வைகோ சைகோவா?

  "இதைச் செய்வதற்கு வேறு தொழில் செய்து விட்டுப்  போகலாம்.ஆதித்தொழில்,உலகமெல்லாம் நடக்கும் தொழில்,அதை சட்டப்பூர்வமாக்க போராடுகிறார்கள்.நான் தவறாகச்சொல்லவில்லை.கலைஞர் நன்றாக நாதஸ்வரம் வாசிப்பார்.அதைத்தான் சொன்னேன் .
தவறாக எண்ணி விட வேண்டாம்."

   நெல்லை பாலாஜி,தீப்பொறி ஆறுமுகத்தை விட தரம் தாழ்ந்து இப்படி பேசியவர் 18 ஆண்டுகாலம் அவர் நாதஸ்வரம் வாசிக்கும் குலத்தொழிலுக்கு போக அறிவுரை வழங்கிய கலைஞராலேயே பார்லிமெண்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு இந்தியா முழுக்க தெரிய வந்த வைகோதான்.

இதை சைகோ போல் வைகோ கூறுகையில் அருகில் இருந்தவர்கள் சாதீய ஒழிப்பு போராளிகள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஜி.ராமகிருஷ்ணன்,இந்திய கம்யூனிஸ்ட் முத்தரசன் ,மற்றும் விளிம்பு நிலை மக்களின் பாதுகாவலர் திருமாவளவர் .
இதுதான் மிகக் கொடுமையான தருணம்.

பேச்சிலும்,நடவடிக்கைகளிலும் பெண்கள்,ஒடுக்கப்பட்ட மக்கள்,தொழிலாளர்கள்,சாதி-மத பேதங்கள் போன்ற வற்றில் தவறான வார்த்தைகள் உணர்ச்சிவசப்பட்டு  தங்களையும் மீறி வந்தால் கூட நடவடிக்கைகள் எடுக்கும் கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த மாநிலத்தலைவர்கள்  வைகோ வின் இந்த ஆண்டைத்தனமான ஆணவ,ஆபாசப் பேச்சுக்களை ரசித்துக்கேட்பது போல் முகத்தை வைத்துக்கொண்டிருந்ததும்,அங்கேயே வைகோவின் தவறான,ஆபாச பேச்சை சுட்டிக்காட்டி மன்னிப்பு கேட்க வைக்காமல் அவருடன் பேட்டியை முடித்து விட்டு எழுந்து போன காட்சி கம்யூனிஸ்டுகள் தங்களின் வாக்குப்பொறுக்கி அரசியலால் எவ்வளவு தரம் கெட்டுப்போனார்கள் என்பதைத்தான் காண்பித்தது.

தா.பாண்டியன்,ஜி.ராமகிருஷ்ணன் ஆகிய இருவரும் தலைமை ஏற்கும் வரை கம்யூனிஸ்ட்கள் தங்கள் கொள்கைகளில் விட்டுக்கொடுக்காத்தன்மை இருந்தது உண்மைதான்.

ஆனால் சி.பி.ஐ,அதிமுகவின் கிளையாகவும்,சி.பி.எம். மதிமுகவின் கிளையாகவும் மாறி விட்டன.
திருமாவளவன் சாதி சமநிலை யாளர்,குலத்தொழில் எதிர்ப்பாளர் என்ற முறையில் வைகோ மீது கடும் விமர்சனங்களை வைப்பார் என்று பார்த்தால் "தனி மனித விமர்சனம் சரியல்ல"என்று எளிதாக இதை கடந்து விட்டார்.
ஆக கூட்டணி ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில் வைகோ மலத்தை அள்ளி முகத்தில் பூசிக்கொள்ளச்சொன்னாலும் அப்படியே ஏற்றுக்கொள்ளும் மன நிலையில் கம்யூனிஸ்டுகளும் ,வி.சி.க்களும் வந்து விட்டது தெரிகிறது.

மற்ற தலைவர்கள் கண்டனங்க்களைக்கண்ட பின்னர் ஒப்புக்கு மயிலிறகால் வைகோவை தடவி தாக்குகிறார்கள்.

இதற்கு காரணம்ஒரு வேளை  வைகோ வாங்கியதாகக் கூறப்படும் 1500 கோடிகளின் பின் புலம் இருக்கலாமா?

இந்த வைகோவின் சைகோ பேச்சால் அவர் தற்போது ஒரு தலைவர் என்பதற்குரிய தகுதியை முற்றிலும் இழந்து விட்டார்.

