அடுத்த நூறு கோடி பேர்

 சில நாடுகளில் தான் நூறு கோடிக்கு மேல் மக்கள் வாழ்கிறார்கள். 
உலகில் உள்ள மக்களை இணைப்பதுதான் நோக்கமென்றால், அங்கு சென்று தான் நம் பணியைத் தொடங்க வேண்டும்” என்ற இலக்குடன் செயல்படும் கூகுள், இந்தியாவை இலக்காகக் கொண்டு பல திட்டங்களைத் தந்து வருகிறது. 
இதற்கென தன் நிறுவனச் செயல்பாடுகளின் தன்மையையே மாற்றிக் கொண்டுள்ளது. 
இணையம் பயன்படுத்தும் இந்தியர்களின் எண்ணிக்கை அமெரிக்க நாட்டைக் காட்டிலும் அதிகமாக 35 கோடி என்ற இலக்கினை எட்டி பல மாதங்கள் கடந்துவிட்டன. இன்று நாள் தோறும் 15 ஆயிரம் இந்தியர்கள் புதியதாக இணையத்தில் இணைகிறார்கள். “
இணையத்தில் இணைக்கப்பட வேண்டிய அடுத்த நூறு கோடி பேர்” என்ற கூகுள் நிறுவனத்தின் இலக்கிற்கு இந்தியா சிறப்பாகத் தன் பங்கினை அளிக்கும் என கூகுள் உணர்ந்துள்ளது. 
மூன்று ஆண்டுகளுக்கு முன் இந்திய இணையத்தில் இந்த நிலை இல்லை. ஸ்மார்ட் போன்கள் மக்களின் வாங்கும் சக்திக்கு உள்ளாக அதிக எண்ணிக்கையில் வரத் தொடங்கியவுடன் தான், இந்த திடீர் உயர்வு தொடங்கியது. உலகில் இணையப் பயனாளர்களை அதிகம் கொண்டுள்ள சீனா, கூகுள் நிறுவனத்தின் செயல்பாடுகளுக்குத் தடை விதித்தவுடன், கூகுள் தன் முழுக் கவனத்தையும் இந்தியா பக்கம் திருப்பி செயல்படத் தொடங்கியுள்ளது. கூகுள் நிறுவனத்தின் இந்தியப் பிரிவின் தலைவர் ராஜன் ஆனந்தன் அனைத்து வழிகளிலும் இணையத் தொடர்பினை இந்தியாவில் வழங்குவதில் பல திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தி வருகிறார்.
இணைய தொடர்பினைப் பொறுத்தவரை, இந்தியா தனக்கே உரித்தான பல சிக்கல்களை எதிர்கொண்டுள்ளது. மிகக் குறைந்த வேகத்தில் இணைய இணைப்பு, பல மொழிகளைப் பயன்படுத்தும் மக்கள், மிகவும் மலிவான மொபைல் போன்களையே விரும்பும் பயனாளர்கள் என்ற பல கூறுகளை கூகுள் சந்தித்ததால், அதற்கேற்ப தன் இணையத் திட்டங்களை வகுத்துச் செயல்படுகிறது. இணையத்தை இந்தியர்களுக்குக் கொண்டு செல்வதில் என்ன தடைகள் உள்ளன என்று ஆய்வு செய்து அறிந்து, அவற்றை நீக்குவதில் கூகுள் வெற்றி பெற்று வருகிறது. அவற்றில் சிலவற்றை இங்கே பட்டியலிடலாம்.
1. 2018 ஆம் ஆண்டுக்குள், 400 இந்திய ரயில் நிலையங்களில் இலவச இணைய வை பி இணைப்பு. நாள் ஒன்றுக்கு இந்த ரயில் நிலையங்களில் வந்து செல்வோர் 30 கோடி. இதுவரை 58 நிலையங்களில் இந்த பணி நிறைவு பெற்று, நாள் தோறும் 35 லட்சம் மக்கள் இணைய இணைப்பினை இலவசமாகப் பெற்று பயன்படுத்தி வருகின்றனர்.
2. கூகுள் தரும் யு ட்யூப், தேடல் சாதனம் மற்றும் மேப் என அனைத்தையும் இணைய இணைப்பு இல்லாத நேரத்திலும் பெறக் கூடிய வசதி. குறித்து வைக்கப்பட்டுள்ள தேடலில் கண்ட பக்கங்களைப் படிக்கும் வசதி.
