இடுகைகள்

டிசம்பர், 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

2015 ஆண்டு ஒரு பின்னோக்கிய பார்வை.

படம்

காசு கேட்கும் மால்வேர் வைரஸ்

படம்
மால்வேர் புரோகிராம்கள் மூலம் கணினிகளைக் கைப்பற்றி, அவற்றை முடக்கி வைத்து, இயங்க வேண்டுமானால், குறிப்பிட்ட அளவு பணம் தர வேண்டும் என்ற அச்சுறுத்தல்களைப் பெறுவதில், ஆசியாவில் இந்தியா மூன்றாவது இடம் பெற்றுள்ளது.  இத்தகைய மால்வேர் புரோகிராம்களை Ransomware malware programs என அழைக்கிறார்கள். தற்போது 'எங்கும் எதிலும் இணையம்' (Internet of Things) என்ற பழக்கம் பரவி வருவதால், இத்தகைய மால்வேர் புரோகிராம்கள் பரவுவது இன்னும் அதிகரிக்கும் என்று, வைரஸுக்கு எதிரான ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களைத் தயாரித்து வழங்கும், அமெரிக்காவினைச் சேர்ந்த செமாண்டெக் நிறுவனம் அறிவித்துள்ளது.  வரும் 2016 ஆம் ஆண்டிற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து செமாண்டெக் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது போன்ற Ransomware threats இந்தியாவில் ஆண்டுக்கு 60,000/ என்ற எண்ணிக்கையில் உள்ளது எனத் தெரிவித்துள்ளது.  அதாவது நாள் ஒன்றுக்கு, 170 மால்வேர் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. இந்த Ransomware புரோகிராம்கள் பாதித்த கணினிகள், அதன் பயனாளர்களைத் தங்கள் கணினிகளை  பயன்படுத்தாதபடி முடக்கிவிடுகின்றன.  அல்லது மி

எலிக் காய்ச்சலுக்கு மருந்து!

படம்
‘‘வெள்ளத்தின்போது ஏற்படும் ஆபத்துகளைவிட வெள்ளம் வடிந்தபின் ஏற்படும் வைரஸ் காய்ச்சல், டைபாய்டு காய்ச்சல், வாந்தி, வயிற்றுப்போக்கு, மஞ்சள் காமாலை போன்ற சுகாதாரக்கேடுகளால்தான் மக்களுக்குப் பல்வேறு ஆபத்துகள் வருகின்றன’’ என்கிறது உலக சுகாதார நிறுவனம்.  இந்த வரிசையில் ’எலிக் காய்ச்சல்’ என்று அழைக்கப்படுகிற  ‘லெப்டோஸ்பைரோசிஸ்’   (Leptospirosis) நோய் முக்கியமானது. ‘லெப்டோஸ்பைரா’ எனும் பாக்டீரியா கிருமிகள் நம்மைப் பாதிப்பதால் இது ஏற்படுகிறது.  இந்தக் கிருமிகள் எலி, பெருச்சாளி, ஆடு, மாடு, பன்றி, பூனை போன்ற பல்வேறு விலங்குகளின் உடலில் வசித்து, அவற்றின் சிறுநீர் வழியாக வெளியேறும்.  மழைக்காலத்தில் தெருக்களில் தண்ணீர் தேங்கும்போது, வீட்டில் வளரும் எலி, பெருச்சாளி போன்றவையும் அந்தத் தண்ணீர் வழியாகச் சென்றுவரும். அப்போது அவற்றின் சிறுநீர்க் கழிவும் அதில் கலக்கும்.  அந்தக் கழிவுகளில் ‘லெப்டோஸ்பைரா’ கிருமிகள் இருந்தால் எலிக் காய்ச்சல் வரும். பாதங்கள் வழியாக இந்தக் கிருமிகள் உடலுக்குள் நுழைவதுதான் அதிகம். எனவே  பாதங்களில் விரிசல், பித்த வெடிப்பு, புண், சேற்றுப்புண் உள்ளவர்களுக்கு இந்த நோய் வ

