அவசரவழக்கு

நம்பிக்கை ஓட்டெடுப்பு குறித்து, சபாநாயகரும், சட்டசபை செயலரும் அறிக்கை தாக்கல் செய்த பின், கவர்னர் இறுதி முடிவு எடுப்பார். 

இன்றைய முதல்வர் இடைப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசின் மீது பிப்.,18 தேதியன்று சட்டசபையில், நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்தது. 

இதில், சட்டசபையில் பெரும் அமளி ஏற்பட்டது. தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் வெளியேற்றப்பட்ட பின், நம்பிக்கை ஓட்டெடுப்பு நடந்தது. கிட்டத்தட்ட பாதி உறுப்பினர்களை வெளியேற்றியபின்னர் அவைத்தலைவர் தனபால் இந்த பகிரங்க வாக்கையெடுப்பை நடத்தியுள்ளார்.

அதில்எடப்பாடி  பழனிசாமி தலைமையிலான சசிகலா அதிமுக   வெற்றி பெற்றதாக தனபால் அறிவித்தார்.
ச.ம.உறுப்பினர்கள் 129 பேர்கள் சடடவிரோதமாக கூவத்தூரில் அடைத்து வைக்கப்பட்டு அதில் இருந்து பலர் தப்பி வந்ததாகவும்,சசிகலாவுக்கு ஆதரவாக வாக்களித்தால் 15 கோடிகள் ரொக்கமாகவும்,3 கிலோ தங்கமும்,தொகுதியில் நடக்கும் ஒப்பந்தப்பணிகளில் 10 % தரப்படுவதாகவும்  கையூட்டு பேசப் பட்டதாகவும் ,அதற்கும் இணங்காதவர்கள் மிரட்டப்படாததாகவும், தகவல்கள் வெளிவந்துள்ள நிலையில் , 

இந்நிலையில், நம்பிக்கை ஓட்டெடுப்பு தீர்மானம் செல்லாது என அறிவிக்க கோரி, தி.மு.க.,வும், முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் அணியினரும், நேற்று கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து, புகார் அளித்தனர். இவற்றின் மீது, கவர்னர் விசாரணையை துவக்கி உள்ளார். 

ஓட்டெடுப்பு நடந்தது குறித்த முழு விபரங்களை, சபாநாயகரும், சட்டசபை செயலரும், முறைப்படி கவர்னரிடம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இந்த அறிக்கை தாக்கலானதும், அதன் விபரங்களை, கவர்னர் ஆய்வு செய்வார். அதன் பின், ஓட்டெடுப்பு தீர்மானம் செல்லுமா, செல்லாதா என்பது குறித்து, இறுதி முடிவு எடுப்பார் என, கவர்னர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சட்டசபையில் நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தி முதல்வராக இடைப்பாடி வெற்றி பெற்றதாக அறிவித்ததை செல்லாது என அறிவிக்கக் கோரி ஐகோர்ட்டில் திமுக முறையீடு செய்துள்ளது. 


அவசரவழக்கு :

சட்டசபையில் இருந்து திமுக எம்.எல்.ஏ.,க்கள் வெளியேற்றப்பட்டது, சட்டசபைக்குள் போலீசார் முறைகேடாக நுழைந்தது ஆகியவை தொடர்பாகவும் முறையீடு செய்யப்பட்டுள்ளது. 
இதனை மனுவாக தாக்கல் செய்தால், அவசர வழக்காக எடுத்து நாளை விசாரிக்கிறோம் என திமுக.,வின் முறையீட்டை கேட்ட ஐகோர்ட் நீதிபதிகள், தெரிவித்துள்ளனர்.
=====================================================================================

