ஏழே நாட்களில் ஏழு கிலோ குறைய

 இளநீரின் நன்மைகளைப் பற்றி அனைவருக்கும் தெரியும்.

அதே அளவுக்கு முற்றிய தேங்காயை உடைக்கும் போது கிடைக்கும் தேங்காய் நீரிலும் நம் உடலுக்கு ஊட்டம்  தரும் சக்தி,நோய் நீக்கும் காரணிகள்  இருக்கிறது என்பது உங்களுக்கு தெரியுமா?

இதுவரை நீங்கள் இளநீர்,தேங்காய், தேங்காய் எண்ணெயின் மருத்துவ குணங்களைப் பற்றி பல செய்திகளை அறிந்திருப்பீர்கள்.

இங்கு  நாம் பார்க்கப் போவது தேங்காய் நீரை பற்றி .அதாவது இளநீர் பற்றி அல்ல,.
தேங்காய் உடைத்து கிடைக்கும் தேங்காய் நீரின் நன்மைகளைப் பற்றி . 

அதிலும் இதுவரை நீங்கள் கேட்டிராத தேங்காய் நீரின்  நன்மைகளைத் தான் இங்கு கொடுத்துள்ளோம். 

முன்பல்லாம் பலசரக்கு கடைகளில் தேங்காய் சில்லுகளை வாங்க செல்லும்போது தேங்காயை உ டைக்கும் போது   அதில் உள்ள நீரை கடைக்காரரிடம் வெற்று தேங்காய் சிரட்டையை வாங்கி பிடித்து குடித்த அனுபவம் பலருக்கு இருக்கலாம்.

அன்று சிறுவயதில் அப்படி வேடிக்கையாக குடித்த அந்த தேங்காய் நீரில் இவ்வளவு மருத்துவ நன்மைகள் உண்டு என்பது அப்போது நமக்கு தெரியாமல் போய் விட்டது.

தற்போது இந்த வயதில் போய் தேங்காய் தண்ணீர் கேட்க கூச்சமாக உள்ளது.அப்படி கேட்டாலும் கடைக்காரர் பார்க்கபோகும் பார்வையை எண்ணி பயமாயிருக்கிறது.

ஆனால்  ஏழு நாட்கள் தொடர்ந்து தேங்காய் நீரை  குடித்தால் டான்சில் மற்றும் சிறுநீரகக்கற்கள் கரைவதில் இருந்து  உடலில் பல மாற்றங்கள் நிகழுகின்றன.

அதை பற்றி உணராமல் தேங்காயை உடைத்து தண்ணீரை சாக்கடையுடன் கலக்க விடுகிறோம் நாம்.கோவில்களிலும் தேங்காயை உடைத்து அதன் நீரை வீணாக்கி விடுகிறோம்.

இதுவரை நீங்கள் இளநீர்,தேங்காய், தேங்காய் எண்ணெயின் மருத்துவ குணங்களைப் பற்றி பல செய்திகளை அறிந்திருப்பீர்கள்.

ஏழே நாட்களில் உங்கள் எடை ஏழு கிலோ குறைய வேண்டுமா?
தேங்காய்   நீரை குடிப்பதால் உங்கள் தேவையற்ற கொழுப்பை அது குறைப்பதால் உங்கள் எடையை  குறைக்கலாம்.

தேங்காய்   நீரை குடிப்பதன் மூலம் நோயெதிர்பபு மண்டலம் வலிமைப் பெறுவதோடு, சிறுநீர் பாதை தொற்றுகள், ஈறு நோய்களை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் மற்றும் காய்ச்சல், சளி, இருமலை ஏற்படுத்தும் வைரஸ்களையும் தேங்காய் தண்ணீர் அழித்து வெளியேற்றிவிடும்.
தைராய்டு ஹார்மோன்கள் தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள், தேங்காய் தண்ணீர் குடித்து வந்தால், அவை உடலின் ஆற்றலை அதிகரிப்பதோடு, தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரித்து, தைராய்டு சுரப்பி சீராக செயல்பட வழிவகுக்கும்.
சிறுநீரக பிரச்சனைகள் இருந்தால், தேங்காய்  நீரைக் குடித்து வருவதன் மூலம், சிறுநீரக நோய்களைக் கட்டுப்படுத்தலாம்.

மேலும் தேங்காய் நீரை  உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றுவதோடு, சிறுநீரக கற்கள் இருந்தால், அவற்றைக் கரைத்துவிடவும் செய்யும்.
செரிமான பிரச்சனை உள்ளவர்கள், தேங்காய்    நீரைதொடர்ந்து ஏழு நாட்கள் குடித்து வந்தால், செரிமான பிரச்சனை நீங்குவதை நன்கு உணரலாம்.
 ஏனெனில் தேங்காய்  நீரில் நார்ச்சத்து வளமாக நிறைந்துள்ளது.
இவற்றை தெடர்ந்து குடித்து வந்தால், வாய்வு தொல்லையில் இருந்தும் விடுபடலாம்.
தேங்காய்  நீரை, எவ்வளவு குடித்தாலும், உடலில் கொழுப்புக்கள் சேராது.

மேலும் இதனை குடித்தால், பசி கட்டுப்படும்.,
இதன் மூலம் உடல் எடை அதிகரிப்பதைத் தடுக்கலாம்.
உயர் இரத்த அழுத்தம் உயர் இரத்த அழுத்தம் இருந்தால், தினமும் காலையில் ஒரு கப் தேங்காய்  நீர்  குடித்தால், அவை உடலின் “எலெக்ரோலைட்டு”க்களை சீராக்கி, உயர் இரத்த அழுத்தத்தையும் குறைக்கும்.
இரவில் அதிகமாக மது அருந்திவிட்டு, மறுநாள் காலையில் எழும் போது கடுமையான தலைவலியை உணரும் போது, தேங்காய்   நீரைகுடித்தால், தலைவலி நீங்குவதோடு, ஆல்கஹால் மூலம் உடல் வறட்சி அடைவது தடுக்கப்பட்டு, “ஹேங்ஓவர்” பிரச்சனை நீங்கும்.
தினமும் ஒரு கப் தேங்காய்    நீரை குடித்து வந்தால், உடலில் வறட்சி ஏற்படுவது தடுக்கப்பட்டு, நாள் முழுவதும் பொலிவான தோற்றத்துடனும், போதிய ஆற்றலுடனும் செயல்பட முடியும்.
கர்ப்பிணிகளுக்கும் நல்லது.
கர்ப்பிணிகள் தேங்காய்   நீரை குடித்து வந்தால், கர்ப்ப காலத்தில் ஏற்படும் பல்வேறு ஆரோக்கிய பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்..
இனி கடைகளில் தேங்காயை உடைத்து கொட்டப்படும் நீரை சிரட்டையில் கேட்டு வாங்கி சாப்பிடுவீர்கள்தானே,
====================================================================================
இன்று,
ஆகஸ்டு-21.

  • ஜார்விஸ் தீவு கண்டுபிடிக்கப்பட்டது(1821)


  • டாஸ்மானியா தலைநகர் ஹோபார்ட் நகரம் 
  • அமைக்கப்பட்டது(1842)


  • ஸ்டாலின்கிராட் போர் துவங்கியது(1942)


  • ஜேம்ஸ் குக், கிழக்கு ஆஸ்திரேலியாவை கைப்பற்றி, 
  • அதற்கு நியூசவுத் வேல்ஸ் எனப் பெயரிட்டார் (1770)

====================================================================================


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?