விவசாயிகள் போராட்டமும் ஏச்சு .ராஜாவும்

தமிழ்­நாடு வஞ்­சிக்­கப்­பட்ட பிர­தே­ச­மாக மாறி வரு­கி­றது. 
60, 70களில் ஓங்கி ஒலித்த ‘வடக்கு வாழ்­கி­றது, தெற்கு தேய்­கி­றது’ என்­கிற கோஷம் மீண்­டும் ஒலிக்­கத் தொடங்­கி­விட்­டது. எல்­லா­வி­ஷ­யங்­க­ளி­லும் தமி­ழ­கம் முற்­றாக புறக்­க­ணிக்­கப்­ப­டும் நிலை உரு­வாகி வரு­கி­றது.
தண்­ணீர் பிரச்னை என்­பது இங்கு பூதா­க­ர­மாக வடி­வெ­டித்து நிற்­கி­றது. எதிர்­கா­லத்தை நினைத்­தால் என்ன ஆகுமோ என்ற பயம் ஏற்­ப­டு­கி­றது.
திண்­டுக்­கல் நகர பேருந்து நிலை­யம் அருகே உள்ள ஒரு ஓட்­ட­லில் கை கழு­வும் இடத்­திற்கு மேல் ஒரு நோட்­டீஸ் ஒட்­டப்­பட்­டி­ருந்­தது. 

அதில் ‘‘நம் தாத்­தாக்­கள் காலத்­தில் நதி­கள், ஆறு­க­ளில் தண்­ணீ­ரைப் பார்த்­தோம்’ நம் அப்­பாக்­கள் காலத்­தில் ஏரி, குளம், கிண­று­க­ளில் தண்­ணீ­ரைப் பார்த்­தோம். 

நம் காலத்­தில் பாட்­டில்­க­ளில் தண்­ணீ­ரைப் பார்க்­கி­றோம்.  

இனி எதிர்­கா­லத்­தில்.....’’ என எழு­தப்­பட்­டி­ருந்­தது. இந்த அபா­யம்­தான் இப்­போதே நம்மை துரத்­தத் தொடங்­கி­விட்­டது.

தமிழ்­நாட்டை இயற்­கை­யும் வஞ்­சித்து விட்­டது. இங்கு எல்லா வள­மும் இருக்­கி­றது. 

இந்த வளங்­கள் எல்­லாம் நின்று, நிலைத்து, நீடித்து இருக்க தேவை­யான அடிப்­படை வள­மான நீர்­வ­ளம்­தான் இல்லை.
தமிழ்­நாட்­டில் ‘தாமி­ர­ப­ரணி’ நதி­யைத்­த­விர வேறு எந்த நதி­யும் உற்­பத்­தி­யா­க­வில்லை. 

தாமி­ர­ப­ர­ணி­யும் நெல்­லைச் சீமை­யில் தென்­பொ­திகை மலை­யில் உரு­வாகி, அந்த மாவட்­டத்­துக்­குள்­ளேயே பய­ணித்து கட­லில் கலந்து விடு­கி­றது.

மற்­ற­படி நமக்கு ஜீவ­ந­தி­க­ளாக விளங்கி வரும் காவிரி, வைகை, பாலாறு, சிறு­வாணி உள்­ளிட்ட நதி­க­ளும் மற்ற ஆறு­க­ளும் கர்­நா­டகா, கேரளா, ஆந்­திரா ஆகிய அண்டை மாநி­லங்­க­ளில் உற்­பத்­தி­யா­கித்­தான் தமி­ழ­கம் வரு­கின்­றன.

இரு­ப­தாம் நூற்­றாண்­டில் 70கள் வரை­யி­லும், நல்ல மழை பொழிவு இருக்­கும். எல்லா நதி­க­ளி­லும், ஆறு­க­ளி­லும் வரு­டம் 365 நாட்­க­ளும் தண்­ணீர் உருண்­டோ­டும். 

