அரசியல் விலங்குகள்.?


இன்று இந்தியாவில் நாம் வாங்கும் பால் அனைத்தும் ஜெர்சி, எப்.எஸ்((F.S) மற்றும் ஹெச்.எப்(H.F) வகை மாடுகள் மூலம் பெறப்படுவதே. 
இவற்றை பசுக்கள் என்று கூட சொல்லமுடியாது இவை ஐரோப்பாவில் இருந்த ஆரோக்(AUROCH)​ என்ற உடல் வலிமைகொண்ட வனவிலங்கிடம் இருந்து ‘க்ராஸ் ப்ரீட்’ (கலப்பினம்) செய்யப்பட்டவை. ஆரோக்கள்அவைகளின் இறைச்சிக்காக அதிகம் வேட்டையாடப்பட்டன. ஆனால் அது கடினமான வேலையாக இருந்ததினால் நாட்டு மாடுகளுடன் கலவி செய்யவிட்டு உருவாக்கப்பட்டது தான் இந்த கலப்பின மாடுகள்.
(இன்று பன்றியின் மரபணு வரை சேர்க்கப்படுகிறது அதிக பால் கிடைக்கவேண்டும் என்று! அது தனிக்கதை). இன்றும் ஐரோப்பியர்கள் பலர் அதன் பாலை தவிர்க்கிறார்கள். அதில் உள்ள கேசொமார்பின்க்கு பயந்து.(கோசொமார்பின் என்பது, நரம்பு மண்டலத்தைப் பாதித்து, மூளையைத் தாக்கக் கூடிய பொருள் ஆகும்).இந்திய நாட்டில் விவசாயத்திற்கும், மருத்துவத்திற்கும் நாட்டு மாடுகள் தான் முதுகெலும்பு.
அதன் மூலம் இந்திய மக்களின் ஆரோக்கியத்திற்கும் பொருளாதாரத்திற்கும் அடித்தளமாக இருந்தது நம் மரபு பசுவினங்கள். 
நாட்டு மாடுகள் இல்லையேல் ‘இயற்கை வேளாண்மை, ஜீரோ பட்ஜெட் பார்மிங், நம்மாழ்வார், பஞ்சகவ்யம், சித்த/ஆயுர்வேத மருத்துவம்’ போன்ற வார்த்தைகளுக்கு வேலையே இல்லை.விவசாயமும், மருத்துவமும் நாட்டுமாட்டை சுற்றி இருந்ததால் அதை அழிக்காமல் ரசாயன, பூச்சிக்கொல்லி மற்றும் பார்மா (ஆங்கில மருந்து) வியாபாரிகளுக்கு வேலை இருக்காது; எனவே, நாட்டு மாடுகளின் கொலைக்களம் ராபர்ட் கிளைவால் தொடங்கப்பட்டது.
இருந்தும் மாடுகளை வைத்து வாழ்ந்து பழகிய இந்தியர்களிடம் இருந்து மாட்டை முற்றிலும் ஒழிக்க முடியவில்லை. அதனால் வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் சதிக்கு துணையாக இருந்துமக்களிடம் நோயை விதைக்கிற உழவுக்கு உதவாத கலப்பின மாடுகளைத் திணித்தார்கள். பால் அதிகம் கிடைத்ததால், பஞ்சத்தில் அடிபட்ட நம் உழவர்கள் கலப்பின மாடுகளை வைத்துக்கொண்டு, நாட்டு மாடுகளை ஒதுக்கத்துவங்கினர்.
நாளடைவில் நாட்டு மாடுகள் முக்கியத்துவம் இழந்து அழிவின் பாதையில்போய் விட்டன. இதனால் இலவச இயற்கைஉரங்களுக்கு மாற்றாக ரசாயன உரங்களையும் மருந்துகளையும் வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. கலப்பினப் பசுவின் பாலால்அதிகரித்த சர்க்கரை நோய் முதலான நோய்களாலும் சத்து குறைவாலும் ஆங்கில மருந்தும் ஊட்டச் சத்து பானங்கள் மற்றும் மருந்துகள் விற்பனை களைகட்டியது. 
கலப்பினப் பசுக்களுக்குதீவனம் மற்றும் நோய் எதிர்ப்பு குறைவால் அவற்றிற்கான மருந்துகள் என வெளிநாட்டினரின் வியாபாரம் விரிந்தது. தீவனத்துக்காக இந்திய தானியங்கள் பெருமளவில் செலவிடப்பட்டதால் உணவுப் பொருட்கள் விலையும் எகிறியது. 
