கீரி-பாம்பு ஒற்றுமை.



எம்.பி.க்கள் தற்போது சம்பளமாக மட்டும் ரூ.50 ஆயிரம் பெறுகின்றனர். 
தொகுதி நிதியாக மாதம் ரூ.45 ஆயிரம் பெறுகின்றனர். 
 பேப்பர்  மற்றும் எழுது பொருட்கள் வாங்க மாதம் ரூ.15 ஆயிரம்,
 அலுவலக ஊழியர்கள் சம்பளத்துக்கு ரூ.30 ஆயிரமும் வழங்கப்படுகிறது. 
நாடாளுமன்றத்துக்கு  வரும்போது ஒரு நாளைக்கு ரூ.2 ஆயிரம் படி வழங்கப்படுகிறது. 
இதை இரண்டு மடங்காக உயர்த்த வேண்டும் என பா.ஜ எம்.பி யோகி ஆதித்யநாத்  தலைமையிலான நாடாளுமன்ற கூட்டு குழு கடந்தாண்டு ஜூன் மாதம் வேண்டுகோள் விடுத்தது. இதில் மட்டும் விழிப்புடன் உள்ளனர்.

கேபினட் செயலாளருக்கு இணையாக எம்.பி.க்களுக்கு சம்பளம் வழங்க வேண்டும் எனகூறியுள்ளனர்  .  இதையடுத்து எம்.பி.க்கள் சம்பளத்தை  உயர்த்துவது பற்றி ஆராய குழு அமைக்க மத்திய அரசு கடந்தாண்டு செப்டம்பர் மாதம் முடிவு செய்தது. இந்நிலையில் எம்.பி.க்களின் சம்பளம் மற்றும்  சலுகைகளை இரு மடங்கு உயர்த்துவது தொடர்பாக அமைச்சரவை குறிப்பு தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் வரும் பட்ஜெட்டில் இந்த உயர்வு அறிவிப்பு இருக்குமாம்.
தற்பொது வழங்கப்படும் ஊதியமே தண்டம் என்பதுதான் மக்கள் கருத்து.
வாக்குகளை வாங்கும் போது மக்களுக்கு சேவை செய்ய வாய்ப்பு தாருங்கள் என்றும்,நான் மக்களின் வேலைக்காரன் என்றும்தானே வாக்குகளை பொறுக்குகிறார்கள்.
இவர்கள் மக்களுக்கு சேவை செய்ய எதற்கு ஊதியம்.ஊதியம் வழங்கப்பட்டால் அதில் என்ன சேவை வருகிறது?
முதலில் மக்கள் பிரதிநிதி என்று வாக்குகலைப்பொறுக்கி வருபவர்களுக்கு கவுன்சிலர் முதல் அமைச்சர்கள் வரை ஊதியம் வழங்கப்படுவது நிறுத்தப்படவேண்டும்.
அவர்கள் பின் எப்படி வாழ்வது என்கிறீர்களா.
இன்று கார் இல்லாத சின்ன கவுன்சிலர் கூட இல்லை என்பது உங்களுக்கு தெரியாதா என்ன?அது தவிர வாடகை வீட்டில் இருந்த அதே கவுன்சிலர் இன்று பல வீடுகளுக்கும்,சின்ன வீடுகளுக்கும் உரிமையாளர் என்பதும் உங்களுக்கே தெரியும்.அவர்கலுக்கு கொடுக்கப்பட்டு ஊதியம் அஞ்சுக்கும்,பத்துக்கும் இப்படி செழிக்க முடியுமா?
ஒரு ரூபாய் சம்பளம் மட்டுமே வாங்கி ஆட்சி முடிவில் 50000 கோடிகளுக்கு உரிமையாளராகி வழக்குகளை சந்திக்கும் மக்கள் பிரதிநிதி கள் உள்ள நாட்டில்தான் நாம் உள்ளோம்.
