சில வினாக்கள்?&எம்ஜிஆரும் ரே கமிசனும்??


கொஞ்சம் நாட்களாக மனதில் ஆடிய சில வினாக்களை அதற்கான பதிலை நாடி தருகிறேன்.ஆனால் இதற்கு சரியான நேர்மையான பதில்கள் வராது.ஏனெனில் செயல்களில் நேர்மை இல்லாததுதான்.ஏதாவது சித்தாந்த ங்கள் என்று கூறி குழப்ப வேண்டுமானால் செய்யலாம்.இப்போதைய நமது கேள்விகளே இவர்கள் நடவடிக்கைகளில் நமக்கு உண்டான குழப்பங்களின்வெளிப்பாடுகள்தான்.மேலும் குழம்ப நம்மால் முடியாது.எனவே இக்கேள்விகளை நமக்கு நாமே வழியில் கேட்டு வைத்துக்கொள்கிறோம் .
இடதுசாரிபக்கம் விரும்பி வரும் இளையத்தலை முறையினரை தங்கள் தவறான வழி காட்டுதலால் அவர்களின் போராட்டக் குணங்களை ஓய்ந்து உடகார வைத்து விடுகிறார்களே இன்றைய மார்சிஸ்ட் கட்சி தலமையினர்.
ஊழலில் ஊற்றுக்கண் என்று கருணாநிதியை வசை பாடி தீண்டத்தகாதவர் போல் பார்க்கும் ஜி.ரா,தா.பா இணை ஊழலில் தண்டனை பெற்று,எப்போது ஆட்சிக்கு வந்தாலும் தொழிலாளர்களுக்கு விரோதமான போக்கையே கடை பிடிக்கும் கடைந்தெடுத்த பாசிஸ்ட் ஜெயலலிதா என்றால் காலில் விழாக்குறையாக தொகுதிகளை வாங்கி வெல்ல நினைக்கிறார்களே.

பதவிப்பாசமா?
இனப்பாசமா?
பணப்பாசமா?

தா.பா.தன் மகனுக்கு பல்கலை பணியை வாங்கி விட்டார்.ஜி.ரா எதற்கு காத்திருக்கிறார்?இதுவரை அரசு ஊழியரகள்,ஆசிரியர்கள் ,அமைப்பு சாரா தொழிலாள்ர்கள் அனைவருக்கும் அவர்கள் கோரிக்கையை நிறிவேற்றி வைத்தவர் கருணாநிதி.அவர் ஆட்சிகாலத்தில் நாளொரு போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கட்சி ஜெயாவால் மக்கள் நலப்பணியாளர்கள்,சாலைப்பணியாளர்கள்,சத்துணவுப்பணியாள்ர்கள் ,போக்கு வரத்துப்பணியாளர்கள்,மாற்றுத்திறனாளிகள் என்று எல்லா தரப்பு தொழிலாளர்களும் ஊதிய உயர்வுக்காக போராடும்போது அவர்களுக்கு ஆதரவாக களத்தில் இறங்கி முன் போல் நடத்திய போராட்டங்கள் எத்தனை?,
முதல்வரை சந்தித்து பேசிய நிகழ்வுகள் எத்தனை?

