இடுகைகள்

ஆகஸ்ட், 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சும்மா இருத்தலே சுகம்

படம்
சும்மா இருத்தலே சுகம் என்று சொல்வதை கேள்விபட்டிருக்கலாம். சும்மா என்றால் ஒரு திரைப்படத்தில் வடிவேலு சும்மா இருப்பது எவ்வளவு கஷ்டம் என்று கூறியிருப்பாரே அந்த சும்மா இல்லை. தரையில் படுத்து மனதை ஒரு நினைவும்,அசை போடுதலுமின்றி ஒரு நிலைப் படுத்தி தரையில்  கை கால்களை தளர்த்தி படுத்துக் கிடப்பது.தலைக்கு தலையணை இருக்கக் கூடாது. சுருக்கமாகக் கூறினால் சவம் போன்று கிடப்பது. அதானால் தன இதற்கு சவாசனம் என்று பெயரும் கூட. அப்படி சவமாகக் கிடக்கையில் நீங்கள் ஆரோக்கியமாக ,இளமையாக ,மகிழ்வாக இருப்பதாக எண்ணி மூன்று நிமிடங்கள் ஆழ்ந்த மூச்சை மெதுவாக விடுங்கள். அதன் பின்னர் பாருங்கள் அன்றைய தினம் உங்கள் மகிழ்ச்சியும்,சுறு,சுறுப்பையும்,தன்னமிக்கை எண்ணங்கள் மனம் முழக்க மலர்வதையும். அதிக பரபரப்பு மற்றும் மன அழுத்தத்தால் பாதிக்கப்படும் பெண்கள் அதற்காக வேறு எதையாவது செய்வதை விட, இந்த சவாசனத்தை செய்யலாம்.  இந்த ஆசனம் மூலம் உடல் தணிவடைதல், மன அமைதி, உடலுக்கு சீரான ஓய்வு கிடைக்கும். மிகவும் எளிதான ஆசனமாகவும், வீட்டில் எளிதாக செய்யவும் இயலும். சவாசனம் காலையில் எழுந்து பல் துலக்கி காலைக் கடன்களை முடித

அம்மா 110ல் தைத்த சட்டை

படம்
இன்றும் இந்திராணி தொடர்புடைய கொலை வழக்குத்தான் . காரணம் இன்று வெளிவரும் த்திரைப்பட்ன்களை விட பரபர திருப்பங்களுடன் கவர்ச்சியும் கலந்துள்ள கதையாகத்தெரிகிறது . ஆனால் உண்மைக்கதை. எப்படியும் சில நாட்களில் இந்தி,தெலுங்கு ,மலையாளம்,தமிழ் என இந்த சம்பவம் திரைப்படமாக வரப்போகிறது.அதற்குள் நாம் முந்திக்கொண்டால் குறைந்த பட்சம் கதை நம்மது என்று வழக்காவது போட்டு பரபரப்பை உண்டாக்கலாம் அல்லவா?  மகளை பிரபல டிவி பெண் அதிபர் இந்திராணி கொலை செய்த விவகாரத்தில் அடுத்தடுத்து மர்மங்கள் தொடர்கின்றன.  ஷீனா கொலையில் தான் சம்பந்தப்பட்டுள்ளதாக இந்திராணியின் இரண்டாவது கணவன் சஞ்சீவ் கன்னா ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளான். அதேசமயம், கொலையில் மூன்றாவது கணவன் பீட்டர் முகர்ஜி,  அவர் மகனும் ஷீனாவின் காதலன் ராகுலுக்கும் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் போலீஸ் விசாரணையை திருப்பி விட்டுள்ளது. கொலை நடந்த அன்று நானும் மும்பையில் தான் இருந்தேன்; ஆனால், எனக்கு கொலை பற்றி தெரியாது என்று கூறிய இந்திராணி மகன் மிக்கேலை இப்போது போலீஸ், ரகசிய இடத்துக்கு அழைத்து சென்று துருவித்துருவி விசாரித்து வருகின்றனர்.  இவ்வளவு பரபரப்புக்கு இ

மெகா காதலர்கள்.ஒரு குற்றக் கதை!

படம்
செல்லமாக வளர்த்த தன் மகள் ஷீனாவை, பிரபல டிவி பெண்  அதிபர் இந்திராணி முகர்ஜி கொலை செய்ததற்கு காரணம், பணவெறியா...?  கள்ளக்காதல் வெறியா...?  என்ற கோணத்தில் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.  இந்திராணியை ரகசியமான இடத்தில் தங்க வைத்து போலீஸ் அதிகாரிகள்  பல கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.  டிவி தொடர்களை மிஞ்சும் வகையில் நடந்த இந்த மிக கொடூரமான கொலை வழக்கில் சம்பந்தப்பட்டிருக்கும் இந்திராணி இதுவரை எந்த தகவல்களையும் கூறாததால் போலீசார், உண்மை காரணத்தை கண்டுபிடிப்பதில் திணறி வருகின்றனர்.  இந்திராணி முகர்ஜி ;  வரலாறு.? பிரபலமாகும் முன் இவர் வேலைக்கு ஆள் எடுக்கும் கன்சல்டன்சியில் பணியாற்றி வந்தார்.  அதன் பின் டிவி உலகில் புகுந்தார்; பெரிய இடத்து சகவாசங்கள் அதிகரித்தன; பணமும் குவிந்தது; பதவிகளும் தேடி வந்தன. முதல் கணவர் சித்தார்த் தாசுடன் இருந்தபோது வரை சாதாரண பெண்மணி தான். இவர்களுக்கு பிறந்த மகள் தான் ஷீனா; மகன் மிக்கேல்; பணமும், நட்புகளும் அதிகரிக்கவே, வெளியுறவுகளும் அதிகரித்தன.  இதன் விளைவு சித்தார்த்தை விட்டு பிரிந்தார் இந்திராணி. சஞ்சீவ் கண்ணா என்பவரை மணந்தார். அவரையும் கழற

சொத்துக் குவிப்பு குமாரசாமி!

படம்
"சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவை விடுதலை செய்த நீதிபதி குமாரசாமி, விதிமுறைகளை மீறி, பெங்களூருவிலும், மைசூருவிலும் சொத்துகளை வாங்கி குவித்துள்ளதாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வெண்டும் என்றும்  மனு வழங்கியுள்ளனர். தகவல் அறியும் உரிமை ஆர்வலர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் ஒருங்கிணைந்து, 'கர்நாடகா பிரஷ்ட்டா நீர் மூலனா வேதிகே' என்ற அமைப்பை ஏற்படுத்தி, ஊழலுக்கு எதிராக போராடி வருகின்றனர். சொத்து குவிப்பு வழக்கில், தமிழக முதல்வர் ஜெயலலிதா உள்ளிட்ட நான்கு பேரை விடுதலை செய்த நீதிபதி குமாரசாமி, கடந்த, 24ம் தேதி ஓய்வு பெற்ற நிலையில், அவர் மீது, சொத்து குவிப்பு புகார் கிளம்பி உள்ளது. தகவல் அறியும் உரிமை சட்டத்தில் சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், குமாரசாமியிடம் விசாரணை நடத்த உத்தர விடும்படி, ஜனாதிபதி, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு, கர்நாடகா பிரஷ்ட்டா நீர் மூலனா வேதிகே அமைப்பின் தலைவர் ராமலிங்க ரெட்டி, புகார் மனு அளித்துள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:- *கடந்த, 1997ல், குமாரசாமி, கோலார் மாவட்ட செஷன்ஸ் நீதி