தஞ்சை டெல்டா உள்­ளிட்ட பல மாவட்­டங்­க­ளில் சம்பா, குறுவை, தாளடி என முப்­போ­கம் விளை­யும்.
அது­மட்­டு­மல்ல ஏரி, குளம், குட்டை, கண்­மாய், கிண­று­கள் உள்­ளிட்ட நீர் நிலை­கள் எல்­லாம் கூட நிரம்பி வழி­யும். ஆனால், காலப்­போக்­கில் மரங்­கள் வெட்­டப்­பட்டு, பல பசு­மை­யான வனப்­ப­கு­தி­கள் அழிக்­கப்­பட்­ட­தால் பருவ மழை­கள் பொய்த்­துப் போனது. 

நீர் நிலை­கள் அனைத்­தும் வறண்டு போனது.

இத­னால் விளை நிலங்­கள் எல்­லாம் விற்­கப்­பட்டு வீடு­க­ளாக, கம்­பெ­னி­க­ளாக மாறிப்­போ­யின. இருக்­கிற விளை நிலங்­க­ளி­லும், விவ­சா­யம் செய்ய முடி­யா­மல் விவ­சா­யி­கள் அல்­லல்­பட்டு வரு­கின்­ற­னர்.

5 ஏக்­க­ருக்கு கீழ் நிலம் வைத்­துள்ள சிறு விவ­சா­யி­க­ளா­கட்­டும், 50 ஏக்­க­ருக்கு மேல் நிலம் வைத்­துள்ள பெரிய விவ­சா­யி­கள் ஆகட்­டும் எல்­லோ­ருமே பாதிப்­புக்கு ஆளாகி வரு­கி­றார்­கள்.

சரி­யான நேரத்­தில் மழை பெய்­யா­மல், பயிர் செய்ய முடி­யாத அள­விற்கு வறட்சி நிலவி பாதிப்பு ஒரு­பு­றம், காலம் தவறி மழை­பெய்து, இருக்­கிற பயிர்­களை அழித்து, அவ­லத்­துக்கு ஆளாக்­கும் நிலை மறு புறம் என விவ­சா­யி­கள் படும் வேதனை சொல்லி மாளாது.

 ‘உழு­த­வன் கணக்கு பார்த்­தால் உழக்கு கூட மிஞ்­சாது’ என கிரா­மப்­ப­கு­தி­யில் சொல்­வார்­கள். 
அத்­த­கைய பரி­தாப நிலைக்­குத்­தான் தமி­ழக விவ­சா­யி­கள் தள்­ளப்­பட்­டுள்­ள­னர்.

சமீப கால­மாக, இந்த பரி­தாப நிலை அதி­க­ரித்து விவ­சா­யி­கள் தற்­கொலை செய்து கொள்­ளும் அள­விற்கு நிலைமை முற்­றிப்­போய்­விட்­டது. தஞ்சை டெல்டா பகுதி உட்­பட மாநி­லத்­தின் பல்­வேறு பகு­தி­க­ளி­லும் இது­வரை 200க்கும் மேற்­பட்ட விவ­சா­யி­கள் விளை நிலங்­க­ளில் பயிர்­கள் கருகி உள்­ளதை பார்த்து மர­ணம் அடைந்­துள்­ள­னர்.

இவர்­க­ளில் சுமார் 82 விவ­சா­யி­க­ளின் குடும்­பங்­க­ளுக்கு தலா 3 லட்­சம் ரூபாய் நிதி உத­வியை தமி­ழக அரசு வழங்கி உள்­ளது.

விவ­சா­யி­கள் தங்­க­ளின் துய­ரம் துடைக்­கப்­பட வேண்­டும். 

விவ­சா­யி­க­ளின் நீரா­தர பிரச்­னைக்கு தீர்வு காண வேண்­டும். விவ­சா­யி­கள் பெற்ற அனைத்­துக் கடன்­க­ளை­யும் ரத்து செய்ய வேண்­டும்.

மீத்­தேன் திட்­டம், ஹைட்ரோ – கார்­பன் திட்­டம் உள்­ளிட்ட விவ­சா­யி­களை பாதிக்­கும் திட்­டங்­களை கைவிட வேண்­டும் என வலி­யு­றுத்தி மாதக் கணக்­கில் விவ­சா­யி­கள் போராடி வரு­கி­றார்­கள்.

