்னையில் கடந்த 1901-ம் ஆண்டு டிசம்பர் 10-ம் தேதி 24 மணி நேரத்தில் 26.1 செ.மீ. மழை பெய்தது. இதுவே இதுவரை அதிக பட்ச மழை அளவாக இருந்தது. ஆனால், நேற்று காலை நிலவரப் படி சென்னையில் அதிக பட்சமாக 33 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. புறநகர் பகுதிகளில் அதிக அளவாக 49 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

சென்னையில் இரண்டு நாட்களாக இடைவிடாது கொட்டும் கன மழையால் மாநகரமே வரலாறு காணாத அளவுக்கு வெள்ளத்தில் மிதக்கிறது. ஆயிரக்கணக்கான வீடுகள் தண்ணீரில் மூழ்கியுள்ளன.
கன மழையால் நிரம்பி வழியும் சென்னையின் முக்கிய ஏரிகளில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 30 ஆயிரம் கன அடிக்கும் அதிகமான நீர் திறந்து விடப்படுகிறது. இதனால் அடையாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. அடையாற்றின் குறுக்கே உள்ள பாலங்களும் மூழ்கியுள்ளன. இதனால் சாலை போக்குவரத்து முடங்கியுள்ளது.
அடையாற்றின் கரையோரங்களில் உள்ள கிண்டி, சைதாப்பேட்டை, ஈக்காட்டுதாங்கல், அடையாறு உள்ளிட்ட பகுதிகளில் பாலங்களின் மேல் தண்ணீர் பாய்ந்து செல்கிறது. சாலைகள் ஆறுகள் போல காட்சிய ளிக்கின்றன. கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தையும், கோயம்பேடு பேருந்து நிலையத்தையும் இணைக் கும் 100 அடி சாலையில் வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் கோயம் பேடு பேருந்து நிலையத்திலிருந்து மிகக்குறைவாகவே பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
விமான நிலையம் மூடல்
மீனம்பாக்கம் விமான நிலை யத்தின் ஓடுபாதைகளில் தண்ணீர் தேங்கியதால் விமான சேவைகள் அனைத்தும் நிறுத்தப்பட்டு விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது. டிசம்பர் 6 வரை மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
சென்னையின் புறநகர் பகுதிக ளான பொத்தேரி, ஊரப்பாக்கம், அனகாபுத்தூர், பம்மல், முடிச்சூர், மன்னிவாக்கம், மேற்கு தாம்பரம், குன்றத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் முதல்மாடி மூழ்கும் அளவுக்கு தண்ணீர் சூழ்ந்துள்ளது. இதனால் மக்கள் 2-வது, 3-வது மாடிகளிலும், மொட்டை மாடிகளிலும் தஞ்சம் அடைந்துள்ளனர்.
உள்ளகரம், மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, வேளச்சேரி, ஆவடி, அம்பத்தூர், கொரட்டூர், பட்ர வாக்கம், விநாயகபுரம், கொளத் தூர், பெரம்பூர், வியாசர்பாடி, சூளை, பட்டாளம், புரசைவாக்கம், காசி திரையரங்க பகுதி, அசோக் நகர், வில்லிவாக்கம் சிட்கோ நகர், எம்.ஜி.ஆர். நகர், கே.கே.நகர், உள்ளிட்ட பகுதிகளில் சாலை களில் 5 அடி முதல் 8 அடி வரை தண்ணீர் தேங்கியுள்ளது. பெரம் பூர் பேருந்து நிலையம் அருகே தெருவில் 5 அடி தண்ணீர் தேங்கியுள்ளது. வியாசர்பாடி புதிய மேம்பாலத்தின் அருகிலுள்ள குடிசைமாற்று வாரிய குடியிருப்பு களுக்குள் 5 அடி வரை தண்ணீர் தேங்கியுள்ளது.
அண்ணாசாலையில் உள்ள மூசா காதிரி தர்காவுக்குள் மழை நீர் புகுந்தது. அந்த தர்கா வளாகத்தில் 2 அடி அளவுக்கு தண்ணீர் சூழ்ந் துள்ளது. அண்ணா சாலை அருகே கூவம் கால்வாய் கரையில் வசித்து வரும் பூதப்பெருமாள் கோயில் பகுதியைச் சேர்ந்த 100 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கின.
நகரின் பெரும்பாலான பகுதிகளில் ஆயிரக்கணக்கான வீடுகளில் தண்ணீர் புகுந்து வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்க மீனவர்களின் படகுகளை இரவல் வாங்கி போலீஸார் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தினர். புறநகர் பகுதிகளில் பைபர் படகு, ரப்பர் படகு மூலம் ராணுவத்தினரும், பேரிடர் மீட்புக் குழுவினரும் பொதுமக்களை மீட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கு வதற்கு ஏற்பாடு செய்தனர். சில இடங்களில் ஹெலிகாப்டர் மூலம் உணவு பொட்டலங்கள் வழங்கப்பட்டன. பல்லாயிரக்கணக்கான மக்கள் பள்ளிகள், சமூக நலக் கூடங்கள், மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
குடிநீர், பால் கிடைக்காமல் மக்கள் தவிப்பு
சாலை, ரயில் போக்குவரத்து மட்டுமின்றி, விமானப் போக்குவரத்தும் இல்லாததால் தமிழகத்தின் தலைநகரமான சென்னை, மாநிலத்தின் பிற பகுதிகளுடன் முற்றிலும் துண்டிக்கப்பட்டது.
பால், குடிநீர் மற்றும் உணவுப் பொருட்கள் கிடைக்காமல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல பகுதிகளில் மக்கள் தவித்து வருகின்றனர்.
சென்னை மாநகருக்கு வெளியூர்களில் இருந்து பால், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்கள் கூட வர முடியாமல் போனது. மேலும், தொடரும் மழை மற்றும் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம் காரணமாக நகரின் பல சாலைகள் போக்குவரத்துக்கு ஏற்றதாக இல்லை.
இதனால் கடைகளுக்கு தேவையான பால், குடிநீர் கேன் போன்ற பொருட்களை பிற இடங்களிலிருந்து கொண்டு செல்ல முடியவில்லை. பெரும் பாலான பகுதிகளில் கடைகள் திறக்கப்படவேயில்லை. இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களின் பல பகுதிகளில் குடிநீர், பால் கூட கிடைக்காமல் மக்கள் அவதிப்படுகின்றனர்.
========================================================================

