இடுகைகள்

ஜனவரி, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

டாக்டர்களும் ,இன்ஜினியர்களும்

படம்
நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரி அட்மிஷன் பெறுவதற்காக கள்ள சந்தையில் ரூ.12 ஆயிரம் கோடி வரை கருப்பு பணம் புழங்குவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.  நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் இளங்கலை மற்றும் முதுகலை படிப்புகளுக்கான அட்மிஷனுக்கு கள்ள சந்தையில் கோடிக்கணக்கில் கருப்பு பணம் புழங்குவதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன.  இது தொடர்பாக ஆங்கில ஏடு ஒன்று வெளியிட்ட செய்தியில், நாடு முழுவதும் 422 மருத்துவ கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.  அவற்றில் 224 கல்லூரிகள் தனியார் கல்லூரிகள் ஆகும். இந்த கல்லூரிகள் நாடு முழுவதும் உள்ள மொத்த மருத்துவ படிப்புக்கான அட்மிஷனில் சுமார் 54 சதவீதத்தை பகிர்ந்து கொள்கின்றன.  தற்போது புரோக்கர்கள், ஏஜென்டுகள், கள்ளச்சந்தையினர் ஆகியோரின் இலக்கில் இந்த இடங்கள்தான் சிக்கியுள்ளதாக தெரிகிறது.  இது தொடர்பாக ரகசியமாக நடத்தப்பட்ட ஆய்வில், 30 ஆயிரத்திற்கும் அதிகமான எம்பிபிஎஸ் இடங்கள், 9 ஆயிரத்திற்கும் அதிகமான முதுகலை மருத்துவ படிப்புகள் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது.  இதன் மூலம் மருத்துவ படிப்பு

மூளையின் கொள்ளளவு

படம்
முன்பு அறிவியலார்கள் குறிப்பிட்டிருந்ததை விட   மனித மூளையின் கொள்ளளவு பத்து மடங்கு பெரியது என ஆய்வில் தெரியவந்துள்ளது.  நினைவுகள் சேமிப்பதற்கான பொறுப்பு மூளையின் இணைப்புகளுக்கே உள்ளது. தற்போது அறிவியலாளர்கள் இரண்டு நரம்பு செல்களுக்கும் இடையே உள்ள இணைப்பின் (சினாப்ஸிஸ்) சேமிப்பு திறனை அளவிட்டு ஆராய்ந்துள்ளனர். சராசரியாக ஒரு சினாப்ஸிஸ், 4.7 பிட்கள் தகவல்களை வைத்திருக்க முடியும் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அதாவது, மனிதனின் மூளை ஒரு பெடாபைட் (petabyte) அல்லது 1,000,000,000,000,000 பைட்டுகள் திறனுடையது என்று அர்த்தம். ஒரு பெடாபைட் என்பது சுமார் 20 மில்லியன் நான்கு டிராயரில் ஃபில்லிங் காபினெட்டுகள் முழுவதும் உரையால் நிரப்பப்படுவது போல அல்லது 13.3 ஆண்டுகள் எச்டி-டிவி பதிவுகளுக்கு சமம். இது நியூரோ சயின்ஸ் துறையில் ஒரு உண்மையான அதிர்ச்சி தகவல் ஆகும் என்று கூறியுள்ளனர்.  மூளைப் பின்மேட்டில் உள்ள நரம்புகளின் செயல்பாடுகள் குறைந்த சக்தியை கொண்டு எப்படி உயர் கணக்கீட்டு ஆற்றலை வெளிப்படுத்துகிறது என்ற வடிவமைப்பு கோட்பாட்டை  கண்டுபிடித்துள்ளனர் . மின்சாரம் மற்றும் இரசாயன நடவடிக்கைகளின்

விண்டோஸ் 8.1மேம்படுங்கள்?

படம்
  இன்னும் விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டம் பயன்படுத்திக் கொண்டிருக்கிறீர்களா?  உடனே அதனை விண்டோஸ் 8.1க்கு மேம்படுத்திக் கொள்ளுங்கள்.  மைக்ரோசாப்ட், இனி விண்டோஸ் 8 சிஸ்டத்திற்கு எந்தவிதமான பாதுகாப்பு மற்றும் பிழை திருத்துவதற்கான பைல்களை அளிக்காது.  பொதுவாக, மைக்ரோசாப்ட் நிறுவனம், தான் எந்த விண்டோஸ் பதிப்பினை வெளியிட்டாலும், அதன் பாதுகாப்பான இயக்கத்திற்கான பைல்களை, பத்து ஆண்டுகளுக்கு வழங்கும்.  எப்போது ஹேக்கர்கள், இந்த சிஸ்டத்தின் பிழைக் குறியீடுகள் வழியாக உள்ளே நுழைவது தெரிந்தாலும், அதனைச் சரிப்படுத்தும் வகையில், அதற்கான பைல்களை இலவசமாக வழங்கும்.  ஆனால், விண்டோஸ் 8 பதிப்பினைப் பொறுத்தவரை, இனி அத்தகைய பைல்கள் வழங்கப்பட மாட்டாது. எனவே, விண் 8 பயன்படுத்தும் அனைவரும், விண் 8.1 சிஸ்டத்திற்கு மாறிக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இல்லையேல், ஹேக்கர்களின் தொல்லைகளுக்கு ஆளாவோம்.  பன்னாட்டளவில், இந்த வகையில், இன்னும் 5 கோடி பேர் தங்கள் கம்ப்யூட்டர்களில், விண்டோஸ் 8 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைப் பயன்படுத்தி வருகின்றனர். (மொத்த பெர்சனல் கம்ப்யூட்டர்களின் எண்ணிக்கை 200 கோடி)  இனி,

