காரியம் கைகூடியதும் பலிக்கடா...

ஹரியானாவில் சிர்சாவை தலைமையிடமாக வைத்து, செயல்பட்டு வருகிறது, தேரா சச்சா சவுதா அமைப்பு. 
இதன் தலைவனான, குர்மீத் ராம் ரஹீம் சிங், ௫௧, தங்களை பாலியல் பலாத்காரம் செய்ததாக, இரண்டு பெண் துறவிகள் புகார் கூறியிருந்தனர். கடந்த, 2002ல், அப்போதைய பிரதமர், வாஜ்பாய்க்கு, இந்த பெண் துறவிகள் அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில், பஞ்சாப் - ஹரியானா உயர் நீதிமன்றம் வழக்கு பதிவு செய்தது. சி.பி.ஐ., விசாரணைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

* 2002 ஏப்., : குர்மித் ராம் ரஹீம் சிங் மீது பாலியல் புகார் தெரிவித்து பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்துக்கு, ஆசிரம பெண் பக்தர்கள் கடிதம்.
* மே : கடிதம் மீது நடவடிக்கை எடுக்கும்படி, சிர்சா மாவட்ட நீதிமன்றத்துக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை.
* செப்., : குற்றச்சாட்டுக்கு முகாந்திரம் இருப்பதாக மாவட்ட நீதிமன்றம் அளித்த பதிலை அடுத்து, வழக்கை சி.பி.ஐ.,க்கு உச்சநீதிமன்றம் மாற்றியது.
* டிச., : குர்மித் சிங் மீது சி.பி.ஐ., வழக்கு பதிவு.
* 2007 ஜூலை : அம்பாலா நீதிமன்றத்தில் குர்மித் சிங் மீது, சி.பி.ஐ., குற்றப்பத்திரிகை தாக்கல். அதில் பாதிக்கப்பட்ட 2 பெண் பக்தைகளின் குற்றச்சாட்டு பதிவு இடம்பெற்றிருந்தது.
* 2008 செப்.,: சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் குர்மித் சிங் மீது ஐ.பி.சி., பிரிவு 376 (பாலியல்) மற்றும் 506 (கிரிமினல்) வழக்கு பதிந்தது.
* 2009 - 2010 : சிறப்பு நீதிமன்றத்தில் பாதிக்கப்பட்ட இருவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டது.
* 2011 ஏப். : அம்பாலா நீதிமன்றத்துக்கு பதிலாக பஞ்சுக்லா நீதிமன்றத்துக்கு வழக்கு மாற்றம்.
* 2017 ஜூலை: சிறப்பு நீதிமன்றம் விசாரணையை தினமும் நடத்தியது.
* ஆக. 17: விசாரணை நிறைவடைந்தது. 'தீர்ப்பு ஆக., 25ல் வழங்கப்படும்' என நீதிபதி ஜகதீப் சிங் அறிவிப்பு.
* ஆக., 25: 'குர்மித் ராம் ரஹீம் சிங் குற்றவாளி' என நீதிபதி தீர்ப்பு. 'தண்டனை விபரம் ஆக., 28ல் வழங்கப்படும்' என அறிவிப்பு. ரோஹ்டாக் சிறையில் அடைப்பு.
* ஆக., 28: குர்மித்துக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு.
பாலியல் பலாத்கார வழக்கில், ராம் ரஹீம் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதும், ஹரியானா, பஞ்சாப், டில்லியில் அவனது ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். 