முகனூல்.
அரசு ஊழியர்களை நிற்க வைத்து ஒருமுறை காலில் விழுந்து 
வணங்க வேண்டும்
\
"ஒருத்தரும் வாங்குற சம்பளத்துக்கு வேலை செய்யறதில்லை. யாருக்கும் பொறுப்பில்லை. எப்பவும் எதிலும் அலட்சியம். இவங்களிடம் இருப்பதை எல்லாம் பிடுங்கி, தனியார்கிட்ட கொடுத்துடணும் சார். அப்போதான் இந்த நாடு உருப்படும்"
இந்த டயலாகை நாம் அடிக்கடி கேட்டிருப்போம். (சில சமயம் விரக்தியில் நானும் சொன்னதுண்டு.)
இப்போது பெருமழை ஊழித் தாண்டவமாடுகிறது.
சொந்த வீடு பெருமை பேசியவர்கள் எல்லாம் வீதியில் நிற்கின்றனர்.
பள்ளிக்கூடங்கள் எல்லாம் அகதிகள் முகாமாக மாற்றப்பட்டுள்ளது.
அடுத்து என்ன? என்று மக்களுடன் அரசாங்கமும் திகைத்து நிற்கிறது.
கருத்து சொன்ன கந்தசாமிகள் எல்லாம் பாதுகாப்பாக அவரவர் வீட்டில் மிளகாய் பஜ்ஜி சாப்பிட்டுக் கொண்டு டிவி பார்த்துக் கொண்டிருக்க,
அவர்கள் பெரும் நம்பிக்கையைப் பெற்ற டாடா, அம்பானி, அதானி எல்லாம் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருக்க,
இடுப்பில் கயிறு கட்டிக் கொண்டு, பொங்கி வரும் ஏரியில் குதித்து மதகுகளை சரி செய்யும் பொதுப்பணித்துறை ஊழியர்களும்,
கொட்டும் மழையிலும், வெற்றுடம்புடன் சாக்கடையில் குதித்து, வெறுங்கையாலேயே அடைத்துக்கொண்டிருக்கும் ப்ளாஸ்டிக் கழிவுகளை வாரி வெளியே போடும் மாநகராட்சி ஊழியர்களும்,
கீழே வெள்ளமும் மேலே மழையும் கொட்டிக் கொண்டு இருந்தும் எந்தப் பாதுகாப்புமின்றி துணிச்சலாக டிரான்ஸ்ஃபாரத்தில் ஏறி மின் தடங்களை சரி செய்து தரும் மின்வாரிய ஊழியர்களும்,
அரசு தந்த ஓட்டைப் பேருந்துகளின் உள்ளே, தன் தலைக்கு மேலே கொட்டும் நீரிலிருந்து தப்பிக்க தலையில் ப்ளாஸ்டிக் கவரை சுற்றிக் கொண்டு வெள்ளம் பாயும் ஓட்டைச் சாலைகளில் பேருந்துகளை இயக்கும் மாநகர போக்குவரத்து ஊழியர்களும்,
எல்லாவற்றையும் அடித்துக் கொண்டுச் செல்லும் ஆற்று வெள்ளத்தில் துணிச்சலாக குதித்து, வீட்டில் வந்து சேரும் விஷப்பாம்புகளை வெறும்கையில் தூக்கி, ஆள் உயர தண்ணீரிலும் நீந்தி சென்று கடமையாற்றும் தீயணைப்புத்துறை வீரர்களும்தான்.

