காசு,பணம்,துட்டு,மணி,மணி.

 சென்னை உயர் நீதிமன்றம்  தமிழக மின்சார துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதனுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட லஞ்ச புகார் குறித்து லஞ்ச ஒழிப்பு துறை விசாரணைக்கு உத்தரவிட்டு உள்ளது. 
இந்த வழக்கின் பின்புலம் என்ன? 
சூரிய மின்சக்தி விவகாரத்தில் மின் துறையில் நடந்தது என்ன?
 கடந்த 2014 செப்டம்பரில் சூரிய மின்சக்தி உற்பத்தியை அதிகரிக்கும் பொருட்டு தமிழக அரசு ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதன்படி தனியார் முதலீட்டாளர்கள் சூரிய சக்தி மின் நிலையங்கள் அமைக்க முன்வந்தால் அவர்களிடம் இருந்து ஒரு யூனிட்டுக்கு 7.01 ரூபாய் என்ற விலைக்கு மின்சாரத்தை அடுத்த 25 ஆண்டுகளுக்கு மின்வாரியம் கொள்முதல் செய்யும்.
காசு,பணம்,துட்டு,மணி,மணி.
இந்த திட்டத்தில் மொத்தம் 3,000 மெகாவாட் வரை அனுமதிக்கப்பட்டது. ஆனால் முதலீட்டாளர்கள் 2015 செப்டம்பருக்குள் மின் நிலையத்தை நிறுவி மின்சார உற்பத்தியை துவங்கி விட வேண்டும் என்பது நிபந்தனை.இந்த திட்டத்தில் அறிவிக்கப்பட்ட கொள்முதல் விலை மற்ற மாநிலங்களின் விலையை விட அதிகமாக இருந்ததால் முதலீட்டாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருந்தது. 
இதனால் 110 முதலீட்டாளர்கள் விண்ணப்பித்தனர்.
ஆனால் ''துறையின் உயர் மட்டத்தினர் சூரிய மின் நிலையம் அமைக்க முதலில் ஒரு மெகாவாட்டிற்கு 20 லட்சம் ரூபாய் லஞ்சமாக கேட்டனர். 
பின் இதுவே ஒரு மெகாவாட்டிற்கு 40 லட்சம் ரூபாயானது. இந்தவிஷயத்தை தலைமை பொறியாளர் அந்தஸ்தில் இருந்த ஒருவர் கவனித்துக் கொண்டார்,'
முதலில் ஆர்வம் காட்டிய முதலீட்டாளர்களில் பலர் இவ்வளவு லஞ்சம் கேட்கப்பட்டதால் பின்வாங்கினர். அதனால் 2015 செப்டம்பருக்குள் 3,000 மெகாவாட் இலக்கில் 600 மெகாவாட் உற்பத்தியை மட்டுமே கூடுதலாக பெறமுடிந்தது.
லஞ்சம் கேட்பதற்கு காரணமாக 'வெயில் தன்னாலே அடித்தபடி தானே இருக்கப் போகிறது. உங்களுக்கு என்ன கரி வாங்குற செலவா, இல்ல லேபரா? 
ஒரு செலவும் கிடையாது. நல்ல லாபம் வருமில்ல...' என மின்துறை அதிகாரி ஒருவர் கூறியதாக விரக்தியடைந்த முதலீட்டாளர் ஒருவர் தெரிவித்தார்.
இருப்பினும் செப்டம்பர் 2015க்குள் மேலும் 880 மெகாவாட்டிற்கான பேரம் கனிந்தது. 
ஆனால் இந்த பேரங்கள் கிட்டத்தட்ட கடைசி நேரத்தில் கனிந்ததால் அந்தந்த நிறுவனங்களால் குறிப்பிட்ட காலத்திற்குள் மின் நிலையம் அமைத்து உற்பத்தியை துவங்க அவகாசம் இல்லாமல் போனது.அதனால் இந்த பேரங்கள் மூலம் கிடைக்கக் கூடிய 352 கோடி ரூபாய்லஞ்சம் கிடைக்காமல் போகும் நிலை ஏற்பட்டது. 
அதனால் இந்த திட்டத்தின் காலக்கெடுவை நீட்டிக்க மின்வாரிய உயர் மட்டத்தினர் திட்டமிட்டனர்.
திட்டத்தை நீட்டிக்க வேண்டுமானால் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதி வேண்டும். அதற்காக ஆணையத்தில் இருந்த மூன்று பேரில் இரண்டு பேரை அமைச்சர், 'கரெக்ட்' பண்ணி விட்டதாக விஷயம் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதையடுத்து 'ஒரு யூனிட் 7.01 ரூபாய் கட்டண ஆணை 2016 ஏப்.,1 வரை நீட்டிக்கப்படுகிறது' என 2015 ஏப்., 1ம் தேதி ஒழுங்கு முறை ஆணையம் உத்தர விட்டது. 