வெளிநாட்டு நிறுவனங்கள் நம் நாட்டில்தயாராகும் வேப்பெண்ணை, வேப்பம்புண்ணாக்கு, வெர்மிகம்போஸ்ட், தொழு உரம்,கோகோ பீட் முதலான இயற்கை உரங்களை வாங்கிக்கொண்டு நமக்கு யூரியா போன்ற ரசாயன விஷங்களை விற்கிறார்கள்.
இனிவெளிநாட்டு நிறுவனங்கள் விற்கப் போகும்கழிசடைகளால் வரப்போகும் மரபணு கோளாறுகளுக்கும், புற்று போன்ற கொடியநோய்களுக்குமான மருந்து நாட்டுமாடுகளிடம் இருந்தே கிடைக்கின்றன. அவை பாரதத்தின் சொத்து. ஜெர்சி இன மாடுகளில் வியர்வை நாளங்களும் திமில்களும் இல்லாததால், அவற்றின் வெப்பம் பால், சிறுநீர் மூலமாகத்தான் வெளியேறுகிறது.மேலும் இம்மாடுகளின் கன்றுகள் 6 முதல் 8 மாதத்திற்குள் பருவமடைகின்றன. 
நமது நாட்டு மாடுகளில் வியர்வை நாளமும், திமிலும் இருப்பது மட்டுமல்ல; அவற்றின் சிறுநீர், சாணத்திலிருந்து இயற்கை உரம் போன்றவற்றைத் தயாரிக்கலாம். குளிர் நாட்டு பசுக்களுக்கும், காளைகளுக்கும் பாலுணர்வு மந்தமாகவே இருக்கும். 
அவற்றால் நம் நாட்டு மாடுகளைப் போல எளிதில் சினை பிடிக்க முடியாது. முதலில்கலப்பு செய்யப்பட்ட போது, 50 சதவீதம் நாட்டுமாடாக இருந்ததால்… சினை பிடிப்பதில் பிரச்சனை இல்லாமல் இருந்தது. இரண்டாவது முறை, மூன்றாவது முறைக்குச் செல்ல செல்ல… சினை பிடிப்பது குறைந்து விட்டது. இரண்டு லிட்டர்கள் பாலைக் கொடுத்த மாட்டில் இருபது லிட்டர்கள் பால் கறக்க, செயற்கை முறையில் விந்தணுக்களைச் செலுத்தி கருத்தரிக்கச் செய்தனர். 
மேலும், மாடுகளுக்கு தேவைக்கு அதிகமான தீவனங்கள், ஊசிகள் என்று பால் சுரப்பை அதிகப்படுத்தும் போது, மாட்டின் மரபணுவில் மாற்றம் ஏற்படுகிறது. 5 முதல் 8 நிமிடங்களில் 2 லிட்டர் பாலைக்கறக்க வேண்டிய நேரத்தில், 20 லிட்டர் பால் கறவை செய்கின்றனர்.
பால் சுரப்புக்கான ‘லேக்டேட்டிங் ஹார்மோன்’ அதிகமாகி பாலில்கலந்து வெளியேறுகிறது. அந்த பாலை உட்கொண்டு வரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை புதிதாக பிரச்சனைகள் உருவாகிக் கொண்டே இருக்கின்றன.
‘குழந்தைகளின் இரைப்பை நீர் கார நிலையில் இருக்கும். ஜீரணிக்கக் கூடிய ‘ரெனின்’ சுரப்பி இருக்கிறது. வளர்ந்த மனிதர்களில் இரைப்பை அமில நிலையில் இருக்கும் ’ரெனின்’சுரப்பு இருக்காது. எனவே பால் இயற்கைக்கு மாறாக வேறு வழியில்தான் செறிக்கப்படுகிறது. பால், குழந்தைகளுக்கும், கர்ப்பிணிப் பெண்களுக்கும் கால்சியம், புரதச் சத்து, விட்டமின் ‘ஏ’வையும் கொடுக்கிறது. ஆனால் பாலில் இருக்கும் கேசின் புரதம் நீரிழிவு நோயை தூண்டக் கூடியது. இந்த கேசினில் ஏ1,ஏ2என்று இரண்டு வகை இருக்கிறது.
பாஸ் இன்டிகஸ் இன மாடுகளில்( திமில் உள்ளது, நாட்டு மாடுகள்) ஏ2 அதிகமாகவும், பாஸ் டாரஸ்(திமில் அற்றது, ஹெச்.எப், ஜெர்சி போன்ற அயல்நாட்டு இனம்) மாடுகளில் ஏ1 கேசின்மட்டும் இருக்கின்றன. ஏ1 கேசின் இருக்கும் பாலைக் குடித்தால்’ அது குடலில் செறிக்கப்படும் போது க்ஷஊஆ7 (நெவய-உயளடி-அடிசயீiநே-7) ஆக மாற்றமடைந்து நீரிழிவு, நரம்பு தளர்ச்சி, மூளை வளர்ச்சியைப் பாதித்தல்(ஆடிசம்) போன்ற வியாதிகளை உண்டாக்குவதாகக் கண்டுபிடித்துள்ளார்கள். ‘‘ஏ2 கேசின் உள்ள பாலைக்குடித்து அது செறிக்கப்படும் போது, உடலுக்கு தீமை செய்யாமல் உடலைக் காப்பாற்றுகிறது’’ என்கிறார் பேராசிரியர் பாப் எலியாட்.