அரசு ஊழியர்கள் சம்பள உயர்வுக்கும்,ஓய்வூதியங்க்களுக்கு போராடிக்கொண்டே இருக்கும் நாட்டில் சேவை செய்ய பிறப்பெடுத்த இவர்களுக்கு ஆண்டு தவறாமல் ஊதிய உயர்வு.ஐந்தாண்டு காலம் பதவி வகிர்த்தால்தான் ஓய்வூதியம் என்றிருந்த தை  ஒரு முறை பதவியேற்பு செய்தாலே ஒரு நாள் மட்டும் இருந்தாலே ஓய்வூதியம்  என்று எந்த போராட்டமும் இல்லாமல் அவர்களாகவே சட்டமேற்றிக்கொண்டுள்ளனர்.
ஆனால் இவர்கள் செயல்பாடுகள்.தமிழகத்தில் இருந்து போன 29 மக்களவை உறுப்பினர்கள் அம்மா வாழ்க என்று சொல்லியதைத்தவிர வேறு எதற்காகவும் வாய் திறந்ததாக இதுவரை தகவல் பாராளுமன்ற பதிவுகளில் இல்லை.
எத்தனையோ திட்டங்கள்,ரெயில்வே திட்டங்கள் ,அரசு தொழிற்சாலைகள் வேறு மாநிலங்களுக்கு போகின்றன.
இதில் வேடிக்கை துணை சபாநாயகரே இந்த 30இல் ஒருவர்தான்.
மற்ற மாநில மக்களவை உறுப்பினர்கள் எப்படியோ .தமிழ் நாட்டுக்கு வாய்த்தவர்கள் மக்கள் முன்பு செய்த ஊழ் வினை பலன்தான்.
வெள்ளம்,மழை மாநிலத்தை புரட்டிப் போட்டபோது இவர்களை காணாதது கண்டு மக்கள் இந்த 39 களும் வெள்ளத்தில் காணாமல் போய்  விட்டார்களா என்று கதறி  அழுதது செய்தி.
39 எம்பிகள் கூட்டம்?
அதிலும் தூத்துக்குடி தொகுதி உறுப்பினர் செயல்பாடுகள் அவர் சார்ந்த கட்சியினரே பாராட்டி அனுதாபம் தெரிவிக்கும் அளவு இருந்தது.
காட்டாற்று வெள்ளம் அவரின் பாதி தொகுதியை சூழ்ந்து மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி துன்பப்படுகையில் மனிதர் தொகுதி யில் உள்ள வீடு பக்கம் கூட வரவில்லை.அதைவிட கொடுமை தனக்கு அமைப்புச்செயலாளர் பதவியை தந்த அம்மாவை வாழ்த்தி அனைத்து நாளிதழ்களிலும் வண்ண விளம்பரங்களை கொடுத்தது.
அவர் இதுவரை தொகுதி நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்த பணி .
சாயர்புரம் கிருத்துவ ஆலயம் முன்னர் பெரிய தூபி எழுப்பி கடிகாரம் அமைத்ததுதான்.இன்று பல கிருத்துவ ஆலயங்கள் முன் அவ்வாறு தூபி இருப்பதையும் அதில் கடிகாரம் இருப்பதையும்,ஒலிப்பதையும் கண்டிருப்பீர்கள்.அதில் சாயர் புறம் பகுதியில் உள்ள கோபுரம் தொகுதி வளர்ச்சி நிதியில் எங்கள் எம்.பி.கட்டிக்கொடுத்ததுதான் என்பதை பெருமையுடன் சொல்லிக்கொள்கிறோம்.அதற்கு அவர் கிருத்துவர் என்பது காரணம் அல்ல.அவர் ஒரு நல்ல  மக்கள் சேவை யாளர் என்பதுதான் இதை சொல்ல முக்கிய காரணம்.
