இடுகைகள்

ஏப்ரல், 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

"தி.மு.க,= அ.தி.மு.க". சமம் என்பவர்களின் உள் நோக்கமென்ன ?

படம்
சொ த்துக்குவிப்பு வழக்கிலும், டான்சி நில ஊழல் வழக்கிலும் தண்டிக்கப்பட்டவர் ஜெயா என்ற போதும், இந்த இரண்டு வழக்குகளிலும் அவர் விடுதலையை வாங்கியது சட்டத்திற்குப் புறம்பானது என்ற போதும், அவற்றையெல்லாம் பின்னுக்குத் தள்ளி, 2ஜி வழக்கு விசாரணை முடிவதற்கு முன்பே தி.மு.க.வையும் கருணாநிதியையும் மன்னிக்கவே முடியாத குற்றவாளியென மக்களின் மனதில் பதிய வைப்பதில் ஜெயா, துக்ளக் சோ, பா.ஜ.க., உள்ளிட்ட பார்ப்பனக் கும்பல் வெற்றி பெற்றுவிட்டது. 2ஜி விற்பனையில் அரசுக்கு 1,76,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுவது தணிக்கைத் துறையின் அனுமானம்தான். அந்த இழப்பு குறித்து இந்தத் தொகையைவிடக் குறைவான அனுமானங்களையும் முன்வைத்திருக்கிறது தணிக்கைத் துறை. அவ்விற்பனையில் விதிமுறையை மீறி நடந்துகொண்டு, சில நிறுவனங்களுக்குச் சாதகமாகச் செயல்பட்டிருக்கிறார் என்பதுதான் ஆ.ராசா மீதான வழக்கு; அதற்காக, கலைஞர் டி.வி.க்கு இருநூறு கோடி ரூபாய் இலஞ்சமாக அளிக்கப்பட்டிருக்கிறது என்பதுதான் குற்றச்சாட்டு. ஆனால், கடந்த ஐந்தாண்டுகளில் மட்டும் ஜெயா-சசி கும்பல் அடித்திருக்கும் கொள்ளையோ தி.மு.க. மீது சுமத்தப்பட்டுள்ள 2ஜி ஊழலைக் காட்

கே.ந,கூ ட்டணி தேர்தல் அறிக்கை:ஒரு பார்வை.

படம்
மக்கள் நல அரசை வழங்குவதுடன், இந்திய நாட்டுக்கு வழி காட்டக்கூடிய வகையில், கூட்டணி அரசு செயல்படும். நேர்மையான, துாய்மையான, ஊழலற்ற ஆட்சி நிர்வாகமும், கண்காணிப்புடன் கூடிய கூட்டணி ஆட்சியும் தேவைதான்.  ஆனால், அதை மக்கள் நலக் கூட்டணியால் வழங்க முடியுமா என்பது தான் சந்தேகம். கூட்டணி தலைவர்கள், பிரசார அளவில் கூட ஒருங்கிணைந்து செயல்படாதது போல், ஆளுக்கொரு திசையில் இழுத்தால், அரசு நிர்வாகம் என்ன ஆகும்! மற்றவர்களை விட அதன் ஒருங்கிணைப்பாளர் வைகோ எந்த நேரம் என்ன செய்வார் என்பதை அவர் கூட்டணிக் கட்சியினரே உணர முடியவில்லையே?அடுத்து விஜயகாந்த்  குழப்பங்கள் ,அவர் மனைவி பிரேமலதா அலப்பறைகள் என்று மக்கள் நலக் கூட்டணி கே.ந,கூ ட்டணியானதிலிருந்து ஒரே தெனாலி பயம் தான் மக்களுக்கு. * கூட்டணி அரசின் நடவடிக்கைகளுக்கும், சமூக, பொருளாதார திட்டங்களுக்கும், ஒட்டுமொத்த வளர்ச்சி, முன்னேற்றம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு, அரசுக்கு வழிகாட்டுதல் வழங்க, பல்துறை அறிஞர்கள், நிபுணர்கள் கொண்ட, 'நெறிமுறைக் குழு' அமைக்கப்படும்.  அரசின் நடவடிக்கைகளை ஆய்வு செய்யவும், கண்காணிப்புடன் கூடிய ஆலோசனைகளை அளிக்கவும், நெறிமுறை

காசு,பணம்,துட்டு,மணி,மணி.

படம்
 சென்னை உயர் நீதிமன்றம்  தமிழக மின்சார துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட லஞ்ச புகார் குறித்து லஞ்ச ஒழிப்பு துறை விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது.  இந்த வழக்கின் பின்புலம் என்ன?  சூரிய மின்சக்தி விவகாரத்தில் மின் துறையில் நடந்தது என்ன?   கடந்த 2014 செப்டம்பரில் சூரிய மின்சக்தி உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு தமிழக அரசு ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதன்படி தனியார் முதலீட்டாளர்கள் சூரிய சக்தி மின் நிலையங்கள் அமைக்க முன்வந்தால் அவர்களிடம் இருந்து ஒரு யூனிட்டுக்கு 7.01 ரூபாய் என்ற விலைக்கு மின்சாரத்தை அடுத்த 25 ஆண்டுகளுக்கு மின்வாரியம் கொள்முதல் செய்யும். காசு,பணம்,துட்டு,மணி,மணி. இந்த திட்டத்தில் மொத்தம் 3,000 மெகாவாட் வரை அனுமதிக்கப்பட்டது. ஆனால் முதலீட்டாளர்கள் 2015 செப்டம்பருக்குள் மின் நிலையத்தை நிறுவி மின்சார உற்பத்தியை துவங்கி விட வேண்டும் என்பது நிபந்தனை.இந்த திட்டத்தில் அறிவிக்கப்பட்ட கொள்முதல் விலை மற்ற மாநிலங்களின் விலையை விட அதிகமாக இருந்ததால் முதலீட்டாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருந்தது.  இதனால் 110 முதலீட்டாளர்கள் விண்ணப்பித்தனர்.