ஆபத்தை உண்டாக்கும் விளையாட்டு.

பல்­வேறு நாடு­க­ளின் மக்­களை கட்­டிப் போட்­டுள்ள “போகி­மேன் கோ” ஆண்ட்­ராய்டு ஸ்மார்ட் போன் விளை­யாட்டு. 
இதை வடி­வ­மைத்­த­வர்­கள் அமெ­ரிக்­கா­வைச் சேரந்த நியான்­டிக் நிறு­வ­னத்­தார். இதை அறி­மு­கப்­ப­டுத்­திய இரண்டு வாரங்­க­ளி­லேயே அமெ­ரிக்கா, ஐரோப்பா, ஆஸ்­தி­ரே­லியா ஆகிய நாடு­க­ளில் பிர­ப­ல­ம­டைந்­துள்­ளது. 
இதை தற்­போது கல்­லூரி, பள்­ளி­கள், அலு­வ­லம், வீடு என எல்லா இடங்­க­ளி­லும் விளை­யாட ஆரம்­பித்­துள்­ள­னர். முன்பு போகி­மேன் சீட்டு கட்­டில் விளை­யா­டி­வர்­கள், டிவி சீரி­யல்­க­ளில் பார்த்­த­வர்­க­ளில் பெரும்­பா­லோர், தற்­போது ஜிபி­எஸ் வச­தி­யுள்ள ஸ்மார்ட் போனில் விளை­யாட துவங்­கி­யுள்­ள­னர். 
இந்­தி­யா­வில் அதி­கா­ர­பூர்­வ­மாக போகி­மேன் கோ விளை­யாட்டு அறி­மு­கப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. 
இருப்­பி­னும் இங்­கும் பல­ரின் கவ­னத்தை ஈர்த்­துள்­ள­து­டன், சிலர் விளை­யா­ட­வும் தொடங்­கி­யுள்­ள­னர். இதை ஐ போனில் டவுன்­லோட் செய்­வது சிர­மம். 
 சடோஜி தஜிரி                      போகி­மேன்
அதே நேரத்­தில் ஆன்ட்­ராய்ட் போன்­க­ளில் கூகுள் தேடு­த­ளத்­தில் போகி­மேன் (Pokémon) என்று டைப் செய்­தால் டவுன் லோட் செய்ய முடி­யும் என்­கின்­ற­னர். 
ஜப்­பா­னைச் சேர்ந்த வீடியோ கேம் வடி­வ­மைப்­பா­ளர் சடோஜி தஜிரி என்­ப­வர், 1996ல் முதன் முத­லில் போகி­மேன் விளை­யாட்டை வடி­வ­மைத்­தார். இவர் பள்­ளிக் கூடத்­தில் படிக்­கும் போது பல்­வேறு வகை­யான பூச்­சி­களை சேக­ரிப்­பதே பொழுது போக்கு. வீடியோ கேம் வடி­வ­மைக்­கும் போதும் பூச்­சி­கள் போன்ற உரு­வங்­களை பயன்­ப­டுத்த தொடங்­கி­னார். 
இதற்கு அவர் கூறும் கார­ணம், நக­ர­ம­ய­மா­த­லால் குழந்­தை­கள் வண்­ணப்­பூச்சி போன்ற பல இயற்­கை­யான பூச்சி இனங்­களை பார்ப்­பதே அரி­தா­கி­வ­ரு­கி­றது.
 போகி­மேன் என்­றால் கைக்கு அடக்­க­மான மிகப்­பெ­ரிய அரக்­கன் அல்­லது பயங்­க­ர­மான உயி­ரி­னம் என்று பொருள். 
ஒவ்­வொரு போகி­மேன் பொம்­மை­யும், ஒவ்­வொரு மாதி­ரி­யாக இருக்­கும். எலி, பூனை, வாத்து என பல்­வேறு வகை­க­ளில் இருக்­கும். இவை­க­ளுக்கு பெய­ரும் வித்­தி­யா­ச­மாக இருக்­கும். கார்­டூன் படங்­க­ளில் வரும் உரு­வங்­கள் போல், இவற்­றின் வடி­வ­மைப்­பும் இருக்­கும். 
இதன் பெயர்­க­ளும் பாகன், கார்­பிஸ், கிரா­னி­டோஸ், டிக்­கர்ஸ்பீ, பிப்­பி­ளப் என வித்­தி­யா­ச­மாக இருக்­கும். இத­னால் இவற்றை குழந்­தை­கள் முதல் பெரி­ய­வர்­கள் வரை விரும்­பு­கின்­ற­னர். 
போகி­மேன் கோ விளை­யாட்டை வடி­வ­மைத்த நியான்­டிக் நிறு­வ­னத்­தின் தாய் நிறு­வ­னம் ஜப்­பா­னைச் சேர்ந்த நின்­டின்டோ. 
இந்த விளை­யாட்­டின் முக்­கிய அம்­சம், போகி­மேன் பொம்­மை­கள் எங்கு உள்­ளது என்று கண்டு பிடிப்­பதே. இதற்­கென ரட்­டாட, சார்­மன்­டர் என்று பல்­வேறு பெயர்­க­ளில் மொத்­தம் 151 பொம்­மை­களை (உரு­வங்­களை) வடி­வ­மைத்­துள்­ள­னர். 
இந்த போகி­மேன் பொம்­மை­கள் எங்கு உள்­ளன என்று ஜிபி­எஸ் வசதி உள்ள போனில் கேமிரா உடன் குறிப்­பிட்ட இடங்­க­ளுக்கு சென்று போகி­மென் ஒளிந்­துள்ள இடத்­தில் தேடு­கின்­ற­னர்.        
சாலை­க­ளில், ரயில் தண்­ட­வா­ளங்­க­ளில் செல்­போன்­க­ளில்­பே­சிக் கொண்டே நடப்­பது. கார், பைக் போன்ற வாக­னங்­களை ஓட்­டும் போது செல்­போன்­க­ளில் பேசிக் கொண்டே ஓட்­டு­வது என செல்­போன்­களை முறை­யாக பயன்­ப­டுத்­தா­மல், தவ­றாக பயன்­ப­டுத்­து­வ­தால் பல விபத்­துக்­கள் ஏற்­ப­டு­கின்­றன. 
இந்த மாதி­ரி­யான சூழ்­நி­லை­யில் போகி­மென் போன்ற விளை­யாட்டை, சுற்­றி­லும் கவ­னம் செலுத்­தா­மல் விளை­யா­டும் போது விபத்­துக்­கள் ஏற்­ப­ட­வும் வாய்ப்பு உள்­ளது. 
கலி­போர்­னி­யா­வில் உள்ள வடக்கு சாண்­டி­யா­கோ­வில் போகி­மேன் விளை­யா­டும் போது இரண்டு மாண­வர்­கள் 110 அடி உய­ரம் உள்ள மதிற் சுவ­ரில் இருந்து விழுந்­த­தாக தக­வல்­கள் வெளி­யா­கி­யுள்­ளன. 
யூகோஸ்­லா­வி­யா­வில் இருந்து பிரிந்த போஸ்­னியா என்ற நாட்­டில் நடந்த உள்­நாட்டு போரில் பல இடங்­க­ளில் கண்­ணி­வெடி புதைத்து வைக்­கப்­பட்­டுள்­ளது. 
போகி­மேன் விளை­யாட்டை விளை­யா­டு­ப­வர்­க­ளுக்கு, இந்த கண்­ணி­வெடி குறித்து எச்­ச­ரிக்கை விடப்­பட்­டுள்­ளது. 
கவு­தி­மா­லா­வில் 18 வயது இளை­ஞர், போகி­மேன் பொம்­மையை தேடி செல்­லும் போது, பூட்­டப்­பட்­டி­ருந்த ஒரு வீட்டை உடைத்­துள்­ளார். இந்த இளை­ஞர் கொள்­ளை­யன் என்று கருதி சுட்­டுக் கொன்­றுள்­ள­னர். இதே போல் பால்­டி­மோ­ரில் போகி­மேன் விளை­யா­டிக் கொண்டே காரை ஓட்­டி­ய­வர், போலீஸ் வாக­னம் மீது மோதி­யுள்­ளார். 

