இடுகைகள்

ஜூலை, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

தேர்தல் சீர்திருத்தங்கள் ,

படம்
விகிதாச்சார பிரதிநிதித்துவம். நடந்து முடிந்துள்ள ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல்கள் நமது நாட்டின் தேர்தல்களில் பணநாயகம் ஆற்றும் முக்கியப் பங்கை மீண்டும் வெளிச்சப்படுத்தியுள்ளன.  பெரும் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளைக் கொண்ட ஒரு நாட்டில், அந்த ஏற்றத்தாழ்வுகளை தொடர்ந்து அதிகப்படுத்தும் முதலாளித்துவ அமைப்பின்கீழ் செயல்படும் நாட்டில், தேர்தல்கள் எப்பொழுதுமே ஜனநாயகத்தை பொறுத்தவரையில் குறைபாடுகள் நிறைந்ததாகத்தான் இருக்க முடியும்.  பணபலத்தின் பங்கை முழுமையாக தடுப்பது என்பது இத்தகைய சூழலில் மிகவும் கடினமானது தான். எனினும், நமது தேர்தல் செயல்முறைகளிலும் விதிமுறைகளிலும் பெரும் மாற்றங்கள் செய்தால் சற்று கூடுதல் ஜனநாயகத் தன்மை கொண்ட தேர்தல்களை நோக்கி நகர முடியும்.  தேர்தலில் பணநாயகத்தை கட்டுப்படுத்துவதற்கு தேர்தல் செலவுகள் பொது நிதியில் இருந்து மட்டுமே, தக்க நெறிமுறைகளின் கீழ், அனைத்துக்கட்சிகளாலும் மேற்கொள்ளப்படவேண்டும், கார்ப்பரேட் நிதி தேர்தலில் பங்கு பெறக்கூடாது போன்ற அம்சங்கள் அஜெண்டாவில் வரவேண்டும்.  இன்னும் பல விஷயங்கள் தேர்தல் சீர்திருத்தம் என்ற பேசுபொருளில் விவாதிக்கப்படவேண்டும

கணையத்தை கவனியுங்கள்.

படம்
கல்லீரல்,சிறுகுடல்,பெருங்குடல்,இரைப்பை என செரிமான உறுப்புகள் குறித்து ஓரளவுக்கு அறிந்துள்ள நாம்,கணையத்தை மட்டும் கண்டுகொள்வதே இல்லை. ஆனால் மனித உடலின் மிகப்பெரிய சுரப்பியான கணையமானது,இன்று மனித குலத்தின் மிகப்பெரிய நோயாக பார்க்கப்படும் சர்க்கரை நோய்க்கு முக்கிய காரணமாக உள்ளது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த கணையத்தை பாதுகாக்கும் வழிமுறைகள் பற்றி தெரிஞ்சுக்கலாம் . உடலில் வயிற்றுப் பகுதியில் இரைப்பைக்கு சற்று கீழே இருக்கும் ஓர் உறுப்பு கணையம் ஆகும். இரத்த சர்க்கரையின் அளவை சீராக வைத்துக் கொள்ள உதவும் இன்சுலின் என்னும் ஹார்மோனை கணையம் சுரக்கிறது.  மேலும் உணவை செரிக்க உதவும் நொதிகளை சுரப்பதும்,உணவில் இருந்து சத்துக்களை பிரித்தெடுத்து மற்ற பாகங்களுக்கு அனுப்புவதும் கூட. கணையம் தான். கணைய சரிவர செயல்படாவிட்டால் சர்க்கரை நோய்,கணைய அழற்சி, கணைய புற்றுநோய் போன்றவை ஏற்படும். எனவே ஆரோக்கியமான உடல் வேண்டும் என்றால் கணையத்தை கவனமாக பார்த்துக் கொள்வது அவசியம். சர்க்கரைவள்ளிக் கிழங்கு கணையத்தின் நண்பன் எனலாம். கணைய புற்றுநோய் செல்களை சர்க்கரைவள்ளிக் கிழங்கில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்ட

உலக நாயகன் சிறப்பு பாடல்கள். சிறப்புத் தகவல்களுடன்.

படம்

மகதாயி கோவா காவிரி?