நாடு முழுக்க வரிகளை வசூழித்து,மத்திய அரசுப்பனிகளை செய்து அதை மக்களை சென்றடைய செய்யும் அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு ,ஒய்வூதியம் வழங்காமல் மக்கள் வரிப்பணத்தில் உண்டு கொழுத்த மக்கள் சேவையாளர்களுக்கு அவர்களாகவே ஊதிய்ழ்த்தை உயர்த்திக்கொள்வது எந்த வகையிலும் சரியானதல்ல.
நாடாளுமன்றத்தை நடத்த விடாமல் கீரியும்,பாம்புமாக சண்டை,கூக்குரலிட்டுக் கொள்ளும் எல்லாக்கட்சியினரும் இது போன்றவற்றில் மட்டும் ஒற்றுமையாக  வெளியே சப்தமே கேட்காத அளவு செயல்படுவதை பார்க்கும் போது நம் மக்கள் கண்ணே பட்டு விடும்.
இவர்கள் ஒற்றுமைக்கு மண்ணை அள்ளி( சுற்றிப்) போடுங்கள்.
==============================================================================================
இன்று,
பிப்ரவரி-12.
  • உலக டார்வின் தினம்
  •  அறிஞர் சார்லஸ் டார்வின் பிறந்த தினம்(1809)
  • சிலி, ஸ்பெயினிடம் இருந்து விடுதலையை அறிவித்தது(1818)
  • சீனக் குடியரசில் கிரெகேரியன் நாட்காட்டி அமலுக்கு வந்தது(1912)
  • அமெரிக்க முன்னாள் அதிபர் ஆபிரகாம் லிங்கன் பிறந்த தினம்(1809)
சார்லஸ் டார்வின்
கிட்டதட்ட எல்லா மதங்களும் கடவுள்தான் மனிதனை படைத்தார் என்கின்றன. எனவே மத நம்பிக்கையற்ற சிறுபான்மையினரைத் தவிர்த்து உலகின் பெரும்பான்மையினர் தங்களை கடவுளின் படைப்பு என்று அன்றும் நம்பினர், இன்றும் நம்புகின்றனர்.
ஆயிரமாயிரம் ஆண்டுகளாக நம்பபட்டு வந்த அந்த சித்தாந்தத்தை தூக்கி எறிந்தது இன்னொரு சித்தாந்தம் 1859 ஆம் ஆண்டு. குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன்” ஆறு நாட்களில் கடவுள் மனிதனை படைத்தார் என்ற பைபிளின் கூற்றை நம்பியிருந்த இங்கிலாந்து தேசத்தில் மனிதன் குரங்கிலிருந்துதான் பரிணாம வளர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற புரட்சிகரமான அதே நேரத்தில் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட ஒருவரைத்தான் நாம் இன்று தெரிந்துகொள்ளவிருக்கிறோம். 
அவர்தான் பரிணாம வளர்ச்சி சித்தாந்தத்தின் தந்தை எனப் போற்றப்படும் சார்லஸ் டார்வின். 1809-ஆம் ஆண்டு பிப்ரவரி 12-ஆம் நாள் இங்கிலாந்தின் Shrews-bury என்ற நகரில் பிறந்தார் டார்வின். 
சிறு வயதிலேயே அன்னையை இழந்தார். அவரது தாத்தாவும் தந்தையும் மருத்துவர்களாக இருந்தவர்கள். அதனால் டார்வினையும் மருத்துவம் படிக்க எடின்பர்க் (University of Edinburgh) பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைத்தார் தந்தை.