நமது நாட்­டில் மது குடித்­து­விட்டு வாக­னத்தை ஓட்­டாதே என்று எச்­ச­ரிக்கை பல­கை­கள் உள்­ளது போல், பால்­டி­மோ­ரில் போகி­மேன் விளை­யா­டிக் கொண்டே காரை ஓட்­டாதே என்று எச்­ச­ரிக்கை வாச­கங்­கள் அடங்­கிய பல­கை­களை வைக்­கப்­பட்­டுள்­ளன.
பலர் செய்­வது போல் எந்­த­நே­ர­மும் ஸ்மார்ட் போன் கையில் வைத்­துக் கொண்டு போகி­மேனை தேடி அலை­ய­வேண்­டி­ய­தில்லை. இவ்­வாறு செய்­வது மடத்­த­னம். 
உங்­க­ளுக்கு தேவை இதற்கு தேவைப்­ப­டும் ஆப்ஸ் மட்­டுமே. உங்­கள் அன்­றாட அலு­வல்­க­ளை­யும், மற்ற நட­வ­டிக்­கை­க­ளி­லும் ஈடு­பட்டு இருக்­கும் போது, அரு­கா­மை­யில் போகி­மேன் இருந்­தால், உங்­கள் ஸ்மார்ட் போனில் பீப் ஒலி எழுப்­பும். அப்­போது ஸ்மார்ட் போனை எடுத்­தாலே போதும் என்று விப­ர­ம­றிந்­த­வர்­கள் கூறு­கின்­ற­னர்.
எது எப்­ப­டியோ, கூடிய விரை­வில் தமிழ்­நாட்­டி­லும் போகி­மேன் விளை­யாட்டு ஆர்­வம் மக்­கள் மத்­தி­யில், குறிப்­பாக இளம் சமு­தா­யத்­தி­னர் மத்­தி­யில் பர­வும் என்­பது மட்­டும் நிச்­ச­யம். 
அதை தொடர்ந்து இது பற்­றிய செய்­தி­க­ளும் வெளி­யா­கும்விபத்துக்களும் விளையாட்டு வெறியினால் தற்கொலைகளும் கூட பெருகும் . 
=====================================================================================
மாட்டை கும்பிடுவோர் கவனத்திற்கு.