இவை எல்லாம் அறிந்தும் ஜெயலாலிதாவுடன் மக்கள் நல கூட்டணி இணைவது போன்ற நிலை உண்டாகி இருப்பதை பார்த்தால் கருணாநிதி சொல்லியது போல் மக்கள் நலக்கூட்டணியே ஜெயலலிதாவால் உண்டாக்கப்பட்ட ஐந்தாம்படை கூட்டணி என்று தெரிகிறது.
அதிமுக பொதுக்குழுவில் சூழ்நிலைக்கேற்ப கூட்டணி என்று கூறியதின் உண்மை தெளிவாகிறது.கம்யூனிஸ்ட் தோழர்கள் மாநிலக்குழு சொல்வதை தங்கள் தலையில் ஏற்றாமல் அமைதியாக பகுத்தறிவுடன் அமைதியாக கருணாநிதி,ஜெயலலிதா ஆட்சிக்கால செயல்பாடுகளை அப்போது கட்சியின் செயல்பாடுகளின் வித்தியாசங்களையும் நடு நிலையுடன் சீர் தூக்கி ஆய்ந்து பார்த்தால் தாங்கள் யாருடன் கூட்டணி என்பதை முடிவு செய்ய முடியும். 
விலை வாசிகலை கூட்டியும் பால்,பேருந்து கட்டணம் போன்றவற்றை கூட்டியு மக்களை வதை படாமல் வைத்த திமுகவா/ஆட்சிக்கு வந்தவுடனே பட்ஜெட் போடாமலே அடிகடி விலைகளை கூட்டி பால்,பேருந்து ,மின் கட்டணங்களை கூட்டி மக்களை வதை செய்யும் ஜெயாவா?


அப்படி ஜெயலலிதா விலைகளை கூட்டிய போது கருணாநிதி விலைவாசியை பொருளாதரத்துக்கு தக்கவாறு கூட்டாமல் தமிழகத்தை கடனில் மூழ்கடித்து விட்டார் சகோதரி ஜெயா கருணாந்தி தவறை சரி செய்கிறார் என்று சொம்படித்தாரே தா.பாண்டியன்.

அரசின் விலைவாசி ஏற்றத்துக்கும்,குளறுபடிகளுக்கும் வக்காலத்து வாங்கும் இவர் ஒரு கம்யூனிஸ்டா? .

2ஜி யையே சொல்லி காலத்தையும் ,திமுகவையும் புறம்தள்ளும் ஜி.ரா,தா.பா.வுக்கு அது ஒரு மதிப்பீட்டிலான தொகை அது கிடைக்காமல் அன்றைய அரசு ஆ.ராசா அமைச்சகம் செய்து விட்டது என்பதுதான் வழக்கு என்றும் ,இன்றைய அலைக்கற்றை ஏலம் 2ஜி மதிப்பீட்டை விட பன்மடங்கு குறைவாகத்தான் வந்துள்ளது என்ற உண்மையும் தெரியாமலா உள்ளது?

நடக்காத வழக்கு 2ஜியை விட நிருபிக்கப்பட்டு நான்காண்டு தண்டனை பெற்ற ஜெயலலிதா ஊழல் சொத்துக்குவிப்பு வழக்கு உண்மையானது என்று தெரியாதா?

எல்லாம் தெரிந்தும் தா.பா, ஜி.ராமகிருஷ்ணன் இடது சாரி இயக்கங்களை தமிழ் நாட்டில் குழி தோண்டி புதைக்கிறார்கள்.

இன்றைய ஜெயலலிதா அரசின் குறைகளை சுட்டிக்காட்டும் அறிக்கைகளில்,கட்சி பத்திரிகைகள் செய்திகளில்  முந்தைய கருணாநிதி அரசைபற்றி ,அவரைப்பற்றியும் குறை கூறி வரிகள் இல்லாமல் இருக்காது.

ஆனால் கருணாநிதி பற்றிய குறை கூறும் அறிக்கைகளில்,கட்சி பத்திரிகைகள் செய்திகளில்  ஜெயலலிதா பற்றி ஒரு புள்ளி கூட இராது.இதுதான் இன்றைய கம்யுனிஸ்ட் தலைவர்களின் நிலை.

தேர்தலில் இடங்களைப்பெற்று புதைக்குழியில் மறைந்து இருப்பதை விட இயக்க கொள்கைகள் சர்ந்து செயல்பட்டு கட்சியை உயிர்ப்புடன் வைத்திருப்பது நல்லதல்லவா?

இடதுசாரிகட்சிகளின் இன்றைய தலைவர்களின் தவறான் செயல்பாடுகள்தான் மக்கள் மத்தியில் இன்று கட்சியை மறைத்து வருகிறது.
ஆம் ஆத்மி,தேமுதிக ,போன்ற புதிய கட்சிகள் முக்கிய கட்சிகளாக வலம் வர வைக்கிறது.ஆம் ஆத்மி வளர்சியின் பின் இருப்பது இடதுசாரிய கொள்கைகளை களவாடிய  செயல்பாடுகள்தானே?

