ந மது உடல்,

மது உடல்,  ஒவ்வொரு உடல் பாகத்திற்கென தனித்தனியே கடிகாரத்தின் அலாரத்தை முன்பதிவு செய்து கொண்டு சுழன்று கொண்டிருக்கிறது. 
ஒவ்வொரு உறுப்புக்கும் அதன் பணியை செய்து முடிக்க இரண்டு மணிநேரம் ஒதுக்கியுள்ளது. 
இரண்டு மணி நேரம் முடிந்ததும் மீண்டும் அலாரத்தை அடுத்த உறுப்புக்கு மாற்றிவிடுகிறது. 
அது போன்ற நேரத்தில் நாம் அந்த உடல் உறுப்புகளுக்கு ஒத்துழிப்பது போல் நமது நடை முறைகளை வைத்துக்கொண்டால் உடல் நலத்தை சீராக வைத்துக்கொள்ளமுடியும்.
இனி மனித உடலில் உள்ள உறுப்புகளின் வேலைப்பாடுகளைஅதற்கான நேரங்களையும்  பார்ப்போம்...
அதிகாலை 3.00-5.00 நுரையீரல்

இந்த நேரத்தில் சுவாசப்பயிற்சி செய்து காற்றின் மூலம் வரும் பிராண சக்தியை உடலுக்குள் அதிகமாகச் சேகரித்தால் ஆயுள் நீடிக்கும். தியானம் செய்யவும் ஏற்ற நேரம் இது. ஆஸ்துமா நோயாளிகள் இந்த நேரத்தில் மிகவும் சிரமப்படுவார்கள்.

காலை5.00-7.00 பெருங்குடல்

காலைக் கடன்களை இந்த நேரத்துக்குள் முடித்தே தீரவேண்டும் மலச்சிக்கல் உள்ளவர்கள் இந்த நேரத்தில் எழுந்து கழிவறைக்குச் செல்லும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டால் நாளடைவில் மலச்சிக்கல் தீரும். உயிரணுக்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாக உள்ள நேரமும் கூட இதுவே.

காலை 7.00 - 9.00 மணி வயிறு

இந்த நேரத்தில் கல்லைத் தின்றாலும் வயிறு அரைத்துவிடும். காலை உணவை பேரரசன் போல் உண்ண வேண்டும் என்று சொல்வார்கள். இந்த நேரத்தில் சாப்பிடுவது தான் நன்கு செரிமானமாகி உடலில் ஒட்டும்.
 
9.00-11.00: மண்ணீரல்


காலையில் உண்ட உணவை மண்ணீரல் செரித்து ஊட்டச்சத்தாகவும் ரத்தமாகவும் மாற்றுகிற நேரம் இது. இந்த நேரத்தில் பச்சைத் தண்ணீர் கூடக் குடிக்கக்கூடாது. மண்ணீரலின் செரிமான சக்தி பாதிக்கப்படும். நீரழிவு நோயாளிகளுக்கு மோசமான நேரம் இது.

பகல்11.00-1.00: இதயம்


இந்த நேரத்தில் அதிகமாகப் பேசுதல், அதிகமாகக் கோபப்படுதல், அதிகமாகப் படபடத்தல் கூடாது. இதயம் பாதிக்கப்படும். இதய நோயாளிகள் மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டிய நேரம்.

பிற்பகல் 1.00-3.00 சிறு குடல்

இந்த நேரத்தில் மிதமாக மதிய உணவை உட்கொண்டு சற்றே ஓய்வெடுப்பது நல்லது.

பிற்பகல் 3.00-5.00 சிறுநீர்ப்பை


நீர்க்கழிவுகளை வெளியேற்ற சிறந்த நேரம்.

மாலை5.00-7.00 சிறுநீரகம்


பகல் நேர பரபரப்பிலிருந்து விடுபட்டு அமைதி பெற, எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க, தியானம் செய்ய, வழிபாடுகள் செய்ய சிறந்த நேரம்.

இரவு7.00-9.0 பெரி கார்டியம்


பெரிகார்டியம் என்பது இதயத்தைச் சுற்றி இருக்கும் ஒரு ஜவ்வு இதயத்தின் Shock absorber.இரவு உணவுக்கு உகந்த நேரம் இது.

இரவு 9.00-11.00 டிரிப்பிள் கீட்டர்


இது ஒரு உறுப்பல்ல. உச்சந்தலை முதல் அடி வயிறு வரை உள்ள மூன்று பகுதிகளை இணைக்கும் பாதை. இந்த நேரத்தில் உறங்கச் செல்வது நல்லது.

இரவு 11.00- 1.00: பித்தப்பை


இந்த நேரத்தில் தூங்காது விழித்திருந்தால் பித்தப்பை இயக்க குறைபாடு ஏற்படும். 

நள்ளிரவு 1.00- அதிகாலை 3.00 கல்லீரல்


இந்த நேரத்தில் நீங்கள் உட்காந்திருக்கவோ விழித்திருக்கவோ கூடாது. கட்டாயம் படுத்திருக்க வேண்டும். உடல் முழுவதும் ஓடும் ரத்தத்தை கல்லீரல் தன்னிடத்தே வரவழைத்து சுத்திகரிக்கும் நேரம் இது. இந்த பணியை நீங்கள் பாதித்தால் மறுநாள் முழுவதும் சுறுசுறுப்பில்லாமல் அவதிப்படுவீர்கள். இது தான் நமது உடலில் உள்ள உறுப்புகளின் செயல்பாடுகள். இதையறிந்த இதற்கு ஏற்றாற் போல் தங்களது நடைமுறை வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் நோயின்றி வாழலாம்.

நன்றி:குங்குமம் தோழி,

====================================================================================
இன்று,
டிசம்பர்-17.
  • பூட்டான் தேசிய தினம்
  • கோவாவை இந்தியா, போர்ச்சுகலிடம் இருந்து கைப்பற்றியது(1961)
  • அயர்லாந்தின் முதலாவது ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டது(1834)
  • பிரேசிலில் 25 ஆண்டுகளுக்கு பின் முதலாவதுபொதுத்தேர்தல் நடைபெற்றது(1989)
டிசம்பர் 17: ரைட் சகோதரர்கள் முயற்சியினால் முதன் முதலாக வானில் விமானம் பறந்த நாள் இன்று. (1903)

=========================================================================================
முகநூல்.






இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?