தஞ்சை டெல்டா பகு­தி­யில் தொடங்­கிய விவ­சா­யி­கள் போராட்­டம் தமி­ழ­கத்­தில் பல பகு­தி­க­ளி­லும் சாலை மறி­யல், ரயில் மறி­யல், ஆர்ப்­பாட்­டம், உண்­ணா­வி­ர­தம் என்று விரி­வ­டைந்து வந்­தது.

மாநில அரசு, தங்­க­ளால் முடிந்த அளவு நிவா­ர­ணம், கடன் உதவி என வழங்கி விவ­சா­யி­க­ளின் போராட்­டத்தை முடி­வுக்கு கொண்­டு­வந்­தது.

காவிரி நதி நீர் பிரச்னை, கடன் தள்­ளு­படி உள்­ளிட்ட பிரச்­னை­களை தீர்க்க வேண்­டிய மத்­திய அர­சின் கவ­னத்தை ஈர்ப்­ப­தற்­காக தமி­ழக விவ­சா­யி­கள் சங்க பிர­தி­நி­தி­கள் பலர் தலை­ந­கர் டில்லி சென்­ற­னர்.
கடந்த 17 நாட்­க­ளுக்­கும் மேலாக டில்லி ஜந்­தர் மந்­தர் பகு­தி­யில் தமி­ழக விவ­சா­யி­கள் பல்­வேறு வகை­யான போராட்­டங்­களை நடத்தி வரு­கின்­ற­னர். 

விவ­சா­யி­க­ளின் நிலைமை நாளுக்கு நாள் மோசம் அடைந்து வரு­வதை வெளிப்­ப­டுத்­தும் வண்­ணம் கோவ­ணம் அணிந்­தும், மண்டை ஓடு­க­ளு­ட­னும், தூக்கு கயிறு மாட்­டி­யும், எலிக்­கறி, பாம்­புக்­கறி சாப்­பி­டும் நிலை ஏற்­ப­டும் என்­பது உள்­ளிட்ட அடை­யா­ளங்­க­ளு­ட­னும் அவர்­கள் போராடி வரு­கி­றார்­கள்.

தமி­ழக அர­சி­யல்­கட்­சித் தலை­வர்­கள், நடி­கர்­கள், டில்லி சென்று விவ­சா­யி­களை சந்­தித்து ஆத­ரவை தெரி­வித்­த­து­டன் விவ­சாய சங்க பிர­தி­நி­தி­களை அழைத்­துச் சென்று ஜனா­தி­பதி, மத்­திய அமைச்­சர்­களை சந்­திக்­க­வும் ஏற்­பாடு செய்­துள்­ள­னர்.

ஆனால், மத்­திய அரசு ஒரு உறு­தி­யான நிலைப்­பாட்டை எடுத்து, விவ­சா­யி­க­ளின் கோரிக்­கை­களை நிறை­வேற்­று­வ­த­றா­கான எந்த உறு­தி­மொ­ழி­யும் வழங்­க­வில்லை. 

இந்த பிரச்னை மட்­டு­மல்ல, எந்­த­வொரு தமி­ழக பிரச்­னை­யா­னா­லும் மத்­திய அரசு பாரா­மு­க­மாக நடந்து கொள்­வது தொடர்­கி­றது. 
டில்­லி­யில் மத்­திய ஆட்­சிப் பொறுப்­பில்பா.ஜ. கடசி  தமி­ழர்­க­ளின் பிரச்­னை­கள் என்­றாலே மாற்­றாந்­தாய் மனப்­பான்­மை­யு­டன்­தான் அணு­கு­கி­றார்­கள். 

தமிழக விவசாயிகளுக்கு மோடி அரசு உதவவில்லை என்றாலும் கூட தமிழக பாஜக வாய்ச்சொல் வீரர் ஏச்சு .ராஜா என்பவர் விவசாயிகள் போராட்டத்தை அசிங்கப்படுத்தி பேசிவருகிறார்.முதலில் அவருக்கு வாய்ப்பூட்டு போட்டால்தான் தமிழகத்தில் பாஜகவுக்கு ஒரு உறுப்பினராவது அதிகரிக்க முடியும்.