சிறு வயதியிலிருந்தே டார்வினுக்கு புழு, பூச்சிகள், விலங்குகள் ஆகியவற்றின் மீது மிகுந்த ஆர்வம் இருந்தது. எடின்பர்க் சென்ற பிறகும் அவர் கற்கள், செடிகள், புழு, பூச்சிகள் ஆகியவற்றை சேமிக்கத் தொடங்கினார். இயற்கையின்மீது அப்படி ஒரு ஈடுபாடு அவருக்கு. மருத்துவம் படித்துக்கொண்டிருந்தபோது ஒருமுறை ஒரு குழந்தைக்கு அறுவை சிகிச்சை நடப்பதை பார்க்க வேண்டிய கட்டாயம் டார்வினுக்கு ஏற்பட்டது. அப்போதெல்லாம் மயக்க மருந்தின்றி அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டதால் அந்தக் குழந்தை பட்ட வேதனையைக் கண்டும், கேட்டும் மருத்துவத்தின்மீது இருந்த ஆர்வத்தை இழந்தார் அவர். தந்தைக்கு ஏமாற்றமாக இருந்தாலும் அடுத்து அவரை natural 'theology' அதாவது 'இறையியல்' பயிலுமாறு ஆலோசனை கூறினார். 
அதனை ஏற்று கேம்ஃப்ரிட்ஜ் (University of Cambridge) பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார் டார்வின்.
தமது 22-ஆவது வயதில் இறையியலில் பட்டம் பெற்றார். அப்போது அதே பல்கலைக்கழகத்தில் தாவரவியல் துறையில் துறையில் பேராசிரியராக இருந்த John Stevens Henslow என்பவரிடம் நெருங்கிய நட்பு கொண்டார் டார்வின். அவர் மூலமாக கேப்டன் Robert FitzRoy என்பவரின் நட்பு கிட்டியது. தென் அமெரிக்க கடலோரப் பகுதிகளில் ஆய்வு செய்ய HMS Beagle என்ற கப்பல் புறப்படவிருந்தது. கேப்டன் Robert FitzRoy-யின் தலமையில் செல்லவிருந்த அந்தப் பயணத்தில் கலந்துகொள்ளுமாறு டார்வினுக்கு அழைப்பு வந்தது. அதனை ஏற்றுக்கொண்டு 1831-ஆம் ஆண்டு டிசம்பர் 27-ஆம் தேதி கேப்டன் பிட்ஸ்ராயும், டார்வினும் பயணத்தைத் தொடங்கினர். ஐந்து ஆண்டுகள் நீடித்த அந்த வரலாற்று சிறப்பு வாய்ந்த பயணம்தான் பரினாம வளர்ச்சி சித்தாந்தம் உருவாவதற்கு அடிப்படை காரணமாக அமைந்தது. அந்தப் பயணத்தைத் தொடங்கியபோது டார்வினுக்கு வயது 22.
ஐந்து ஆண்டுகளில் அந்தக் கப்பல் Brazil, Rio de Janiro, Mondivideo, Falkland Island, Galapagos Island, Hobart, Newzealand என உலகையே ஒரு வலம் வந்தது. பல இடரும், இன்னல்களும் நிறைந்ததாக அந்த பயணம் அமைந்தது. ஆனால் இயற்கையின் மீது இருந்த அளவிடமுடியாத ஈடுபாட்டால் டார்வினுக்கு அது பெரும் துன்பமாக படவில்லை. சென்ற இடத்தையெல்லாம் கூர்ந்து ஆராய்ந்த டார்வின் அதுவரை அறியப்படாத பல விநோதமான விலங்குகளின் எலும்புகளை சேகரித்தார். ஊர்வன, நடப்பன, பறப்பன என எல்லாவித உயிரினங்களையும் ஆராய்ந்தார். அவை இடத்துக்கு இடம் மாறுபட்டிருப்பதையும், சில ஒற்றுமைகளை கொண்டிருப்பதை கண்டு வியந்தார் டார்வின். உயிரினங்கள் அனைத்துமே பொதுவான மூதாதையர்களின் வழிதோன்றல்களாக இருக்குமா என்பதும் அவை தொடர்ச்சியாக சிறு சிறு மாற்றங்களைப் பெற்று தற்போதைய வளர்ச்சியை பெற்றிருக்கின்றனவா? என்பதுதான் டார்வினின் கேள்வியாக இருந்தது.