3. மொபைல் போன்களைப் பெண்கள் பயன்படுத்தக் கூடாது என்று சமூகத் தடைவிதிக்கும் கிராமங்கள் கொண்ட இந்தியாவில், 3 லட்சம் கிராமங்களை கூகுள் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு இணையம் பயன்படுத்துவது குறித்த பயிற்சியை அளித்து வருகிறது. ஒவ்வொரு கிராமத்திலும் பத்தில் ஒரு பெண் தான் இணையத்தைப் பயன்படுத்தி வருகிறார். இந்தியாவில் இணையம் பயன்படுத்துவோரில் 35% பயனாளர்களே பெண்கள் ஆவார்கள். “இன்டர்நெட் சாதி” (“Internet Saathi” இங்கு 'சாதி' என்ற சொல் நண்பர் என்னும் பொருளில் பயன்படுத்தப்படுகிறது) என்னும் திட்டம் ஒன்றை வடிவமைத்து இந்த பயிற்சி அளிக்கப்படுகிறது. இதுவரை 10 லட்சம் பெண்கள் பயிற்சி பெற்று, இணையத்தைத் தங்கள் வேளாண் பணிகளுக்காகவும், குடும்ப நலம் குறித்த தகவல்களுக்காகவும், தங்கள் குழந்தைகளின் கல்வி குறித்து அறியவும் பயன்படுத்தி வருகின்றனர்.
4. கூகுள் அசிஸ்டன்ட் என்னும் செயலி தற்போது ஆங்கிலத்துடன், இந்தி மொழியையும் புரிந்து செயல்படுகிறது. இது மற்ற மொழிகளுக்கும் விரிவாக்கப்படும். கூகுள் தரும் கீ போர்ட் தற்போது 11 இந்திய மொழிகளைக் கையாள்கிறது. 
5. மிகக் குறைவான வேகத்தில் இணைய இணைப்பு கிடைக்கிறதா? Search Lite என்னும் கூகுள் தந்த புதிய செயலி மூலம் இணையப் பக்கங்கள் வேகமாக போன்களை வந்தடைகின்றன. 
6. பல வணிக நிறுவனங்கள் இணையம் வழி வர்த்தகத்தை நடத்துவது இல்லை. 2020 ஆம் ஆண்டுக்குள், கூகுள் 2 கோடி சிறிய வணிக நிறுவனங்களுக்கு இணையத்தைப் பயன்படுத்த இலவசமாகப் பயிற்சி அளித்து வருகிறது. இவர்கள் இத்தகைய வணிகம் மேற்கொள்வோரில் 40% ஆவார்கள். இவர்களுக்கான இணையப் பக்கத்தை இலவசமாக இயக்க இடம் தருகிறது. 
கூகுள் இந்த முயற்சிகள் அனைத்தையும் மேற்கொள்வது தன் விளம்பர வருமானத்தைப் பெருக்கிக் கொள்வதற்காகவே என்று பலர் குற்றம் சாட்டுகின்றனர். கூகுள் நிறுவனத்தின் முதன்மை வர்த்தகம், 'விளம்பரம் வழி வருமானம்' என்றாலும், அந்த வகையிலும் அது நமக்கு உதவியாகவே உள்ளது. நம் விருப்பங்களைத் தெரிந்து நமக்கான விளம்பரங்களைக் காட்டி, நம் தேடல் நேரத்தைக் குறைக்கிறது. மேலே தரப்பட்ட அனைத்து பணிகளையும் மேற்கொள்ள கோடிக்கணக்கில் நிதி தேவைப்படும். தன் வருமானத்திலிருந்துதான் கூகுள் இதனைச் செலவழிக்கிறது. இது நம் நலனைப் பாதுகாக்கிறது. “கூகுள் நாம் தரும் தகவல்களை எடுத்துக் கொள்கிறது. அஞ்சல்களைப் பார்க்கிறது” என்று கவலைப்படுபவர்கள், தங்கள் கூகுள் அக்கவுண்ட்டிற்குப் பாதுகாப்பு வளையங்களை ஏற்படுத்தித் தகவல்கள் திருடு போகாமல் பாதுகாக்கலாம்.

                                                                                                                                         நன்றி:தினமலர்.
 =============================================================================================
ன்று,
நவம்பர்-28.
  • பனாமா, ஸ்பெயினிடம் இருந்து பிரிந்து கொலம்பியாவுடன் இணைந்தது(1821)
  • நியூசிலாந்தில் பெண்கள் முதல்முறையாக வாக்களித்தனர்(1893)
  • அல்பேனியா விடுதலை தினம்(1912)
  • நாசா, செவ்வாய்க் கோளை நோக்கி மரைனர் 4 விண்கலத்தை ஏவியது(1964)
===================================================================================










இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?