ஏ1, ஏ2 பாலைப் பற்றி…
1990-ம் ஆண்டு வாக்கில் ஆக்லாந்து பல்கலைக் கழகத்தின் குழந்தைகளுக்கான மருத்துவப் பிரிவைச் (childeren’s medicine at aucklanad university) சேர்ந்த பேராசிரியர் ‘பாப்எலியாட், ‘டைப் 1 நீரிழிவு நோய் தாக்கிய குழந்தைகளுக்கு கண்டிப்பாக இன்சுலின் போட்டே ஆக வேண்டும்.’ என்றார். அந்நோய்ஏன் ஏற்படுகிறது என்று நியூசிலாந்தில் ‘சமோன்’ மலைவாழ் இன மக்களிடையேயும், அவர்களின் சொந்த ஊரில் இருப்பவர்களிடமும் ஆராய்ச்சி செய்த போது, நியூசிலாந்தில் இருக்கும் குழந்தைகள் பாலை அதிகமாகக் குடிப்பதாகவும், அந்த பாலில் ஏ1 அதிகமாக இருப்பதாகவும், அதே சொந்த ஊரில் இருக்கும் குழந்தைகளுக்கு இந்த நோய் குறைவாக இருந்ததும் கண்டறியப்பட்டது. அவர்கள் ஏ2 பாலைக் குடிப்பதாகவும் கண்டுபிடித்தார். பால் ஒவ்வாமை இருக்கும் குழந்தைகள், நீரிழிவு நோய் தாக்கிய குழந்தைகள் கேசின் ஏ2 இருக்கும் பாலை சாப்பிட்டால் இந்தப் பிரச்சனை வருவதில்லை என்று கண்டுபிடித்துள்ளார்.
தற்பொழுது நியூசிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஏ2 பாலுக்கு தனியாக கார்ப்பரேஷன் ஆரம்பித்து பாலை உற்பத்தி செய்து கொடுக்கிறார்கள். கென்யா மாட்டின் பாலில் 100 சதவீதம் ஏ2 இருக்கிறது. மேலும் அமெரிக்கா, நியூசிலாந்து நாடுகளில் இருக்கும்மாடுகளில் 50:50 ஏ1,ஏ2 வாகவும் இருக்கிறது. அமெரிக்காவில் 50 சதவீதமாக இருக்கும் ஏ1பாலைக் கொடுக்கும் மாடுகளை ஏ2 பாலை கொடுக்கும் மாடுகளாக மாற்றுவதற்கு ஆராய்ச்சிகள் செய்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் இங்கே இன்னும் நாமும், அரசும் கலப்பின மாடுகளை உருவாக்குவதிலே குறியாக இருக்கிறோம். கலப்பின மாடுகளைத்தான் விவசாயிகள் தலையில் கட்டுவதற்கு அரசு துடிக்கிறது.ஏகாதிபத்திய சூழ்ச்சியால் நாட்டுக்குள் ஊடுருவிய கலப்பின மாடுகள் அனைத்தும் பாலுக்காக மட்டுமே வளர்க்கப்பட்டாலும், நிறைய கறப்பது என்ற பெயரால் நாட்டு மாடுகளை ஒழித்துவிட்டன.
இன்று இந்தியாவில் விற்கப்படும் மருந்து விற்பனையில் (மொத்த சில்லறை விற்பனை ரூ.6600 கோடி) முதலிடம் வகிப்பது சக்கரை வியாதி தடுப்பு மருந்துக்களே...வருடத்திற்கு ரூ.4500 கோடி (மொத்த மருந்துவிற்பனையில் 68சதவீதம்) விற்பனை ஆகிறது. அதில் நான்கில் ஒரு பங்கு ஒருஅமெரிக்க நிறுவனம் தயாரிக்கின்றது.கடந்த வருடத்தில் மற்ற மருந்துகளின்விலை 9 சதவீதம் குறைந்து விற்பனை 7 சதவீதம் உயர்ந்துள்ளது. ஆனால் சக்கரைவியாதி மருந்துகளின் விலை 6.4சதவீதம் ஏறியும் விற்பனை 26 சதவீதம் எகிறி உள்ளது(அதிலும் அந்த நிறுவனம் 34 சதவீதம் விற்பனையை பெருக்கியுள்ளது)...இதில் எவ்வளவு யார் யாருக்கு போய் சேரும் என்பதை சொல்லவும் வேண்டுமா?





