இடுகைகள்

அக்டோபர், 2017 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

சாதி இரண்டொழிய .....

படம்
கட்டபொம்மனில் ஆரம்பித்த போக்குவரத்துக் கழகங்கள்,மாவட்டங்கள்  பெயர்,பெரும்பிடுகு வரை போய் 500பேர்கள் மட்டுமே உள்ள சாதியினர் கூட தங்கள் சாதி தலைவர் பெயரை வைக்கக்கோரி போராடும் அளவு போனது. அம்பேத்கார் பேருந்து மீது பசும்பொன் முத்துராமலிங்கம் பேருந்து ஆதரவாளர்கள் கல்வீசவும்,அவர்கள் திருப்பி இவர்கள் பேருந்தை  எரிப்பதுமாக போர்க்களமாகியது தமிழகம் . எந்தப்பேருந்தை எந்த சாதிக்காரன் தாக்குவனோ என்ற பயம் பயணிகள் உயிரை கையில் பிடித்துக்கொண்டு பயணிக்கும் அளவு தமிழகம் பாதுகாப்பில்லாமல் போனது பலருக்கு மலரும் நினைவில் இருக்கலாம். சாதி தலைவர்கள் பெயரை சூட்டுவதால் உண்டான பலனை தமிழகம் அனுபவித்தப்பின்னர்தான் தலைவர் கலைஞர் மாவட்டங்கள்,போக்குவரத்துக்கழகங்களில் இருந்து அவர்கள் பெயரை நீக்கி கலவரங்களுக்கு முடிவு கட்டினார். ஆனால் அதை அவரது மகனே மீண்டும் துவக்குவது சரியல்ல.  விடுதலைப் போராட்ட வீரர்கள்,அரசியல் தலைவர்களை சாதிய ரீதியில் அணுகும் போக்கு தலை தூக்கி உள்ள நிலையில் சும்மா கிடந்த சங்கை ஊதி கெடுக்கும் வேலையை தளபதி செய்யக் கூடாது. ஏற்கனவே மதுரை விமான நிலையத்துக்கு காரராஜர் பெயரை வைக்க கோரி நாடார் சங

அரசு வங்கிகளை காப்பாற்றுவது எப்படி?

படம்
பாஜக  முறை.  அண்மையில் நிதி அமைச்சர் ஜெட்லிஅறிவித்துள்ள வங்கிகளின் மூலதனத்தைக் கூட்டுவது தொடர்பானநடவடிக்கைகள் பற்றி பல குழப்பமானகருத்துக்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. அரசாங்கம் சொல்லாத சில அடிப்படை விஷயங்களை கவனத்தில் கொள்வோம். ஏற்கெனவே மந்த நிலையில் இறங்கியிருந்த இந்திய பொருளாதாரம், செல்லாக்காசு பிரச்சனை, விலங்கு சந்தைகளில் அரசு ஏற்படுத்திய குழப்பம், தயாரிப்பின்றியும் மாநிலங்களின் ஜனநாயக உரிமைகளை காலில் போட்டுமிதித்தும், சிறு,குறு தொழில்முனைவோரையும் வணிகர்களையும் மறைமுக வரிவலைக்குள் கொண்டுவரும் நோக்குடனும் அமல்படுத்தப்பட்டு வரும் ஜிஎஸ்டி ஆகியவற்றால், மேலும் கடுமையாக சீர்குலைந்துள்ளது. தொடர்ந்துமத்திய அரசு இதனை மறுத்துவந்தாலும் இதன் உண்மை கருதி மறுபக்கம் பல“புதிய” தடாலடி அறிவிப்புகளை செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இப்பொழுது வந்துள்ள அறிவிப்புகளில் பொதுத்துறை வங்கிகளுக்கு மறுமூலதனம் அளித்தல் தொடர்பானதை மட்டும் இப்பதிவில் சுருக்கமாக காண்போம். 2.11 லட்சம் கோடி ரூபாய் வங்கிகளின்மறுமூலதனமயத்திற்கு செலவிட உள்ளதாக ஜெட்லி அறிவிப்பு கூறுகிறது.  இதில் பட்ஜெட் மூலம் 19