தமிழகத்திலும் அவர்கள் வளர்வதற்கு முழுக்காரணம் இன்றைய இடது சாரி கட்சிகளின் தலையின் தவறானசுயநல போக்குதான் 
முந்தைய கம்யூனிஸ்ட் வழிகாட்டி மாஸ்கோ.
இன்றைய தமிழக கம்யூனிஸ்ட் வழிகாட்டி போயஸ் தோட்டம் 
என்று அன்று தோழர் கங்காதரன் சொன்னது இன்று உண்மையெனறாகிவிட்டது.வருத்தங்களுடன் இதை சொல்ல வேண்டியிருக்கிறது.
==============================================================================================================
எம்ஜிஆரும் நீதிபதி ரே கமிசனும்***
கேரள அரசு தமிழக அரசிடம் 65 லட்சம் லிட்டர் எரிசாராயத்தை கேட்டது. 
முதலில் 26 லட்சம் லிட்டரும் பின்னர் 7.5 லட்சம் லிட்டரும் அனுப்பிய தமிழக அரசு கையிருப்பு இல்லை என்று அத்துடன் நிறுத்திக்கொண்டது. 
ஆனால் காலவதியான அந்த வாகன அனுமதியை வைத்துக்கொண்டு கேரள கடத்தல் புள்ளிகளால் தமிழக எரிசாராய முதலாளியிடம் இருந்து தொடர்ந்து எரிசாராயத்தை பெறமுடிந்தது. 
அப்படி கடத்தப்பட்ட 60 ஆயிரம் லிட்டர் ஒரு கேரள அதிகாரியால் கைப்பற்றப்பட கடத்தல் புள்ளிகள் இதற்காக எம்.ஜி.ஆருக்கு 5 கோடி ரூபாய்கள் ( அன்றைய மதிப்பில் 5 கோடி இன்று எத்தனை கோடி?) குடுத்ததாகத் தெரிவிக்க பரபரப்பு பற்றிக்கொண்டது.
மாட்டிக்கொண்டோம் என்பதை அறிந்த எம்.ஜி.ஆர் உடனடியாக நீதிபதி கைலாசம் என்பவரின் தலைமையில் ஒரு விசாரணை கமிஷனை அமைத்தார். 
குற்றவாளியே கமிஷனை அமைப்பதா என்ற கேள்வியை எழுப்பிய எதிர்கட்சிகள் நடத்திய கடுமையான போராட்டத்தைக் கண்டு நீதிபதி கைலாசம் தான் இந்த கமிஷனுக்கு தலைமையேற்று விசாரிக்க விரும்பவில்லை என்று விலகினார். 
நிலமையின் தீவிரத்தை உணர்ந்த மத்திய அரசு இது குறித்து விசாரிக்க நீதிபதி ரே என்பவரின் தலைமையில் ஒரு கமிஷனை அமைத்தது. 
அந்த ரே கமிஷனும் பல்வேறு விசாரணைகளுக்குப் பிறகு பாட்டிலிங்க், பிளாண்டிங் தொழிற்சாலைகளில் இருந்து மாத்திரம் அரசின் தலைமைக்கு சென்ற கையூட்டு 5 கோடி என்று சொன்னது. 
என்ன...சொன்ன சமயத்தில் எம்.ஜி.ஆர் இறந்து போனதால் அத்தோடு ரே கமிஷனும் போனது.
குற்றம் உறுதிப்படுத்தப்படாத சர்க்காரியா கமிஷனை இன்று வரை திரும்பத் திரும்ப எழுதி மக்களின் நினைவில் வைக்கும் ஊடகங்கள் ரே கமிஷன் குறித்து மூச்சும் விடாததற்கு காரணம் வேத விற்பன்னர்களின் புத்திசாலித்தனம் என்பதை நான் சொல்லித்தான் என் புத்திசாலி வாசகர்கள் தெரிந்து கொள்வார்களா என்ன?
                                   