படம்
மகமாயி விவகாரத்தில் மன்னிக்கவும்.மகதாயி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து கர்நாடகாவில் போராட்டம் நடைபெற்று வருகிறது. கர்நாடகா-கோவா-மராட்டியம் ஆகிய மூன்று   மாநிலங்களை இணைத்து மகதாயி நதியும் அதன் கிளைகளும்  செல்கின்றன .   இந்த நதிநீரை பங்கிடுவது தொடர்பாக மகதாயி நடுவர் மன்றத்தை மத்திய அரசு  அமைத்தது.  நமக்கும்  கர்நாடகாவுக்கு இருக்கும் காவிரி பிரச்சனை போல் இந்த மூன்று மாநிலங்களுக்கிடையே மகதாயி  பிரசினை இருக்கிறது. ம ராட்டியத்தில் இருந்து கோவா போய் அங்கிருந்து கர்நாடகாவை அடைகிறது. அப்படியே தமிழ் நாடும் வந்திருந்தால் பிரசினை இன்னும் பலமாக இருந்திருக்கும். காவிரியில் இருந்து கர்நாடகா நமக்கு தண்ணீர் திறந்து விட கர்நாடகா பிரசினை செய்வது போல்   மகதாயி நதி நீர் பங்கீடு தொடர்பாக 3 மாநிலங்கள் இடையே பிரச்சினை இருந்து வருகிறது. இதுதொடர்பான வழக்குகளை மகதாயி நடுவர் மன்றம் விசாரணை நடத்தி வருகிறது.   வடகர்நாடகத்தில் உள்ள தார்வார், கதக், பெலகாவி, பாகல்கோட்டை ஆகிய மாவட்டங்களில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க மகதாயி நதியில் இருந்து 7.56 டி.எம்.சி தண்ணீர் எடுத்துக்கொள்ள அனுமதி வ

எண்ணைக் குளியல்

படம்
மற்ற எண்ணெய்கள் போல் இல்லை . நல்லெண்ணை க்கு என்று சிறப்பு தன்மை உண்டு.  உடலில் கொழுப்பு சேர விடாமல் தடுப்பது தான் இதன் தனிச்சிறப்பு.  கொழுப்பை தடுக்கும் நல்லெண்ணை , ரத்தத்தில் உள்ள கொழுப்பை அகற்றி, அதை சுத்திகரிக்கக் கூடியது.  நல்லெண்ணெய் சற்று கசப்பும், சிறிது இனிப்பும், காரத்தன்மையும் கொண்டது.  எளிதாக சருமத்துக்குள் ஊடுருவக்கூடியது.  அதனால் சருமம் மிருதுவாகவும், ஆரோக்கியமாகவும்  திகழம். ஆனால் இன்று கடைகளில் கிடைக்கும் நல்லெண்ணைகள் கலப்படம் மிகுந்ததாக இருப்பதாக கூறப்படுகிறது. முடிந்தவரை சுத்தமான நல்லெண்ணை கிடைக்குமிடங்களில் வாங்கலாம்.செக்கெண்ணை என்றால் மிக நல்லது. செக்கு மூலம் எள்ளில் இருந்து ஆட்டி எடுக்கப்படும் நல்லெண்ணெய் வெளிப்பூச்சுக்கும், உணவுப்பொருளாகவும், மருந்துபொருளாகவும் பயன்படுகிறது. நல்லெண்ணெய் சருமத்தின் ஈரப்பதத்தை சமப்படுத்துகறது.  உடல் வெப்பத்தை தணிக்கிறது.  ரத்தத்தில் கொலஸ்ட்ராலை குறைக்கிறது.  நல்லெண்ணெய்யை இயற்கை நமக்கு அளித்த கொடை என்று தாராளமாக சொல்லலாம். அளவில்லாமல் தொடரும் இதன் நன்மைகளே அதற்கு காரணம்.  நல்லெண்ணெய் புத்திக்கு தெள

நகெட் சிறப்பம்சங்கள்

படம்
கூகுள் வெளியீடான  ஆண்ட்ராய்ட் இயங்கு தளத்தின் அடுத்த பதிப்பான 7.0-விற்கு நுகெட் ( Nougat ) என்று பெயரிடப்பட்டுள்ளது.  இப்பெயரை தமிழில் நகெட் என்றும், நவ்கட் என்றும், நுகெட் என்றும் பலவிதமாக உச்சரிக்கின்றனர். சர்க்கரை, தேன், பருப்புகள், முட்டை ஆகியவற்றைக் கலந்து தயாரிக்கப்படும் ஐரோப்பிய மிட்டாயின்    இது  பெயர்.   பிரெஞ்சு மொழியில் நுகெட் என்றே உச்சரிக்கப்படுகிறது.ஆண்ட்ராய்ட் 6.0 மார்ஷ்மெல்லோ பதிப்பு சென்ற ஆண்டு இறுதியில் வெளியானது.  தொடர்ந்து அடுத்த பதிப்பிற்கான சோதனைப் பதிப்பு மார்ச் 2016ல் வெளியானது.  தற்போது சோதனையில் இருக்கும் இப்பதிப்பிற்கான பதிப்பு எண், பெயர் ஆகியவை சில வாரங்களுக்கு முன்புதான் முறையாக அறிவிக்கப்பட்டு உறுதிப்படுத்தப்பட்டது.  இப்புதிய பதிப்பு இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று தெரிகிறது.  இந்த நகெட்  இயங்கு தளத்தில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்து ஆண்ட்ராய்ட் இணையதளத்தில் தற்போது தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஒரே சமயத்தில் இரண்டு திரைகளைத் திறந்து பணியாற்றும் வசதியை இந்த நகெட்  ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்களுக்கு தரவுள்ளது.   ஒரு ஸ்மார்ட் போனில்