PCA வின் section 22 என்ன சொல்லுதுனா "No person shall exhibit or train performing animals unless he is registered in accordance with provision of this chapter". 

அதாவது "காட்சிபடுத்தப்பட்ட விலங்குகளை பழக்கவோ காட்சி படுத்தவோ கூடாது. மீறி காட்சி படுத்த வேண்டுமானால் அவர்கள் முறையாக பதிவு செய்திருக்க வேண்டும் (வண்டலூர் பூங்கா போன்று) 

மேலும் எவை எல்லாம் காட்சி படுத்தப்பட்ட விலங்குகள் என்றால் மத்திய அரசு Notification மூலம் Gazette ல் சேர்பது எல்லாம் காட்சி பபடுத்தப்பட்ட விலங்குகள். 

இந்த Section 22 ல் இருக்குற காளை மாட்டை Section 27 ல் அதாவது Exemptions ல் சேர்க்க வேண்டும் என்று விளக்கம் குடுக்குறாங்க. 

சரி என் சந்தேகம் என்னவென்றால், 

1. திமுக கூட்டணியில் பங்கு வகித்த காங்கிரஸ் அரசு, 2011ல் காளை மாட்டை காட்சி படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலில் சேர்த்தது தான் பிரச்சனை என்றால், 2004, 2007, 2008 ஆம் வருடங்களில் ஜல்லிக்கட்டு எந்த காரணத்திற்க்காக தடை செய்யப்பட்டது / தடை செய்ய கோரப்பட்டது? எப்படி 2012, 2013, 2014 ஆம் ஆண்டுகளில் தடையின்றி நடந்தது? 

2. 2014 ம் வருடம் ஜல்லிக்கட்டு நிரந்தரமாக தடை செய்யப்பட்ட போது PFA, AWBI, PETA போன்ற அமைப்புகளால் வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் யாவை? 

உண்மையில் பிரச்சனை 2011 ஆம் ஆண்டு காளை மாடு காட்சி படுத்தப்பட்ட பட்டியலில் சேர்த்தது அல்ல. அப்படி அது மட்டும் தான் பிரச்சனை என்றால் 2004 ஆம் ஆண்டு முதலில் எந்த காரணத்தினால் தடை கோரப்பட்டது? 2007/2008 ல் எதற்க்காக ஜல்லிக்கட்டு நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்டது? 2009 ல் தமிழக திமுக அரசு ஜல்லிக்கட்டுக்காக தனி சட்டம் இயற்ற வைத்தது எது? 

2014 ல் PFA, AWBI, PETA போன்ற அமைப்புகள் தடை கோரி முன் வைத்த காரணங்கள் " தமிழக அரசு ஜல்லிக்கட்டு சட்டம் 2009 ல் கொடுக்கப்பட்ட விதிமுறைகள் ஒழுங்காக பின்பற்றப்படவில்லை மாடுகள் துன்புறத்தப்பட்டது" என்கிற வாதத்தோடு அதற்க்கான வீடியோ ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் சமர்பித்து ஜல்லிக்கட்டுக்கு தடை வாங்கியது. தடை உத்தரவு பிறப்பிக்கும் போது நீதிமன்றம் தமிழக அரசின் ஜல்லிக்கட்டு பாதுகாப்பு சட்டம் 2009 ஐ நீக்கியது. 

ஆக கடைசியாக தடை உத்தரவு வரும் போதும் இந்த காளை மாடு காட்சிப்படுத்ப்பட்ட விலங்குகள் பட்டியலில் சேர்த்தது காரணம் இல்லை. ஆனால் தேவை இல்லாமல் காட்சி படுத்தப்பட்ட விலங்குகள் பட்டியலில் காளை மாடு சேர்த்தது தான் பிரச்சனைக்கு காரணம் என ஏன் திமுக மீது பழியை போட வேண்டும். 

=======================================================================================
ன்று,
ஜனவரி-22.
  • கொலம்பியா கிராமபோன், வாஷிங்டனில் அமைக்கப்பட்டது(1889)

  • உலகின் முதலாவது பயணிகள் ஜெட் விமானம் சேவைக்கு விடப்பட்டது(1952)

  • சினாய் தீபகற்பத்தில் இருந்து இஸ்ரேல் வெளியேறியது(1957)

  • ஆப்பிள் மக்கிண்டொஷ் கணினி அறிமுகப்படுத்தப்பட்டது(1984)

  • ஆர்க்குட் துவங்கப்பட்டது(2004)
========================================================================================


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?