மேடை நாகரிகம்,அரசியல் நாகரிகம் ,என்று ஒன்றுமே ஏச்சு . ராஜாவுக்கு கிடையாது.அசிங்கமான தனிமனித விமர்சனம் என்போதுதான் அவரது பேச்சு.

காவிரி பிரச்னை, பாலாறு, முல்லை பெரி­யாறு பிரச்னை, ஈழத்­த­மி­ழர் பிரச்னை, தமி­ழக மீன­வர் பிரச்னை உள்­ளிட்ட ஜீவா­தார பிரச்­னை­க­ளில் கூட மத்­திய அரசு தீவி­ரம் காட்­டு­வ­தில்லை.

மத்­திய ஆட்­சிக் கட்­சி­யாக உள்ள காங்­கி­ர­சும், பா.ஜ.வும் இங்கே காலூன்றி வளர்ந்து ஆட்சி, அதி­கா­ரத்தை பிடிக்க முடி­யாத நிலை இருப்­ப­தால்­தான். தமி­ழ­கத்­தின், கோரிக்­கை­களை மத்­திய ஆட்­சி­யி­னர் செவி­ம­டுப்­ப­தில்லை என்ற குற்­றச்­சாட்டு பர­வ­லாக உள்­ளது.

அதை உண்மை என நிரூ­பிக்­கும் வகை­யில்­தான் இப்­போ­தைய பா.ஜ. அர­சின் செயல்­பா­டு­க­ளும் உள்­ளன. 17 நாட்­க­ளுக்­கும் மேல் போராடி வரும் விவ­சா­யி­களை பிர­த­மர் மோடி அழைத்­துப் பேசி, அவர்­க­ளின் கோரிக்­கை­களை பரி­சீ­லிப்­ப­தாக சொன்­னாலே போராட்­டம் முடி­வுக்கு வந்­து­வி­டும். 

ஆனால், பிர­த­மர் இந்த போராட்­டத்தை ஒரு பொருட்­டா­கவே மதிக்­க­வில்லை.

இத்­த­கைய நிலையை தொட­ரச் செய்­வ­தன் மூலம் தமி­ழர்­க­ளின் அமைதி வழி, அற­வழி போராட்­டங்­கள் வேறு வடி­வம் எடுத்து மத்­திய, மாநில அர­சு­க­ளுக்கு நெருக்­க­டியை ஏற்­ப­டுத்­தக் கூடிய அபா­யத்தை அர­சாங்­கங்­களே ஏற்­ப­டுத்தி விடக்­கூ­டாது. எதற்­கும் ஒரு எல்லை உண்டு.
=====================================================================================
 உலக ஆட்டிச தினம்

உலக அளவில் ஆட்டிசம் எனும் குறைபாடு உடையவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 
நம் நாட்டில் 500 குழந்தைகளுக்கு ஒன்று என்ற கணக்கில் ஆட்டிசம் பாதிப்பு இருக்கலாம் என்று தோராயமாக கணக்கிடப்படுகிறது.

 இக்குறைபாடு குறித்த விழிப்புணர்வு குறைவாக இருப்பதால் இன்னமும் நிறையக் குழந்தைகள் கண்டறியப்படாமல் இருக்கலாம். எனவே உண்மை நிலவரம் இதை விடவும்கூடுதலாக இருக்கக் கூடும். அமெரிக்காவில் 68 குழந்தைகளுக்கு ஒருவர் ஆட்டிசம் உடையவராகக் கண்டறியப்படுகிறார். 

வெகு வேகமாக அதிகரிக்கும் இந்த எண்ணிக்கையை எதிர்கொள்ள முதலில் இக்குறைபாடு குறித்த விழிப்புணர்வை நம் சமூகத்தில் ஏற்படுத்த வேண்டும். 

ஆட்டிசம் குறித்த சில அடிப்படைகளை தெரிந்து கொள்வது அதற்கு உதவும்.

ஆட்டிசம் என்றால் ?