இதில், 38 பேர் உயிர் இழந்தனர்; பலர் காயம் அடைந்தனர். ரயில்கள், பஸ்கள் உட்பட பொது சொத்துகளுக்கு தீ வைக்கப்பட்டது. இதையடுத்து, தண்டனை குறித்த விசாரணையை, பஞ்ச்குலாவில் உள்ள நீதிமன்றத்தில் அறிவிக்காமல், ராம் ரஹீம் அடைக்கப்பட்டுள்ள, ரோதக் சிறை வளாகத்தில் நடத்த முடிவு செய்யப்பட்டது. சிறப்பு நீதிமன்ற நீதிபதி, ஹெலிகாப்டர் மூலம், பஞ்ச்குலாவில் இருந்து, ரோதக் சிறை வளாகத்துக்கு நேற்று வந்தார். இரு தரப்பினரின் இறுதி விவாதங்களை கேட்ட நீதிபதி, பின், தண்டனை விபரத்தை அறிவித்தார். 
இரண்டு பெண்களை பாலியல் பலாத்காரம் செய்ததால், இதை இரண்டு வழக்காக கணக்கில் எடுத்து, ராம் ரஹீமுக்கு, ஒவ்வொரு வழக்கிலும், தலா, 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து, நீதிபதி உத்தரவிட்டார். இந்த தண்டனையை, தனித் தனியாக அனுபவிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார்.மேலும், 30 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இதில், தலா, 14 லட்சம் ரூபாயை, பாதிக்கப்பட்ட பெண் துறவிகளுக்கு வழங்க வேண்டும் என்றும், நீதிபதி உத்தரவிட்டார்.
இதையடுத்து, சாமியார் ராம் ரஹீம், 20 ஆண்டு, சிறையில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தண்டனை விபரம் அறிவிக்கப்பட்டதை அடுத்து, முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, நேற்று, ஹரியானா, பஞ்சாப் மாநிலங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

உள்ளூர் போலீசாருடன், துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 
ராணுவமும் தயார் நிலையில் இருந்தது.ரோதக் நகருக்குள் நுழைவதற்கு வெளியாட்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ராம் ரஹீம் அடைக்கப்பட்டுள்ள சிறை வளாகம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பாலியல் பலாத்கார வழக்கில், தண்டனை விபரம் அறிவிக்கப்பட்டதும், குர்மீத் ராம் ரஹீம், தரையில் புரண்டு, கண்ணீர் விட்டு கதறியதாக தெரிகிறது.''நான் அப்பாவி, என்னை மன்னித்து விடுங்கள்,'' என்று, அவன் கைகூப்பி அழுததாகவும் கூறப்படுகிறது. சிறிது நேரம் தரையிலேயே அமர்ந்திருந்த அவனை, சிறை காவலர்கள் பலவந்தப்படுத்தியே, சிறைக்குள் அழைத்து சென்றனர்.
சாமியார் ராம் ரஹீம், பாலியல் பலாத்கார வழக்கில், 20 ஆண்டு சிறை தண்டனை பெற்றுள்ள நிலையில், தேரா சச்சா சவுதா அமைப்பை வழிநடத்தப் போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.
ராம் ரஹீமின் மனைவி, ஹர்ஜீத் கவுர். இவர்களது மகள்கள்சரண்பிரீத், அமன்பிரீத் ஆகியோருக்கு திருமணமாகிவிட்டது. மகன் ஜஸ்மீத். ஆனால், தேரா சச்சா அமைப்பின் அடுத்த வாரிசாகப் போவது யார் என்ற போட்டியில், இவர்கள் யாரும் இல்லை.
அமைப்பின் நிர்வாகத்தை கவனித்து வரும், பெண் ஆதரவாளரான, விபாசனா மற்றும் வளர்ப்பு மகள் ஹனிபிரீத் இடையே கடும் போட்டி உள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போது, 35 வயதாகும் விபாசனா, கல்லுாரியில் படிக்கும் காலத்தில் இருந்தே, ராம் ரஹீமின் தீவிர பக்தையாக இருந்தார்.

தற்போது, அமைப்பின் முழு நிர்வாகத்தையும் கவனித்து வருகிறார். ராம் ரஹீம் நடித்த படங்களில் உதவியதுடன், அந்த படத்திலும் நடித்தவர், அவனது வளர்ப்பு மகள் ஹனிபிரீத். ராம் ரஹீமின் அடுத்த வாரிசு என்று தன்னை அவர் முன்னிலைப்படுத்தி வருகிறார்.

சிறைத்தண்டனை பெற்றுள்ள சாமியார் குர்மீத் ராம் ரகீம் மகள் பாஜக மீது பகீர் குற்றச்சாட்டை வைத்துள்ளார்.
 சாமியாரின் மகள்ஹனிபிரீத்