பதவிக்கு மரியாதை ,

படம்
குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் முன்னிறுத்தப்பட்ட போது இடதுசாரி கட்சிகள் ,காங்கிரஸ் உட்பட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. காரணம்  ராம்நாத் கோவிந்த்ஆரம்பகாலம் முதலே ஆர்.எஸ்.எஸ்,பின்னர் அதன் மற்றோரு வடிவான பாஜக காரர். அதுதான் அவரை எதிர்த்து வேட்பாளரை  நிறுத்த முதல் காரணம் . ஆனால் குடியரசுத்தலைவராக  ராம்நாத் கோவிந்த் பதவியில் அமர்ந்ததில் இருந்து அவரின் பேச்சுக்கள்,நடவடிக்கைகள் அப்பதவிக்கு பெருமை சேர்ப்பது போல் உள்ளது. அவரைக்கண்டு பயந்து எதிர்த்த வர்கள் அவரை பாராட்டும்படியும்,அவரை முன்னிறுத்திய பாஜக,ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தினருக்கு அதிருப்தியையும் தருகிறது. பாஜகவின் தலைவர்களில் ஒருவராக இருந்து, வேட்பாளராக நிறுத்தப்பட்டு, குடியரசுத் தலைவரான பின்னர், ராம்நாத் கோவிந்த் பேசிவரும் பேச்சுக்கள் பெரும்பாலும்- அவரின் முந்தைய பேச்சுக்களிலிருந்து நிறைய மாறுபட்டிருப்ப தால், பாஜகவினர் பதற்றம் அடை யத் துவங்கியுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும்போது “இந்தியாவைப் பொறுத்தவரை, முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் வேற்றுகிரக வாசிகள்” என்று கூறியதுடன், சிறுபான்மையினரின் உரிமை தொடர்

குரோமின் தொடர்ச்சி ?

படம்
பெரும்பாலானவர்கள் பயன்படுத்தும் தேடல் எந்திரமாக (பிரவுசராக) குரோம் உள்ளது .  இதற்கான குரோம் தொடர்ச்சி நிரல்கள் ( எக்ஸ்டன்ஷன் புரோகிராம்கள்), பயனாளர்களுக்குக் கூடுதல் வசதிகளை அளித்து வருகின்றன.  குரோம் இணைய ஸ்டோரில் (Chrome Web Store) இந்த புரோகிராம்கள் பதியப்பட்டு கிடைக்கின்றன. அவற்றை இலவசமாகவே பெற்று, நம் கம்ப்யூட்டரில் பதிந்து பயன்படுத்தி, வசதிகளை அனுபவிக்கலாம். இது ஒரு நல்ல ஏற்பாடு தான்.  ஆனால், நம் கம்ப்யூட்டரில் பதியப்பட்ட இந்த புரோகிராம்கள், சில வேளைகளில் நம் கணினி இயக்கத்தில் தலைவலையையும் ஏற்படுத்துகின்றன.  மிக அதிகமான எண்ணிக்கையில், எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களை, நீங்கள் கம்ப்யூட்டரில் பதிந்து இயக்கினால், அவை நம் கம்ப்யூட்டர் இயங்கும் வேகத்தைக் குறைக்கின்றன.  குறிப்பாக, நாம் பழைய விண்டோஸ் இயங்கு முறையில்  இயங்கினால், இந்த வேகக் குறைப்பு ஏற்பட வாய்ப்புகள் அதிகம் உண்டு. நம் இணையத் தேடலின் வேகமும் மிகவும் குறைவாகவே இருக்கும்.  இத்தகைய சூழ்நிலைகளில், நமக்குத் தேவையில்லாத, ஏதோ ஒரு காரணத்திற்காக, நாம் பதிந்த எக்ஸ்டன்ஷன் புரோகிராம்களை நீக்குவதே சிறந்த வழியாகும்.  எக்ஸ்டன்ஷ

ஊழல்னா என்னங்க?

படம்
ஊழல் பாஜக ஊழல் மோடி “நான் ஊழல் செய்யமாட்டேன்; எவரையும் ஊழல் செய்யவும் விட மாட்டேன்!” -இது 2014 தேர்தல் பிரச்சாரத்தில் நரேந்திர மோடிமுழங்கியது!  ஊழல்களில் மூழ்கியிருந்த காங்கிரஸ் மீது மக்களுக்கு இருந்த அதிருப்தியின் பின்னணியில் மோடியின்கூற்று மக்களிடம் சாதகமான தாக்கத்தை உருவாக்கியது.  மோடி முதல்வராக இருந்த குஜராத்திலேயே பல ஊழல்கள்நடைபெற்றன எனும் உண்மை மக்களிடம் சென்றடையவில்லை. குஜராத் ஊழல்கள் பற்றிய பிரச்சாரமும் பலவீனமாக இருந்தது. தற்போது, பா.ஜ.க.வின் 40 மாத ஆட்சியில் வேலையின்மை, விவசாயிகளுக்கு வருமானம், கறுப்புப் பணம் ஆகிய பிரச்சனைகள் எப்படி மோடியின் வாய்பந்தலாக மாறியதோ அதே போல ஊழலுக்கு எதிரான போரும் வெற்றுப் பேச்சாகவே அமைந்தது என்பதை மக்கள் உணர தலைப்பட்டுள்ளனர். ஊழலை ஒழிக்க “லோக்பால்” எனும் அமைப்பு உருவாக்க வேண்டும் என்பது ஊழல் எதிர்ப்பாளர்களின் நீண்ட நாள் கோரிக்கை. அனைத்து மட்டங்களில் உள்ளஅரசியல்வாதிகள் மற்றும் அரசு ஊழியர்களின் ஊழல்குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் அதிகாரம் கொண்ட அமைப்பாக லோக்பால் இருக்க வேண்டும் என்பதே கோரிக்கையின் அடிநாதம் ஆகும். 2013ஆம