                                                                                
-கிளிமூக்கு அரக்கன்
======================================================================================================
இன்று,
டிசம்பர்-05.

  • .பண்பலை வானொலி முதல் முறையாக காட்சிப்படுத்தப்பட்டது(1940)
  • ஹிட்லரின் நாசிக் கட்சி அமைக்கப்பட்டது(1918)
  • டெய்லி மெயில்,கடல் தாண்டி சென்ற முதல் செய்தி தாளானது(1944)
======================================================================================================

தான் நினைத்ததை 

சாதித்துக் கொண்ட 

அமெரிக்கா


கார்பன் வெளியீடுகளைக் குறைப்பதற்காக பல்வேறு நாடுகள் எடுத்துவரும் முயற்சிகளைப் பற்றிய பரிசீலனை முதலில் 2020-லும் பின்னர் 2025-லும் நடக்கப்போகிறதாம். 
ஆனால் அந்த மாதிரி பரிசீலனை ஏதும் பாரிஸ் மாநாட்டில் ஏன் செய்யப்படவில்லை என்ற கேள்வியை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எழுப்புகின்றனர். மாநாட்டில் அமெரிக்காவும் பிற வளர்ந்த நாடுகளும் பசுங்குடில் வாயுக்கள் வெளியீட்டைக் குறைப்பதில் பிரதான பாத்திரம் வகிக்க வேண்டும் என்ற மற்ற நாடுகளின் எதிர்பார்ப்புக்கு மாறாக, அவை இந்தத் திசைவழியில் எந்த முயற்சியும் பெரிதாக எடுக்கவில்லை. 
நாடுகள் தாங்களாகவே ஏற்றுக்கொண்ட இலக்குகள் வெப்பநிலையை 2 டிகிரி அளவுக்குக் குறைக்கக்கூட உதவி செய்ய மாட்டா என்று நன்கு தெரிந்த பிறகும் வளர்ந்த நாடுகள் தங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்ளவில்லை.
பருவநிலை மாற்றங்களால் முதலில் பாதிக்கப்படப் போகும் நாடுகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பது போல் 1.5 டிகிரி இலக்கு என ஏட்டில் எழுதிவைத்தது ஒரு ஏமாற்று வித்தையே. 
இது வளர்ந்த நாடுகளுக்கு நன்கு தெரிந்த விஷயம்தான். இந்தியா போன்ற முதலாளித்துவப் பாதையில் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் வளர்ச்சித் திட்டங்களின் விளைவாக வெளியேறப் போகும் பசுங்குடில் வாயுக்களின் அளவை வேகமாகக் குறைப்பது அவ்வளவு எளிதல்ல. 
புதிய ஒப்பந்தத்தினால் தாங்கள் பாதிக்கப்பட இருப்பது தெரிந்தும் அவை வளர்ந்த நாடுகளின் பாரபட்சமான அணுகுமுறையை வலுவாகத் தட்டிக் கேட்க முற்படவில்லை. பொதுவான மற்றும் மாறுபட்ட பொறுப்பு  என்பதுதான் பருவநிலை மாறுபாடு மாநாடுகள் இதுவரை ஏற்றுக் கொண்ட அடிப்படைக் கோட்பாடு. 
இதன் பொருள் என்ன? 
பசுங்குடில் வாயுக்கள் வெளியீடுகளைக் குறைக்கும் பொறுப்பு அனைத்து நாடுகளுக்கும் உண்டு என்றாலும் வளர்ந்த நாடுகளுக்குத்தான் கூடுதல் பொறுப்பு இருக்க முடியும். 
காரணம், தொழிற்புரட்சிக்குப் பிறகு வளர்ச்சியிலும் வர்த்தகத்திலும் வேகமாக முன்னேறியதன் காரணமாக வளிமண்டலத்தை பசுங்குடில் வாயுக்களால் அடர்த்தியாக நிரப்பிய வரலாற்றுக்குச் சொந்தக்காரர்கள் அந்த நாடுகள்தாம். “மாசுபடுத்தியவன்தான் அதற்கான பொறுப்பை ஏற்க வேண்டும் ” என்ற நாடுகளுக்கிடையேயான சமூகநீதிக் கோட்பாடுதான் இது. 
இந்தக் கோட்பாட்டை 1997ஆம் ஆண்டு கியோட்டோவில் நடந்த பருவநிலை மாநாட்டில் முன்வைத்தபோது, அனைத்து நாடுகளும் ஏற்றுக் கொண்ட நிலையில் அமெரிக்கா மட்டும் நிராகரித்தது.