" ஹரியானா சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு ஹரியானா முதல்வர் மனோஹர் லால் கட்டார் மற்றும் அனில் ஜெயின், அருண் ஆகியோர் சாமியார் குர்மீத் ராம் ரகீம் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவை சந்திக்க ஏற்பாடு செய்ததாகவும், அப்போது சாமியாரின் ஆதரவாளர்களின் வாக்குகள் மூலம் பாஜக வெற்றிக்கு உதவ வேண்டும் என்றும் அமித்ஷா மூலம் சாமியார் ராம் ரகீமிடம் கோரிக்கை வைத்தனர். 
 அவ்வாறு வெற்றிக்கு உதவி வெற்றி பெற்றால்  சாமியார் குர்மீத் ராம் ரகீம் மீதானஅனைத்து  வன்புணர்வு வழக்கு,கொலை வழக்குகள்  சரி கட்டப்பட்டு விடுதலை செய்யப்படும் என்றும் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. 
அதன்படி சுமார் 28 சட்டமன்ற தொகுதிகளின் வெற்றிக்கு சாமியார் உதவியுள்ளார். 
ஆனால் பாஜக சாமியாருடன் ஏற்படுத்தியிருந்த உடன்பாட்டை மீறி விட்டதாகவும், தன் தந்தை மீதான வழக்கில் தண்டனை பெற விட்டுவிட்டதாகவும் ,பாஜக தான் வெற்றி பேர் எவ்வளவு கீழாகவும் இறங்கும்,எதையும் செய்யும் ஆனால் மற்றவர்களை காரியம் கைகூடியதும்  பலிக்கடாவாக்கி கைவிட்டு ஏமாற்றிவிடுகிறது "
என்று பகிரங்கமாக பாஜக தலைகளை குற்றம் சாட்டியுள்ளார்.
இதை இங்குள்ள அதிமுக அணிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பாலியல் பலாத்கார வழக்கில், ஆக., 25ல் தீர்ப்பு அளிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டதும், ராம் ரஹீமுக்கு எதிராக தீர்ப்பு வந்தால், வன்முறையில் ஈடுபடுவதற்காக, இளைஞர் படையை உருவாக்கி வைத்திருந்தனர். இவர்கள் கல் வீசி தாக்குதல் நடத்தி, வன்முறையை துவக்கி வைத்தனர்.144 தடையுத்தரவு அறிவித்த அரியானா பாஜக அரசு இந்த சாமியாரின் குண்டர்படையினர் ஆயிரக்கணக்கில் ஆயுதங்களுடன்  அங்கு குவியவும் அனுமதித்துள்ளது.அதைத்தான் நீதிமன்றம் கண்டித்துள்ளது.எதிர்க்கட்சிகள் கலவரத்துக்கு காரணமான,துணைபோன முதல்வர் 
மனோகர் லால் கட்டார்  பதவி விளக்க வற்புறுத்தி வருகின்றன.
இதே போல் மற்றோரு சிங்கம்பிடித்த சாமியாரையும் பாஜக குஜராத் அரசு பாதுகாத்து வருவதை நீதிமன்றம் கண்டித்துள்ளது.
சாமியார் ஆசாராம் மற்றும் அவரது மகன் நாராயண் சாய் மீது, ஆசிரமத்தில் தங்கியிருந்த பல பெண்கள், பாலியல் பலாத்கார புகாரை கூறியுள்ளனர். ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில், அவர் மீது பல வழக்குகள் உள்ளன. 
ஆசாராம்


இது தொடர்பாக, 2013ல் கைது செய்யப்பட்ட ஆசாராம், சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.அவருக்கு ஜாமின் வழங்கவும், உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. 

இந்நிலையில், ஆசாராமுக்கு சொந்தமான, குஜராத் ஆசிரமத்தில் தங்கியிருந்த, இரு சகோதரிகள், அவருக்கு எதிராக, பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்தனர். 

இது தொடர்பான வழக்கை, முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ள, குஜராத்தின் சூரத் நகரில் உள்ள நீதிமன்றம் விசாரிக்கிறது.இந்த வழக்கில், புகார் கொடுத்துள்ள சகோதரிகள் உட்பட, அரசு தரப்பு சாட்சிகளிடம் விசாரணை நடத்த, ஏப்., 12ல், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுஇருந்தது. 

ஆனால் குஜராத் அரசு இவ்வழக்கை கண்டு கொள்ளவில்லை.நடத்தவே இல்லை. 