"அமெரிக்காவில், சிறை தண்டனை விதிக்கப்பட்டு, ஜெயிலுக்கு அனுப்பப்படும், 'காட் பாதர்'கள் அங்கிருந்தே, தங்களது வேலைகளை செய்வது வழக்கம். 
அதேபோன்ற ஒரு விஷயம், தற்போது இந்தியாவிலும் எங்கேயோ நடந்து வருவது போல தோன்றுகிறது." என்று மார்க்கண்டேய கட்ஜு டுவிட்டியுள்ளார்.அந்த எங்கேயோ தமிழ்நாடுதான் என்பது உங்களுக்கு தெரிந்ததுதானே.
======================================================================================
கமல்ஹாசன் தொலைக்காட்சிக்கு அளித்துள்ள பேட்டியில்:-
"ஊழல் வழக்கில் குற்றவாளி என சுப்ரிம் கோர்ட்டால் அறிவிக்கப்பட்ட சசிகலாவின் கிரிமினல் கும்பலால் முதல்வராக நியமிக்கப்பட்டவர் தான் பழனிச்சாமி.
இதுதான்உண்மை. 
இதை நீதிமன்றமே உறுதி செய்துள்ளது. 
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் குற்றவாளி தான். 
சட்டப்பேரவையை சுத்தம் செய்ய வேண்டும். மாறாக, பரிசோதிக்கக் கூடாது. எனவே, மறுதேர்தல் நடத்த வேண்டும். இப்போது மக்கள் தங்கள் கருத்தை தெளிவாக வெளிப்படுத்த முடியவில்லை. காரணம், தற்சமயம் கவுன்சிலர்கள் மூலமும், எம்எல்ஏக்கள் மூலமும் பேச வேண்டியிருக்கிறது. மறுதேர்தல் வைத்தால், தங்கள் மனதில் உள்ளதை வெளிப்படையாக மக்கள் உணர்த்துவார்கள்.  மறுதேர்தல் என்பது மக்களுக்குச் செலவு வைக்கக்கூடிய ஒன்றுதான். ஆனால், என்ன செய்வது? 
தரையில் பாலைக் கொட்டிவிட்டோம். அதைச் சுத்தம் செய்ய வேண்டும். 
எனவே, மறுதேர்தல் வைத்து, மீண்டும் பால் கறக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 
எனக்கு அரசியலுக்கு வர பயமாக இருக்கிறது. காரணம், நாம் வேறுவிதமான சிந்தனை கொண்ட மக்கள். இந்தியாவுக்கு இப்போதுள்ள அரசியல் தேவையில்லை.

அடுத்த தேர்தல் வரும் போது மக்கள் தங்கள் மனதில் உள்ளதை வெளிப்படுத்துவார்கள்.
நான் மிகவும் கோவக்காரன் அரசியலுக்கு வர லாயக்கில்லாதவன். 

நாட்டுக்கு கோவக்கார அரசியல்வாதிகள் தேவை இல்லை. 
நிதானமான அரசியல்வாதிகள் தான் தேவை. 
தமிழ் நாட்டு மக்கள் அனைவருமே  கோவமாகத்தான்  உள்ளோம்,’ என்றுள்ளார்.
======================================================================================
ன்று,
பிப்ரவரி-29.

 உலக சர்வதேச சமூகநீதி தினம்
  • தமிழறிஞர் கா.நமச்சிவாயம் பிறந்த தினம்(1876)
  • ஹவாய் தீவில் முதல் சட்டமன்ற கூட்டம் நடைபெற்றது(1901)
  • அருணாசலப் பிரதேசம், அசாமில் இருந்து பிரிந்து தனி மாநிலமானது(1987)
=======================================================================================

'வெளிநாட்டில் எல்லாம், சாலை ஓரத்தில் யாரும் சிறுநீர் கழிக்க மாட்டர்கள் ' என்பது பொய். 
நம்மூரைப் போலவை, பல வெளிநாடுகளிலும், இந்த பிரச்னை இருக்கிறது. 

ஆனால், அந்த பிரச்னையை சமாளிக்க, புதுப்புது தீர்வுகளை கண்டுபிடிப்பதிலும், அவர்கள் சளைப்பதில்லை என்பது தான் வித்தியாசம். 

பிரேசிலில் உள்ள, ரியோ டிஜெனிரோவில், பொது கழிப்பறைகளில், சிறுநீரிலிருந்து உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் மூலம், இனிய பாடல்களை பாட விடுகிறது, அந்நாட்டு அரசு. 

மது விருந்துகளுக்கு போய் வருவோரை, இத்தகைய கழிப்பறைகள் ஈர்க்கும் என்பது தான் காரணம். 

அதே போல, நெதர்லாந்து அரசு, பொது கழிப்பறைகளில் சிறுநீரை சேகரித்து, உரமாக தயாரித்து வினியோகிக்கிறது. 

அண்மையில், பிரான்சிலுள்ள, பாரீஸ் மாநகராட்சி, 'யூரிட்ரோட்டாய்ர்' என்ற புதுவகை கழிப்பறைகளை சோதித்து வருகிறது. 

அங்கேயும், ஆண்கள் தான், பொது இடங்களில்  சிறுநீர் கழிக்கின்றனர். 

எனவே, அவர்களுக்கு ஏற்றபடி உருவாக்கப்பட்டுள்ள இக்கழிப்பறைகளில், பூந்தொட்டிகள் இருக்கின்றன. அதன் கீழ் உள்ள தொட்டியில், வைக்கோல் மற்றும் மரச் சிராய்ப்புகளை இட்டு நிரப்பிய கழிவுத் தொட்டி இருக்கிறது. 

இத்தொட்டி, சிறுநீரிலுள்ள நாற்றத்தை பெருமளவு குறைத்து விடுகிறது. 

இக்கழிவுகளை எடுத்துச் சென்று, இயற்கை உரங்களை தயாரித்து, பொது பூங்காக்கள், தோட்டங்களுக்கு உரமாக இட, பாரீஸ் நகராட்சி திட்டமிட்டு உள்ளது.
=========================================================================================

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?