இது ஜிகாத் இல்லை."ஜிகா".

படம்
கொசுக்கள் மூலம் பரவும் 'ஜிகா' என்ற புதிய வைரஸ், 25 நாடுகளை மிரட்டத் தொடங்கி உள்ளது. கரீபியன் மற்றும் அமெரிக்க நாடுகளை சமீப காலமாக மிரட்டி வருகிறது இந்த வைரஸ்.  'ஜிகா' என பெயரிடப்பட்ட இந்த வைரசால் தாக்கப்பட்டால், கர்ப்பத்தில் வளரும் குழந்தைகளுக்கு நரம்பியல் தொடர்பான கோளாறுகளை ஏற்படுத்தும் என கண்டறியப்பட்டுள்ளது.  உலக சுகாதார அமைப்பு (டபிள்யூஎச்ஓ) இதற்கான எச்சரிக்கையை விடுத்துள்ளது.  கரீபியன் நாடுகளுக்கு செல்வோர் உஷாராக இருக்குமாறும் எச்சரித்துள்ளது.மஞ்சள் காய்ச்சல், டெங்கு, சிக்குன்குனியா ஆகிய நோய்களை பரப்பும் 'குடும்பத்தை' சேர்ந்தது ஜிகா வைரசும்.  பொலிவியா, பிரேசில், கொலம்பியா, பராகுவே, அமெரிக்க வர்ஜின் தீவுகள், வெனிசூலா ஆகிய நாடுகளும் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் இந்த நோய்க்கான  எதிர்ப்பு சக்திஇயற்கையிலே  இந்தியர்களுக்கு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.அந்த அளவுக்கு நமது சுகாதாரத்துறை நம்மை சுகாதார சீர்கேட்டுகளுக்கிடையே வாழ வைத்து எதிர்ப்பு சக்தியைஉண்டாக்கியுள்ளது. .  டெங்கு காய்ச்சலைப் போன்ற அறிகுறிகள் தான் இதற்கும்.  காய்ச்சல், தலைவல

பத்ம விருது பெற்ற பத்தரை மாற்று தங்கங்கள்!

படம்
2016 ஆண்டுக்கான மத்திய அரசின் பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.  இவ்விருதுக்கு தகுதி பெற்றுள்ள சில அறிவு ஜீவிகளைப்பற்றி நம் பார்வை: முதலாவதாக இந்தி நடிகர் அனுபம் கேர் விருது பெற்றுள்ளார்.  இவர் பச்சை காஷ்மீர் பண்டித ஆர் எஸ் எஸ் பார்ப்பனர். இன்று வரை சுகபோக வாழ்வு வாழும் காஷ்மீரி பண்டித பார்ப்பனரகள் ஏதோ சாப்பாட்டிற்கே வழியில்லாமல் சிரமப்படுவதைப்போலவும் அவரகள் காஷ்மீருக்கு திரும்ப முடியாமல் இருப்பதாகவும் படம் காண்பித்து கொண்டிருப்பவர். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து மற்றும் சிறப்பு சட்டப்பிரிவு ஆர்ட்டிக்கில் 370 ஐ நீக்க வேண்டும் என்று ஆர் எஸ் எஸ் மற்றும் இந்துத்துவ அமைப்புகளுடன் சேர்ந்து போராடிக்கொண்டிருப்பவர். 2010 ஆம் ஆண்டு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்ட போது இவ்விருதுகள் கேலிக்கூத்து, நம்பகத்தன்மையற்றது என்று தன் ஆற்றாமையை வெளிப்படுத்தினார். ஆனால் இன்று தன் பெயர் இருப்பதை அறிந்தவுடன் மிகுந்த மகிழ்ச்சி, பெருமையடைந்தேன். இது தன்னுடைய வாழ்நாளின் மிக பெரிய தருணம் என்று புளங்காகிதம் அடைந்திருக்கிறார். இவருக்கு பார்ப்பனர் என்ற மனு தர்ம அடிப்படையில் இந்த விருது தரப்பட்டுள்ளது என