இந்தியாவில் அடுத்த ஐந்து ஆண்டுகளில், மாட்டிறைச்சி ஏற்றுமதி 50 சதவீதம் உயரும் என தகவல் மற்றும் கடன் தர நிர்ணய நிறுவனம் தெரிவித்துள்ளது. 
இந்தியாவில் மாட்டுத்தோல் உரிக்கும் தலித்கள் மற்றும் மாட்டுக்கறி உண்பவர்கள் மீது இந்துத்துா அமைப்பினர் தொடர் தாக்குதல் நடத்துகின்றன. மத்தியில் ஆளும் பா.ஜ.க., அரசும் பசுப்புனிதம் என்ற பெயரில், தலித்களுக்கு எதிராக மாட்டு அரசியலை கையாண்டு, தலித்கள் மீது வன்முறையை கட்டவிழ்த்து விட்டு வருகின்றது, 
இந்நிலையில், இந்தியாவின் தகவல் மற்றும் கடன் தர நிர்ணய நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்கள், பா.ஜ.க.,வின் மாட்டு அரசியலை அம்பலப்படுத்தியுள்ளது. நிறுவனத்தின், அறிக்கைப்படி அடுத்த ஐந்து ஆண்டுகளில் 40 ஆயிரம் கோடியை எட்டும் என தெரியவந்துள்ளது. 
கடந்த 2007-08ம் ஆண்டில், இந்தியாவிலிருந்து, 3,533 கோடி ரூபாய் மதிப்புக்கு மாட்டிறைச்சி ஏற்றுமதி செய்யப்பட்டது. 
அதே, 2015-16 ஆண்டில், 26,682 கோடி ரூபாயாக மாட்டிறைச்சி ஏற்றுமதி அதிகரித்துள்ளது. இந்தியாவின் மொத்த ஏற்றுமதி மதிப்பில், 30% மாட்டிறைச்சி மூலமாக செய்யப்படுகிறது. 
இதில், அதிகபட்சமாக, 28% அளவிலான மாட்டிறைச்சி உத்திரபிரதேச மாநிலத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகிறது. 
இந்தியாவின், மாட்டிறைச்சிகளுக்கு, சர்வதேச சந்தையில் அதிக மதிப்பு உள்ளது. 
இதில், குறிப்பிடும் வகையில், சர்வதேச அளவில் மாட்டிறைச்சி ஏற்றுமதியில் முன்னணியில் இருந்த, பிரேசில் உள்ளிட்ட நாடுகளை இந்தியா பின்னுக்கு தள்ளியுள்ளது. 
இதில் குறிப்பிடத்தக்க செய்தி ,இந்த மாட்டிறைசி ஏற்றுமதி நிறுவனங்கள் 70% பாஜக உ ட்பட்ட இந்துத்துவா வினர்தாம்.
இவர்கள்தான் இந்தியாவில் மற்றவர்களை மாட்டிறைசியை உன்னைக் கூடாது என்பவர்கள்.
=======================================================================================
400 ஆண்டுகள் வாழ்க்கை !