அப்போது, இந்த வழக்கில், சாட்சிகளிடம் இதுவரை விசாரணை நடத்தப்படாததற்கு, உச்ச  நீதிமன்றம அமர்வுகண்டனம் தெரிவித்தது. விசாரணை நடத்துவதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, குஜராத் அரசு அறிக்கை அளிக்க, அமர்வு உத்தரவிட்டது.அதன் பின்னரே தற்போது இவ்  வழக்கு, நீதிபதிகள், என்.வி.ரமணா, அமிதவ ராய் அடங்கிய, உச்ச நீதிமன்ற அமர்வு முன்,மீண்டும் விசாரணைக்கு வந்தது.
======================================================================================
ன்று,
ஆகஸ்ட்-29.
  • இந்திய தேசிய விளையாட்டு தினம்
  • பிரேசிலை தனி நாடாக போர்ச்சுக்கல் அறிவித்தது(1825)
  • மைக்கேல் பாரடே மின்காந்த தூண்டலை கண்டுபிடித்தார்(1831)
=======================================================================================
குர்மீத் ராம் ரஹீம் சிங் என்பவர் யார்....?
ராம் ரஹீம்
ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்கா நகர் மாவட்டத்தில் உள்ள கர்சார் மோடியா என்ற கிராமத்தில் ஜாட் பிரிவைச் சேர்ந்த சீக்கிய குடும்பத்தில் 1967-ம் ஆண்டு பிறந்தவர் குர்மீத் ராம் ரஹீம் சிங். 
சிறுவயதிலேயே சீக்கிய மதப்பிரசாரங்களில் ஆர்வம் இருந்திருக்கிறது. ஏழாவது வயதில் தேரா சச்சா சவுதா என்ற அமைப்பில் இணைந்தார். அடுத்த 15 ஆண்டுகளில் அதன் தலைமைப் பொறுப்புக்கு வரும் அளவுக்குத் தீவிரமாகப் பணியாற்றினார். 
இந்த அமைப்பில் மிக இளம்வயதில் தீக்சை பெற்றவர் என்ற பெருமையும் குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு உண்டு. 
திராவிட இயக்கங்கள் இன்றுவரை மக்களிடம் மறுக்க முடியாத இடத்தைப்பெற்று அடுத்தடுத்து ஆட்சி அதிகாரங்களை பங்கிட்டுக்கொள்ள ஆதாரமானது, அண்ணா சொன்ன “மக்களை சந்தி, மக்களோடு இரு, மக்களுக்காக உழை” என்ற மூன்று முழக்கங்கள்தான். 
ரஹீம் சிங்கின் வெற்றி தொடங்கியதும் அப்படி ஓர் முழக்கத்தினால்தான். தலைமைப் பொறுப்புக்கு வந்தபின் தேரா சச்சாவின் செயல்பாடுகளை முற்றிலும் மாற்றியமைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார் ரஹீம் சிங். 
'ஒரு மதப் பிரசாரத்தைத் தாண்டி, தன் எல்லையை சமூகப்பணியில் விரிவடையச் செய்தார்' என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். தேரா சச்சா அமைப்பு பல்வேறு நேரடியான மக்கள் நலப் பணிகளில் ஈடுபட்டது. 
இந்த பணிகளால் தன் பக்தர்கள் மத்தியில் புகழடைந்தார் ரஹீம் சிங். நுணுக்கமான சில வித்தியாசங்களுடன் சீக்கிய மதத்திலிருந்து பிரிந்துவந்த ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவராக தன்னை திட்டமிட்டு கட்டமைத்துக் கொண்டார். 
மதப் பிரசாரங்களின் ஊடே சாதிகளை புறந்தள்ளிய சமூக நீதியை ஒட்டிய பிரசாரம் இவருடையது. 
தன் அமைப்பின் மூலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி, கிரிக்கெட் மைதானம் என மக்களுக்கு ஏற்படுத்தித் தந்தார்.
 பாலியல் தொழிலாளிகளை மீட்பதும் தேரா சச்சாவின் சமூகப் பணிகளில் ஒன்று. ஆனால் இந்த விவகாரத்தில் மற்ற அமைப்புகளிலிலிருந்து இது மாறுபட்டது என்பதற்கு, 2010-ம் ஆண்டு தேரா சச்சா சவுதாவின் பல நுாறு தொண்டர்கள் பாலியல் தொழிலாளிகளை மீட்டு, அவர்களை திருமணம் செய்துகொண்டது ஆச்சர்ய உதாரணம். 

