இந்திய தேசியக்கொடியை

*இனியாவது புரிந்துகொள்ளுங்கள் NEET (நீட்) தேர்வு தமிழ்நாட்டை அழித்துவிடும் என்று*
எப்படி?
தமிழகத்தில் முறையான ஒற்றை சாளர முறையால் (Single Window System) & இடஒதுக்கீடு மூலம் தமிழ்நாட்டின் அனைத்து பெரு நகரங்கள் முதல் சிற்றூர் பள்ளிகளில் இருந்து சிறந்த முறையில் +2 தேர்வில் தேறியவர்கள், இந்த சமூகத்தின் அனைத்துப் படிநிலைகளில் இருந்தும், அதாவது FC/BC/MBC/SC/ST வகுப்புகளில் இருந்து தரம் வாய்ந்த மருத்துவர்கள் உருவாகுகிறார்கள்.
இந்த மாநிலத்தில் தான் இந்தியாவிலேயே அதிகமான *அரசு மருத்துவக் கல்லூரிகளும்* அதில் அதிகமான எண்ணிக்கையில் *(2555)* MBBS மருத்துவப் பட்டப்படிப்பும், அதற்கும் மேல் தமிழகம் முழுதும் அமைந்துள்ள அரசு மருத்துவமனையில் பணிபுரிவதால், மருத்துவர்களுக்கு அளிக்கப்படும் மதிப்பெண் சலுகைகளால் மருத்துவப் பட்ட மேல்படிப்பும் MD/MS/PGDiploma கிடைக்கின்றன.
இப்படி மருத்துவத்தை படித்தவர்கள் மூலம் தான், தரம் வாய்ந்த மருத்துவ வசதி மக்களுக்கு கிடைக்கிறது. மருத்துவர்களும் பல தனிப்பட்ட தனியார் மருத்துவமனைகளை தங்களது சொந்த ஊர்களில் உருவாக்கியுள்ளார்கள்.
குழந்தைகளுக்கான அனைத்து தடுப்பூசி திட்டங்களும் (*Vaccination*) தமிழ்நாட்டில் தான் சிறப்பாக அமல்படுத்தப்படுகிறது. அதனால் தான் MMR, IMR, Vaccination Coverage போன்ற அனைத்து மருத்துவ சுகாதார குறியீடுகளில், இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது.
*Infant Mortality Rate (IMR சிசு மரண விகிதம் 1000 பிறப்புக்கு)*
தமிழ் நாடு - 21
குஜராத் - 36
மபி - 54
உபி - 50
ராஜஸ்தான் -47
சத்தீஸ்கர் - 46
இந்திய சராசரி : 40
*Maternal Mortality Rate (MMR - ஒரு லட்சம் பிரசவத்தில் தாய் இறக்கும் விகிதம்)*
தமிழ் நாடு - 79
குஜராத் - 112
மபி - 221
உபி - 285
ராஜஸ்தான் - 244
சத்தீஸ்கர் - 221
இந்திய சராசரி : 167
*தடுப்பூசி அளிக்கப்படும் குழந்தைகள் சதவீதம் (Vaccination Coverage)*
தமிழ் நாடு - 86.7% ;
குஜராத் - 55.2%
மபி - 48.9%
உபி - 29.9%
ராஜஸ்தான் - 31.9%
சத்தீஸ்கர் - 54%
இந்திய சராசரி : 51.2%
இந்த மூன்று குறியீடுகளிலும் தமிழகத்திற்கும் மற்ற மாநிலங்களுக்கும் உள்ள வித்தியாசத்தை பாருங்கள். குறிப்பாக மோடியின் குஜராத். அதே போல தமிழகத்திற்கும் இந்திய சராசரிக்கும் உள்ள வித்தியாசத்தை பாருங்கள்.
*Chennai is the Health Tourist Captial of India.*
இந்தியாவின் மருத்துவ தலைநகர் சென்னை.
இந்தியாவுக்கு மருத்துவம் பார்க்க வருகிற வெளிநாட்டவர்களில் 45% சதவீதம் பேர் வருவது சென்னைக்குத் தான்.
இந்தியா நாட்டுக்குள்ளேயே மருத்துவ வசதி தேடி வெளி மாநிலங்களுக்கு செல்பவர்களில் 40% சதவீதம் பேர் சென்னைக்குத் தான் வருகிறார்கள்.
*Tamilnadu stands high above all states in Health and Medical Welfare.*
*இவை அனைத்தும் மத்திய அரசே தன் சுகாதாரத்துறை இணையதளத்தில் தரும் புள்ளிவிவரங்கள்.* திமுகவோ, அதிமுகவோ தருவதல்ல.