மனிதர்களின் நுாறு ஆண்டு வாழ்வதே பெரிய விஷயம். ஆனால் கிரீன்லாந்து சுறா 400 ஆண்டுகள் உயிர் வாழ்கின்றன. இவை தான் முதுகெலும்பு வகை உயிரினங்களிலேயே நீண்டநாள் வாழக்கூடியது என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.
சுறா என்றால்பயப்படாதவர்களே இருக்க முடியாது. 

ஏனெனில் இது சாதாரணமாக மனிதர்களை தாக்கி இரையாக்கி விடும். 
இந்த சுறா மீன் தொடர்பாக டென்மார்க்கில் உள்ள கோபன்ஹேகன் பல்கலை., சார்பில் சர்வதேச அறிவியலாளர்கள் ஆய்வு நடத்தினர். இதில், 16.73 அடி நீளம், 16.47 அடி நீளம் கொண்ட 2 சுறாக்களின் வயது 335 மற்றும் 392 என கண்டறியப்பட்டது.

 தற்போது அட்லாண்டிக் கடலில் காணப்படும் சுறாக்கள் 1624ம் ஆண்டை சேர்ந்தவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
உலகளவில் பல்வேறு வகை சுறாக்கள் வாழ்கின்றன. ஆனால் இதில் கிரீன்லாந்து சுறா தான் குறைந்தது 400 ஆண்டுகள் உயிர்வாழ்கிறது. பெண் சுறாக்களுக்கு 156 வயதில் தான் அதற்கான இனப்பெருக்க தகுதி வருகிறது.

கிரீன்லாந்து சுறாக்கள் வட அட்லாண்டிக் கடல் பகுதியில் (கிரீன்லாந்து, கனடா, ஐஸ்லாந்து) அதிகளவில் வாழ்கின்றன. 
இவை 16 அடி நீளம் முதல் அதிகபட்சமாக 22 அடி நீளம் வரை வளரும். 1,100 கிலோ வரை இதன் எடை இருக்கும். 
இவை ஆண்டுக்கு ஒரு செ.மீ., உயரம் மட்டும் வளரும் என்பது ஆச்சரியமான விஷயம். 
கிரீன்லாந்து சுறா தான் உலகின் மெதுவாக வளரக் கூடியது. இவை மணிக்கு 1.17 கி.மீ., துாரம் மட்டுமே நீந்தும். மீன் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களை உணவாக உட்கொள்கிறது.

சுறா மீன்களுக்கு அதன் ஆயுட்காலம் முழுவதும் பற்கள் முளைத்துக்கொண்டே இருக்கும். இதனால் ஒரு சுறா மீனுக்கு அதன் ஆயுட்காலத்தில் 20 ஆயிரம் பற்கள் வரை முளைத்து விடும். 
இரையைக் கைப்பற்றும் சுறாமீன்கள் முதலில் கீழ்த்தாடைப் பற்களைக் கொண்டே இரையைக் கடிக்க ஆரம்பிக்கும். பின் மேல் தாடைக்கு அந்த இரையைத் துாக்கியடிக்கும். 
இப்படியே மேலும் கீழும் துாக்கி வீசித்தான் தனது இரையைச் சாப்பிடும். எத்தனை பெரிய இரையாக இருந்தாலும் 10 நிமிடங்களுக்குள் அதனை மென்று தின்று விழுங்கி விடும். அத்தனை கூர்மையானவை இவற்றின் பற்கள்.

கீரின்லாந்து சுறா எப்போதும் குளிர்ந்த கடல்நீரில் வாழும் தன்மையுடையது.
- 1 டிகிரி செல்சியஸ் முதல் 1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை தான் இவைக்கு
ஏற்றது. 
கோடைகாலத்தில் இதற்காக அதிகபட்சமாக 6500 அடி ஆழம் வரை சென்று குளிர்ந்த
நீரில் வாழ்கிறது.

இதற்கு முன் கடல்வாழ் உயிரினங்களில் அளவில் மிக பெரியதாக இருக்கும் திமிங்கலம் வகைகளில், 'பாவ்ஹெட் திமிங்கலம்' (211 ஆண்டுகள்) என்பவை அதிகபட்ச வாழ்நாள் கொண்ட முதுகெலும்பு உயிரினமாக இருந்தது.
=====================================================================================
இன்று,
ஆகஸ்டு-13.


