இடுகைகள்

மே, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

மின் கணக்கு

படம்
மாதம் 100 யூனிட்இலவசம் என்றதும் புளகாங்கிதமடைந்த பலருக்கு தாங்கள் உபயோகிக்கும் மின்பொருட்கள் இயங்க எடுக்கும் மின்அளவு பற்றிதெரிவதில்லை. அவர்களுக்காக சிறிய விளக்கம். "இரண்டு 60 வாட்ஸ் பல்புகள் தினமும் 5 மணி நேரம் எரிந்தால் மாதம் 18 யூனிட் செலவாகும்.    ஆனால் அதுவே 60 வாட்ஸ் பல்புகளுக்குப் பதிலாக 15 வாட்ஸ் கொண்ட 2 சி.எப்.எல் பல்புகளை தினமும் 5 மணி நேரம் உப யோகித்தால் மாதம் 4.5 யூனிட் மின்சாரம் மட்டுமே செலவாகும்.  அதுபோல 40 வாட்ஸ் திறன் கொண்ட 2 டியூப் லைட்கள் தினமும் 5 மணி நேரம் எரிந்தால், மாதம் 12 யூனிட் செலவாகும்.  750 வாட்ஸ் திறன் கொண்ட அயர்ன் பாக்ஸ் தினமும் ஒரு மணி நேரம் உபயோகித்தால் மாதம் 22.5 யூனிட் மின்சாரம் செலவாகும். 150 வாட்ஸ் திறன் கொண்ட பிரிட்ஜ் தினமும் 12 மணி நேரம் இயங்கினால், மாதம் 54 யூனிட் செலவாகும். 2 ஆயிரத்து 650 வாட்ஸ் திறன் கொண்ட 1.5 டன் ஏசி தினமும் 5 மணி நேரம் உப யோகப்படுத்தப்பட்டால் மாதம் 398 யூனிட் செலவாகும்.  அதுவே 200 வாட்ஸ் ஏர் கூலர் என்றால் மாதம் 30 யூனிட் செலவாகும்.  75 வாட்ஸ் திறனுள்ள 2 மின்விசிறி தினமும் 8 மணி ஓடினால், மாதம்

சாதி இரண்டொ"ழிய"

படம்
திமுக தலைவர் கலைஞர் இந்திய பிரதமருக்கு மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கக் கோரி கடிதம் எழுதியுள்ளார்.  அக்கடிதம் முழுக்க தெரியாவிட்டாலும்,கலைஞர் கடிதம் எழுதிவிட்டார் என்பதற்காக பிரதமர் உடனே மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்கப் போவது இல்லை என்றாலும் ,  மீனவர் சமுதாயத்தை பழங்குடியினர் பட்டியலில் சேர்ப்பது பற்றி நாம் கொஞ்சம் விவாதிக்கலாமே.  மீனவர்சமுதாயம்பழங்குடியினர்பட்டியலில் சேர்ப்பதுஎன்பது சரியானசெயல் அல்ல. தமிழகத்தில் நரிக்குறவர்கள் போன்று மீனவர்கள் என்று தனிசமுதாயம் அல்ல. ‪இன்றுவரை   அந்த சாதியை,சேர்க்க வேண்டும் இந்த சாதியை சேர்க்க வேண்டும் என்று ஒவ்வொருவரையும்   ‎ பிற்பட்டோர்‬  பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று இன்று சைவ வேளாளர் ,பிராமணர் தவிர அனைத்து இனத்தினரையும் சேர்க்கப்பட்டுவிட்டனர். சைவ வேளாளர்களும்,ஓதுவார்களும்,பிராமணர்களும் இன்னும் சிறிது  நாட்களில் பிற்பட்டோர் ஆகி விடலாம்.யார் கண்டது.அங்குள்ளவர்களில்  மட்டும் அனைவரும் பண முதலைகளா?ஏழைகளே இல்லையா? இதி ஒரு வேடிக்கை பிராமணர்,சைவ வேளாளர் ,ஒதுவார்  இவர்களுக்கு இனை யான சைவர்களும்  ,மேலும் ஒ துவார்,சை

மது விலக்கில் அடுத்தப்படி ?