தான் சேகரித்த சில எலும்புகளுக்கு சொந்தமான விலங்குகள் முற்றாக அழிந்து போயிருக்கும் என்று முதலில் யூகித்தார். ஆனால் பின்னர் அந்த விலங்குகளிலிருந்துதான் தற்போதைய சிறிய அளவிலான விலங்குகள் தோன்றியிருக்க வேண்டும் என்று பகுத்தறிந்தார். கெலபகஸ் (Galapagos Island) தீவுகளில் புதிய வகையான பறவைகள், தாவரங்கள், விலங்குகள் ஆகியவற்றைக் கண்டு அதிசயித்தார். இப்படி பல்வேறு ஆராய்ச்சிகளுக்குப் பிறகு 1836-ஆம் ஆண்டு இங்கிலாந்து திரும்பினார் டார்வின். ஐந்து ஆண்டுகளில் தான் சேகரித்த விபரங்களையும், ஆய்வுகளையும் வைத்து அவர் The voyage of the Beagle என்ற புத்தகத்தை வெளியிட்டார். தமது 30-ஆவது வயதில் Emma Wedgwood என்ற உறவுக்காரப் பெண்ணை மணந்து கொண்டு ஏழு பிள்ளைகளுக்கு தந்தையானார் டார்வின். திருமணத்திற்கு பின்பும் தனது ஆய்வுகளைத் தொடர்ந்தார்.
புதிய உயிரினங்கள் உருவாகும் முறை, பின்னர் அவை தங்களின் மூலத்திலிருந்து முழுமையாக மாறி விடுவதன் காரணங்கள் ஆகியவற்றைத் தொடர்ந்து ஆராய்ச்சி செய்து 1859-ஆம் ஆண்டு உலகை வியப்பில் ஆழ்த்திய தனது புத்தகத்தை வெளியிட்டார் டார்வின். "The Origin of Species by Natural Selection" அதாவது 'இயற்கையில் உயிரினங்களின் தோற்றம்' என்ற அந்த புத்தகம் கூறிய சித்தாந்தம்தான் பரிணாம வளர்ச்சி சித்தாந்தம். அதன்படி உயிரினங்களின் வாழ்க்கைப் போராட்டத்தில் தகுதியும், வலிமையும் உள்ளவை நிலைத்து நிற்கும். மற்றவை அழிந்துபோகும் என்று கூறினார் டார்வின். அதை 'Natural Selection' என்றும் "survival of the fittest" என்றும் அவர் விளக்கினார். ஆனால் அந்த சித்தாந்தத்தின் விளைவை உலகம் அப்போது உணரவில்லை. செடிகொடிகளுக்கும், விலங்குகளுக்கும் மட்டுமே அது பொருந்தும் என்றுதான் நம்பியது. டார்வின்கூட மனிதனைப் பற்றி புத்தகத்தில் எதுவும் குறிப்பிடவில்லை.
பரிணாம வளர்ச்சி சித்தாந்தம் மனிதனுக்கும் பொருந்த வேண்டும் என்பதை உலகம் உணரத் தொடங்கியபோது நாம் குரங்கிலிருந்து பிறந்தோமா? என்ற கேள்வி எழுந்தது. டார்வின் அப்படி நேரடியாக சொன்னதில்லை நம்பியதுமில்லை. ஆனால் அறிவுப்பூர்வமாக சிந்தித்துப் பார்த்தால் அப்படித்தான் நடந்திருக்க வேண்டும் என்று விஞ்ஞானிகள் கருதத் தொடங்கினர். எதிர்பார்க்கப்பட்டது போலவே தேவாலயங்களின் கண்டனத்துக்கு உள்ளானது டார்வினின் சித்தாந்தம். அவர் வாழ்ந்த போதே அவரது "The Origin of Species" என்ற நூல் உலகம் முழுவதும் பதிக்கப்பட்டது. கேம்ஃப்ரிட்ஜ் பல்கலைக்கழகம் அவருக்கு கெளரவ டாக்டர் பட்டம் வழங்கியது.