அன்றிலிருந்து தனது வர்த்தக நலனைக் காப்பாற்றிக் கொள்ளும் நோக்கில் புதியதொரு ஒப்பந்தத்திற்காக அமெரிக்கா முயற்சி செய்து வந்தது. 
புதிய ஒப்பந்தத்தில் நாடுகளை வேறுபடுத்திப் பார்க்கும் கோட்பாடு கைவிடப்பட்டுள்ளது. இது அமெரிக்க முயற்சிக்குக் கிடைத்த வெற்றி. “கடந்த கால வெளியீடுகளை மறப்போம், இனி வருங்கால வெளியீடுகளை மட்டும் கவனிப்போம்” என்பதுதான் புதிய ஒப்பந்தத்தின் சாராம்சம். கார்பன் பட்ஜெட் என்ற ஓர் அம்சத்தைப் பார்த்தால் இதைத் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும். 
வெப்பநிலை உயர்வை 2 டிகிரிக்குள் கட்டுப்படுத்த வேண்டுமானால் வளிமண்டலத்தில் உள்ள பசுங்குடில் வாயுக்களின் அளவு 3000 கிகாடன்களுக்குள் இருக்க வேண்டும். தொழிற்புரட்சி காலத்திலிருந்து வளர்ந்த நாடுகள் இதில் 2000 கிகாடன்களை தங்களது சீதனமாகக் கொடுத்துவிட்டன. மீதி இருப்பதோ 1000 கிகாடன்கள் மட்டுமே. 
இதில் இன்றிருக்கும் நிலவரப்படி 2030 வரை கணக்கிட்டால், 750 கிகாடன்கள் வெளியிடப்பட்டுவிடும். மீதி இருக்கும் 250 கிகாடன்களில் வளர்ந்த நாடுகள் தங்களுக்கு மிகச் சிறிய பங்கை எடுத்துக் கொண்டு மிகப் பெரிய பொறுப்பை இந்தியா போன்ற வளரும் நாடுகளின் மீது சுமத்திவிட்டன. 
எனவே 2030-க்குப் பிறகு நிலைமை மிக மோசமாக மாறும். 
மேலும், புவி வெப்பத்தால் கடும் பாதிப்புக்குள்ளாகி இருக்கும் நாடுகளுக்கு உரிய நஷ்ட ஈடு தருவது, மாற்று எரிசக்திகளுக்கு மாறாகத் தேவைப்படும் தொழில்நுட்பம், நிதியுதவி ஆகியவற்றை வளரும் நாடுகளுக்கு அளிப்பது போன்ற அம்சங்களிலும் தேவையான அளவுக்குக் கிடைப்பதற்கான உறுதிமொழிகள் கிடைக்கவில்லை.
அதனால்தான் சுற்றுச்சூழல் வல்லுநர்களான புதுதில்லி அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையத்தின் தலைமை இயக்குநர் சுனிதா நாராயண், இந்தியாவின் `தண்ணீர் மனிதன்’ ராஜேந்திர சிங் ஆகியோர் பாரிஸ் மாநாட்டு முடிவுகளை கடுமையாக விமர்சித்துள்ளனர். 
வளரும் நாடுகளுக்கு கடுமையான எதிர்காலம் காத்திருக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.
                                                                                                                             -பேராசிரியர் கே.ராஜூ,


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?