ரஹீம்சிங் அத்துடன் நிறுத்திக்கொள்ளவில்லை. தனது அமைப்பின் மூலம் குறைந்த விலைக்கு உணவுப் பொருட்களை மக்களுக்கு வழங்கினார். 
ஓர் அரசுக்கு இணையாக பல திட்டங்களை மக்களுக்கு அவர் செயல்படுத்தினார் என்கிறார்கள். 
மாநிலத்தில் இயற்கைப் பேரிடர் சமயங்களில் வேட்டியைத் தூக்கி கட்டியபடி, மக்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டுபவர்களாக தன் தொண்டர்களை 24 மணி நேரமும் தயார் நிலையில் வைத்திருந்தார். 
மாநில அரசு நிர்வாகம், அங்கு வருவதற்கு முன் தேரா சச்சா தொண்டர்கள் அங்கு களப் பணியாற்றிக் கொண்டிருப்பார்கள். அரசின் மெத்தனங்களால் புறக்கணிப்புகளால் அடித்தட்டு மக்கள் பாதிப்புக்குள்ளாகிற தருணங்களில் தங்களுக்கு ஆபந்பாந்தவனாக வருபவனை காலம் எப்போதும் ஏற்கவே செய்யும். 
இதுதான் குர்மீத் ராம் ரஹீம் சிங்கின் வெற்றியின் ரகசியம். அந்த வெற்றிக்கான சாட்சியைத்தான் பஞ்சாப், அரியானா என இரு மாநிலங்களின் வீதிகளிலும் உள்ள சாலைகளில் தெறித்துக் கிடக்கும் மனித ரத்தத் துளிகளில் காண்கிறோம்.  
சாமியார்கள் மக்களிடையே அதீத புகழ்பெறத் துவங்குகிறபோது, சர்ச்சைகள் எழுவதும் வாடிக்கைதான். நம்மூரில் சில 'கடவுளர்கள்' திரைப்படங்களில் நடித்ததுண்டு. தெய்வங்களை பின்னுக்குத்தள்ளி தங்களை முன்னிறுத்திக் கொள்ளும், இந்த யுக்தியை ரஹீம் சிங்கும் கையாண்டிருக்கிறார். 
கடவுளின் துாதுவன் எனப் பெயரிடப்பட்ட ஐந்து திரைப்படங்களிலும் அவர் நடித்திருக்கிறார். 
2000-வது ஆண்டுகளின் மத்தியில் கிட்டத்தட்ட கடவுளாகவே பக்தர்களால் கொண்டாடப்பட்டார் ரஹீம் சிங். அரசியல் கட்சிகளிடையேயும் பெரும் ஆதரவு இருந்தது அவருக்கு. 
மாநிலத்தில் 2012-ல் காங்கிரசும், 2014 தேர்தலில் பி.ஜே.பி-யும் இவரது ஆதரவைக் கேட்டுப்பெற்று தேர்தலில் போட்டியிட்டன. 
ராம் ரஹீம்
இந்த ஆராதனையின் உச்சக்கட்டமாக, கடந்த 2007-ல் சீக்கிய மத குருவான குரு கோவிந்த் சிங் போன்று தன்னை சித்தரித்துக் கொண்டார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. 
மற்ற சீக்கிய மதக் குருக்களிடம் மன்னிப்பு கேட்கும் அளவுக்கு நிலைமை போனது. 2015-ம் ஆண்டில் விஷ்ணுபோன்று தன்னை சித்தரித்துக் கொண்டதிலும் இந்து அமைப்புகளின் கண்டனத்திற்கு ஆளாகினார். 
கடந்த 2002-ம் ஆண்டு ரஹீம்சிங் தன் ஆசிரமத்தின் இரண்டு பெண் சிஷ்யர்களைப் பாலியல் வன்புணர்ச்சிக்கு உள்ளாகியதாக சர்ச்சை எழுந்தது. அந்த பெண்களில் ஒருவர் இளம் சிறுமி. மக்களிடையே முதன்முறையாக குர்மீத் ராம் ரஹீம் சிங்கிற்கு எதிரான அலை எழுந்தது. 
ஆனாலும் பக்தர்கள் அவரை நம்பினர். இந்தக் காலக்கட்டத்தில் ஆசிரமத்தின் ஊழியர் ரஞ்சித் என்பவர் மர்மமான முறையில் மரணமடைந்தார். ஆசிரமம் குறித்த மர்மங்களை தொடர்ந்து எழுதி வந்த ராம் சந்தர் சத்ரபதி என்ற பத்திரிகையாளரும் கொலை செய்யப்பட்டார். 
