இடுகைகள்

ஆகஸ்ட், 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நீல திமிங்கல சவால்

படம்
நீல திமிங்கல சவால்  (Blue whale Challenge) பல உயிர்களை கொல்லும் விபரீத விளையாட்டு. இது இணையதளத்தில் விளையாடப்படும் ஒரு அபாய விளையாட்டு.  இது மனரீதியாக பாதிக்கப்படும் ஒரு விளையாட்டு.  இது வரை இந்த விளையாட்டால் நூற்றுக்கணக்கான இளைஞர்கள், சிறுவர்கள் தற்கொலை செய்துள்ளனர்.  அயல்நாட்டில் தொடங்கி தற்பொது இந்தியாவிற்குள் ஊடுருவி பல மாணவர்களின் உயிரை பறித்து வருகிறது இந்த உயிர்கொல்லி  விளையாட்டு. இது போனில் டவுன்லோட் செய்யும் மற்ற விளையாட்டுகள் போல அல்ல.  இது சமூக வலைத்தளங்கள்  மூலம் ஒரு ரகசிய குழுவில் சேர்ந்து விளையாடப்படும் விளையாட்டாகும் முதலில் ரஷ்ய சமூக வலைதளத்தில் துவங்கப்பட்டு இதுவரை ரஷ்யாவில் 133 பேரின் உயிரை எடுத்துள்ளது. இது 50 நாட்களுக்கு விளையாடப்படும்  விளையாட்டு. இதில் முகம் தெரியாத யாரோ ஒரு நபரால் கொடுக்கப்படும் அபாய கட்டளைகளை நிறைவேற்ற வேண்டும்.  இறுதியாக 50-வது நாளில் விளையாடுபவர் தற்கொலை செய்துக்கொள்ள வேண்டும்.  இந்த 50 நாட்களில் தங்களை தாமே காயப்படுத்தும் வகையில் விளையாட்டு அமையும்.  அதாவது இரவில் தனியாக பேய் படம் பார்ப்பது, உடம்பில் கத்தியால் நீல திமிங்கலத

கூடுதல் விலை மின்சாரம்

படம்
மாநில மின் விநியோக நிறுவனங்கள் காற்றாலை மின்சாரத்தை வாங்குவதற்கான புதிய ஒப்பந்தங்களை மேற்கொள்ளாமலிருப்பதால், இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களிலிருந்து பெறப்படும் மின்சாரம் இரண்டாண்டுகளாக அடைந்த வளர்ச்சி தடைப்பட்டிருப்பதாக, மத்திய அரசு மாநிலங்களுக்கு அனுப்பியுள்ள குறிப்பில் குற்றம் சாட்டியுள்ளது. இந்திய சூரிய சக்திக் கழகம் நடத்திய ஏலத்தில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.3.46 என்ற விலையில் தர நிறுவனங்கள் ஒப்புக்கொண்டன.  அதனால், ஒரு யூனிட் ரூ.4.60 என்ற பழைய விலையில் மின்சாரக் கொள்முதல் ஒப்பந்தங்களைச் செய்ய மாநில மின் விநியோக நிறுவனங்கள் தயக்கம் காட்டி வருகின்றன.  இதனால், தனியார் காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் பாதிக்கப்படுவதால், கூடுதல் விலைக்கு வாங்க மாநில மின் விநியோக நிறுவனங்களுக்கு மத்திய அரசு நெருக்குதல் கொடுக்கிறது. சூரியசக்தி அல்லாத புதுப்பிக்கத்தக்க சக்திகளிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டங்களை உற்பத்தியாளர்கள் நிறுத்திவிடுவார்கள்என்றும், இதனால் இந்த மின் உற்பத்தியின் வளர்ச்சி பாதிக்கப்படும் என்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகத்தி