மழைக்கால சுவாசம்

படம்
இந்த மழைக்காலத்தில் வெள்ளத்தினால் கிருமிகள் ஏற்படுத்தும் நோய்களில் முக்கியமானது சுவாசம் ,சுவாசப்பை தொடர்பான  கோளாறுகள்  .  தொண்டை நோய்கள்,  சுவாச கோளாறுகள்,  இருமல்,  நெஞ்சக சளி,  ரத்தம் கலந்து சளி வருவது போன்றவைதான் அவை. அவைகளைப் போக்கும் மருந்துகளை பார்க்கலாம் . இயற்கையான நம் வீட்டிலேயே இருக்கும் பொருட்களை வைத்தே நோய்களை காணாமல் போகச்செய்யலாம்.பின் விளைவுகளும் இராது.  முள்ளங்கியை பயன்படுத்தி இருமல் மருந்து.  முள்ளங்கியை சுத்தப்படுத்தி தோல் நீக்கிவிட்டு அறைத்து 2 ஸ்பூன் அளவுக்கு எடுக்கவும்.  இதனுடன் அரை ஸ்பூன் பனங்கற்கண்டு, ஒரு டம்ளர் நீர் விட்டு கொதிக்க வைக்கவும்.  வடிகட்டி எடுத்து, இருமல் இருக்கும்போது காலை, மாலை 50 மிலி எடுத்துக் கொள்ளவும். மழைக்காலத்தில் ஏற்படும் இருமல், சளி, தொண்டை கட்டுதல் ஆகியவை சரியாகும்.முள்ளங்கியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நோய் வராமல் காக்கும்.  இது க ந்தக சத்தை அதிகம் பெற்றுள்ளது.  விட்டமின் சி, மினரல் இருக்கிறது.  நோய் எதிர்ப்புசக்தி உள்ளது.  சளியை கரைக்கும் தன்மை உடையது.  உடலுக்கு உஷ்ணத்தை தரும். வெற்றிலையை பயன்படுத்தி இருமல

"பீப்" போய் " த்தூ" வந்த'தூ',

படம்
பெரு மழை,செம்பரம்பாக்கம் வெள்ளம் அதில் மக்கள் பட்ட அவதிகளை மறக்கடிக்க அரசுக்கும் ,அதனை அண்டி வாழும் ஊடகங்களுக்கு தொடர்ந்து பர,பர செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. முதலில் பீப் பாடல் சிம்பு.மகளிர் சங்கங்கள் எதிராக போராட கிளம்பும் போது உலகநியாயம் பேசும் சிம்பு தந்தை ராஜேந்தர் மகனை அப்பாடலுக்கு வருத்தம் தெரிவிக்க கூறி அதன்படி நடந்திருந்தால் இன்று அந்த பிரச்னை முடிந்து மக்கள் மறந்தும் போயிருப்பார்கள். ஆனால் என்ன காரணத்தினாலோ சிம்பும் அவரைச்சார்ந்தவர்களும் அதை ஊதி பெரிதாக்கினார்கள். கூவி காவல்துறையினர் தே டி வந்த போது  சிம்பு உடன் போய் ஒருசின்ன வருத்தம் கூறி வாக்குமூலம் கொடுத்திருந்தால் கூட அச்சமயம் பீப் பிரச்னை பீசாயிருக்கும். மாறாக சிம்பு ஒடி  ஒளிந்தார். தனது மகனுக்கு தெரியாமல் பாடல் வெளியாகி விட்டது என்றார் ராஜேந்தர். சிம்புவின் முன்னாள் காதலிகள் நயன்தாரா,ஹன்சிகா போன்றோருடன் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து கொஞ்சும் படங்கள்  யாரால் எடுக்கப்பட்டது?சிம்பு அப்போதைய காதலியுடன் உறவு முறிந்ததும் உடனே வலைத்தளங்களில் யாரால் ஏற்றப்பட்டது ? மற்றொரு வீரப்பன்,யுவராஜ் போல்

யாரோடு யார்?

படம்
சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்புக்கு இன்னும் 2 மாதங்கள் மட்டுமே உள்ளதால், இப்போதே அரசியல் கட்சிகள் அனல் பறக்கும் வியூகங்களை  வகுத்து வருகின்றன.  கூட்டணிப் பேச்சுவார்த்தைகளையும் தொடங்கியுள்ளனர்.  இதனால் தமிழக அரசியல் வட்டாரம் பரபரப்பாக உள்ளது..  தமிழக சட்டப்பேரவையின் தற்போதைய ஆயுட்காலம் வருகிற மே 23ம் தேதியுடன் முடிகிறது.  எனவே, அதற்கு முன்னதாக புதிய சட்டசபைக்கான தேர்தல்  தேதி அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட வேண்டும்.  அதனால் பிப்ரவரி மாத இறுதியில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, ஏப்ரல் அல்லது மே மாதம் தேர்தல் நடைபெறலாம் என்று  கூறப்படுகிறது.   தமிழகத்தோடு சேர்த்து கேரளா, புதுவை, அசாம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களிலும் தேர்தல் நடைபெறுகிறது.  தமிழகத்தில் இப்போதே அரசியல் கட்சிகள் தேர்தலைச் சந்திக்க சுறு சுறுப்பாக இயங்கத் தொடங்கி விட்டன.  தமிழகத்தில் மிகப் பெரிய கட்சிகளான  திமுக, அதிமுக,  ஆகியவற்றின் முடிவுகள்தான் அரசியலை நிர்ணயிப்பவையாக  உள்ளன.  தற்போதைய நிலையில்,  திமுக கூட்டணியில் புதிய தமிழகம், முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் உள்ளன. அதோடு சேர்த்து சில அரசியல்  கட்சிகளை, கூட