இது நரம்பியல் சார்ந்த ஒரு வளர்ச்சிக் குறைபாடு. ஆட்டிச நிலையாளர்கள் மற்றவர்களோடு தொடர்பு கொள்ளும் திறன் (Communication), சமூகத்தில் கலந்து பழகும் திறன்(Socialization) போன்றவற்றில் சிக்கல் கொண்டிருப்பர். மேலும் ஒரே மாதிரியான விஷயங்களைத் திரும்பத் திரும்பச் செய்வதில் பேரார்வம் உடையவர்களாகவும் இருப்பார்கள். 

இது ஒரு குடைச் சொல் (spectrum disorder) - இதில் பரவலான வளர்ச்சிக் குறைபாடு, ஆஸ்பெர்ஜர் சிண்ட்ரோம் என பல்வேறு வகைகள் உண்டு. 
இக்குறைபாட்டின் பாதிப்பு - தீவிரத்தன்மையிலும்(severity) வேறுபாடுகள் உண்டு.

ஆட்டிசம் ஒரு ஒட்டிக் கொள்ளும் நோயா?

ஆட்டிசம் ஒரு நோயல்ல. 
அது ஒருகுறைபாடு மட்டுமே. மேலும் அது ஒருவரிடமிருந்து மற்றவருக்கு பரவ வாய்ப்பே இல்லை. 
ஆட்டிச நிலைக்குழந்தைகளின் முன்னேற்றத்திற்கு இதரக் குழந்தைகளின் பங்களிப்பு முக்கியமானது. அவர்களுடன் கலந்து பழகுவதாலும், சேர்ந்து விளையாடுவது, படிப்பதுபோன்ற செயல்களாலும் (peer groupinteractionn)ஆட்டிசநிலைக்குழந்தைகளின் செயல்பாடுகளில் நல்ல முன்னேற்றத்தைக் காணமுடியும். 

இதற்கு இதரக்குழந்தைகளின் பெற்றோர்ஆட்டிசம் பற்றிய புரிதலை ஏற்படுத்திக் கொள்ளுதல் அவசியமாகும்.

ஆட்டிசத்திற்கு மருத்துவ ரீதியான பரிசோதனைகள் எதுவும் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை. எனவே குழந்தையின் நடவடிக்கைகளை கூர்ந்துகவனிக்கும் பெற்றோர், உறவினர், ஆசிரி
யர்கள் ஆகியோரே இக்குறைபாட்டை கண்டறிய வேண்டும். 
கீழ்க்காணும் அறிகுறிகளில் ஒரு சில உங்கள் குழந்தையிடம் தென்படுவதாகத் தோன்றினால் உங்கள் மருத்துவரைக் கலந்தாலோசிப்பது நல்லது. 
அல்லது சென்னை முட்டுக்காட்டில் அமைந்துள்ளநிப்மெட்(NIPMED) நிறுவனத்திற்குச் சென்றால் குறைந்த செலவில்/இலவசமாக முழுமையான பரிசோதனைகளைச் செய்து கொள்ளவும் முடியும்,

 பாதித்த குழந்தைகளை அடையாளம் காண்பது?

1. சக வயதுக் குழந்தைகளோடு கலந்துவிளையாடாமல் ஒதுங்கி இருப்பது.

2. கண்களைப் பார்த்து பேசுவதை தவிர்ப்பது.

3. பாவனை விளையாட்டுக்களில் ஆர்வமில்லாமல் இருப்பது. அல்லது ஒரே செயலை திரும்பத் திரும்ப செய்வது.

4.தினசரி செயல் பாடுகளில் மாற்றம் இல்லாமல் இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது, அப்படியேதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால் அதை ஏற்றுக் கொள்ளாமல் அழுது அடம் பிடிப்பது.

5. தனக்கு தேவையான பொருட்களை விரல் நீட்டி சுட்டாமல், பெரியவர்களின் கையைப் பிடித்து அழைத்துச் சென்று காட்டுவது.

6.சுழலும் பொருட்கள் மீதான ஆர்வம்.