படம்
படிப்படியான மது விலக்கு தனது முதல்படியாக 500 கடைகளை மூடுவதாக ஆரம்பமாகியுள்ளது. அத்துடன் கடையின் விற்பனை நேரத்தை குறைத்துள்ளது ஜெயலலிதா அரசு. இதன் மூலாம் இலக்கை அடைய முடியுமா? 500 கடைகளை மூடுவது இன்னமும் மாவட்ட ஆட்சியர்களிடம் பட்டியல் கேட்பது வரையிலான பணி வரைதான் வந்துள்ளது. கடைகள் விற்பனை நேரம் குறைப்பால் 6% விற்பனை குறையும் என்று அரசால் கூறப்பட்டது. ஆனால் நிலையோ வேறு. 12 மணிக்கு டாஸ்மாக் கடை திறப்புக்கு காலை 6 மணி முதலே காத்திருந்து கைகள் நடுங்க வாங்கிச்சென்ற குடிமக்களைப் பார்க்கையில் 30 மணி நேரம் திருப்பதியில் பக்தர்கள் காத்திருந்ததாக அன்றைய செய்திக்கும் அதற்கும் வித்தியாசம் இல்லை என்றுதான் உணர முடிந்தது. இதனால் விற்பனையில் என்ன பாதிப்பு வந்திருக்கும்.? இது முதல் நாள் நிகழ்வு. ஆனால் அடுத்தடுத்த நாட்களில் காலையில் பழைய நிலையிலேயே மது அருந்து கூடங்கள் (பார் )திறந்து குடி  மக்கள் பார்களில் அதிக விலையில் மது வாங்கி அருந்துவதைஅனேகமாக  எல்லா கடைகளிலும் பார்க்க முடிந்தது. ஆனால் மது கடைகள் மூடப்பட்டுதான் இருந்தன. முதல் நாள் இரவிலேயே மதுப்பாட்டில்கள் பார்களில் வைக்க

போலி (வாக்காளர்) களே வெல்லும்?

படம்
முன்னாள் தலைமைத் தேர்தல் அதிகாரி கோபால் சாமி "தமிழ்நாட்டில் யாராலும் தேர்தலுக்கு பணம் கொடுப்பதை தடுக்க முடியாது' என்று கூறுகிறார். பிறகு ஏன் உங்களுக்கு தண்டச் சம்பளம்... தேர்தல் ஆணையத்தைக் கலைத்து விட்டுப் போவதுதானே என்று ஊடகத்தில் கேள்வி கேட்க ஆள் இல்லாதது அவர்களின் புண்ணிய கணக்கு.  தேர்தல் அதிகாரிகள் நேர்மையாக தேர்தலை நடத்துகிறார்கள் என்று எண்ணும் மக்களின் பாவக்கணக்கு. அன்றைய தமிழகத் தேர்தல் ஆணையாளர் பிரவீன்குமார், அவர் கையொப்பமிட்ட ஆவணம் ஒன்று தரும் தகவலில் நாம் அறிவது... ஏற்கனவே இரண்டு மனையும், ஒரு வீட்டையும் வைத் திருந்தவருக்கு அ.தி.மு.க. அரசு வீட்டை தந் துள்ளது. Noidaவில் ரூபாய் 35.25 லட்சம் கொடுத்து 28-7-2011ல் வீட்டை வாங்கியவர் 34.90 லட்சம் கட்டிவிட்டார். அது மட்டுமில்லை... இதே நேரத்தில் அவருக்கு தமிழக அரசு சென்னையில் bid dated  10-9-2012-ல் 85 லட்சம் மதிப்புள்ள வீட்டை வழங்கியது. இதிலும் அவர் ஜனவரி 2014-வரை 40 லட்சம் கட்டிவிட்டார்.  அதாவது ஒரு மாதத்திற்கு சுமார் மூன்று லட்சம் கட்டி, 26 மாதத்தில் 75 லட்சத்துக்கு மேல் கட்டி விட்டார். மாதச்சம்பளம் 75,300 ரூபாய் மட