திமுக,ஸ்டாலின்  என்று சாலையில் யாராவது பேசிக்கொண்டு போனால் கூட ரத்த அழுத்தம்  ஏறி பாத்திரங்களை தூக்கி எறிந்து அசிங்கமாக திட்டி சட்டையை கிழித்துக்கொள்ளும் அளவுக்கு வைகோ ஸ்டாலினொபொபியா வால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இன்றைய நிலையில் வைகோ தான் சொன்னதையே மறுத்து மாற்றிச்சொல்வதும்.நான் முன்பு அப்படி சொல்லவில்லை என்பதும்.என்ன பேசுகிறோம் என்பதே புரியாமல் பேசுவதுமாக நிதானம் இழந்தவாராக மாறியுள்ளார்.

ஒரு அரசியல் கட்சித்தளைவருக்கான அடையாளங்கள் ஏதும் இல்லை.தீப்பொறி ஆறுமுகம்,நெல்லை பாலாஜி போன்ற மூன்றாந்தர பேச்சாளராக மாறி விட்டார்.
வைகோ வுடன் கூட்டணி வைத்ததால் கம்யூனிஸ்டுகளும் அவர் நிலைக்கு தாழ்ந்து போய்க் கொண்டிருக்கிறார்கள்.


விஜயகாந்த் உடல்  நிலை பாதிப்பால் தெளிவாக சிந்தித்தாலும் வார்த்தைகளை சொல்வதில் நிதானமில்லாமல் பாதிக்கப் பட்டிருக்கிறார்.அவரை முதலமைச்சராக்கும் கிங் மேக்கர் வைகோ வோ நிதானமில்லாமல் சிந்தித்து தெளிவாக பேசுகிறார்.

கலைஞரை சாதி,குலத்தொழில் என்று பேசியது வைகோ உள் மனதில் இன்னமும் ஆண்டை சாதி மனமும் சாதி வெறியும் பதிந்துள்ளது என்பதைத்தான் காட்டுகிறது.உள்ளதில் உள்ளதுதானே வாயில் வெளிப்படுகிறது.கலிங்கம்பட்டி தலித்துகள் இதுவரை வைகோவின் சாதி வித்தியாசம் பற்றி சொன்னது உண்மைதான் என்றும் தெரிகிறது.

அதிலும் ஜி.ரா,விஜயகாந்த் என்று தனது இனத்தவர்கள் கூட்டணியில் பெரும்பான்மை என்றதும் மனதில் இருந்து வெளியாகியுள்ளது.

"முதல்வர் வேட்பாளராக தலித்" என்று கூறியதால் கூட்டணியில் இணைந்த திருமாவளவனை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க மறுத்து "இது அதிபர் முறை.நாம் ஜனநாயக முறைப்படி வென்ற பின்னர்தான் முதல்வர் வேட்பாளர் தேர்வு" என்று கண்டிப்பாக அறிவித்தவர் வைகோ.

ஆனால் அவரே விஜயகாந்த் கூட்டணியில் சேர்ந்தவுடன் யாரையும் கேட்காமல் "முதல்வர் வேட்பாளர் விஜயகாந்த்.இனி ம.ந.கூ ட்டணி கேப்டன் விஜயகாந்த் அணி "என்றதன் பின்னாலும் இந்த சாதி தான் மறைந்துள்ளது என்பது இப்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

வைகோ அரசியல் தரகர்  என்பதையும் கடந்து சைகோவாக மாறிவிட்டார் என்பதுதான் அவரின் நாதஸ்வரம் பேச்சு தமிழக மக்களுக்கு காட்டியுள்ள உண்மை.
 கலைஞர்  குறித்து அருவருக்கத்தக்க வகையிலும் , சாதி ரீதியிலும் பேசிய  வைகோவின்கொடும்பாவியை எரித்த மதிமுகவினர்.

========================================================================================
இன்று,
ஏப்ரல்-07.

  • சர்வதேச சுகாதார தினம்
  • உலக சுகாதார நிறுவனம் ஐ.நா.வால் தொடங்கப்பட்டது(1948)

  • ஐ.பி.எம்., தனது சிஸ்டம் /360 ஐ அறிவித்தது(1964)
  • பிரான்ஸ், மீட்டர் அளவு முறையை அறிமுகப்படுத்தியது(1795)
  • பிரான்சிடம் இருந்தான சிரியாவின் விடுதலை அங்கீகரிக்கப்பட்டது(1946)
  • ஹென்றி ஃபோர்ட் நினைவு தினம் 

========================================================================================




இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?