உத்தரப்பிரதேசத்தில் தமிழகத்தைப் போல மூன்று மடங்கு மக்கள் தொகை அதிகம். ஆனால், சுகாதார துறைக்கு ஒதுக்கப்படும் தொகையானது, தமிழகத்தைவிட மூன்றில் ஒரு மடங்கு தொகை குறைவு. அந்தத் தொகையிலும் பெரும்பகுதி, ஹிந்துத்துவா வலியுறுத்தும் ஆயுர் வேதம் போன்ற டுபாகூர் மாற்று மருத்துவ முறைகளுக்குத் தான் செலவிடப்படுகிறது. இத்தனைக்கும் மத்திய அரசு வட மாநிலங்களுக்கு தான் அதிக நிதியை ஒதுக்குகிறது. அவற்றை, கோசாலை, மாட்டுக்கு ஆம்புலன்ஸ், வேதகால அறிவியல் போன்ற பயன்படாத திட்டங்களுக்கு வெட்டி செலவு செய்கிறார்கள்.
மேலும், வட மாநிலங்களில் முறையான பள்ளி/கல்லூரி படிப்பு பெறுபவர்கள் யார்? இணையத்தில் உங்களுக்கு பிடித்தமான ஊரை தேர்ந்தெடுத்து அங்குள்ள மருத்துவர்களை தேடுங்கள். அவர்கள் யார் என்பதை அவர்கள் Surname சுலபமாக காட்டிக்கொடுத்துவிடும். வெறும் பெரும் நகரங்களை சேர்ந்த பணபலம் மிக்க உயர்வகுப்புகளை சேர்ந்தவர்களே மருத்துவராகிறார்கள். அவர்களில் பெரும்பாலோர் வடமாநில பெருநகரங்களில் அல்லது வெளிநாடு என செட்டிலாகி விடுகிறார்கள்.
தமிழ்நாட்டைப் போல இந்தியாவின் எந்த மாநிலத்திலும், MBBS படித்த இளநிலை மருத்துவர்களுக்கு, அந்த மாநில கிராமங்களில் பணியாற்றினால், MD/MS/PGDiploma போன்ற மருத்துவப் பட்ட மேற்படிப்புக்கு சலுகை என எந்த ஏற்பாடுகளும் கிடையாது. அதனால் அங்கெல்லாம், தரமான மருத்துவ வசதி என்பது பெரும்பான்மை மக்களுக்கு எட்டாக்கனியாக உள்ளது. இது போக தென்மாநிலங்களில் உள்ளது போல பரவலாக உள்ள கிருஸ்துவ மிஷினரிகளின் மருத்துவ சேவைகளும் வட மாநிலங்களில் மிக மிக குறைவு.
எனவே தான் *தமிழ்நாட்டை வடமாநிலங்களோடு ஒப்பிடுவதில்லை, முன்னேறிய நாடுகளோடுத்தான் தான் ஒப்பிடுவேண்டும்* என நோபல் பரிசு பெற்ற பொருளாதார மேதை அமெர்த்தியா சென் சொன்னார்.
*நம் தமிழ் மாநில கல்வியின் தரத்தை அளவிட இந்தியாவில் எவனுக்கும் அறிவோ, அருகதையோ கிடையாது.* அவனவன் முதலில் அவன் மாநிலத்தை முன்னேற்றம் கொள்ளச் செய்யட்டும். அடுத்தவன் கல்வித்தரத்தை பற்றி வாய்கிழிய பேசுவோர்களின் சொந்த மாநிலங்கள், அவர்கள் கட்சி ஆளும் மாநிலங்கள் எல்லாம் எப்படி முடை நாற்றம் எடுத்து பிண வாடை வீசுகிறது என்று பாருங்கள்..





இந்திய தேசியக்கொடியை இதைவிட அவமரியாதை செய்ய

 எந்த தேசத்து துரோகியாலும் முடியாது.



========================================================================================

ன்று ,
ஆகஸ்ட்-17.

   முரசொலி மாறன் பிறந்த தினம் (1934)


  • இந்தோனேஷிய விடுதலை தினம்(1945)

  • இந்தியாவையும் பாகிஸ்தானையும் பிரிக்கும் ரெட்கிலிஃப் கோடு வெளியிடப்பட்டது(1947)

  • காபோன் விடுதலை தினம்(1960)

  • முதல் சிடி ஜெர்மனியில் வெளியிடப்பட்டது(1982)
========================================================================================


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?