அதிமுகவுக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் உ(க)ள்ள உறவு

படம்
தேர்தல் பணிகள் தொடங்கிய நாளிலிருந்து தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் அனைத்தும் ஆளுங்கட்சிக்கு ஆதரவாக ஒரு தலைப் பட்சமாகவே இருந்ததையும், ஆளுங்கட்சியுடன் கூட்டணி அமைத்துக் கொண்டதைப் போலச் செயல்பட்டதையும் தமிழகமே நேரிலே கண்டது.  தேர்தல் ஆணையத்திடம், திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எத்தனை முறை தான் புகார் மனுக்களைத் தருவது? பணப்பட்டுவாடா பற்றி நாளேடுகளில் செய்திகள் வராத நாள் உண்டா? அமைச்சர்களைப் பற்றி எத்தனையோ புகார்கள்!  பொது மக்கள் திரண்டு நின்று, சில அமைச்சர்களைத் தொகுதிக்குள்ளேயே வரவிடாமல் தடுத்து விரட்டியடித்தார்கள் என்று எத்தனை செய்திகள் வெளிவந்தன?  அதையெல்லாம் மீறி அந்த அமைச்சர்கள் அந்தத் தொகுதிகளில் பின்னர் எப்படி வெற்றி பெற்றார்கள்? மூன்று அமைச்சர்களோடு நெருங்கிய தொடர்பு கொண்ட கரூர் அன்புநாதன் பிரச்சினை என்ன? துபாயில் ஓட்டல் என்றும், வெளிநாடுகளில் ஏராளமான சொத்துகள் என்றும், கோடிக்கணக்கான ரூபாய் முதலீடுகள் என்று பேசப்பட்ட பெரிய ஊழல் எவ்வாறு மூடி மறைக்கப்பட்டது?  570 கோடி ரூபாய் திருப்பூரில் பிடிபட்டதையே வங்கியின் பணம் என்று டெல்லியிலிருந்தே கூறி விட்டார்களே?  சிறு

"தூக்கம்" இருவகை

படம்
தூக்கம் என்பது உடலுக்கு ஓய்வு கொடுத்து மீண்டும் புத்துணர்வோடு செயல்படுவதற்கு மூளையானது தன்னைத்தானே புதுப்பித்துக்கொள்ளும் ஓர் இயற்கை வழி.  ஒருவருடைய உடல் உழைப்பு, தூங்கும் விதம், சுற்றுச்சூழல், உடல் நலம் மற்றும் மனநலத்தைப் பொறுத்து தூக்கம் அமைகிறது. பொதுவாக ஒருவருக்கு நாள் ஒன்றுக்கு ஆறிலிருந்து எட்டு மணி நேரம் தூக்கம் அவசியம்,  தூக்கத்தில் ‘ரெம்’ தூக்கம், ‘நான் ரெம்’ தூக்கம் என்று இருவகை உண்டு.  நாம் தூங்கும்போது இந்த இரண்டும் மாறி மாறி அலைபோல வரும். ‘ரெம் தூக்கம்’ (REM Sleep - Rapid Eye Movement Sleep) என்பது கண் அசைவுத் தூக்கத்தைக் குறிக்கும்.  இந்தத் தூக்கத்தில் மூடிய இமைகளுக்குள் விழிகள் உருண்டபடி இருக்கும். கனவுகள் வருகிற தூக்கம் இது.  ‘நான் ரெம்’ தூக்கம் (NREM Sleep - Non Rapid Eye Movement Sleep) என்பது கண் அசையா தூக்கத்தைக் குறிக்கும். இது ஆழ்ந்த தூக்கம் உண்டாகிற நிலை.  இதில் கனவுகள் வருவதில்லை. ஆனால் இந்த தூக்கம் வந்து ஒன்றரை மணி நேரம் கழித்து ஒரு சிலருக்கு மட்டும் பேய்க்கனவு வந்து அலறி எழுந்திருப்பார்கள். தூக்கம் குறையும்போது உடலின் நலம் பாதிக்கப்படுகிறது. இளம் வயதி