இப்போது கதியற்று திகைத்து நிற்கும் சாமானிய மக்களுடன் துணை நிற்கின்றனர்.
இரவு, பகல் இல்லை. வீடு, மனைவி கவலை இல்லை. பசி, தூக்கம்,ஓய்வு இல்லை.
குறைந்த பட்சம் அருகில் இருந்து தட்டிக் கொடுக்க எந்த அதிகார வர்க்கங்களும் இல்லை.
இருந்தும், துணிச்சலாக கடமையாற்றும் இந்த மனிதர்களை வணங்குகிறேன்.
மக்கள் பணியாற்றும் இவர்களை அரசு ஊழியர்கள் என்றும்
அதிகாரத்துக்கு அலைபவர்களை மக்கள் தொண்டர் என்றும்
பெயரிட்டு அழைக்கும் இந்த சமூகத்தின் நகைமுரண் கண்டு வியக்கிறேன்.
இந்தக் கொடுங்கனவு முடிந்தவுடன், சிறந்த முறையில் பணியாற்றிய இத்தகைய 
என்று தோன்றுகிறது.







முகனூலில்Nanthivarman Mahalingam .
தண்ணீரில் தத்தளிக்கும் தமிழகத்தை தனித்து நின்று காப்பாற்றிய[?] தாயே .
சத்தியமா சொல்றேன் . அழிஞ்சிருவீங்கடா.. அவனவன் அரும்பாடுபட்டு மீட்பு பணில இருக்கான். தனியொரு ஆளா இந்தம்மா மக்கள காக்குதாம். மலிவான விளம்பரம்..ச்சே...
உமா மகி
காலில் விழுந்து நக்கும் இந்த மனிதத்தன்மையற்ற நாயை என்ன செய்யலாம்.[நாய் கோபித்துக்கொள்ள வேண்டாம் ]
============================================================================================

இன்று,
டிசம்பர்-03.