  •  உடல் உறுப்பு தான தினம்.

  • ஹரி பிரியர்லி, துருப்பிடிக்காத எஃகுவை கண்டுபிடித்தார் (1913)

  • பிடல் காஸ்ட்ரோ பிறந்த தினம்91926)

  • மத்திய ஆப்ரிக்க குடியரசு விடுதலை தினம்(1960)

  • இடது கை பழக்கமுள்ளோர்  தினம்

             திமுக துணைப் பொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான 
                                      எஸ்.பி. சற்குணபாண்டியன் 
                 உடல் நலக்குறைவால் சென்னையில் இன்று காலமானார்.
பிடல் காஸ்ட்ரோ.
 கியூபாவில், பிரான் அருகில் உள்ள கரும்புத் தோட்டத்தில் பிறந்தார் பிடல் அய்ஜாந்தி ரோ காஸ்ட்ரோ. 
கியூபாவை ஆட்சி செய்து கொண்டிருந்த, அமெரிக்காவின் கைப்பாவையான, புல்ஜென்சியோ பாடிஸ்டாவின் ஆட்சியை அகற்ற, கம்யூனிச புரட்சியில் ஈடுபட்டு, கைது செய்யப்பட்டார் .
காஸ்ட்ரோ.விடுதலைக்கு பின், மெக்சிகோ சென்ற காஸ்ட்ரோவுக்கு, சே குவேராவின் நட்பு கிடைத்தது. இருவரும் கியூபா வந்து, விவசாயிகளையும், இளைஞர்களையும் புரட்சியில் ஈடு
படுத்தினர். 

காஸ்ட்ரோவை, 638 முறை கொல்ல முயன்று தோற்றது அமெரிக்கா.
பல போராட்டங்களுக்கு பின், 1959 முதல், 1976 வரை கியூபாவின் பிரதமராகவும், 1976 முதல், 2008 வரை ஜனாதிபதியாகவும் பொறுப்பு வகித்தார். 

கியூபாவில், அனைவருக்கும் இலவசக் கல்வியை அறிமுகப்படுத்தினார்; படிப்பறிவு பெற்றவர்களை, 96 சதவீதமாக உயர்த்தினார். 
பிடல் காஸ்ட்ரோ இடதுகை பழக்கமுள்ளவர்.
அவ ரை பெருமைப்படுத்துவதற்காத்தான் இன்று இடதுகை யாளர்கள் தினம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
=================
மூளையின் இடது, வலது பாகங்கள் தான் நம் உடலின் அத்தனை செய்கைகளுக்கும் காரணம். இடது பக்க மூளை உடலின் வலது பாகத்தையும், வலது பக்க மூளை உடலின் இடது பாகத்தையும் கட்டுப்படுத்தும்.

இதன்படி பார்த்தால் நம்மில் பெரும்பாலனவர்களுக்கு இடது பக்க மூளை அதிக செயல்பாட்டில் இருப்பதால் தான் வலது கை பழக்கம் ஏற்படுகிறது. ஆனால் மிகச் சிலருக்கு இடது பக்க மூளையைக் காட்டிலும் வலது பக்க மூளையின் செயல்பாடு சற்று அதிகமாக இருப்பதன் விளைவு தான் இடது கை பழக்கம். அதன் காரணமாக இடது கை பழக்கம் ஏற்படுகிறது.

இடதுகைப் பழக்கம் கொண்டவர்கள், வலது கைப் பழக்கம் கொண்டவர்களை விட அறிவில் சிறந்தவர்களாக இருப்பார்கள் என்று நம்பிக்கை நிலவுகிறது. ஆனால், அத்தகைய நம்பிக்கை உண்மையானதல்ல. ஆனால், இடது கைப் பழக்கம் கொண்டவர்களை அப்படியே இருக்கவிட வேண்டும். அவர்களின் இயல்பான இடதுகைப் பழக்கத்தை மாற்ற முயற்சிக்கக்கூடாது. நமது நாட்டில் மூட நம்பிக்கை, அல்லது ஒழுக்கக் குறைவு என காரணங்கள் கற்பிக்கப்பட்டு, இந்த இடதுகைப் பழக்கம் மாற்றப்படுகிறது. இது தவறானதாகும்.உடலியக்க முறைக்கு முரணானதாகும்.

===========================
=====================================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?