ஆணையத்தில் இருவர் இசைந்து கொடுக்க நாகல்சாமி என்ற உறுப்பினர் மட்டும் 'சூரிய சக்தி மின்சாரம் விலை குறைந்து வரும் நிலையில் ஒரு யூனிட், 7.01 ரூபாய் என்ற விலைக்கு 25 ஆண்டுகள் மின்சாரம் வாங்கினால் தமிழ்நாடு மின் வாரியத்திற்கு, 23 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படும்' எனக் கூறி தனி ஆணை வெளியிட்டார். 
ஆனால் ஜெயலலிதா அரசு இதை கண்டுகொள்ளவில்லை.
அவரது முடிவு பற்றி ஆணையத்தின் முன்னாள் உறுப்பினர் நாகல்சாமி விவரமாகக் கூறியதாவது:
 ''ரெனியூவபல் பவர் ஆப்லிகேஷன் என்ற ஒழுங்கு முறை ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழ்நாடு மின் வாரியத்தின் மொத்த மின் வினியோகத்தில் குறிப்பிட்ட அளவு காற்றாலை சூரிய சக்தி போன்ற மரபுசாரா மின்சாரம் இருக்க வேண்டும். 
அதில் சூரிய சக்தி மின்சார அளவு, 0.05 சதவீதம் என்றளவில் உள்ளது. 
அதன்படி மின் வாரியம் 7.01 ரூபாய் விலையில் அதிகபட்சமாக சூரிய சக்தி மின் கொள்முதலில் 30 மெகாவாட் மட்டும் ஒப்பந்தம் செய்தால் போதும். ஆனால், அதானி நிறுவனத்திடம் மட்டும், 648 மெகாவாட்ஒப்பந்தம் செய்தது சட்ட விரோதம்,'' என்று தெரிவித்தார்.
அதானி நிறுவனம் 2015 ஜூலையிலேயே தமிழக அரசுடன் ஒப்பந்தம் செய்து கொண்டாலும் அதன் உற்பத்தி 2015 செப்டம்பர் காலக்கெடுவுக்குள் துவங்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
லஞ்சம் எவ்வளவு?இதுவரை இந்த திட்டத்தின் கீழ் 1,480 மெகாவாட் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. இதன் மூலம் ஏறத்தாழ 525 கோடி ரூபாய் வரை லஞ்சமாக பெறப்பட்டுஉள்ளது என நத்தம் விஸ்வநாதனுக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
அ.தி.மு.க., பிரமுகர்களிடம் இருந்து பல கோடி ரூபாய் சமீபகால வருமான வரி ரெய்டுகளில் பறிமுதல் செய்யப்படுவதாக வரும் செய்திகளின் பின்னணியில் ஒரு அமைச்சர் மீது தேர்தல் நேரத்தில் லஞ்ச புகார் எழுந்திருப்பது மிகவும் முக்கியமான அரசியல் நிகழ்வாக கருதப்படுகிறது.
சூரிய சக்தி மின் நிலையத் திட்டமெல்லாம் பாராட்டத்தக்கது தான். 
ஆனால் அதை மக்களுக்குப் பயன்பட விடாமல் செய்தது யார்? இக்கேள்விக்கு கீழே உள்ள தகவல்களில் விடை கிடைக்கும்.ஒரு மெகாவாட் திறன் உடைய சூரிய சக்தி மின் நிலையம் அமைக்க 5 ஏக்கர் நிலம் தேவை. 
விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள பகுதிகளில், 2014க்கு முன் வரை 1 ஏக்கர் நிலம் சராசரியாக 2 லட்சம் ரூபாய்க்கும் கிராமங்களில் 50 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது. 
அந்த இடங்களின் உரிமையாளர்களில் பலர் வெளியூர்களில் வசித்தனர். சூரிய சக்தி மின் நிலையம் அமைக்கும் நிறுவனங்களுக்கு அந்த நிலத்தை விற்க மின் துறையின் உயர் மட்டத்தை சேர்ந்த சிலர் வி.ஏ.ஓ., வருவாய் ஆய்வாளர், தாசில்தார் மூலம் இடத்தின் உரிமையாளர்களை அடையாளம் கண்டனர். பின் அவர்களிடம் இருந்து தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி உள்ள இடங்களை சராசரியாக 50 ஆயிரம் ரூபாய்க்கும் கிராமத்தில் உள்ள நிலத்தை 20 ஆயிரம் ரூபாய் என்ற குறைந்த விலைக்கும் மிரட்டி வாங்கி உள்ளனர்.பின் அந்த நிலத்தை தனியார் நிறுவனங்களிடம் 1 ஏக்கர் ஐந்து - ஆறு லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர். 
1 ஏக்கருக்கு சராசரியாக 5 லட்சம் ரூபாய் என வைத்து கொண்டால் 5,000 ஏக்கர் விற்பனை செய்ததன் மூலம் 250 கோடி ரூபாய் அளவிற்கு வசூல் செய்துள்ளனர். 