7. பொருட்களை உரிய முறையில்கையாளாமல் வித்தியாசமாக பயன் படுத்துவது. 
ஒரு கார் பொம்மையைத் தந்தால் அதை ஓடவிட்டுப் பார்க்காமல், கவிழ்த்துப்போட்டு அதன் சக்கரத்தை சுழல விடுவது.

8. பெயர் சொல்லி அழைத்தால் திரும்பிப் பார்க்காமல் இருத்தல், சில வேளைகளில் காது கேட்கவில்லையோ என்று தோன்றும்.

9. பயம், ஆபத்து போன்றவற்றை உணராது இருப்பது.

10. சில செயல்களை சரியாகச் செய்ய முடிந்தாலும், சமூகப் புரிதல்கள் இல்லாமல் இருப்பது.

 சிகிச்சை முறைகள் ?
இக்குறைபாட்டின் தன்மை, தீவிரம்முதலியவை ஒவ்வொரு குழந்தைக்கும் வேறுபடும் என்பதால் நிபுணர்களின் பரிசோதனைக்குப் பின்னரே குழந்தைகளுக்கான சிகிச்சைகள் (தெரப்பி) தீர்மானிக்கப்பட வேண்டும். 
பொதுவாக வாழ்வியல் செயல்களைப் பயிற்றுவிக்கவும், சென்சரி சிக்கல்களைத் தீர்க்கவும் ஆக்குபேஷனல் தெரபி(Occupational Therapy) முக்கியமாக தேவைப்படும். மேலும் குழந்தைகளின் தேவையைப் பொறுத்து பேச்சுப் பயிற்சி (Speech Therapy), சிறப்புக் கல்வி முதலிய பயிற்சிகளும் அளிக்கப்பட வேண்டும்.

ஆட்டிச பாதிப்புள்ளவர்களுக்கு உணர்ச்சிகள் இருக்காதா?

இது ஒரு தவறான கருத்தாகும். ஆட்டிசக் குழந்தைகள் மற்றவர்களிடம் அன்பு செலுத்துவதில் ஒரு குறையும் இருக்காது. ஆனால் பேச்சு, தகவல் தொடர்பு போன்ற திறன் குறைவாக இருப்பதால் அன்பை வெளிக்காட்டும் விதம் நமக்கு புரியும்படியாக இல்லாமல் போகலாம்.

ஆட்டிசத்தை முற்றிலுமாக குணப்படுத்த வழியுள்ளதா?

ஆட்டிசம் என்பது நோய் அல்ல. அது ஒரு குறைபாடு. 
எப்படி மனித உடலுக்கு சர்க்கரை குறைபாடு வந்தாலோ, இரத்தக்கொதிப்பு குறைபாடு வந்தாலோ 100 சதவீதம் குணப்படுத்த முடியாதோ, அதுபோலத்தான் ஆட்டிசமும். 
ஆனா லும் ஆட்டிசத்தின் பாதிப்புக்குள்ளான வர்களை தொடர் பயிற்சியின் மூலம் சராசரிக்கு நிகரான வாழ்வை வாழச் செய்ய முடியும். 
இன்று வரை உலகளவில் இக்குறைபாட்டை முழுமையாகக் குணப்படுத்தும் மருந்துகள் எதுவும் ஆய்வு பூர்வமாக கண்டறியப்படவில்லை. 
போலியான விளம்பரங்களை நம்பி நேரம், பணம், குழந்தைகளின் உடல்நலம் போன்றவற்றை இழப்பது தேவையற்றது.
                                                                                                                                                                           'தீக்கதிரி"ல்       - எஸ். பாலபாரதி

====================================================================================
ன்று,
ஏப்ரல்-02.
  • உலக ஆட்டிசம் தினம்
  • உலக சிறுவர் நூல் தினம்
  • இந்திய விடுதலை போராட்ட வீரர் வ.வே.சு.ஐயர் பிறந்த தினம்(1881)
  • அமெரிக்காவின் முதல் திரையரங்கு லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் திறக்கப்பட்டது(1902)
  • போக்லாந்து தீவுகளை அர்ஜெண்டீனா முற்றுகையிட்டது(1982)
=====================================================================================


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?