உச்சக்கட்டமாக தேரா சச்சா சவுதா ஆசிரம சீடர்கள் 400 பேருக்கு ஆண்மைநீக்க அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதுதொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.
இதனிடையே பாலியல் வழக்கினை தாமாகவே முன்னெடுத்த நீதிமன்றம், சி.பி.ஐ- யிடம் அதை ஒப்படைத்தது. இந்தத் தீர்ப்பில்தான் தண்டனையை 28-ம் தேதி அறிவிப்பதாக தெரிவித்துவிட்டு, குர்மீத் ராம் ரஹீம் சிங்கை ‘குற்றவாளி’ என அறிவித்துள்ளது சி.பி.ஐ நீதிமன்றம். இந்தத் தீர்ப்பின் எதிரொலியாக நடந்த கலவரத்தில் 30 மனித உயிர்கள் பலியாகி இருக்கின்றன. இன்னமும் பதற்றம் குறைந்தபாடில்லை. 
ராம் ரஹீம்
ரஹீம் சிங்கின் பராக்கிரத்தை அறிந்திருந்ததாலேயே 150 பட்டாலியன் ராணுவமும் வரவழைக்கப்பட்டிருந்தது என்கிறார்கள். மாநிலத்தின் முக்கியப் பகுதிகளில் தகவல் தொடர்பு சாதனங்களை முற்றாக முடக்கி வைத்திருந்தது மாநில அரசு. 
தனக்கு இருந்த மக்கள் செல்வாக்கைக் கருதி ரஹீம்சிங் எந்த பதற்றமுமின்றி 200-க்கும் மேற்பட்ட கார்களின் அணிவகுப்போடுதான் தீர்ப்பு தினமான வெள்ளிக்கிழமை பஞ்ச்குலா நீதிமன்றத்துக்கு வந்தார். 
சட்டத்திற்கும் தங்களின் தனிப்பட்ட செல்வாக்குக்கும் இடையேயான வேறுபாட்டை உணராதபடி புகழ்போதையில் விழுந்து கிடப்பவர்களின் தவறு இதுதான். சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்புக்காக பெங்களுரு சென்றபோது ஜெயலலிதா சென்ற விதமும் இப்படித்தான். 
ஒரு முதல்வராக தேசியக்கொடி பறந்த காரில் நீதிமன்றத்துக்குள் சென்றார். ஒருநாள் முன்னதாகவே பெங்களுரு சென்று, ஜெயலலிதாவின் கார் கடந்துசென்ற வீதிகளில் கையசைத்து நம்பிக்கை அளித்தனர் அவரது தொண்டர்கள். 
ஆனால், பிற்பகலுக்கு மேல் குன்ஹாவின் தீர்ப்பினால் காரிலிருந்த தேசியக்கொடியை கழற்ற வேண்டியதானது.
ரஹீம் சிங்குக்கும் அப்படித்தான் நிகழ்ந்தது. தீர்ப்பு நாளன்று லட்சக்கணக்கில் அவரது தொண்டர்கள் இரண்டு மாநிலங்களிலும் ஒரு யூனியன் பிரதேசத்திலும் இருந்து திரண்டு வந்திருந்தனர். 
இவர்களில் பெண்கள் குழந்தைகளும் அடக்கம். இவர்களில் எளிய மனிதர்கள், மட்டுமின்றி மெத்தப் படித்த, மேல்குடி மக்களும் இருந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நான்கு நாட்களுக்கு முன்னதாக ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டு விட்டன. 
ராம் ரஹீம்
பிற்பகலில் 'ரஹீம்சிங் பாலியல் வழக்கில் குற்றவாளி' என தீர்ப்பு அறிவிக்கப்பட்டபோது கோபத்தின் உச்சிக்குப்போன அவரது ஆதரவாளர்கள் ஆங்காங்கே வன்முறைகளில் ஈடுபட்டனர். 
ரயில் நிலையங்கள், பெட்ரோல் பங்க்-களும் அடித்து நொறுக்கப்பட்டன. 
வன்முறையாளர்களை கலைக்க ராணுவம் எடுத்த பதில் நடவடிக்கைகளால் ஆதரவாளர்கள் பலர் செத்து விழுந்தனர். 


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?