இவை எல்லாம் தமிழ் நாட்டின் ஒவ்வொரு அசைவையும் உளவுத்துறை மூலம் ,ராமானுஜம் மூலமும் அறிந்து கொண்டு தோட்டத்தில் ஓய்வெடுக்கும் ஜெயலலிதாவுக்கு தெரியாமல்தான் நடந்தது என்றால் அவருடன் உள்ள சசி கலாவே சிரித்துவிடுவார்.
========================================================================================

  'உண்மையான புரட்சியாளர்' 
டில்லி பல்கலை பாடப் புத்தகத்தில், பகத் சிங்கை, 'புரட்சிகர பயங்கரவாதி' என்று குறிப்பிட்டு, பாடம் தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், 'பிரிட்டிஷ் போலீஸ் உயரதிகாரி சாண்டர்ஸை சுட்டுக் கொன்றது,பயங்கரவாதச் செயல்' என்றும் அதில் கூறப்பட்டுள்ளது. 
பகத் சிங்கை துாக்கிலிட்ட பிரிட்டிஷார் கூட தங்கள் தீர்ப்பில் பகத் சிங்கை  'உண்மையான புரட்சியாளர்' என்றே தீர்ப்பில் குறிப்பிட்டனர். 

'பயங்கரவாதம், பயங்கரம்' போன்ற வார்த்தைகளை பிரிட்டிஷார் பயன்படுத்தவில்லை. ஆனால் இந்திய பல்கலைக்கழகம் ஓன்று இப்படி பாடநூல் வெளியிட்டுள்ளது அசிங்கமானது, கூடியது.
நாடு சுதந்திரம் பெற்று, 68 ஆண்டுகள் ஆனபின்னும், விடுதலைக்காக பாடுபட்டபுரட்சியாளர் பகத் சிங்கை  பற்றி, இழிவான வார்த்தைகளுடன் பாடம் இடம்பெறுவது இந்தியவிடுதளைப் போரையே கொச்சைப்படுத்துவது போலாகும்.
பகத்சிங் தூக்கு மேடையை எதிர் நோக்கி இருக்கையில் ஒட்டு மொத்த இந்தியாவே அவரை விடுதலை செய்ய போராடியது.அதனால் அன்றைய பிரிட்டிஷ் அரசு காந்தியிடம் கருத்து கேட்டது.ஆனால் பகத் சிங்கை தூக்கிலிடுவதன் மூலம் பயங்கரவாதத்துக்கு முடிவு கட்டலாம்.அஹிம்சை வழியிலான போராட்டத்தை தனது தலைமையில் விடுதலையை நோக்கி தொடரலாம்.என்று காந்தி கருத்து கூறினார்.
அந்த காந்தியை சுட்டுக் கொன்ற இந்து மத வெறியன் கோட்சேக்கு தற்போதைய காலக்கட்டத்தில் சிலை திறக்கப்பட்டு பெருமை சேர்க்கப்படுகிறது.
ஆனால் தனது இளம் வயதிலேயே நாட்டுக்காக தூக்குக்கயிறை மாட்டிக்கொண்ட பகத் சிங் பயங்கரவாதி என்று காந்தியின் வார்த்தைகளை கடன் வாங்கி சிறுமைபடுத்துகிறது இந்த பாஜக அரசு.
"உங்களின் இறுதி ஆசை என்ன?"என்றபோது
"என்னை தூக்கிலிட வேண்டாம் .நான் சாகும் போதும் என் தாய் நாட்டில் எனது கால்கள் பதிந்திருக்க வேண்டும் .அதனால் என்னை சுட்டுக்கொல்லுங்கள் "
என்று பிரிட்டிஷ் அரசை பார்த்து கூறியவர் பகத் சிங். அந்த இளம் வயதில் சாவை கண்டு அஞ்ச வில்லை அவர் .
அவற்றின் நெஞ்சுறுதியை கண்டு வியந்த பிரிட்டிஷ் நீதிபதி பகத் சிங்கை தூக்கில்தான் போடவேண்டும் என்று கூறினாலும் ,"பகத் சிங் ஒரு உண்மையான புரட்சியாளர்"என்று தனது தீர்ப்பில் பதிவு செய்துள்ளார்.
யாரை எதிர்த்தாரோ அவர்கள் அவரை புரட்சியாளர் என்கிறார்கள்.யாருக்காக உயிரை இழந்தாரோ அவர்கள் அவரை பயங்கர வாதி என்கிறார்கள்.
இதுதான் இந்திய அகிம்சையின் மறுபக்கம் .!
=====================================================================================
இன்று,
ஏப்ரல்-28.
  • அசர்பைஜான் சோவியத் ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டது(1920)
  • மஞ்சள் காய்ச்சல் நோய்க்கான தடுப்பூசி முதன் முதலாக அறிமுகப்படுத்தப்பட்டது(1932)
  • தமிழறிஞர் உ.வே.சாமிநாதையர் இறந்த தினம்(1942)
  • அமெரிக்காவின் 7வது மாகாணமாக மேரிலாந்து இணைக்கப்பட்டது(1788)
=====================================================================================


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?