  • இந்தியாவின் போபாலில் விஷவாயு கசிவு ஏற்பட்டது(1984)

  • சர்வதேச மாற்றுதிறனாளிகள் தினம்
  • நவீன அஞ்சல் சேவையை கண்டுபிடித்த ரோலண்ட் ஹில் பிறந்த தினம்(1795)
  • இந்தியாவின் முதல் ஜனாதிபதி ராஜேந்திர பிரசாத் பிறந்த தினம்(1884)
  • இந்திய-பாகிஸ்தான் போர் ஆரம்பமானது(1971)

=============================================================================================
வந்தது லை -பை,
கண்ணுக்கு புலப்படும் ஒளிக்கற்றைகளை பயன்படுத்தி, இணையத்தை பயன்படுத்துவதற்கான ஒரு புதிய தொழில் நுட்பமே லைஃபை என அழைக்கப்படுகிறது.
இது வைஃபை ஐ (Wi-Fi) விட 100 மடங்கு வேகமாக செயற்படக் கூடியது . வைஃபையில் பயன்படுத்தப்படும் ரேடியோ அலைவரிசைகளை விடவும், லைஃபை 10 000 மடங்குகள் பெரியதாகும்.
லைஃபை இணைய வசதியைப் பெறுவதற்கு சாதாரண LED மின்குமிழ், இணைய இணைப்பு, மற்றும் போட்டோ டிரக்டர் ஆகியன போதுமானவை.
வினாடி ஒன்றுக்கு 1 Gb (கிகாபைட்) வரையான வேகத்தில் இணைய பயன்பாட்டைப் பெற லைஃபை தொழில்நுட்பம் வகை செய்கிறது.
ஓளிக்கற்றை வாயிலான இந்த லைஃபை இணையப் பாவனை தொழில்நுட்பம். அலுவலகம் ஒன்றில் வெற்றிகரமாக பரீட்சிக்கப்பட்ட பின்னரே இந்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
இந்தத் தொழில்நுட்பம் அடுத்துவரும் 3 அல்லது 4 ஆண்டுகளுக்குள் வாடிக்கையாளர்களை சென்றடையும் என, இந்தத் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ள வெல்மினி நிறுவனத்தின் தலைமை அதிகாரி தீபக் சொலாங்கி தெரிவித்தார்.
வைஃபை தொழில்நுட்பத்தில் ரேடியோ அலைவரிசைகள் பாவிக்கப்படுவதால் அவை மருத்துவமனைகள், விமானங்கள், மற்றும் குறிப்பிட்ட இடங்களில் பயன்படுத்துவதற்கு தடை உள்ளது. ஆதலால், லைஃபை தொழில்நுட்பம் மூலமாக, இந்தக் குறையை போக்கிக் கொள்ளலாம் என, எடின்பரோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஹரால்ட்டு ஹாஸ் 2011 இல் நடைபெற்ற தொழில்நுட்ப மாநாட்டில் லைஃபை என்ற தொழில்நுட்பத்தை முதல் முறையாக தெரிவித்திருந்தார்.
வீட்டில் உள்ள வைஃபை இணைப்பு சரியாக கிடைக்காமல் போவதற்கு வீடுகளில் பாவிக்கப்படும் இலத்திரனியல் சாதனங்கள் ஒரு காரணம்.
டிசம்பர் மாதத்தில், குறிப்பாக அனேகமானோரின் வீடுகளில் வைஃபை இணைப்பில் பெரும் சிக்கல் ஏற்படுகிறது என்பதற்கு காரணம் வீடுகளில் உள்ள கிருஸ்துமஸ் மரங்களில் அலங்கரிக்கப்பட்டுள்ள மின்குழிழ்கள் என ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
பிரித்தானியாவில் தொலைத் தொடர்புகளின் தங்களைக் கண்காணிக்கும் அமைப்பான ஓஃப்கொம் வைஃபையின் உறுதித்தன்மையை பரிசீலிக்க செயலிகளையும் உருவாக்கியுள்ளது.
==========================================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?