டார்வின் பரிணாம கோட்பாடு மூன்று அம்சங்களைக் கொண்டது.
1. மாறுபாடு (எல்லா உயிரினங்களிலும் காணப்படுவது)
2. மரபு வழி (ஒத்த உயிர் வடிவத்தை ஒரு தலைமுறையிலிருந்து இன்னொரு தலைமுறைக்குஎடுத்துச் செல்லும் ஆற்றல்)
3. உயிர் வாழ்தலுக்கானப் போராட்டம் (எந்தெந்த மாறுதல்கள் ஒரு குறிப்பிட்ட சூழலுக்குச்சாதகமாக இருக்கும் என்று கணித்து அதற்கேற்ப இனப் பெருக்க முறைகளை தீர்மானித்துஉயிரினங்களில் மாறுதல்களை ஏற்படுத்திக் கொள்வது)
இதைத்தான் இன்றைய நாகரீக, விஞ்ஞான உலகம் அதன் நீட்சியாக பரம்பரை மரபியல் குணங்களின் மகிமைப் பற்றி நமக்கு விளக்கம் தருகிறது. இதை 'நவீன டார்வினியம்' என்கிறார்கள். இதன் விளக்கம் என்பது, ஜீவ போராட்டம் என்பது தனித்தனியான பொருளைப் பொறுத்தது மட்டுமல்ல; தன் இனத்தை உற்பத்தி செய்து இனவிருத்தி செய்யும் (குணம்,உடல்வாகு, நிறம், திறமை, அறிவு இவையும் உள்ளடங்கும்) சக்தியைப் பொறுத்ததாகும் என்பது தான். "வலுவுள்ளது வாழ்கிறது, மெலிந்தது வீழ்கிறது" என்கிற இவரின் பரிணாம தத்துவத்தை சிலர் அவர் காலத்திலேயே கேலி செய்தார்கள்.
"உலகை கூர்ந்து கவனிப்பதையும், ஆராய்ச்சிகள் செய்வதையும் நிறுத்துமாறு எப்போது நான் நிர்பந்திக்கப்படுகிறேனோ அன்றைய தினமே நான் இறந்து போவேன்".
மனுகுல மூதாதையரின் முகவரியை உலகிற்குக் காட்டிய முன்னோடி, அறிவு ஒளி 1882-ஆம் ஆண்டு ஏப்ரல்19-ஆம் தேதி அடங்கிப் போனார். இங்கிலாந்தில் 'விஞ்ஞானிகளின் கார்னர்' என்று சொல்லப்படும் வெஸ்ட்மின்ஸ்டர் எபியில் (Westminster Abbey) டார்வினின் நல்லுடல் அடக்கம் செய்யப்பட்டது.

கடவுள் நம்பிக்கை மனிதனின் மனதில் இயற்கையாகத் தோன்றுவதில்லை. 
அது மனிதனின் அறிவு வளர வளர உண்டானது, இதை வேறு வகையில் சொல்வதென்றால் மனிதனின் வியப்பும், இரகசியத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்ற ஆவலும், கற்பனைத் திறனும் அதிகரிக்க அதிகரிக்க அவனுக்கு கடவுள் நம்பிக்கை உண்டானது என்றார்!.
டார்வினின் சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டு குரங்கிலிருந்துதான் நாம் தோன்றினோம் என்று நீங்கள் நம்பினாலும் சரி, இல்லை அது அபத்தமான கருத்து என்று புறம் தள்ளினாலும் சரி ஒன்றை மட்டும் நாம் மறுக்க முடியாது, வரலாற்றாலும் புறக்கணிக்க முடியாது. 
உயிரினங்களின் தோற்றம், வளர்ச்சி பற்றிய மனுகுல அறிவை விருத்தி செய்ததில் டார்வின் என்ற தனி ஒரு மனிதன் மிகப்பெரிய பங்களிப்பை செய்திருக்கிறார் என்பதுதான் அந்த உண்மை!.

==============================================================================================




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?