ஒளி வட்டங்களுக்கு பின்னால்

படம்
கிரிமினல் சாமியார்கள் . எந்தவொரு மத நம்பிக்கையின் பெயராலும் வன்முறை நிகழ்த்தப்படுவதை சகித்துக் கொள்ள முடியாது என்று பிரதமர் நரேந்திர மோடி வள்ளுவரின் வழிநின்று கடிதோச்சி மெல்ல எறிந்துள்ளார்.  காமக் கொடூர சாமியார் குர்மீத் ராம் ரஹீம் சிங்கை மனதில் வைத்துக் கொண்டு பிரதமர் இவ்வாறு மனதின் குரலில் பேசியுள்ளார் என்று ஊடகங்கள் பொழிப்புரை எழுதியுள்ளன.  தேரா சச்சா சவுதா என்ற அமைப்பின் நிறுவனத்தலைவர் குர்மீத் ராம் ரஹீம் சிங் என்ற ஆசாமி மீதான பாலியல் வழக்கில் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து அவரது ஆதரவாளர்கள் நடத்திய வன்முறையில் 38 பேர் பலியானார்கள். இரு ஐபிஎஸ் அதிகாரிகள், 60 பாதுகாப்புப் படையினர் உட்பட 360 பேர் படுகாயமடைந்தனர்.  ஹரியானா, பஞ்சாப் மாநிலங்கள் பற்றி எரிந்தன. அப்போதெல்லாம்வன்முறையாளர்களை கண்டித்து பிரதமர் ஒரு வார்த்தை கூட கூறாமல் சகித்துக் கொண்டேஇருந்துவிட்டார்.  இது கடுமையான விமர்சனத்திற்கு உள்ளான நிலையில் இப்போது பொத்தாம்பொதுவாக பேசியுள்ளார் பிரதமர்.  இவரது கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரும், குர்மீத் ராமின் சக சாமியாருமான சாக்

காரியம் கைகூடியதும் பலிக்கடா...

படம்
ஹரியானாவில் சிர்சாவை தலைமையிடமாக வைத்து, செயல்பட்டு வருகிறது, தேரா சச்சா சவுதா அமைப்பு.  இதன் தலைவனான, குர்மீத் ராம் ரஹீம் சிங், ௫௧, தங்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக, இரண்டு பெண் துறவிகள் புகார் கூறியிருந்தனர். கடந்த, 2002ல், அப்போதைய பிரதமர், வாஜ்பாய்க்கு, இந்த பெண் துறவிகள் அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில், பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்றம் வழக்கு பதிவு செய்தது. சி.பி.ஐ., விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. * 2002 ஏப்., : குர்மித் ராம் ரஹீம் சிங் மீது பாலியல் புகார் தெரிவித்து பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்துக்கு, ஆசிரம பெண் பக்தர்கள் கடிதம். * மே : கடிதம் மீது நடவடிக்கை எடுக்கும்படி, சிர்சா மாவட்ட நீதிமன்றத்துக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை. * செப்., : குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதாக மாவட்ட நீதிமன்றம் அளித்த பதிலை அடுத்து, வழக்கை சி.பி.ஐ.,க்கு உச்சநீதிமன்றம் மாற்றியது. * டிச., : குர்மித் சிங் மீது சி.பி.ஐ., வழக்கு பதிவு. * 2007 ஜூலை : அம்பாலா நீதிமன்றத்தில் குர்மித் சிங் மீது, சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை தாக்கல். அதில் பாதிக்கப்பட்ட 2 பெண் பக்தைகளி

கல்வித் துறையை சீரழிக்காதீர்.

படம்
சீ ர்திருத்தம் வேண்டி மிக இக்கட்டான காலகட்டத்தில் தமிழகக் கல்வித் துறை இருக்கும் நிலையில், அதற்குப் பொருத்தமாக அந்தப் பணியில் வந்தமர்ந்த பள்ளிக் கல்வித் துறைச் செயலாளர் உதயச்சந்திரனின் அதிகாரத்தைக் குறைக்கும் விதத்தில் தமிழக அரசு மேற்கொண்டிருக்கும் நடவடிக்கை மிக மோசமானது.  தமிழகப் பிள்ளைகளின் எதிர்காலத்துடன் விளையாடுவது, கடுமையான கண்டனத்துக்குரியது. பள்ளிக் கல்வித் துறையின் முதன்மைச் செயலாளராக பிரதீப் யாதவை நியமித்திருப்பதன் மூலம், பாடத்திட்ட மாற்றங்கள் தொடர்பான பணிகளை மட்டும்தான் உதயச்சந்திரன் இனி மேற்கொள்ள முடியும் எனும் நிலையை உருவாகியிருக்கிறது தமிழக அரசு.  இரவோடு இரவாகச் செயல்படுத்தப்பட்ட இந்த நடவடிக்கை, கல்வித் துறையில் ஆக்கபூர்வ மாற்றங்களை எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மக்கள் நலனையும் மாநில நலன்களையும் புறக்கணித்து, உட்கட்சிப் பிளவு, பதவி அதிகாரச் சண்டை, குதிரைப் பேரம் - ஊழல் குற்றச்சாட்டுகள் என்று பயணித்துக்கொண்டிருக்கும் அதிமுக அரசுக்குக் கொஞ்சமேனும் நற்பெயர் கிடைத்தது என்றால், அதற்கு கல்வித் துறையில் பள்ளிக